• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

The popular flight service had the lavatories at the bottom of a staircase with ten steps. Norma people may not even notice it but people with mobility or heart problem can not miss the difference it makes during the long flight.

I climbed down the steps to use the restroom for the first time. The angelic air hostess told me I can use use the restroom in the front in the business class. I was hesitant but she reassured me that it was alright for me to use it.

So for the next visit I walked the entire length of the plane to use the restroom in the front. I could see twinkling eyes with great expectation of witnessing some tamaasha at my expense.

The occupants of the business class gave me a cold stare. I could not have looked or felt more alien. I finished my breif business and came out unsacthed.

For the third visit I chose to go down the stairs rather than walk the entire length of the flight under the scrutiny of hundred of eyes.

I have read about the stories when the 'have nots' traveling in the 'torture class' dare to use the restroom alloted for the 'haves' who travel in great luxury and style.

The business performed inside is the same whether we are the 'haves' or the 'have nots'.

THEN why all this fuss???
 
# 165. HOME PRODUCTS.

சாரீ வியாபாரிகளைக் கண்டு வியந்த எனக்கு
உடனேயே இன்னொரு வியப்புக் காத்திருந்தது. :happy:

ஒரு சின்ன sale cum exhibition - community ஹாலில்.

இருபது விதமான பொடி வகைகள்.
ஒரு வேளை உபயோகத்திலிருந்து
ஒரு மாதம் உபயோகம் செய்யும் வரையில்!

ஐந்து ரூபாய் கொடுத்துப் பருப்புப்பொடி வாங்கி
ஆவலாய் உண்பவர்கள் அநேகர் உண்டு.:hungry:
அவர்களைக் குறி வைத்துத் தொடங்கப்பட்டது இது.​

நல்ல சேல்ஸ். நல்ல முயற்சி. :thumb:
நல்ல சேவை. நல்ல தொண்டு.

நாக்குச் செத்தவர்களுக்கும்,
திருமணம் தள்ளிபோகும் மனிதர்களுக்கும்,
ஹோட்டல் சாப்பாடில் வயிறு ரிப்பேர் ஆகுபவர்களுக்கும்,
இது ஒரு வரப்ரசாதம் என்பதில் ஐயம் இல்லை.

இங்கும் செய்பவர் ஒரு சுந்தரத் தெலுங்குப் பெண்ணே. :thumb:

நம் அண்டை மாநிலத்தவர் எல்லோரும்
கடின உழைப்பாளிகளே! ஐயமில்லை. :clap2:​
 
166. Bald head and the beautiful comb !

நம் திருமணம் முடிந்ததும் இருக்கும்
நிறையப் பட்டுப் புடவைகள் நம்மிடம்.

மகன் / மகள் திருமணத்துக்குப் பிறகு
இருக்கும் நிறையப் பட்டுப் புடவைகள்.

அந்த இடைப்பட்ட காலத்தில்...
அந்த இருபது, முப்பது வருடங்களில்...
நம் பட்டுப் புடவைகளும் "பட், பட்" ஆகிவிடும். :pout:​

புதியது வாங்கும் வழக்கம் இல்லாவிட்டால்
ஒரு காலத்தில் இருக்காது ...no more silk saris. :nono:

அப்போது தான் நிறையக் கல்யாணங்களும்
பிற celebration களும் குடும்பத்தில் நடக்கும்! :(
வயதான பிறகு, வந்து குவியும் புடவைகள்! :popcorn:

வெளியில் போக மாட்டோம் அல்லது
வெளியில் போகப் பிடிக்காது அல்லது
வெளியில் போக முடியாது!​

புடவை கனத்தைத் தாங்க முடியாது!
உயரமும், நீளமும் ஆளை முழுக்கும்!

இதைப் பார்க்கும் போது நினைவுக்கு வருவன
வழுக்கைத் தலையும், அழகிய சீப்பும். :doh:

அல்லது O. Henry யின் கதையில் வரும்
beautiful Hair clip பும் Costly Watch strap பும்! :doh:

Moral:

Life makes sure we do not have what we need

and also we have what we do not need any more!

In youth we can afford to eat any number of ice creams-
but we could hardly afford to buy even one of them!

In old age we can afford to buy any number of ice creams -
but often we could hardly afford to taste even one of them!​
 
When does a maid-servant become maintenance-servant?

When she waits and watches for a week or more to make sure that

we have cleaned up the house after the long absence despite the jetlag

and have set up everything as before .... before reporting to duty! :eek:hwell:
 
Most people entrusted with money imagine that they are the owners of the money instead of being just the custodians of the money entrusted to them.

So they start using the trust money as a personal pig bank!

The woman who bears the name of the most supreme Devi imagined that the money in the temple hundi belonged to her - to be used by her as and when needed by her!

But like as good things which come to an end this also finally came to an end!

The only way to make sure this does not repeat was to get rid of the hundi! :smash:
 
# 167. A Majestic paatti went off poof!

நெடு நெடு என்று நல்ல உயரம்;
வெள்ளித் தலை முடி அடர்த்தியாக.

தலைவலி கூட வந்தது இல்லை.
கூன், செவிடு, B. P, sugar எதுவும் இல்லை.

ஜம்மென்று ஆஜானுபாகுவாக இருப்பார்.
அவர் ஒரு நாள் இரவு தூக்கதிலேயே
அமைதியாக இறந்து போய்விட்டார். :bolt:
எந்த symptom உம் இல்லாமல்...

பழுத்த இலை உதிர்வதைப் போல...
கனிந்த பழம் விழுவதைப் போல...

அப்போது புரிந்தது இந்த உண்மை

Only a hair thin line separates :fear:
a man's life from his death! :sad:

Yet everyone thinks he/ she
will be saaswatham ( permanent)!​
 
# 168. MADI MAAMI AND WASHED CLOTHES.

சில மாமிகள் இரட்டை வேலை செய்வார்கள்.

வேலைக்காரி தேய்த்து வைத்தவற்றை
எல்லாம் மீண்டும் அலம்பி எடுப்பார்கள். :roll:

அவள் துவைத்ததை மீண்டும் அலசிக்
காய வைப்பார்கள், அதும் தங்கள் கைகளாலேயே!:washing:

காலையில் எல்லோரும் பறக்கும்/ பரபரக்கும் நேரம்.
மாமி துணி உணர்த்தும் போது விழுந்து விட்டாள்.

மிகவும் போதாத காலம் அவருக்கு;
WALL SKIRTING மோதி மண்டை பிளந்து விட்டது,
HEAVY BLEEDING மயங்கி விட்டாள். :faint:

யாருக்கும் தெரியவில்லை இது நடந்தது.

OFFICE GOERS + SCHOOL CHILDREN
அடாவடி முடிந்து பார்த்தால்
மாமி WAS FOUND IN A POOL OF BLOOD. :shocked:

தையல் போட்டு, ரத்தம் கொடுத்து,
முடிந்ததெல்லாம், செய்தும் மாமியைக்
காப்பாற்ற முடியவில்லை.

AIR INDIA மகாராஜா போல பெரிய
தலைப்பாகை BANDAGE உடன்
சில நாட்கள் இருந்தார் உயிருடன்.
ஆனால் ACCIDENT பிழைக்கவில்லை.

மடி மாமிகள் யோசிக்க வேண்டும் :decision:
உயிரா... மடியா... எது முக்கியம்?​
 
Now clothes drying lines can be moved up or down for drying and removing clothes. A heavy rope with several knots allows the lines
(usually 3 in number arranged at different levels ) to be brought down.

After spreading the clothes on those lines they can lifted up high using the rope and the knots.

But one must select a convenient place for fixing it. It does not make sense climbing stairs with a heavy bucket of wet clothes. Nor is it safe to hang them above the staircase.

One cannot access those lines without a stick. If usage of stick is in the agenda, where is the need to get this fancy clothe lines installed in the first place?
 
# 169. "அம்மா நம்ம என்ன கோத்திரம்?"

அவர் ஒரு பெரிய சீர்திருத்தவாதி!

பூணூலை முதுகு சொறியக் கூட
உபயோகிக்காமல் கழற்றி வீசியவர்.

மகனுக்கு பூணூல் போடவேயில்லை. :hand:

அதனால் அவன் நான்-பிராமின் போலவே
பேச்சு, பழக்க, வழக்கம் எல்லாமே. :hungry:

அவனுக்கு நாற்பது வயது ஆனது!
அவர் காலம் முடிந்து போனது!

'காரியம்' செய்யும் போது அவனிடம்
வாத்தியார் கேட்டார் "என்ன கோத்திரம்?"

அவன் அத்தனை பேர் முன்னிலையில்
தயங்காமல், மயங்காமல், மழுப்பாமல்,

"அம்மா! நம்ம என்ன கோத்திரம்?". :shocked:
 
அண்ணனும் திண்ணையும்.

அண்ணன் பெயரில் தன் மகன்/ மகள்
மணப் பத்திரிகையை அச்சடிப்பவர்கள்

உள்ளனர் இன்றும் நம்மிடையே உலகத்தில்.
உள்ளத்தின் மரியாதையைக் காட்டும் வழி.

அண்ணனின் உரிமை திண்ணையின் மேலே.

அண்ணன் இருக்கும்போது அமர முடியாது
திண்ணை மேலே அவர் தம்பி ஒருநாளும்!

"அண்ணன் எப்போது வெளியே போவன்?
திண்ணை எப்போது காலி ஆகும்?" என்று
காத்திருப்பனாம் அன்புத் தங்கத் தம்பி!
 
# 170. Kitchen latches.

கணவன் மனைவி தகராறுகள் :argue:
உலகில் எங்கு தான் இல்லை?

அதற்காக ஒருத்தி தன்னைத் தானே
கொளுத்திக்கொண்டு மாய்வாளா?

மாய்ந்தாள் ஒருத்தி, தன் மீது
மண்ணெண்ணெய் அபிஷேகம்
செய்துகொண்டு, பற்ற வைத்துக் கொண்டு, :flame:
அவள் வீட்டுச் சமையல் அறையிலேயே,
தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு
ஒருநாள்!

அடுத்த நாள் சிவில் department staff
வீடு வீடாகச் சென்று செய்தது என்ன தெரியுமா?

அத்தனை வீட்டுச் சமையல் அறைக் கதவின்
தாழ்ப்பாளையும் கழற்றி எடுத்தது தான்!

"வேறு யாரும் இப்படிச் செய்யக் கூடாது!" :nono:

ஒருவேளை அவள் பாத்ரூமுக்குச் சென்று
பற்ற வைத்துக் கொண்டு மாண்டிருந்தால்...! :eek:
 
# 171. Flaming Jwaalaa !

அவள் நிஜப் பெயர் ஜ்வாலா இல்லைதான்.
ஆனால் அதற்கு இணையான இன்னொரு "லா"!

எத்தனை அழகோ அத்தனை கோபம்.
எத்தனை கோபமோ அத்தனை வீராப்பு.

ஒரு மிகச் சின்ன விஷயம் தான் அது.
"குழந்தைக்கு uniform யார் போடுவது?"

அந்த சமர்த்துக் குழந்தை தானாகவே
தன் uniform மை அணிந்து கொண்டிருக்கும்.

அதற்கு ஒரு சண்டை, சவால், கோபம், தாபம்!:frusty:
இறுதியில் அக்னிப் பிரவேசம் அவள் ஹாலில்!

திரைப் படங்களில் வருவது போல அவள்
எரிந்து கொண்டே நடந்ததைப் பார்த்த அவள்
எதிர் வீட்டு மாமிக்கு ஜன்னியே வந்துவிட்டது.

அவள் பொன்னிறம் எரிந்து கருநிறம் ஆனது.
சுருட்டை முடி பொசுங்கி கோரம் ஆனது. :scared:

அவள் பிழைக்கவில்லை! அதுவும் நன்மைக்கே!

அந்த கோர முகத்தில் அத்தனை கோபம்....
யாராலும் தாங்க முடியாமல் போயிருக்கும்.

பாவம் நல்ல பெண் குழந்தை அதற்காக
மீண்டும் மறுமணம் செய்து கொண்டார் தந்தை.

"அவள் பொறுமைசாலியாக இருக்க வேண்டும்"
என்று மனதார வேண்டிக்கொண்டேன். :pray:

அவர்கள் மாறிச் சென்று விட்டார்கள்.

அந்தக் குழந்தைக்கு இப்போது சுமார்
பதினைந்து வயது ஆகி இருக்கும்

அம்மா போல அழகாக இருக்கட்டும்.

ஆனால் அவளைப் போல ஒரு பயங்கரக்
கோபக்காரியாக வேண்டவே வேண்டாம். :nono:​
 
# 172. Master tailor Moosa.

அந்தச் சின்ன ஊரில் இவரைத்
தெரியாதவர் இருக்க முடியாது.

மாஸ்டர் tailor தான் உண்மையிலேயே!

எல்லாமே தைக்கத் தெரியும் என்றாலும்
bed தைப்பதில் சூப்பர் specialist இவர்.

இப்போது போல பஞ்சைக் குத்தி அடைத்து,

அங்கங்கே அது நகராமல் தையல் போடுவது
போல் அல்ல அவர் bed தைப்பது. :nono:

அழகாக diamond diamond ஆகத் தைத்து,
ஒரே சீராக அதில் ஒரு சிறு துளை வழியே
பதப்படுத்தப்பட்ட இலவம் பஞ்சை நிறைத்து,
தைத்த இடம் தெரியாமல் seal செய்தல்!

பார்ப்பதற்கும் அழகோ அழகு :love:
படுத்து உறங்குவதற்கும் தான்! :sleep:

occupational hazard இவருக்கு!

மிஷீன் மீது குனிந்து தைத்துத் தைத்து
முதுகு "C" போல வளைந்து விட்டது.

இவர் தைத்த அழகிய bed டில் இவரால்

மல்லாந்து படுத்தோ, கவிழ்ந்து படுத்தோ,
உறங்கமுடியது பாவம்.

ஊருக்கெல்லாம் சப்ளை!
நல்ல கைராசிக்காரர் இவர் ஐயமில்லை.

கல்யாண மெத்தை இவர் தைத்தால்
ஒரே ஆண்டில் "குவா குவா" பிறந்திருக்கும்! :baby:
அல்லது கருவில் உருவாகிக் கொண்டிருக்கும்!
 
In continuation to #22596

The husband (whose life span was determined to be less than 5 years after the kidney failure) had practical wisdom. He sold all the lands his family owned and did partition of the property with his siblings.

He invested his share of the money such that his wife can live like a queen for the rest of her life - despite needing a house nurse to attend to her requirements.

The latest development really shocked me. She is not looked after by his son or D.I L. But she is looking after her two granddaughters. The elder
one is studying in a college and the younger one in a school.

So she has rented an apartment in a major city in Kerala, moved over to live there just to take care of these granddaughters.

"Peththa manam piththu! PiLLai manam kallu!!"
is a truth and is worth 'an aksharam a laksham'!
 
# 173. THE MAN WHO KICKED THE BUCKET.

ஒரு வகை மனிதர்கள் கவலைப்பட்டுக் கொண்டு,
எல்லா டெஸ்ட் களையும் செய்துகொண்டு,
இல்லாத வியாதிகளை எண்ணிக் கவலைப்பட்டால்,
இன்னொரு வகையினர் B.P. கூடப் பார்க்க மாட்டார்கள்.

இரண்டுமே தவறு தான் என்பேன்! :nono:

மெத்தப் படித்த PROFESSOR அவர்.
மனைவியும் PROFESSOR தான்.

எந்த டெஸ்டும் செய்து கொள்ளவில்லை,
நன்றாகத்தான் இருந்தார்.

ஒரு நாள் இரவு பாத்ரூம் சென்றவர்
படுக்கைக்குத் திரும்பி வரவில்லை.

மனைவி தேடிக்கொண்டு சென்றால்
பாத்ரூம் கதவருகில் மனிதர்
COLLAPSE ஆகி இருந்தார்.

உயிர் பிரிந்திருந்தது.

இறுதி நேரத்தில் பாத்ரூம் செல்லும் URGE
சிலருக்கு வருமாம். அவருக்கும் வந்திருந்தது.

கும்பகர்ணி மனைவியாக இருந்திருந்தால், :sleep:
அல்லது தனித் தனி பெட்ரூம் இருந்திருந்தால்,
காலை வரையில் நடந்ததே தெரிந்திருக்காது!

படித்தவர்களே இப்படிச் செய்யலாமா? :doh:
 
# 174. தென்னை மட்டையும், சாணமும்.

அவள் நன்கு படித்தவள்.
நல்ல வேலையில் இருந்தவள்.
நல்ல குடும்பதைச் சேர்ந்தவள்.

பெண் பார்க்க வந்த அன்றே
வேலையை விடச் சொன்னார்கள்.

ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கும் பெண்ணை
'ஆயா'வாக்கி சில நூறு ரூபாய் சேமித்தார்கள்.

இல்லாத அவள் 'பணத் திமிரை' அடக்கவேண்டும் :high5:
என்பதே அவர்கள் வாழ்வின் நோக்கமாயிற்று.

புதுமைப் பெண் ஆனாலும் பழமைவாதியும் கூட.

"நமக்கு வாய்த்தது இவ்வளவு தான்" :doh:
என்று அவற்றை ஏற்றுக் கொண்டாள்.

அடுத்து சாலையில் கிடக்கும் தென்னை மட்டைகளை
வெந்நீர் போட இழுத்துக் கொண்டு வரச் சொன்னார்கள்.

மாடு வாலைத் தூக்கும் முன்பே சென்று நின்று
'பிரெஷ்' ஆகச் சாணம் பொறுக்க வேண்டுமாம்!

சாது மிரண்டால் என்ன ஆகும் தெரியுமல்லவா?
இங்கேயும் அது தான் ஆயிற்று!

அதன் பிறகு அந்தப் பெண் துணிந்து
தனக்கு விருப்பம் இல்லாத எந்த வித
வேலைகளைச் செய்வதில்லை. :nono:

இவர்களாலும் செய்ய வைக்க முடியவில்லை.
ஏனென்றால் அவளிடம் ஆத்மபலம் இருந்தது. :thumb:
 

# 175. கண்ணுப்புள்ளே <=> கண்ணம்மா?

எங்கள் கல்லூரி வார்டன் வயதானவர்.
உயரமானவர், குழந்தை போன்றவர்.

நான் கல்லூரியில் பணி புரியும் போது
என்னை அவர் அழைக்கும் பெயர்
"கண்ணுப் புள்ளே"! :ear:

எங்கள் தாய் தந்தையர் கூட அத்தனை
"கண்ணுப் புள்ளே"யைக் கூப்பிட்டதில்லை!

எப்போதும், எங்கும், யார் இருந்தாலும்
அதே பெயர் கூறித்தான் அழைப்பார்.

சில சமயம் நான் நினைப்பேன். :rolleyes:

விசாலாக்ஷி => கண்ணம்மா => கண்ணுப் புள்ளே? :noidea:
 

# 176. The first dance program after childbirth.

பாடுபவன் குரலும், ஆடுபவன் காலும்
சும்மா இருக்கவே முடியாது போல.

கலை நிகழ்ச்சி என்றவுடனேயே நான்
"மாலைப் பொழுதினிலே" என்ற ராகமாலிகை
பாடலுக்கு அபிநயிக்க எண்ணினேன்.

இவரும் சம்மதித்து, அந்த பாடல் உள்ள
M. S. S பாடிய ஒரு L.P. யைத் தேடி வாங்கி வந்தார்.

குட்டிப் பயலுக்கு அப்போது ஒன்றரை வயது.

பாட்டைப் போட்ட உடனேயே
"மாய்ப் பாட்டு! மாய்ப்பாட்டு" என்று
குதூகலமாக என்னைத் தேடிவருவான். :baby:

நான் அவன் கைக்குச் சிக்காமல் ஆடியபடி
dance practice செய்வேன். :dance:

Program நாள் அன்று நான் என்
வீட்டிலேயே make up செய்து கொண்டு

ஒரு கையில் record player உம்

ஒரு கையில் ரெகார்ட்டும் எடுத்துக்கொண்டு

ஆடிடோரியம் சென்றபோது அங்கிருந்த

அனைவருக்கும் அத்தனை வியப்பு.:shocked:

Organizer Senior Doctor ஓடி வந்து விட்டார்.

"இது வரையில் இது போல இங்கு
யாருமே செய்ததில்லை மேடம்.

அது வேண்டும் இது வேண்டும் என்று
என் உயிரை வாங்குவார்கள்!

வீண் செலவும் எக்கச்சக்கமாக ஆகும்.

இந்த மாதிரித் தயாராக வந்தவர் இல்லை"

அதைப் பார்த்தவர்கள் வேண்டிகோளின் படியே
நடன வகுப்புக்களைத் துவங்கினேன் அதற்குப் பிறகு.

Time and money யாருடையது ஆனாலும்
நா
ன் அதை வேஸ்ட் பண்ண மாட்டேன். :nono:
 
# 177. Knowledge of BODY LANGUAGE.

அவர்கள் வீட்டில் செய்வது அறியோம். :confused:
சொல்வது ஒன்று... செய்வது வேறொன்று.

நம்மையும் அப்படியே நினைப்பார்கள். :lie:
என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்! :suspicious:

கண்ணில் எண்ணையை ஊற்றிக்கொண்டு
உன்னிப்பாக கவனிப்பார்கள் நம்மையே. :spy:

போகாமல் இருக்கவும் முடியாதபடி
மிகவும் வேண்டியவர்கள் அவர்கள்.

வருடாந்தர விசிட் punishment ஆகும்!
இருவருக்குமே என்று கூடத் தோன்றும்!

வலுக்கட்டாயமாக ஓட்ட வைத்தது போல.
எதாவது கொடுத்
தால் வேண்டாம் என்பார்கள். :nono:

அதை உண்மை என்று நினைத்துக் கொடுக்காமல்
விலகிச் சென்று விட்டால் சொல்லுவார்கள்

வருபவர்கள் போபவர்களிடம் எல்லாம்,
"அதை எனக்குத் தரவே இல்லை அவள்!" :gossip:

இன்னொருவர் இன்னமும் மோசம்!
சரியான confusion மாஸ்டர்!

வேண்டாம் என்பார் வாயால்!
கையை நீட்டித் "தா!" என்பது போல வைத்துக்கொண்டு!

குட்டிப் பயலுக்கு ஒரே confusion! :confused:

"வேண்டாம் என்று கையையும் நீட்டினால்
என்ன செய்யவேண்டும் மம்மி?"

நான் சொன்னேன் அவனிடம்,

"வாய்
பொய் சொல்லும் - ஆனால்
கண்களும், உடலும் உண்மை பேசும்!

கையைத் "தா!" என்பது போல நீட்டினால்
அதில் அதைக் கொடுத்து விடு".

பிறகு அவனும் புரிந்து கொண்டான்
அவர்களுடைய "life's philosophy!"

அவர்களுக்கு ஒன்றுமே வேண்டாமாம்.
நாமே பலவந்தமாகக்
கொடுக்கின்றோமாம்.

நல்ல pretension :drama: !!!
நல்ல policy போங்கள்!!! :whoo:
 
images
images


The first thing I noticed after landing in Chennai is the growing popularity for the 'goatee' aka 'aattu dhaadi!'

The wheelchair assistant sported one. His identical brother sported one. The list went on until I met the VIP of our colony who also sported a goatee.

His giant structure and the goatee reminded me of Aladdin's genie aka "jeem boo baa"!:rofl:
 
# 178. THE ROPEWAY... IN TWO WAYS!

மலம்புழா அணையை விசிட் செய்தோம்
கணவரின் கல்லூரி Alumni நண்பர்களுடன்.
நல்ல உச்சி வெயிலில் அங்கு போய் சேர்ந்தோம் :flame:
எல்லோரும் சீனியர்/ சூப்பர் சீனியர் சிடிசன்ஸ்.

ரோப்வேயில் ஒரு ரவுண்டு போனால் பார்க்
மொத்தமும் பார்க்க முடியுமாம் ...சொன்னார்கள்.

டிக்கெட் வாங்கிக் கொண்டு "Q" வில் நின்றோம்!

அவர்கள் சிஸ்டம் கண்டவுடனேயே நான்
பயந்து பின் வாங்கினேன். வேறு வழியில்லை.

ரோப்வே தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது.

chair car வரும் இடைவெளியில்,
செல்லவேண்டிய அடுத்த இரண்டு நபர்களை,
வட்டத்துக்குள் நிற்க வைத்தனர்.

பிளாட்பாரத்தின் ஒரு நுனியில்
unloading the passengers

இன்னொரு நுனியில்
loading the passengers

இரண்டு hunks இரண்டு தோள்களையும்
பற்றி வலித்து நம்மை இறக்கி விடுகின்றனர்.

chair போகும் வழியில் நம்மையும்
அதில் 'வழித்துக் கொண்டு' போகின்றது.

என்னை எல்லாம் தோளைப் பற்றி வலித்தால்,
dislocation ஆகிவிடும் shoulders நிச்சயமாக.

ஒல்லிப் பிச்சான்களுக்குப் பரவாக இல்லை!
ஆனால் என் போன்றோருக்கு...:scared:

பின் வாங்கவும் விடவில்லை இவர். :nono:
முன் செல்லவும் மனம் இல்லை எனக்கு! :scared:

கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு
அந்த குட்டி வட்டத்தில் நின்றேன் நான்.

சேர் வழித்து எடுத்துக் கொண்டு போயிற்று.
இறங்கும் போது பயம் பிடித்துக் கொண்டது.

இரண்டு ஆட்கள் என்னை இறக்குவதற்கு.

ஆளுக்கு ஒரு கையைப் பிய்த்துக்
கொடுத்து அனுப்பி விடுவார்களோ?

சரியன அதிர்ச்சி வைத்தியம் தான்.

பிறகு U.S.A. சென்ற
போது அங்கும் ரோப்வே.
ஆனால் என்ன வேறுபாடு நம்பவே முடியவில்லை. :shocked:

அவர்களால் அதன் போக்கை நிறுத்த முடியும்;
If necessary EXTRA TIME கொடுக்க முடியும்.

ஒரு family முழுவதும் அமரும்படி
ஒவ்வொரு சீட்டும் நீண்டு இருந்தது.

என்னையும், ஆறு மாதக் குழந்தை
தேஜஸையும் பார்த்த உடனேயே போன்
செய்தார்கள் extra time வேண்டும் என்று.

இறங்கும் போது அவர்கள் அப்படியே.

பிறகு மலையிலிருந்து ஏறும் போதும்
கீழே வந்து இறங்கும் போதும் சரி

நிறைய அவகாசம் கொடுத்து நம்மை
மனிதர்கள் போட நடத்தினார்கள்..
"இந்தியர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் :ballchain:
உள்ளது உண்மையே!" என உணர்ந்து கொண்டேன்!
 
# 179. கடைத் தேங்காய்.

அந்த மாமி அதிகம் படித்ததில்லை.
ஆனால் உடம்பு முழுக்க சாமர்த்தியம்!

யாரிடமிருந்து எதை பெறமுடியும்;
யாரிடம் அதைக் கொடுத்து தன்னுடைய
வேலைகளைச் செய்துகொள்ள முடியும்
என்று அத்தனையும் அத்துப்படி.
icon3.png


சாது மருமகளிடமும், நல்ல மகனிடமும்
கேட்டுக் கேட்டு மகளுக்கு வேண்டியவை
அத்தனையும் வாங்கிக் கொள்வாள். :popcorn:

மகளுடன், மருமகன் வரும்போது
அவற்றை தன் பரிசுகள் போல கொடுத்து
மற்ற வேலைகளை வாங்கிக் கொள்வாள்.

எனக்கு எப்படித் தெரியும் என்கின்றீர்களா?
அந்த மருமகள், மகள் இருவருமே என் நண்பிகள்.

கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு
மாமி தரும் குட்டை நான் உடைக்கவில்லை!

நம் படிப்புக்கும், நம் பிழைப்புக்கும்
ஒரு தொடர்பும் இல்லை என்பதை :nono:

நம்பத்தான் வேண்டியுள்ளது உலகில்
நன்கு பிழைப்பவர்களைக் காணும்போது. :shocked:​
 
# 180. புதுப் பணக்காரன்.

மழிக்கபடாத முகம்; காடுபோல தலைமுடி,
சோப்பையும் நீரையும் கண்டறியாத சட்டை.

எட்டுப் பக்கங்களையும் உபயோகிக்கப்பட்ட
எட்டு முழ வேஷ்டி - சுருண்டு, வரி விழுந்தது!

எட்டுப் பக்கங்கள் எப்படி என்கின்றீர்களா?
நான்கு பக்கங்கள் x இரண்டு பார்டர்கள்!

லொட லொடக்கும் ஒரு பழைய சைக்கிள்!
பூட்டாமல் போகலாம் வெகு தைரியமாக!

பேரிச்சம்பழக்காரன் கூட வாங்கமாட்டான்.
கேஸில் இருந்த சொத்து கிடைத்து விட்டது!

இன்று அவர் மக்கள்களுக்கு வைர நகைகள்
வாங்கும் லிஸ்டைத் தயாரிக்கின்றார்!!!​
 
Last edited:
கூட இருப்பவர்கள் அகமும் முகமும் மலர்ந்து வரவேற்கிறார்கள்.
கூட இல்லாதவர்கள் "வந்தாயா? நலமா? " என்று கூட கேட்பதில்லை.

சொந்தத்துக்கும், பந்தத்துக்கும் அதுவே வேறுபாடு!

"அகண்ட சௌபாக்கியவாதியாக இரு!"
என்று ஏன் வாழ்த்துகிறார்கள் சிலர்?


கண்டதும் காணாதது போல ஏன்
நகர்ந்து செல்கின்றார்கள் சிலர் ?


கடவுளுக்கு ஒருவேளை தெரிந்து இருக்கலாம் !
அல்லது கடவுளுக்கும் புரியாத புதிராக இருக்கலாம்!!
 

Latest ads

Back
Top