நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
புதுக்கவிதைகளை வரவேற்கலாம்.
ரசம் இருக்கலாம் அதில்;
விரசம் அறவே கூடாது!
தமிழ் வாழ்க! வளர்க!
ராஜி ராம் :thumb:
...ரசம் இருக்கலாம் அதில்... .
I make rasam, without adding tamarind, using only tomatoes..... i agree. rasam is my favourite dish. ...
புதுக் கவிதை!..... ஒரு சிறு கட்டிலுக்குக் கூட நான்கு கால்கள் தேவையல்லவா ? ..........
அம்மணிபுதுக் கவிதை!
நாலு காலில்லாக்
கட்டில் அல்ல
புதுக் கவிதை!
ஒரு எண்ணத்தை
ஒரு எளிய நடையில்
சொல்லுவதால்
இதனை
விலை உயர்வான
மெத்தை இடாத
எளிய கயிற்றுக்
கட்டில் எனலாமே!
கட்டில் எதுவோ,
உறக்கம் வந்தால் போதுமே! !
:decision:
அது ஒரு காலம்!! :thumb:
பொய் சொல்லி ஏமாற்றவில்லையே! :lie:
மெய் சொல்லித் தானே எழுதுகிறார்கள்!
தலைப்பிலேயே சொல்லிவிடுகிறார்கள்
"இலக்கணத்தை எதிர் பார்க்காதீர்கள்!" :nono:
அதையும் மீறி அதை விரும்பிப் படிக்கின்றனர் :ranger:
புதுமைகளையும், கவிதைகளையும் ரசிப்பவர்கள்.
.................
தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்! நன்றி!எழுதும் எழுத்தில் எளிமை
எண்ணும் எண்ணத்தில் கூர்மை
சொல்லும் நயத்தில் மேன்மை
வார்க்கும் வார்த்தையில் வளமை
வெளிப்படும் விதத்தில் நேர்மை
கவிதைகள் வெளிப்படும் விதமோ அருமை
---- Hats off to ALL PUDU KAVINGARKAL:nod:
தங்கள் ஊக்கம்
தமிழாய் தாயாய் சேயாய்
தவழும் அழகே அழகு
அறிவொளி - 134
'எங்கள் பாட்டி பாடு
கொண்டாட்டம்தான்',
என்றான் அறிவொளி!
ஏனென்று நண்பன் வினவ,
பதில் உரைத்தான்,
'பல் தேய்க்கும் வேலை
பாட்டிக்கு இல்லை!
அவரது பல் செட்டைத்
தினம் தேய்ப்பது
என் அம்மாதானே!'
:spit:
This should be அறிவொளி - 135.அறிவொளி - 134
காரட்டும், கண்ணாடியும்!
............