• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை

அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை:-

இங்கு அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும்.

அரச மரத்தின் காற்றை சுவாசிக்கும் போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம் பெறுகின்றன என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்துஉபதேசித்துள்ளனர்.

தவிர குழந்தைப் பேறுக்கும் நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு.

அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிப்பதற்கு மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம் .

இதையே அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம் என்றும் பழமொழியாக சொல்வார்கள்.

10349893_683662501702725_5289916557447441164_n.jpg



Source: Ananthanarayanan Ram aswamy
 
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’.

வயதில் மூத்தவர்கள், குடும்பப் பெண்களின் செயல்பாடுகளைப் பற்றி விளக்கும்போது இந்தப் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம்.

ஒரு குடும்பம் நல்ல நிலையில் வளர்ச்சி அடைவதற்கும் அதே குடும்பம் மிகவும் கீழான நிலைக்குத் தள்ளப்படுவதும் குடும்பத்தலைவியான ஒரு பெண்ணின் செயல்பாட்டில் உள்ளது என்பதை விளக்குவதாக நமக்கு சொல்லப்பட்டிருக்கும்.

ஆனால் உண்மையான பொருள் அதுவல்ல ‘நல்லது ஆவதும் பெண்ணாலே கெட்டது அழிவதும் பெண்ணாலே’ என்று இருந்த பழமொழியை இடைப்பட்ட காலத்தில் நம் மக்கள் சுருக்கிக் கூறுவதாக நினைத்துப் பொருளையே மாற்றிவிட்டனர்.

....






Source : Anathanarayanan Ramaswamy
 
திருநீறிட்டார் கெட்டார் ; இடாதார் வாழ்ந்

திருநீறிட்டார் கெட்டார் ; இடாதார் வாழ்ந்தார்:-

தமிழில் ஒரு எழுத்து மாறினாலும் மிகப்பெரிய பொருள்மாற்றம் ஏற்படும்.

அதேபோல் சில சொற்கள் சேர்த்தோ பிரித்தோ
படிக்கும்போதும் பொருள் மாறும்.

அப்படித்தான் சில கிராமத்துப் பழமொழிகள் தற்போது எதிர்மறைப் பொருளில் மாற்றப்பட்டு மக்களிடையே புழக்கத்தில் உள்ளன.

அப்படி மாற்றப்பட்ட பழமொழிதான் “திருநீறிட்டார் கெட்டார் ; இடாதார் வாழ்ந்தார்” என்பது.

இதன் உண்மையான பொருள் “திருநீறிட்டு யார் கெட்டார் ; இடாது யார் வாழ்ந்தார்” என்பதாகும்.


10341579_683655575036751_1657000401505635782_n.jpg




Source: Anathanarayanan Ramaswamy
 
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்&

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-

கிராமப்புரங்களில் உள்ளவர்கள் யாருக்காவது பெரிய
இழப்பு ஏற்பட்டு, மனதளவில் பாதிக்கப்பட்டு வருத்தத்தில்
இருந்தால், அவர்களைப் பார்த்து சொல்வது
‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே ’
என்பார்கள்.

ஆனால் இந்தப் பழமொழிக்கு ஆதிகாலத்தில் வழங்கி வந்த
பொருளே வேறு.

அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறானத் தொழிலைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதுதான்.

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோல் வைக்காதே
(திருட்டுத் தொழில் செய்யாதே) என்பதை உணர்த்துவதாகும்.

வறுமையில் வாழ்ந்த போதும் வாழ்க்கைப் பாதையில் வழி தவறக்கூடாது என்பதை நம்முடைய முன்னோர்கள் நமக்கு உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் இந்தப் பொன்மொழி.


10363710_683652855037023_5223865371179347131_n.jpg




Source: Anath anarayan an Ra maswamy
 
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்:

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்:-

கிராமப்புரங்களில் வாழும் மக்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள ‘பணபலம் வேண்டும் இல்லையென்றால் படைபலம் வேண்டும்’ என்பார்கள், இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதே ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ எனும் பழமொழி ஆகும்.

அதாவது சகோதரர்களின் துணை இருந்தால் எந்த விதமான சிக்கலையும் தைரியமாக எதிர்க்கொள்ளலாம் என்பதாக இந்தப் பழமொழி நமக்கு விளக்கம் தருகிறது.

ஆனால் உண்மையில் இந்தப் பழமொழியின் பொருள் தன்னம்பிக்கையுடையான் படைக்கு அஞ்சான் என்பதே ஆகும்.

அதாவது எந்தச் சூழலிலும் தன் மீதான நம்பிக்கையை இழக்காமல் இருப்பவன் எல்லா விதமான தடைகளையும் உடைத்தெரிந்து வெற்றி பெற முடியும் என்பதே நம் முன்னோர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம்


10390031_683652001703775_1582398805462863016_n.jpg




Source: Ananthanarayanan Rama swamy
 
ஐந்து பிள்ளை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான

ஐந்து பிள்ளை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்:-

ஐந்து பிள்ளை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

அதாவது ஐந்து பெண் பிள்ளைகள் பெற்றவன் வசதி படைத்தவனாக இருந்தாலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவான் என்பதே கிராமப்புரங்களில் வழங்கும் சொற்றொடர் ஆகும்.

ஆனால் இதன் உண்மை விளக்கம் கீழே குறிப்பிட்டுள்ள இந்த ஐந்து குணங்களைக் கொண்ட உறவுகள் கிடைத்தால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறும் என்பதே பொருள்.

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்

1. ) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2. ) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3. ) ஒழுக்கமற்ற மனைவி,

4. ) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்,

5. ) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்

இந்த ஐந்து குணமுடைய உறவுகள்தான் ஒரு மனிதனை கீழ்நிலைக்குக் கொண்டுபோகும் என்பதை விளக்குவதே இதன் பொருள்.

10414900_683650771703898_4876241948114989780_n.jpg



Source: Ananthan arayanan Ramaswamy
 
ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு க&#3006

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்:-

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்,

இந்தப் பழமொழியை அடிக்கடி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அதாவது வாய்ப்புகள் கிடைக்காதபோதும் திறமையானவர்களுக்கு வெற்றி கிடைக்காதபோதும் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள்தான் இவை.

ஆனால் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த உண்மையான பொருள் வேறு.

அதாவது ஆனை என்பது (ஆ+நெய்) பசுவின் நெய்.

பூனை என்பது (பூ+நெய்) பூவின் நெய் (தேன்) ஆகும்.

சிறு வயதில் பசுவின் நெய் சாப்பிடுவது நல்லது.

அதே நெய் வயதான காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.

வயதான காலத்தில் தேனை சில மருந்துகளுடன் கலந்து சாப்பிட உடம்புக்கு ஏற்றது.

இதை நம் முன்னோர்கள் சொல்லி வைத்த விதம் மாற்றி
நாம் நம்காலத்திற்கு ஏற்றார்போல் சொல்லிப் பயனடைகிறோம்.


10308345_683648771704098_4639138093520467694_n.jpg


Source: A nathanarayanan Ramaswamy

 
ஐந்து சிங்கங்கள்

ஐந்து சிங்கங்கள்


அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்துதம் அஞ்சகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்ஞாது இறைவனை எய்தலும் ஆமே.
- திருமூலர்.


அஞ்சகம் என்பது உடல். அடவி(குகை) என்பது மனம். ஐந்து சிங்கங்கள் என்பவை கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்பொறிகளாகும்.


ஒவ்வொரு மனிதனின் மனங்களுக்குள்ளும் ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன. காட்டுக்குள் போய் மேய்ந்து விட்டுப்பின் இந்த ஐந்து சிங்கங்களும் தத்தம் மனமாகிய குகைக்குள்ளேயே வந்து தங்கி விடும். இந்த ஐந்து சிங்கங்களின் நகத்தையும், பல்லையும் அறுத்து எறிந்துவிட்டால் அஞ்சாமல் நாம் இறைவனை அடைந்திடலாம்.


ஐம்பொறிகளினால்ஏற்படும்ஆசைகளைநாம்இறைப்பற்றின்மூலம்அறுத்தெறிந்துவிட்டால்கலங்காமல்நாம்இறைவனைக்காணலாம்.


??? ???????. ????? ?? ???.: ????? ??????????
 
கல்லைக்கண்டால் நாயைக்காணோம், நாயைக்கண்&#

கல்லைக்கண்டால் நாயைக்காணோம், நாயைக்கண்டால் கல்லைக்காணோம்,



இதன் பொருள் நாயை கல்லால் அடிப்பதன் சூழ்நிலையை விளக்குவதில்லை,
அதாவது கல் கையில் இருக்கும் போது நாய் எதிரில் வரவில்லை,
நாய் எதிர்படும் போது கல் கிடைப்பதில்லை, என்பதும் பொருள் படும்.



நிற்க:-இதனைஎதிர்கால சந்ததியினர் மேற்கூறியவாறு பொருள்படுத்திவிடுவார்கள் என சற்றும் கருதாமல் இக்கருத்தினைசொல்லிவிட்டுச்சென்ற முன்னோர்கள் அப்படி ஆழப்பார்வையில்லாததன் காரணமாகவே பொருள் திரிவு ஏற்பட்டு அதன் பின் விளைவுதான் நம்மை எங்கோ இட்டுச்சென்றுவிட்டது என நான் கருதுகிறேன்,
ஒரு கல்லில் நாயின் உறுவத்தினை பொரித்துவைக்கப்பட்டுள்ளது


அதனை நாயாகவே கண்கள் மூலமாக மனதில் பதியவைக்கும் போது அதனை தாங்கியுள்ள கல் மனதிலிருந்து மறைகிறது,


மாறாக இது ஒரு கற்சிலைதான் என மனதில் படும்போது கண்களுக்கு கல்லாகத்தெரிகிறது,
வேறுமாதிரியாக பார்ப்போம்,


அக்கல் தாங்கியுள்ள வடிவம் அனைவருக்குமே நாயை நினைவு படுத்தும் என்பதும் உண்மையே,
இது மனக்கண்ணோட்டத்தின் காரணமே,எனெனில் நம் மனதில் நாயின் உறுவம் நன்கு பதிந்துள்ளது என்பதும் உண்மையே,


மனிதனின் மனமானது,செயலில் உணரும் தன்மையற்றதாகவே இருக்கிறது
இது ஆணிதரமான உண்மை,


உதாரணமாக நாம் ஒரு யானையைப்பார்க்கிறோம்,
அதன் வடிவம் நமக்கு நன்கு பரிசயமானதே இருந்தாலும் தெருவில் யானை சென்றால் உடனே பார்க்கும் ஆவல் ஏன் தோன்றுகிறது


யானையின் உருவப்படிவம் புதுப்பிக்க மனம் வேண்டுகிறது,அதாவது நமது பாஷையில் அப்டேட் செய்வதற்கு,இச்செயல் நம்மையறியாமலேயே இந்த அப்டேட் செயல் நடைபெருகிறது என்பது நிதர்சனமான உண்மை.


இதுவும் ஒரு டிஜிடல் கோட் மாதிரியாகவே மனதில் பதிவாகிறது அதாவது உறுவமானது (ஹெச்.டி.எம்.எல். எம்பெட் கோட்) மாதிரி தான்

மனதில் படிகிறது அதனை உருமாற்றி மூளைதான் நமது மனத்திரையில் அவ்வுருவத்தை காட்டுகிறது,

?????????????? ????????????, ????????????? ?????????????, ??? ??? ???? ??????????
 
உயிருக்கும் உயிர் கடவுள்

உயிருக்கும் உயிர் கடவுள்



ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க வேண்டுமே ஒழிய, அதிலுள்ள முள்ளைச் சீவ வேண்டியதில்லை. அதுபோல, படிக்கும் சாஸ்திரங்களில் இருந்து சாரத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, சாரமில்லாத வேண்டாத விஷயங்களைத் தள்ளிவிட வேண்டும்.



கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அதுபோல குதர்க்கபுத்தி கொண்டவர்களின் உள்ளத்தில் பலவிதமான சந்தேகங்கள் கிளம்பியபடியே இருக்கும். அதை தீர்த்து வைப்பது என்பது சமுத்திரத்தை கட்டுப்படுத்துவது போலத்தான்.


கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலத் தோன்றினாலும், அதை சாவி கொடுத்து இயக்கியவன் ஒருவன் இருக்கிறான் அல்லவா? அதுபோல, உலகவாழ்க்கை இயற்கையாகவே நடப்பது போல கண்ணுக்குத் தோன்றினாலும், அதை இயக்குவிப்பவன் ஒருவன் இருக்கிறான். அவனையே பகவான் என்று அழைக்கிறோம்.

* உயிருக்கும் உயிராக இருப்பவர் கடவுள். உடலுக்குள் இருக்கும் உயிரையே யாராலும் காணமுடியவில்லை. அப்படியிருக்க உயிரின் உயிரை இவ்வுலகில் அறியவல்லவர் தான் யார்?


ஈரமண்ணில் செடி கொடிகள் வளரும். காய்ந்த மண்ணில் செடி பட்டுவிடும். அதுபோல, இரக்கம் கொண்ட மிருதுவான இதயத்தில்தான் பக்தி வளரும். கடினமான இதயத்தில் பக்திக்கு இடமே இருப்பதில்லை.



Source: Hindu Prasad
 
கூட்டுப் பிரார்த்தனை :

கூட்டுப் பிரார்த்தனை :

29640Kuttu-Perarthanai_f.jpg



வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் எதிரிகள் என்பது ஊரறிந்த விஷயம். ஒருமுறை இருவருக்கும் ஒரு பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம், ஓய் வசிஷ்டரே! உலக உயிர்கள் அனைத்தும் இறைவனை அடைய வேண்டும் என்பது என் ஆசை. உயிர்கள் இறைவனை அடைய மனம் ஒருமித்த தவம் இருக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட தவசீலன் என்பதால் தான் இறைவனை பார்க்க முடிந்தது. எனவே தவத்தின் பெருமை குறித்து பிரசாரம் செய்யப் போகிறேன். உலகமக்கள் என்னைப் பின்பற்றி இறைவனை அடைவார்கள், என்றார். வசிஷ்டர் சிரித்தார். விஸ்வாமித்திரரே! நீர் எப்போதும் அவசர குடுக்கை தான்.

ஏற்கனவே, ஒரு அரிச்சந்திரனை உம் பொருட்டு பாடாய் படுத்தினீர். இப்போது உலகத்தையே பாடாய் படுத்தப் போகிறீரோ! இறைவனை அடைய நினைப்பவன் தவம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. தவம் என்பது உலகத்தாருக்கு ஏற்புடையதும் அல்ல. உடலை வருத்தி இருக்கும் உண்ணாவிரதம் கூட இறைவனை அடைய உதவுமா என்பது சந்தேகமே! துறவிகளுக்கு வேண்டுமானால் தவமிருக்கலாம். இறைவனை அடையலாம். ஆனால், சம்சார சாகரத்தில் மூழ்கிக் கிடக்கும் குடும்பஸ்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதுவே அவர்களை இறைவனிடம் சேர்ப்பித்து விடும், என்றார்.


இருவரும் நீண்ட நேரமாக விவாதித்தனர். பிரச்னை தீர்வுக்கு வரவில்லை. நேராக பிரம்மாவிடம் சென்றார்கள். பிரம்மா இவர்களிடம், நான் படைப்புத் தொழிலில் ரொம்பவும் மும்முரமாக இருக்கிறேன். நீங்கள் சிவனைப் பாருங்கள், என சொல்லி விட்டார். சிவனிடம் சென்றார்கள் இருவரும். என் பரமபக்தன் ஒருவன் பூலோகத்தில் மிகவும் கஷ்டப்படுகிறான். என்னை வருந்தி அழைத்தான். அவனைப் பார்க்கப் போகிறேன். பெருமாள் தான் இது போன்ற விஷயங்களுக்கு தகுதியானவர். அமைதியானவர். உங்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்வார், என்றார். பெருமாளிடம் ஓடினார்கள் இருவரும். முனிவர்களே! இதற்கு எனக்கு பதில் தெரியுமாயினும், என்னை விட இதோ படுத்திருக்கிறேனே! ஆதிசேஷன். அவனுக்கு ஆயிரம் நாக்கு. நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நொடியில் பதில் சொல்லி விடுவான், என்று தப்பித்துக் கொண்டார். அவர்கள் ஆதிசேஷனிடம் கேட்டனர்.


முனிவர்களே! உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அதைச் சொல்ல ஒரு நிபந்தனை. நான் தான் இந்த உலகைத் தாங்குகிறேன். இப்போது பாரம் அதிகமாக இருக்கிறது. பேசவே முடியவில்லை. இதை நீங்கள் குறைத்து வையுங்கள். பதில் சொல்கிறேன், என்றது. விஸ்வாமித்திரர் தான் செய்த தவத்தில் நூறில் ஒரு பங்கை ஆதிசேஷனுக்கு கொடுத்தார். பாரம் இறங்கவில்லை. அவ்வளவு தவத்தையும் கொடுத்தார். ஓரளவு கூட அசையவில்லை.

வசிஷ்டர் ஆதிசேஷனுக்கு, தன் சிஷ்ய கோடிகளுடன் செய்த கூட்டுப்பிரார்த்தனையின் பலனில் லட்சத்தில் ஒரு பங்கு தான் கொடுத்தார். ஆதிசேஷனின் பாரம் நீங்கி விட்டது. விஸ்வாமித்திரர் தலை குனிந்தார். தவம், தியானம், விரதம் முதலானவை கடினமானவை. கூட்டுப் பிரார்த்தனை இலகுவானது. இது வீட்டில் ஒற்றுமையை வளர்க்கும். வெளியிடங்களில் சகோதரத்துவத்தை உருவாக்கும். ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும். அதுபோல், குடும்பத்திற்காகவும், தேசத்தின் பாதுகாப்புக்காகவும் ஒட்டு மொத்தமாக கூடி பிரார்த்தனை செய்வோம். நம் கோரிக்கை இறைவனால் நிறைவேற்றப்படும்.


????? ??????, ???????? ???????????..
 
Why Indian squirrel has 3 lines on its back ?

Why Indian squirrel has 3 lines on its back ?

index.jpg





Rama decided to wage war against Ravana to get back Sita . The Vanaras under the leadership of Hanuman , took it as a privilege to help Lord Rama and Lakshmana.

They have to cross the Ocean to reach Lanka .The Vanara Sena ,Rama, Lakshmana have to cross the ocean.It was decided to build a bridge .In those days with limited materials and without machines , the Vanara sena started to construct the bridge.

The Vanaras(monkeys) carried huge rocks, boulders and mud on their shoulders and threw them in the ocean .Some of the vanaras placed these in their places so as to make a bridge.

Every one wanted to take part in this construction .Even birds as they flew , took little stones and filled the gaps between rocks.

Seeing all these, a little squirrel wanted to do his little part.
What he did was , he first dipped himself in the sea , ran to the shore , rolled in the sand, then ran to the construction site and shrugged himself off there. A very little sand fell from his body.He was happy at this.

He started repeating the task again and again.Dipping in the sea, rolling on the sand, shrugging his body near the construction sight .

But the vanaras felt he was disturbing them, from finishing their task.So the vanaras started yelling at him.

The little squirrel did not listen.One of the vanara caught him in his hand, shouted at him and threw him away from that place.

Straight , the squirrel fell into Lord Rama's lap, who was seeing all this.
Rama with his palm and three fingers consoled the squirrel ,and asked the vanaras to allow the squirrel to do whatever he could do.

Anywork howsoever little it could be should be appreciated is Rama's advice to the vanaras.
And ofcourse the advice holds good for every one of us.

As Rama consoled and patted with his fingers, the squirrel, got three lines as mark of recognition of the very little work he did.






http://rajalakshmi77.blogspot.com/2013/05/why-do-squirrels-have-lines-on-their.html

Mythological Story : Rama and the squirrel
 
How Some Tamil Provers has changed

  • How Some Tamil Provers has changed
  • அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்.
    • இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு
  • அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
    • அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.
  • அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
( குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து).



  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்
இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு

ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.


  • ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    • இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
  • ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    • மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்.
  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]\

  • களவும் கற்று மர
    • இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி
  • களவும் கத்தும் மற
    • களவையும் சூதாட்டத்தையும் மற
    காலைக் கல்; மாலைப் புல். "காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து





  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
    • இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு
  • கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
    • கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
  • சட்டியில் உணவோ அல்லது சாறோ இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று பொருளில் சொல்லப்பட்டாலும், உண்மையில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும் என்று குறிப்பிட வழங்கப்பட்ட பழமொழி.



  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
    • இது 'மண்குதிரை (மண்குதிர்) நம்பி ஆற்றில் இறங்கலாமா' என்பதன் திரிந்த வழக்கு
  • மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
    • மண்குதிர் என்பது புதுமணல் மேடு. அதை நம்பி ஆற்றில் இறங்கினால் புதைந்துவிட வாய்ப்புண்டு



??????????????
 
ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன்

ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன்




பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.


சாக்கடையில் பதுங்கிய இந்திரன்

ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார். ‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார். சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

சனீஸ்வரரின் அதிகாரம்

எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது’ என்று சொல்லி திட்டுவார்கள்.

உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். தற்போது 2012-ம் ஆண்டு முதல் சனி தன் உச்ச வீடான துலா ராசியில் அமர்ந்துள்ளார். ஆகையால் பூரண பலத்துடன் திகழ்கிறார்.

இதனால் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த உச்ச சனியால் சகல யோக அதிர்ஷ்டங்கள், சுப விசேஷங்கள் கூடிவரும். யோக பாக்யத்தை அருள்வார். மற்ற ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள், நிறை, குறைகள், கஷ்ட-நஷ்டங்கள் இருந்தாலும் உச்ச பலம் காரணமாக சில சாதகமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி திசை நடப்பவர்களுக்கு இந்த உச்ச நேரம் மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும்.

வழிபாடு பரிகாரம்

பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். நவ திருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம்.

சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.

??? ???????? ????? ???? ?????????<br> - Dinakaran Astrology
 
சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்


TN_172502000000.jpg



எந்த ஒரு ஆசனம் செய்வதற்கு முன்பும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் முக்கியம். சூரிய நமஸ்காரம் என்பது மந்திரமும் ஆசனமும் சேர்ந்த ஒரு அபூர்வ அதிசக்தி அளிக்கும் படைப்பாகும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன. சூரிய நமஸ்காரம் செய்தபின் இயல்பான மூச்சு வரும் வரை ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னரே மற்ற ஆசனங்கள் செய்ய வேண்டும்.


Yoga | Surya namaskar | Yogasanas | ????? ?????????
 
ஏன் இறைவனுக்கு கற்பூரம் காட்டுகிறோம்?

ஏன் இறைவனுக்கு கற்பூரம் காட்டுகிறோம்?

f0435-aarti.jpg





கோவில்களில் கடவுளின் பிரதிமை/ உருவம் உள்ள கர்ப்பக்கிரகம் (கருவறை) இருட்டாக இருக்கும். பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது.புகை, எண்ணெய் முதலியன பட்டு மூர்த்தியின் உருவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல கோவில்களில் வெளியே தான் விளக்குகள் வைக்கப்பட்டு இருக்கும். கற்பூரமோ நெய் விளக்கோ காட்டும்போது கடவுளின் உருவம் நன்கு தெரியும். அப்போது பட்டர் அல்லது அர்ச்சகர் அந்தக் கோவிலின் , மூர்த்தியின் பெருமையை மனப்பாடமாக ஒப்புவிப்பார். இது புத்தகத்தில் படித்துச் சொல்லும் விஷயம் அல்ல. அவர் கூறுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செவி வழி மூலம் பெறப்பட்ட அரிய விஷயம்.

அவ்வாறு ஒருவர் சுவாமியின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி, விவரிக்கும்போது நமது முழு கவனமும் அதன் மீது இருக்கும். இவ்வாறு மனம் குவியும்போது நாம் செய்யும் பிரார்த்தனை அப்படியே நிறைவேறும். அப்போது கடவுளைத் தரிசனம் செய்யும் எல்லோரும் ஒரே ‘வேவ் லெந்த்’தில் இருப்பதால் இறையருள் பெறுவது எளிதாகிறது.

இதற்கு ஒரு தத்துவ விளக்கமும் உண்டு. மனத்திலுள்ள இருட்டு, அதாவது அஞ்ஞானம், விலக இறை அருள் தேவை. ஆரத்தியில் காட்டும் தீபம் எப்படி கர்ப்பக்கிரக இருளைப் போக்குகிறதோ அதுபோல, நம் அகத்தில் உள்ள இருளும் வழிபாட்டில் மறைந்து விடும்.
கற்பூரத்துக்கும் நெய் தீபத்துக்கும் வேறுபாடு உண்டு. கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோகார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்கமாதல் (சப்ளிமேஷன் ) என்னும் முறையில் எரிகிறது. அதாவது அந்தப் பொருளை சூடு படுத்தும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்குப் போய்விடும். இதே போல கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.


கற்பூரம் வெண்மையானது. அது போல ஆன்மா சுத்த தத்துவ குணமுள்ளது. கற்பூரம் ஏற்றியவுடன் அது தீபம் போல எரிகிறது. அதே போல மலம் நீங்கப்பெற்ற ஆன்மாவானது ஞானாக்கினியால் சிவகரணம் பெற்று நிற்கிறது. கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றி கரைந்து போகிறது. அதே போல ஆன்மாவானது சரீரத்தை விட்டு நீங்கி மறைந்து இறைவனோடு ஒன்றுபடுகிறது.

இதோ சுவாமி தயானந்த சரஸ்வதி அளிக்கும் பதில்: ஆலயத்துக்குச் செல்லும்போது வெளிச்சம் நிறைந்த வெளிப் பிரகாரத்தில் இருந்து கருவறைக்கு முன் வந்து நிற்கிறோம். அங்கே இருள் சூழ்ந்து இருக்கிறது. விளக்கு ஒளியில் மங்கலாக விக்ரகம் தெரிகிறது. அர்ச்சகர் கற்பூரத்தை ஏற்றி நம்மை தரிசிக்க வைக்கிறார். தலையில் உள்ள மணிமுடியால் தலை இருக்கும் இடம் தெரிகிறது. காதில் உள்ள குழையால் முகம் இருக்கும் இடத்தைப் பார்க்கிறோம். கழுத்தில் உள்ள மாலை அவருடைய மார்பைக் காட்டுகிறது இடையில் உள்ள அணி இறைவனின் மேனியைக் காட்டுகிறது, காலில் உள்ள சதங்கை அவனது பாதங்களைக் காட்டுகிறது. ஆகக் கற்பூரம் ஒவ்வொரு இடத்திலும் ஒளியேற்றும்போது, இறைவனின் உருவத்தை நாம் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து விடுகிறோம்.



இது எப்படி இருக்கிறது? இறைவனின் சக்தியை உணருவதன் மூலம் , அவனைப் புகழ்ந்து பாடுவதன் மூலம் அவனை அடையாளம் காணுவதைப் போலத்தான் இருக்கிறது. சூடான சூரியனின் கதிர்களும், குளிர்ந்த நிலவின் ஒளியும், கண்ணைக் குளிரச் செய்யும் தாவரங்களின் பசுமையும் தாகத்தைத் தணிக்கும் ஊற்றின் நீரும் இறைவனின் பிரதியாக , அவனுடைய புகழின் வடிவமாக நமக்குத் தரிசனம் தருகின்றன. அவற்றின் மூலம் இப்படி நாம் இறைவனைப் புரிந்து கொள்கிறோம். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று கூறி மகிழ்கிறோம். இதே செயலைத் தான் நாம் ஆலயத்தின் கருவறையிலும் செய்கிறோம். இத்தனை சிறப்பான வடிவத்தை சுடர் ஒளி அங்கம் அங்கமாகக் காட்டும் போது, அடையாளம் கண்டு கொள்கிறேனே! என்று கூறி வியக்கிறோம். அப்படி உணரும்போது நமது அறியாமை கரைந்து மறைகிறது. அதே போல கற்பூரமும் ஒளி அணைந்து காற்றில் கரைந்து மறைந்து விடுகிறது.

ஞானாக்கினியில் அறியாமை எரிக்கப்படுவதை, கற்பூரம் நமக்கு ஒளிகாட்டி எரிந்து மறைவதன் மூலம் உணர்த்துகிறது. ஒளியே வடிவான இறைவனை ஒளி மூலம் உணர்கிறோம். அப்போது ஞானமே வடிவான இறைவன் நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம்.

இந்தத் தத்துவத்தைக் காட்டுவதே கற்பூரம் ஏற்றித் தரிசனம் செய்ய வைக்கும் நிகழ்ச்சியாகும்”. (சுவாமி தயானந்த சரஸ்வதி).


(குறிப்பு: இப்போது தமிழ்நாட்டுக் கோவில்களில் கற்பூரம் ஏற்றுவதை அனுமதிப்பதில்லை. இதற்குக் காரணம் தூய கற்பூரத்துடன் செயற்கையான மெழுகைச் சேர்க்கும்போது அது கரித் தூளை உமிழ்கிறது. இது புறச் சூழலைக் கெடுக்கிறது. இதற்குப் பதிலாக அதே ஒளியூட்டும் பணியை நெய் விளக்கு செய்கிறது. தத்துவம் ஒன்றே.)

http://tamilandvedas.wordpress.com/tag/
 
ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:




1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.

6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.

11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.

16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.

21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.

26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.

31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.

36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.

37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.

41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.


46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.


ஹரிஹர மந்த்ரம்
“ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய”


???????????: ??? ????????????? - ????????? ?????????:

 
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் படிப்பதால் வரக்க&#

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் படிப்பதால் வரக்கூடிய பயன்கள்

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் போன்ற பழங்கால ஆன்மிக நூல்களிலெல்லாம் 'பலசுருதி' என்றோர் பகுதி தவறாமல் இருக்கும். அப்பகுதியில் இந்த நூலை எப்படியெப்படியெல்லாம் தியானித்தோ படித்தோ ஆண்டவனை அர்ச்சித்தோ செய்தால் இன்னின்ன நற்பயன்கள் கிடைக்கும் என்பதை இனிக்க இனிக்கச் சொல்லப்பட்டிருக்கும்.

இவ்விதம் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் படிப்பதால் வரக்கூடிய பயன்கள் இருபது சுலோகங்களில் மகாபாரதத்திலேயே ஸஹஸ்ரநாமத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கின்றன. காலப்போக்கில் இவை தவிர,பத்மபுராணத்திலிருந்தும் பகவத் கீதையிலிருந்தும் சில சுலோகங்கள் இவைகளுடன் சேர்த்துப் படிக்கப்படுகின்றன.



'பலசுருதி' யிலிருந்து சில பகுதிகள்:



  • எவன் இதனை (இத்தோத்திரத்தை)தினமும் கேட்கிறானோ, எவன் இதனைக்கொண்டு ஆண்டவனை துதிக்கிறானோ அவன் இம்மையிலும் மறுமையிலும் சிறிதும் கெடுதலை அடையமாட்டான்.

  • தருமத்தை விரும்புபவர் தருமத்தையும், பொருளை விரும்புபவர் பொருளையும், காமத்தை விரும்புபவர் காமத்தையும், வம்சம் செழிக்க விரும்புபவர் வம்சச்செழிப்பையும் பெறுவர்.

  • உள்ளத்தூய்மையும் புறத்தூய்மையும் கொண்டு பக்தியுடன் புருஷோத்தமனை ஆயிரம் நாமங்களால் துதிப்பவன் நோயால் துன்புறுபவனானால் நோயிலிருந்து விடுபடுகிறான். சிறையில் அடைக்கப்பட்டவன் விடுபடுகிறான். ஆபத்தில் சிக்கியவன் மீள்கிறான். கடப்பதற்கு இயலாத இடையூறுகளை எளிதில் கடந்து விடுகிறான்.

  • சிரத்தையும் பக்தியும் கொண்டவனாக இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவன் ஆன்மசுகம், பொறுமை, செல்வம்,மன உறுதி, நினைவாற்றல், புகழ் இவற்றைப் பெறுவான்.

  • அறநூல்களில் கூறப்பட்ட அறமுறைகளை வாழ்க்கைமுறையாக ஏற்று வாழ்நாள் முழுதும் கடைப்பிடிப்பதே தருமம். தருமத்தையே தன் வலிவாகக்கொண்டு ஆண்டவன் இவ்வுலகைக் கட்டுப்படுத்துகிறார்.ஆண்டாள் திருப்பாவையில்6 பகவான் கண்ணனிடம் இற்றைக்கும் ஏழெழ் பிறவிக்கும் உன்தன்னொடு உற்றேமே யாவும் உமக்கே நாம ஆட்செய்வோம். மற்ற நம் காமங்கள் மாற்றேளோரெம்பாவாய் என்று வேண்டுகிறாள். பகவான் நாமம் மற்ற ஆசைகளை அழித்து பிறவி பெரும் பயனை அடைய செய்து, எங்கும் திருவருள் பெற்று இன்புற செய்யும். ஒம் நமோ நாராயணாய.



?????? ?????????? - ????? ??????????????
 
ஆறு திருமுகம்

ஆறு திருமுகம்

saravanabhavar.jpg



சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து முகங்களுடன் அம்பிகையின் ஒரு முகமும் சேர்ந்து எம்பெருமான் ஆறு திருமுகம் கொண்டுள்ளார்.


* சுப்பிரமணிய மூர்த்தியின் ஆறு முகங்களில் ஒரு முகம் ஓம்கார வடிவத்தை உடையது. அது இன்பத்தை தருவதாகும். மற்றொரு முகம் ஞான மொழியை மொழிகிறது. இன்னொரு முகம் "சரவணபவ' என்ற ஆறெழுத்தை அன்புடன் கூறி, பக்தர்களின் வினைகளை தீர்க்கிறது. ஒரு முகம் லட்சத்து ஒன்பது வீரர்களையும் மயக்கிய கிரவுஞ்ச மலையை பிளக்கும் வகையில் ஞானசக்தியை ஏவி இன்னருளை தருகிறது. ஒரு முகம் பக்தி மார்க்கத்தில் இருந்து தவறிய சூரர்களை அழித்த வீரத்தை கொண்டது. இன்னொரு முகம் மான் வயிற்றில் பிறந்த வள்ளி நாயகியின் மனம் கவர்ந்தது. இத்தனைக்கும் சொந்தக்காரனாக ஆறுமுகப்பெருமான் விளங்குகிறார்.

* நவரத்தின மாலைகளை அணிந்த மார்பைக் கொண்டவர் முருகன். மணிமகுடங்களை உடையவர். அவரது வனப்பை எடுத்துரைக்க மிகச்சிறந்த எழுத்தாளர்களாலும் முடியாது. இதனால்தான் அருணகிரிநாதர் அவரது ஆறு முகங்களையும் "எழுதரிய அறுமுகமும்' என்று பாடினார்.

* அழகில் சிறந்த மன்மதர்கள் ஆயிரம் கோடி பேர் ஒன்று சேர்ந்தாலும் குமரக்கடவுளின் பாத அழகுக்குக்கூட இணை வராது. மன்மதனை தன் அழகால் முருகன் ஏளனம் புரிபவன் ஆன படியால் அந்த பெருமானுக்கு "குமரன்' என்ற பெயர் ஏற்பட்டது. மன்மதனோ கரியநிறம் உடையவன். குகப்பெருமானோ செந்நிறம் உடையவர். இதனால்தான் மன்மதனை கருவேள் என்றும், குமாரப்பெருமானை செவ்வேள் என்றும் சொல்கிறார்கள்.

* சூரபத்மனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் வேண்டிக்கொண்டனர். ஆனால், அவனை அழிக்காமல் ஆட்கொள்ள வேண்டும் என்பது பாலகுமாரனாகிய முருகப் பெருமானின் ஆசையாக இருந்தது. அந்தளவுக்கு அவர் கருணைக்கடலாக விளங்கினார்.

* முழுமதி போன்ற ஆறு முகங்களும், ஒளிவீசும் 12 மலர்விழிகளும், வைரம் பதித்த செஞ்சுருட்டி போன்ற திருவாபரணங்களும், ரத்தின குண்டலங்கள் அணிந்த 12 காதுகளும், செந்தாமரைகள் மலர்ந்தது போன்ற 12 திருக்கரங்களும், பவள மலைமேல் வெள்ளியருவி ஓடுவது போன்ற திருமேனியில் மிளிரும் முப்புரி நூலும், புகழ்பெற்ற ஆடைகளும், அரைஞாண் மணிகளும், பல வினை அகற்றும் பாதாரவிந்தங்களும் கொண்ட அவனது திரு உருவத்தின் பேரழகை வர்ணிக்க வார்த்தையில்லை.


Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts

Picture source:https://www.google.com/search?q=Lord+Muruga+Picture+with+6+heads&client=firefox-
 
மூன்று முறை ராம ராம ராம என சொன்னால் போதும&#302

மூன்று முறை ராம ராம ராம என சொன்னால் போதும். அது ஆயிரம் தடவைக்கு சமானம்


lord-rama-43a.jpg



மூன்று முறை ராம ராம ராம என சொன்னால் போதும். அது ஆயிரம் தடவைக்கு சமானம் என்கிறார் திருமங்கை ஆழ்வார். ராம ராம ராம என மும்முறை சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் சொன்ன பலன் கிடைக்கும் என்கிறார் பரமசிவன். சகஸ்ரம் என்றான் ஆயிரம் எனப் பொருள். திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தத்திலும், வேதசமக மந்திரத்திலும் இறைவனின் திருநாம எண்ணிக்கை பற்றி சொல்லப்பட்டுள்ளது.


சரி... மூன்று எப்படி ஆயிரமாகும்?



ராமா என்ற சொல்லை எடுங்கள். தமிழிலுள்ள ர வரிசையில் ரா இரண்டாம் எழுத்து. வடமொழியில் ம என்பது ஐந்தாவது எழுத்து. அங்கே ம என்ற எழுத்தை ப1, ப2, ப3, ப4 என ஒரே எழுத்தை சற்று அழுத்தம் கூட்டி கூட்டி உச்சரிப்பார்கள். இந்த வரிசையில் ஐந்தாவதாக வரும் எழுத்து ம ஆகும். இரண்டை ஐந்தால் பெருக்கினால் பத்து வரும். ஆக ராம என்ற சொல்லுக்குரிய எண் 10. இதை மூன்று முறை சொன்னால் 10*10*10 = 1000. வடமொழி எழுத்தையும், தமிழ் எழுத்தையும் எப்படி முடிச்சுப் போடலாம் என்ற சந்தேகமும் சிலருக்கு வரும். வடக்கே பிறந்த ராமன், தெற்கே வரை வந்து தன் சாம்ராஜ்யத்தை நிலை நாட்டியுள்ளார். எனவே வடக்கும் தெற்கும் இணைவதில் தவறேதும் இருக்க முடியாது என திருமழிசையார் கருதியிருக்கக் கூடும். எனவே, தான், ராம ராம ராம என மும்முறை சொன்னால் ஆயிரம் முறைக்கு சமம் என்றார்.

ராமநாமத்தின் மகிமை அலாதியானது. இந்த உலகுக்கு மட்டுமல்லாமல், ஏழு உலகத்திற்கும் மோட்சம் தரும் ராமநாமத்தை ராமனின் அம்பில் வாலி கண்டதாக கம்பர் வர்ணிக்கிறார். இறைவனது பெயரை நடக்கும்போதும், வேலை செய்யும் போதும், யார் சொல்கிறார்களோ அவர்கள் எடுத்து வைக்கும். ஒவ்வொரு அடியிலும் தியாகம் செய்த புண்ணியம்பெறுவார்கள். அவர்களது உடல்கள் புனிதமடைகின்றன. யார் இறைவனின் பெயரை உணவருந்தும் போது கூறுகிறார்களோ அவர்கள் உணவு உட்கொண்ட போதிலும் விரதம் இருந்த பயனை பெறுகிறார்கள்.

யார் இறைவனின் பெயரை இடைவிடாமல் சொல்கிறார்களோ அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முக்தி பெற்று விடுகிறார்கள்.


Temple News | News | Tamilnadu Temples | 3 = 1000?


picture source: https://www.google.com/search?q=Rama+Pictures&client=firefox-
 
பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன?

பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன?

TN_20140602152249039489.jpg


கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே...என்று, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பாடலில் கூறுவார். பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. வீட்டிலிருக்கும் பெரியோர் மற்றும் பெற்றவர்கள் ஒரு விஷயம் குறித்து எச்சரிக்கின்றனர் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்பதை, பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தர்க்கம் பேசினால், எத்தகைய ஆபத்து நேரிடும் என்பதற்கு வியாசர் சொல்லும் கதையை கேளுங்கள்...


ரைப்யன் - ருக்ம ரேகை என்ற அரச தம்பதிகளுக்கு, ஏகாவலி என்ற பெண் இருந்தாள். அவள், திரபதியைப் போல, யாக அக்னியில் தோன்றியவள். அரசகுமாரியான ஏகாவலியும், மந்திரி குமாரியாகிய யசோவதியும் இணை பிரியாத தோழிகள். அவர்கள் இருவரும், ஒரு காட்டில் இருந்த, தாமரைக்குளத்திற்கு நீராட செல்வது வழக்கம். அது ஆபத்து என்று சொல்லியும், அப்பெண்கள் கேட்கவில்லை. அதனால், அவர்கள் பாதுகாப்பிற்காக, வீரர்களை அனுப்புவார் அரசர். கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்பார்களே... அதுபோல, ஒரு நாள், வழக்கம் போல் பெற்றோர் சொல்லை மீறி, வனாந்தரத்திற்கு வந்து, குளத்தில் குளித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, காலகேது என்ற அரக்கன் அப்பெண்கள் இருவரையும், தூக்கி சென்று, சிறையில் அடைத்து விட்டான். அரக்கனுக்கு, அரச குமாரியான ஏகாவலி மீது ஆசை ஏற்பட்டு, திருமணம் செய்ய விரும்பி, அவளை தொந்தரவு செய்தான். யசோவதி, ஒரு சித்த யோகியிடம், அம்பிகையின் மஹாமந்திரத்தை, மூலத்தியானத்தோடு உபதேசம் பெற்றவள்.

அதனால், அம்பிகையின் மந்திரத்தை பக்திப் பூர்வமாக உச்சரித்து, தாயே... எங்களைக் காப்பாற்று... என, வேண்டினாள்.
யசோவதியின் கனவில் அம்பிகை காட்சி தந்து, யசோவதி, துயரப்படாதே... நீ கங்கைக் கரைக்குப் போ. அங்கே லட்சுமி தேவியின் மகனான ஏகவீரன் வருவான். தலை சிறந்த வீரனான அவன், தத்தாத்திரேயரிடம் மஹாமந்திரத்தை உபதேசம் பெற்றவன். அவன் உங்களை இந்த சிறையிலிருந்து விடுவிப்பான். ஏகாவலி அவனையே கணவனாக ஏற்கட்டும்... என்றாள். கனவு கலைந்தது.

அம்பிகையின் அருளால், அவர் கூறிய படியே செய்தாள் யசோவதி. அரக்கனைக் கொன்று, அவர்களை விடுதலை செய்தான் ஏகவீரன். அவனுக்கும், ஏகாவலிக்கும் திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு கிருதவீர்யன் என்று பெயர் சூட்டினர். இந்த கிருதவீர்யன் மகன்தான், கார்த்தவீர்யார்ஜுனன். பரசுராமரால் கொல்லப்பட்ட கார்த்தவீர்யன் இவன் தான். ராமாவதாரத்திற்கு முன் நிகழ்ந்த, பரசுராம அவதார காலத்திற்கு முன்பே, அரக்கன் ஒருவன், பெண்களைப் பலவந்தமாகத் தூக்கிப் போயிருக்கிறான் என்றால்... அரக்க குணம் கொண்டவர்கள் எக்காலத்திலும் உண்டு; அது, இக்காலத்தில் நிரம்ப உண்டு என்பதை பெண்கள் புரிந்து, எப்போதும், ஆண்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வோடு பழக வேண்டும். அது அவர்களுக்கும், அவர்களைப் பெற்றவர்களுக்கும் நல்லது!

Temple News | News | Dinamalar Temple | ??????????? ??????? ??????? ?????
 
கலிக்கம்ப நாயனார்-63 நாயன்மார்கள்

கலிக்கம்ப நாயனார் 1



TN_125923000000.jpg


சீரும் சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடத் தலத்தில் வணிகர் குலத்திலே தோன்றினார் கலிக்கம்பர். சிவனடிப் பற்றேயன்றி வேறு எப்பற்றும் அற்ற இச்சிவனடியார் அடியார்களை உபசரித்து பாதபூசை செய்து அறுசுவை உணவளித்து பொன்னும் பொருளும் வேணவும் கொடுத்து அளவற்ற சேவை செய்து அகமகிழ்ந்தார்.

திருசடையுடைய விடையவர் திருவடியை இரவும் பகலும் இடையறாது கருத்தில் கொண்டு வாழ்ந்த இச்சிவனடியார், அந்நகரிலுள்ள தூங்கானைமாடம் என்னும் சிவக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கங்காதரனை மறவாத சிந்தையுடையவராய் வாழ்ந்து வந்தார்.வழக்கம்போல் சிவனடியார் ஒருவர் வந்தார். நாயனார் அச்சிவனடியாரைக் கோலமிட்ட உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச் செய்து பாதபூசையைத் தொடங்கினார்.

அவரது மனைவியார் மனையைச் சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளைச் சமைத்துக் கரகத்தில் தூய நீருடன் கணவனருகே வந்தார். அச்சிவனடியாரைப் பார்த்ததும் அம்மையாருக்குச் சற்று அருவருப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அச்சிவத்தொண்டர் முன்பு நாயனாரிடத்தில் வேலை பார்த்தவர். அதனால் அவர் மீது சற்று வெறுப்பு கொண்டு தண்ணீர் வார்க்கத் தயங்கி நின்றாள். மனைவியின் தயக்க நிலை கண்டு நாயனார் சினங்கொண்டார். தமது மனைவி தயங்குவதின் காரணத்தைப் புரிந்து கொண்டார்.

சிவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனடியாரது திருச்சேவடிகளை வழிபட கரக நீரைச் சொரிந்து உபசரிக்கத் தவறிய மனைவியாரின் செயலைக் கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார் நாயனார். விரைந்து சென்று வாள் எடுத்து வந்தார். மனைவியாரது கையிலிருந்த கரத்தைப் பற்றி இழுத்து அம்மையாரது கரத்தை துண்டித்தார் சிவனடியார். கலிக்கம்பரின் செயலைக் கண்டு துணுக்குற்றார் அடியார். கலிக்கம்பரின் மனைவி கரத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருக, சிவனை நினைத்த நிலையில் மயக்கமுற்றாள். அந்த அறையிலே பேரொளிப் பிரகாசம் சிவனடியார்களிடையே எவ்வித வேறுபாடும் கருதாது சிவத்தொண்டு புரிந்து வரும் நாயனாரின் இத்தகைய திருத்தொண்டின் மகிமையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இத்திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் விடை மீது எழுந்தருளினார்.

சிவபெருமான் அருளினால் அவரது மனைவி மயக்கம் நீங்கி முன்போல் கரத்தைப் பெற்று எழுந்தாள். அடியவர்கள் அம்பலவாணரின் அருட் தோற்றத்தைத் தரிசித்து நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். எம்பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிந்து அந்தர்த்தியாமியானார். நாயனார் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து இறுதியில் விடையவர் திருவடி மலரினைச் சேர்ந்து பேரின்பம் பூண்டார்.


குருபூஜை:கலிக்கம்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


Kalikkamba Nayanar | 63 Nayanmars | ????????? ???????
 
திருமலை ஏழுமலையானுக்கு மோவாயில் பச்சை க&

திருமலை ஏழுமலையானுக்கு மோவாயில் பச்சை கற்பூரம் சாற்றுவது ஏன்?

மைசூர் பகுதியில் காவேரி நதிக்கரையிலுள்ள சிறு புத்தூரில் ஸ்ரீகேசவாசார்யாருக்கு மகனாக சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் அநந்தாழ்வான். சிறிய வயதிலிருந்தே பகவத் சிந்தனையில் மூழ்கியவர்.



ஸ்ரீரங்கத்தில் பகவத்ராமானுஜரின் கோஷ்டியில் இருந்த அநந்தாழ்வான் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் என்ற பாசுரத்திற்கு விளக்கமளிக்கும் பொழுது, புஷ்பமண்டபமான திருமலையில் நித்தியவாசம் செய்யும் திருவேங்கடவனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வாருண்டோ? எனக் கேட்டார். அதற்கு அடியேன் செல்கிறேன் என்றார் அநந்தாழ்வான். இராமானுஜர் நீரல்லவோ ஆண்பிள்ளை என்று பாராட்டி, ஆசிர்வதித்து திருமலைக்கு அனுப்பி வைத்தார்.


திருமலையில் திருக்கோயிலுக்கருகே ஏரியை அமைத்து, பூந்தோட்டம் அமைக்க எத்தனித்து திருமலையானை தரிசித்து, குருவின் சங்கல்பம் நிறைவேற அருள் புரிய வேண்டும் என பிரார்த்தித்தார். அநந்தாழ்வானும் அவருடைய துணைவியாரும் ஏரியை அமைக்கும் பணியை செய்யத் தொடங்கினர். அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணி, ஆனாலும் இருவரும் தன்னால் முடிந்த அளவிற்கு பணியைச் சிறப்பாக செய்து வந்தனர்.

அநந்தாழ்வான் மண்ணை கடப்பாரையால் தோண்டி, மண்கூடையில் போட்டு மனைவியிடம் கொடுக்க, அவர் சிறிது தொலைவில் சென்று கொட்டி விட்டு மறுபடியும் வந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த திருமலையான், சிறிய பிரம்மச்சாரியாக வடிவெடுத்து, அநந்தாழ்வானுக்கு உதவ வந்தார். எவருடைய உதவியையும் ஏற்காமல் தனது குருவான ஸ்ரீராமனுஜரின் கட்டளையை சிறமேற்கொண்டு பணியை செய்தார்கள் அநந்தாழ்வான் தம்பதியர். சிறுவன் அவர்களுக்குதான் உதவுவதாக கூறியதும், நீ சிறுபிள்ளை. உன் உதவி நான் ஏற்க மாட்டேன். குறுக்கே வராதே என்றார்.


அச்சிறுவன் அவருடைய மனைவியிடம் சென்று, அம்மா! சிறிது நேரம் நான் உங்களுக்கு பதிலாக இந்த மண்ணை சுமக்கிறேன். பின்பு நீங்களே இந்தப் பணியை செய்யுங்கள். சற்று இளைப்பாறுங்கள் என்றான்.


களைத்து போன அநந்தாழ்வானின் மனைவி தான் சுமக்கும் மண் கூடையை கொடுத்தாள். அச்சிறுவன் வேகமாக மண்ணை கொட்டிவிட்டு அவரிடம் கூடையை கொடுத்தான். தன் மனைவியின் வேகத்தினை கவனித்த அநந்தாழ்வான் அதற்கான காரணம் கண்டறிந்தார். அச்சிறுவனை அழைத்து தனது தெய்வீகப்பணியில் எதற்காக குறுக்கே வந்தாய்? என்று கோபித்துக் கொண்டு அச்சிறுவனை பிடிப்பதற்காக ஓடினார். அச்சிறுவனும் வேகமாக ஓட, ஓடுகின்ற சிறுவன் மீது அநந்தாழ்வான் தன் கையிலிருந்த கடப்பாரையை வீசி எறிந்தார். அது அச் சிறுவனின் மோவாய் மீது பட்டது. இரத்தம் கொட்டியது. சிறுவன் அதையும் பொருட்படுத்தாமல் கோயிலுக்குள் சென்று விட்டான்.


மறுநாள், கருவறையில் திருமலையானின் மோவாயிலிருந்து இரத்தம் கசிந்தது. அதை அறிந்த அநந்தாழ்வான் நடந்ததைக் கூறி வருத்தினார். ஸ்வாமி, உன்னிடமுள்ள பச்சை கற்பூரம் பூசும் என்றார். இரத்தம் வடிவது நின்றது. அன்றிலிருந்து ஸ்வாமிக்கு மோவாயில் பச்சை கற்பூரம் பூசுகிறார்கள். அநந்தாழ்வான் எறிந்த கடப்பாரையும் திருமலையில் மஹதுவாரத்தின் சுவற்றின் மேல் இன்றும் காணலாம்.



source:Hindu Prasad
 
அன்னாபிஷேகம் செய்வது ஏன்?


UP_125239000000.jpg



தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். சிதம்பரம் தில்லைச் சிற்றம்பலத்தில் ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் அன்ன அபிஷேகம் நடை பெறுகிறது. இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன ÷க்ஷத்திரம் என்ற பெயரும் உண்டு. இதே போல் அனைத்து சிவ ஆலயங்களிலும் தினமும் அன்ன அபிஷேகம் செய்து நம் ஊர்களை எல்லாம் வளமுள்ளதாக்குவோம்.


ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.

சோத்துக்குள்ளே சொக்கநாதர்


வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். தானத்தில் சிறந்தது அன்னதானம் சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாத சுவாமி உப்பிட்டவரை உள்ளளவும் நினை அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப் போகாது போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.


Festival
 
அன்னபூரணி

அன்னபூரணி


நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள் அன்னபூரணி. காசியில் இருக்கும் இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை நாடிவருவோருக்கு வயிற்றுப்பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள். திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்று குறிப்பிடுகிறார். அறிவான தெய்வமே என்று இறைவனை தாயுமானவர் அழைக்கிறார். இந்த அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் கூறியுள்ளார்.

அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி!! என்று அன்னத்தை மட்டுமல்லாமல், தேவியிடம் ஞானத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். எனக்குப் பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! பக்தர்கள் அனைவரும் சொந்த பந்தங்கள்! மூவுலகமும் என் வீடு! அன்னபூரணியாகிய அம்பிகை அருளும் யாசகத்தை மூவுலகமும் (உயிர்கள் அனைத்தும்) பெறவேண்டும், என்று உயிர்கள் மீது கொண்ட கருணையால் வேண்டுகிறார்.


வள்ளலார் சொல்வதைக் கேளுங்க



அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஜீவ காருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் வாடிய அருளாளர் வள்ளலார். இவர் தொடங்கிய சத்திய தருமசாலை ஆல்போல் தழைத்து அருகு போல எங்கும் வியாபித்திருக்கிறது. இவர் ஏற்றிய அணையா அடுப்பு இன்றும் பலருடைய பசியை போக்கி வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது,சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில், உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.

சோறு கண்ட இடம் சொர்க்கம்



ஒரு வீட்டிற்கு விருந்துக்குப் போய், அங்கேயே டேரா போட்டு விடுபவர்களைப் பார்த்து உனக்கு சோறு கண்ட இடம் சொர்க்கமாயிற்றே என்று வேடிக்கையாக சொல்வது வழக்கம். உண்மையில் இந்த பழமொழி ஏன் வந்தது தெரியுமா? சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக் கேலி செய்வதற்கு பயன்படுத்தி விட்டார்கள்.


தர்மம் தலைகாக்கும்

பாடுபட்டு தேடிய செல்வத்தை சேமிக்க ஆயிரமாயிரம் வழி முறைகளை இன்று நாம் பின்பற்றுகிறோம். ஆனால், தெய்வப்புலவர் திருவள்ளுவர் செல்வத்தை சேமிக்க காட்டும் வழியைத் தெரிந்து கொள்ளுங்கள். திருக்குறள் ஈகை அதிகாரத்தில், அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றார் பொருள் வைப்புழி என்கிறார். ஏழைகள் பசியால் வாடும்போது, அன்னமிட்டு அப்பசியைப் போக்குபவன் இறையருளைப்பெறுவது உறுதி. இந்த புண்ணியபலன், சரியான சந்தர்ப்பத்தில் நம் உயிரையும் காக்கும், என்பது அவரது கருத்து. இதையே செய்த தர்மம் தலைகாக்கும் என்று குறிப்பிட்டனர். இறையருள் என்னும் வட்டியைப் பெற, இதை விட பாதுகாப்பான முதலீடு வேறொன்றும் கிடையாது.

அபிஷேகப்பிரியனுக்கு அன்னாபிஷேகம்!




அபிஷேகப் பிரியரான சிவபெருமான், அபிஷேக நேரங்களில் பல்வேறு திரவியங்களால் திருமுழுக்காட்டு செய்விக்கப் பெறுகிறார். பின்னரும் லிங்கத் திருமேனியின் மேலே தாரா பாத்திரம் எனப்படும் செம்புப் பாத்திரத்தில் நீர் நிறைத்து, சொட்டு சொட்டாக லிங்கத் திருமேனியின்மீது அபிஷேகிக்கப்படும் தாரை அமைப்பை பல ஆலயங்களிலும்- குறிப்பாக வடமாநிலங்களில் நாம் காணமுடியும். இந்த அபிஷேக வரிசையில், ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும். இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது. இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது. லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன.


தஞ்சை பெரிய கோவிலை முதலாம் ராஜராஜன் மிக பிரம்மாண்டமாக கட்டினான். இந்த ஆலய சிவபெருமானுக்கு உயிர்களுக்கெல்லாம் ஈசன், மிகவும் பெரிய லிங்க வடிவுள்ள பெருமான் (பிருஹத்- மிகப்பெரிய) என்றெல்லாம் பொருள்படும் பிரகதீஸ்வரர் என்ற பெயரிட்டு மகிழ்ந்தான். அவன் மகனான ராஜேந்திர சோழனும் தன் தந்தையைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரம்மாண்டமான சிவாலயத்தை எழுப்பினான். இங்குள்ள இறைவனுக்கும் பிரகதீஸ்வரர் என்ற திருநாமத்தையே சூட்டினான். இந்த கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகப் பெருவிழா தமிழகத்தில் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.


இங்கு சோழர் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்து போனது. தற்போது, காஞ்சிப்பெரியவர் வழிகாட்டுதலின்படி மீண்டும் அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்கின்றனர். இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும்பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன் அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர். இத்தலம், திருச்சியிலிருந்து 110 கி.மீ., தொலைவில் உள்ளது.


Festival
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top