இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
எழுதியதைப் படித்தீர்களா நண்பரே? :ranger:

தெரியாத்தனமாக அறிவோளியைச் சீண்டிவிட்டேன் போலிருக்கிறது. அசட்டு வெடிகளாக வெடித்துத் தள்ளிவிட்டானே!
 
தெரியாத்தனமாக அறிவோளியைச் சீண்டிவிட்டேன் போலிருக்கிறது. அசட்டு வெடிகளாக வெடித்துத் தள்ளிவிட்டானே!
அறிவொளியே அசட்டுத்தனத்தின் மொத்த உருவம் ஆயிற்றே! :loco:

அதனால்தான் அப்படி இருக்கு! இது எப்படி இருக்கு? :lol:

 
’இது எப்படி இருக்கு?’ என்று கேட்டதால் சொல்கிறேன்: அறிவொளியே தேவலாம்!? (விளையாட்டாகச் சொல்கிறேன், கோபித்துக்கொள்ள வேண்டாம்.)

அதுசரி, அறிவொளி சொல்லளவில் அசடாக இருப்பதுபோல் செயலளவிலும் இருக்கவேண்டாமோ? தீபாவளிநாள் அன்று அவன் கம்பி மத்தாப்பில் மருந்துப் பகுதியைப் பிடித்துக்கொண்டு கம்பியைக் கொளுத்தியும், பூச்சட்டியைத் தலைகீழாக வைத்துக் கொளுத்த முயன்றும், கேப்வெடிகளுக்கு ஊதுவத்தி காட்டி வெடிக்கச் செய்தும், பாம்பு மாத்திரைகளை ஒரு ஸ்நேக் பார்க் போல் அமைத்துக் கொளுத்தியும், சாட்டையைக் கொளுத்திச் சுழற்றிச் சட்டைச் சுட்டுக்கொண்டும், விஷ்ணு சக்கரத்தைத் தரையிலும் தரைச் சக்கரத்தைக் கம்பி நுழைத்துக் கொளுத்த முயன்றும், லக்ஷ்மி வெடியை நிற்கவைத்து ஒரு கம்பிமத்தாப்பை ஏற்றி ஆரத்தி காட்ட அதன் பொறியில் லக்ஷ்மி அருகிலேயே வெடித்துக் காதைச் செவிடாக்கிக் கொண்டும்--இதுபோலப் பற்பல வேடிக்கைகள் காட்டுவான் என்று எதிர்பார்த்தேன்.
 

உங்கள் கற்பனை 'அறிவொளி'தான்
Ultimate!!
award_star.png
. . . :clap2:
 

அறிவொளி - 118


மாம்பழம் தின்பேன்!
----------------------

கொய்யா மரத்தில்

ஏறியிருந்த நண்பனைப்


பார்த்த அறிவொளி,


தானும் அதில் ஏறி,


'இப்போது நல்ல


மாம்பழம் தின்பேன்'


என்று சொல்ல,


'நல்ல அறிவுதான்


உனக்கு! இது ஒரு


கொய்யா மரமென்று


தெரியாதா?'என்று


நண்பன் கேட்க,


பதில் வந்தது,


'தெரியுமே எனக்கு!


அதனால்தான் பையில்


ஒரு மாம்பழத்தை


எடுத்து வந்தேன்!'


:decision: . . . :hungry:
 

அறிவொளி - 119


கடையிலிருந்து ஜாம்

வாங்கிவந்த அறிவொளி,

அதை மேஜை மீது

வைத்துவிட்டு

Twist நடனம்

ஆடிக்கொண்டிருக்க,

அவன் அம்மா

காரணம் வினவ,

பதில் வந்தது,

'பாட்டில் மூடியில்

Twist to open

என்று இருக்கிறதே!'


:dance: . . . :hungry:

 

அறிவொளி - 120


ஒரு மணி நேர

மின்வெட்டு, மீண்டும்

இரண்டு மணி நேரம்

ஆனதும், மகிழ்ந்தான்

நம் அறிவொளி!

காரணம்,

அந்த நேரம்தான்

பெற்றோர் பேசுவார்

அவனிடம்!

அதற்குக் காரணம்,

அப்பாவுக்கு

டி வி சீரியல் addiction;

அம்மாவுக்கு

'இன்டர்நெட்' addiction!

'இன்வர்ட்டர்' இருந்தாலும்


ஒளிபரப்பு
ம் வராது;

நெடு நேரம் கணினியை

உபயோகிக்க முடியாது!


:blabla: . . . :D
 

ஏன் கோபம்?


புத்தாண்டின் முதல் நாள்,

புத்தம் புதிய உடையில்,


சுத்தமான நெய்யில்


செய்த இனிப்புக்களை


முதியோர் இல்லத்துக்குக்


கொண்டு சென்ற நடிகை,


கோபமாகத் திரும்பினாளாம்!


காரணம், அந்த அலுவலகத்தில்


அவரைப் புது வரவு என்று


தவறாக எண்ணி வரவேற்றனராம்!


:welcome: . . . :)
 

அறிவொளி - 121


சரியான பெயர்!
------------------

பொங்கல் பண்டிகையன்று

பெரிய சந்தேகம்

வந்தது அறிவொளிக்கு!


வெல்லப் பாகு வைத்து,

அதில் அரிசி, பருப்பை

இட்டுச் செய்த

இனிப்புக்குப் பெயர்,

'சர்க்கரைப் பொங்கல்'

என்று ஏன் வந்தது?

சரியான பெயர்,

'வெல்லப் பொங்கல்'தானே?

:decision:
 

பேச்சுத் தமிழ் சில சமயம் குழப்பிவிடும்!

இதோ அறிவொளியின் கண்டுபிடிப்பு!


அறிவொளி - 122

ஏன் வெள்ளை?
------------------

அம்மாவிடம் காலையில்

அறிவொளி கேட்டான்,

'அம்மா இப்போ

என்ன செய்யறே?'

'துணி தோய்க்கறேன்ப்பா!'

அம்மாவிடம் மாலையில்

அறிவொளி கேட்டான்,

'அம்மா இப்போ

என்ன செய்யறே?'

'தயிர் தோய்க்கறேன்ப்பா!'

இப்பொழுது புதிய

ஞானோதயம் வந்தது

நம் அறிவொளிக்கு!

நண்பனிடம் சொன்னான்,

'தயிர் ஏன் வெள்ளையாக

இருக்கு தெரியுமா?

எங்க அம்மா அதை

தினமும் தோய்க்கறா!'

:decision: . . .
icon3.png
 

அறிவொளி - 123


ஒரே நிமிஷத்தில்...
----------------------------------

ஒரே நிமிஷத்தில்

நூற்றிமுப்பது பெயர்கள்


ஆங்கிலம் தமிழ்
மொழிகளில்

சொல்ல முடியுமென


அறிவொளி கண்டான்!


அவைதான்,


'நூறு'முகமது, 'நைன்'தாரா,


'ஆறு'முகம்,'ஏழு'மலை,


'அஞ்சு', 'த்ரி'ஷா!


:decision: . . . :becky:
 

அறிவொளி - 123
-ல் எண்ணிக்கையைச் சரி பார்த்தீர்களா? :ranger:
 

அறிவொளி - 124


என்ன காரணம்?
-------------------

வேடந்தாங்கலைப்

பற்றி விரிவாகக் கூறிய


ஆசிரியர், அறிவொளியை


'என்ன காரணத்தால்


பறவைகள் இங்கு


பறந்து வருகின்றன?'


என்று வினவ,


உடனே பதில் வந்தது,


'நடந்தே வந்தால்


நேரம் அதிகம்


ஆகுமே, ஐயா!'

:decision: . . .
icon3.png
 

அறிவொளி - 125


அது
ஏன்?
------------

திரவமாக இருக்கும்

ஒன்றினை சூடு செய்தால்


ஆவி ஆகுமென்று


ஆசான் உரைக்க,


அறிவொளி கேட்டான்,


'ஏன் ஐயா, திரவமான


இட்லி மாவினை,


ஆவியில் சூடாக்கினால்


திட நிலைக்கு வருகிறது?'


:confused: . . . :der:

 

அறிவொளி - 126


துணைக்குத்தான்!
--------------------

தான் கேட்ட கேள்விகளுக்கு

வகுப்பில் பலர் பதில்


தெரியாது விழிக்க,


'மடையர்கள் எல்லோரும்


எழுந்து நில்லுங்கள்!'


என்று ஆசான்


கோபத்துடன் கத்த,


எல்லோரும் அமர்ந்திருக்க,


சில நொடிகளில்


அறிவொளி எழுந்திட,


'நீ மட்டும் ஏன்


எழுந்தாய்?' என


ஆசான் வினவ,


பதில் அளித்தான்,


'நீங்கள் தனியே


நிற்கின்றீர்களே,ஐயா!


நான் நிற்பது உங்கள்


துணைக்குத்தான்!'

:decision:

 

அறிவொளி - 127


ஒரு ஐயம் வந்தது!
--------------------

பஞ்சவடி எனும் ஊர்

பாண்டிச்சேரி அருகில்


இருக்கக் கண்ட


அறிவொளிக்கு


ஒரு ஐயம் வந்தது!

ஜடாயு
மோக்ஷம்

பெற்ற இடமான


திருபுட்குழி இருப்பது


சிங்காரச் சென்னை


அருகிலே!


சிங்காரச் சென்னை


இருப்பதோ இந்தப்


புதுப் பஞ்சவடிக்குத்


வடக்கிலே!


என்றால்........


சீதா தேவியைக்


கடத்தும்போது,


ராவணன் தனது


'காம்பஸை'த்


தொலைத்துவிட்டானோ?

:confused:

 
idea kidaithathu anal kadaisi sila sentences kozhappu kozhambu endral ..........
 
idea kidaithathu anal kadaisi sila sentences kozhappu kozhambu endral ..........
குழப்புமில்லை; குழம்புமில்லை! :)

ஜடாயு ராவணனால் வெட்டப்பட்ட
இடம் திருபுட்குழி ('புள்' என்றால் பறவை; 'குழி' என்பது ஈமக் கிரியை

செய்த இடம்; 'திரு' சேர்ந்தது மரியாதை நிமித்தம்! திரு புள் குழி இணைந்து திருபுட்குழி ஆனது). இந்த

இடம் சென்னைக்கு அருகில் உள்ளது.
புதிய 'பஞ்சவடி' இருப்பது பாண்டிச்சேரி அருகில். அதாவது

திருபுட்குழி இருப்பது புதிய பஞ்சவடியின் வடக்கில். பஞ்சவடியிலிருந்து இலங்கைக்குச் செல்லும்

ராவணன், எதற்காக வடக்கு நோக்கிச் செல்ல வேண்டும்? தெற்கு திசையிலே போக
வேண்டியதுதானே!

அதனால் இப்படி இருக்கலாம்:

1. புஷ்பக விமானம் அவன் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை!

2. ராவணன் காம்பஸைத் தொலைத்து வடக்கே போய்விட்டான்! :plane:


குறிப்பு: புதிய 'பஞ்சவடி' இருப்பது பாண்டிச்சேரிக்கு அருகில்.
இங்குதான் ராமர் பர்ணசாலை அமைத்ததாகப்

பேச்சு!
அங்கு பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவில் பிரசித்தமாகின்றது!
:pray:
 
Hello RR Mam ,Very recently I happen to visit the temples in and around pondichery. It was a very huge vigraham.,and other temples were Kalisanadar temple with all astha lingams present it was nice & different.Kali temple ,Navagraha temple with all their consorts ,stars with their respective virsham -tree. nice experience.
 

அறிவொளி - 128


கவலை!
-----------

அடிக்கடி தும்முவான்

அறிவொளி!


அப்போது


அவன் தந்தையின்


கம்பனி விளம்பரம்


என்று சொல்லிக்


கேலி செய்வார்


நண்பர்கள் பலர்!


ஒரு நாள்
அறிவொளி


வந்தான் கவலையோடு!


காரணம்,


அவன் தந்தை


'ஹச்' கம்பனி


வேலையை விட்டு,


'DOCOMO'வில்


சேர்ந்துவிட்டாராம்!

:pout:

 

அறிவொளி - 129


ஒரே இருக்கை!
------------------

அழகிய ஓர் இளம்


பெண்ணுக்கருகில்


ஒரே ஒரு இருக்கை


பேருந்தில் இருக்க,


அதை நாடி நம்


அறிவொளி செல்ல,


அதே சமயம், வேறு


இரு பெண்கள் அந்த


இருக்கைக்குப் போட்டியிட,


அறிவொளிக்கு


உதித்தது ஒரு ஐடியா!


'தங்களில் முதியவர்


இங்கே அமருங்கள்!'


எனச் சொல்ல,


அந்த இருக்கையை


அந்த இருவரும் துறக்க,


சிரித்தபடி அதில்


அறிவொளி அமர்ந்தான்!

:couch2:
 

அறிவொளி - 130


யார் அவள்?
--------------

முதல் முறையாக

அண்ணியைக் கண்டான்

மணமகள் அலங்காரத்தில்,


அண்ணனின் திருமணத்தன்று

நம் அறிவொளி!

மறு நாள் காலையில்,

சாதாரண உடையில்


மேக்கப் இல்லாமல்


அவள் வீட்டில் உலவ,


அம்மாவிடம் ஓடிச் சென்று,


அவன்
அதிசயித்துக் கேட்டான்,


'
அம்மா! யார் அவள்?' என்று!


:confused:
 

என்ன குப்பை கொட்டினாய்?'


'பள்ளிக்கூடம் போய்

என்ன குப்பை கொட்டினாய்?'


என்று பிள்ளையைத்


திட்ட வேண்டாம்


பெற்றோரே!


பள்ளி செல்லும்


பிள்ளைகளை


ஏக்கப் பார்வை பார்த்தபடி,


கொட்டிய குப்பையில்


வேண்டியவற்றை


அள்ளச் செல்லும்


சோகச் சிறுவரைக்


காணுங்கள்!

:humble:



408488_10152456925985492_646356542_n.jpg


Picture courtesy: P J Sir - taken from photos by Daniel George
 

அறிவொளி - 131


தட்டுத் தடுமாறி
ப்


பட்டம் பெற்று

மருத்துவரானான்

அறிவொளி!

மஞ்சள் காமாலை

நோயென்று எண்ணி

ஐந்து மாதங்கள்

தீவிர சிகிச்சை

செய்துகொண்டிருந்தான்,

அந்தப் பெண்மணி

சீன தேசத்தவள் என

அறியாமலே!

:decision:

 
Status
Not open for further replies.
Back
Top