அன்னை ஸ்ரீ மதுரகாளியம்மன் கனவில் வந்து பேச ஆரம்பித்தாள் என்று "பற்றிச் சொன்னேன்". தரிசனத்துக்கு வரச் சொல் என்றாள். என் பேத்தி, இளவயது, தரிசனத்துக்குத்தானே என்பாள். சொப்பனத்தில் வந்தால், போகணுமா, கோவிலுக்குப் போனால் போறது. இப்படி சில சிந்தனைகள். வைராக்யமாக இருக்க முடியவில்லை. என் பேத்தியுடன் சிறுவாச்சூர் சென்று கூட்டமில்லாத ஓர் நாளில் அன்னையின் தரிசனம் செய்தேன். அவள் பக்தியுணர்வுடன் அழகு உருவத்தை கையெடுத்துக் கும்பிட்டு குனிந்த தலை நிமிராமல் பிரார்த்தனை செய்தாள். இதுதான் லோகத்தில் எல்லாவற்றுக்கும், லோகத்திற்குமே மூலமாக இருப்பது அன்னை ஸ்ரீ மதுரகாளியம்மன் சக்தி என்று இந்த நாளில் சொல்வது போன்றது என் மனஸ். இப்போ அது மாதிரி கிடையாது. கனவு தோன்றிய மறு நாள். உனக்கு எப்போ சௌகர்யமோ வெச்சுக்கோ சங்கடப்பட்டுண்டே இருக்காதே என்று சொல்லிட்டாள். இது எப்படி இருக்கு. சொல்லத் தெரியாத ஸ்வர்கத்துக்கு மேலான பலன்களை அவள் தருகிறாள். நித்யானந்த பதமாக இருக்கக்கூடிய மோக்ஷம். பார்த்தாலே போதும். பாபம் போகும். வேண்டியதை தந்திட குறை ஒன்றும் இல்லாமல் நிலையாக சிறுவாச்சூர் கோவிலில் இருகின்றாய். ஒரு உயர்ந்த லக்ஷ்யத்தில் நிறுத்துவதற்கு, அவள் திருப்பாதம், சரணாகதி பணிந்து, கடைக்கண் பார்வையால் ரக்ஷிக்க, பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். மனதை ஒருநிலைப்படுத்தி, தீவிர தியானத்தைச் செய்வோமே! இழைத்த பாவம் விலகும்.பைசாச உபாதைகளும் துஷ்டப் பரயோகங்களும், பிரம்மஹத்தி தோஷமும் விலகும். அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம். பொருட் செல்வம் பெருகும். அம்பாளை நம் சிந்தையில் இருத்துவோம், அவள் நம்மை நிச்சயம் காப்பாற்றுவாள்.