• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Jagatguru Sri Maha Periyava Messages

Status
Not open for further replies.


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்

பெரியவா சரணம் !!

பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்"
(பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம்
பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக
போய்விட்டிருந்தது.ஆச்சரியமா பார்த்தவாகிட்டே
ஆசார்யா சொன்னார்;"என்ன பார்க்கறேள்? வெண்ணெயை
வாங்கிண்டுபோன பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான்
போல இருக்கு. அதான் எனக்கு சரியாயிடுத்து!")

நன்றி-குமுதம் லைஃப்-இன்று வெளியான இதழ்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

கும்பகோணம் மடத்துல ஒரு சமயம். நல்ல பனிக்காலம்.

விடியற்காலையில் எழுந்திருக்கறதுக்கே பலரும்
சோம்பல்படுவா. பனிகொட்டறதுல ரெண்டடி தூரத்துல
இருக்கறவாளோட முகம்கூட தெரியாது.ஒரு போர்வைக்கு
நாலு போர்வை போர்த்திண்டாலும் உடம்பு நடுங்கும். ஆனா
அத்தனை குளிர்லயும் மகாபெரியவா கார்த்தால
நாலுமணிக்கெல்லாம் எழுந்து, கொஞ்சமும் சலிச்சுக்காம
நீராடிட்டு நித்ய கர்மானுஷ்டானங்களையும் அனுஷ்டிக்க
ஆரம்பிச்சுடுவார்.

வாட்டற பனியோட பிரதிபலிப்பா, மகா பெரியவாளோட
உதடுகள்ல நிறைய வெடிப்பு வந்துடுத்து. உதட்டோட உள்
பக்கம் எல்லாம் புண்ணாயிடுத்து.அந்த மாதிரியான
நிலைமைல உதட்டை சரியா மூடக்கூட முடியாது.

ரணமா இருந்ததால, சரியா பேசக்கூட முடியாம வேதனை
இருந்தாலும் தன்னோட கஷ்டம் எதையும் வெளிக்காட்டிக்
கொள்ளாமல் எப்போதும்போல மடத்துல உள்ளவா,
வேதம் சொல்ல வர்றவா,தரிசனம் பண்ண வர்றவாள்னு
எல்லார்கிட்டேயும் பேசிக் கொண்டிருந்தார்.

பனிக்காலத்துல உதடு வெடிக்கும்போது அடிக்கடி வெண்ணெய்
தடவிண்டே இருந்தால் சீக்கிரமா வெடிப்பு சரியாகிவிடும்.
ஆனால், ஆசார சீலரான பெரியவா, கடைகள்ல விற்கிற
வெண்ணெயை வாங்கித் தந்தால் தடவிக் கொள்ள மாட்டார்..
என்ன பண்ணுவது? மடத்துலய தயார் செய்யறதுன்னா அப்போ
இருந்த நிதி நிலைமைல அது கொஞ்சம் செலவான விஷயம்.
அதோட வெண்ணெய் தயார் பண்றதுக்கு குறைஞ்சது ரெண்டு
நாளாவது ஆகும். என்ன செய்யறதுன்னு மடத்துல இருந்தவா
எல்லாரும் யோசிச்சுண்டு இருந்தா.

அந்த சமயத்துல வயசான பாட்டி ஒருத்தர், ஆசார்யாளை
தரிசனம் செய்யறதுக்கு வந்தா.முந்தின நாள் பெரியவாளை
தரிசனம் பண்ண வந்தப்போ அவரோட உதடு
வெடிச்சிருக்கறதைப் பார்த்ததாகவும்,அதனால் தானே மடியோட
ஆசாரமா பசும்பால் வாங்கி,காய்ச்சி,உறை குத்தி,தயிராக்கிக்
கடைஞ்சு ஆசாரத்துக்கு எந்தக் குறைபாடும் வராம வெண்ணெய்
எடுத்துக்கொண்டுவந்திருக்கறதாகவும் மடத்து சிப்பந்திகள்கிட்டே
சொன்ன அந்தப் பாட்டி,தான் கொண்டுவந்த வெண்ணெயை
ஆசார்யா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் பண்ணினா.

"பெரியவா! ஒங்க ஒதடு பனியால ரொம்ப பாளம் பாளமா
வெடிச்சிருக்கு. நான் ரொம்ப மடியா வெண்ணெய் கடைஞ்சு
எடுத்துண்டு வந்திருக்கேன். நீங்க மறுக்காம இதை ஏத்துண்டு
ஒதட்டுல தடவிக்கணும்!" அப்படின்னு ப்ரார்த்தனை செய்தாள்.

அப்போ பெரியவாளை தரிசனம் பண்றதுக்கு வந்திருந்த ஒரு
தம்பதியோட குழந்தை அம்மாவோட கையைப் பிடிச்சுண்டு
அத்தனைநேரம் சமர்த்தா நின்னுண்டு இருந்த குழந்தை,
வெண்ணெயைப் பார்த்ததும், தாயாரோட கையை உதறிட்டு
ஓடிவந்து பெரியவா முன்னால நின்னு,'எனக்கும் வெண்ணெய்
வேணும்'கற மாதிரி தன்னோட பிஞ்சுக்கையை நீட்டியது.

சாட்சாத் பாலகோபாலனே வந்து ஆசார்யாகிட்டே வெண்ணெய்
வேணும்னு கேட்கற மாதிரி தோணித்து அங்கே இருந்தவா
எல்லாருக்கும்.இதுக்குள்ளே, அந்தக் குழந்தையோட பெற்றோர்
அவசர அவசரமா அதைத் தூக்கிக்க வந்துட்டா. அதோட
வெண்ணெய் கேட்டது தப்புங்கற மாதிரி உஸ்னு அதட்டவும்
ஆரம்பிச்சா. கை அசைவுல அவாளை பேசாம இருக்கச்
சொன்னார், மகாபெரியவா.

தன்னை தரிசிக்கவர்றவா கேட்காமலேயே அவாளுக்குத்
தேவையானதைத் தெரிஞ்சுண்டு குடுக்கக்கூடிய பெரியவா,
ஆத்மார்த்தமான பக்தி உள்ளவாளுக்கு தன்னையே
குடுத்துடக்கூடிய அந்த தெய்வம், குழந்தை அழற
தோரணையிலேயே அதுக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சுண்டு
குடுக்கற அம்மா மாதிரியான அந்த மஹா மஹா மாதா,
தனக்கு முன்னால இருந்த அத்தனை வெண்ணெயையும்
தூக்கி அந்தக் குழந்தைகிட்டே குடுத்துட்டார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சீடர்களுக்கு கொஞ்சம்
முகம் சுருங்கியது.'ரொம்ப நன்னா இருக்கு ஆசார்யா
பண்ணினது. ஏதோ கொழந்தை கேட்டா ஒரு எலுமிச்சங்காய்
சைஸுல உருட்டிக் குடுத்தா போறாதா? அப்படியே
டப்பாவோடாயா தூக்கிக் குடுக்கணும்? இப்போ ஒதட்டுல
தடவிக்க ஏது வெண்ணெய்?' அப்படின்னு மனசுக்குள்ளே
சிலர் நினைச்சுண்டா.சிலர் மகாபெரியவா காதுல
விழாதபடி முணுமுணுப்பா பேசிண்டா.

"என்ன எல்லாரோட முகமும் தொங்கிப் போயிடுத்து?
வெண்ணெயை மொத்தமா குடுத்துட்டேனேன்னா?
கொழந்தை சாப்ட்டாலே போதும்.என்னோட ஒதட்டுப்புண்
சரியாயிடும்!" தானே குழந்தையாக சிரித்தார்-பெரியவா.

அன்னிக்கு சாயங்காலமே பெரியவாளோட உதட்டுல
இருந்த எல்லா பாளம் பாளமான வெடிப்பும் இருந்த எடமே
தெரியாம சுத்தமாக போய்விட்டிருந்தது.

ஆச்சரியமா பார்த்தவாகிட்டே ஆசார்யா சொன்னார்;

"என்ன பார்க்கறேள்? வெண்ணெயை வாங்கிண்டுபோன
பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான் போல இருக்கு.
அதான் எனக்கு சரியாயிடுத்து!"

சரீரம் வேறவேறயா இருந்தாலும் உள்ளே இருக்கிற ஆத்மா
ஒண்ணுதான்கறது அத்வைதம்.அந்தக் கொள்கையைப்
பரப்பறதுக்காகவே ஆதிசங்கர மகான் ஏற்படுத்தின மடத்தை
அலங்கரிக்க வந்த ஆசார்யா, இந்த லீலை மூலமா அதை
நேரடியா உணர்த்தினதை நினைச்சு சிலிர்த்துப்போனார்கள்
எல்லாரும்.

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 



ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்

பெரியவா சரணம் !!

Dinamalar dated 21 October 2014

காஞ்சிப்பெரியவர் 1932ல் ராமேஸ்வரம் வந்தார். கடலில் ஸ்நானம் செய்த அவர் சிறிதளவு மணலைச் சேகரித்துக் கொண்டார். அதை அலகாபாத்திலுள்ள பிரயாகை திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அது மட்டுமல்ல! தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தில் காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்யவும் அவர் முடிவெடுத்திருந்தார். இதற்காக, அவர் வாகனங்கள் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. நடந்தே செல்ல திட்டமிட்டார். அப்போது பெரியவருக்கு வயது 39 தான்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, தென்காசியைச் சேர்ந்த அனந்த கிருஷ்ண சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் முன்னதாகவே காசிக்கு நடந்தே புறப்பட்டார். எந்தெந்த ஊர்களில் பெரியவர் தங்கிச் செல்ல வேண்டும் என்பதை செல்லும் வழியில் குறித்துக் கொண்டார். அவ்வாறு அவர் நடந்து செல்ல ஆறு மாதங்கள் பிடித்தன.

அவர் திரும்பி வந்து பயணத்திட்டத்தை பெரியவரிடம் அளித்தார். பெரியவரும் சிஷ்யர்களும் 1933 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தஞ்சாவூரிலிருந்து பயணத்தைத் துவக்கினர்.

செல்லும் வழியில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரியவர் தங்கினார். அங்கெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து ஆசி பெற்றனர். அனந்தசர்மா வேகமாகச் சென்று திரும்பியதால் ஆறுமாதங்கள் தான் பிடித்தன. ஆனால், மகாபெரியவர் பல ஊர்களில் தங்கியதால், பிரயாகையை அடைய 1934 ஜூலை 23ம் தேதி ஆகி விட்டது. அங்கு தான் கொண்டு சென்ற ராமேஸ்வரம் மணலை, திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பித்தார். அங்கேயே செப்டம்பர் மாதம் வரை தங்கி விட்டார். செப்டம்பர் இறுதியில் காசி கிளம்பினார்.

அவரிடம் பக்தர்கள்,""இப்போதே நீங்கள் வெகு தூரம் நடந்து வந்து விட்டீர்கள். இனியும் நடக்க வேண்டாம். சாலை வசதி நன்றாக இருக்கிறது. வாகனத்தில் வாருங்கள்,'' என கோரிக்கை வைத்தனர். மகாபெரியவர் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து நடந்தே காசியாத்திரையைத் தொடர்ந்தார். பிரயாகையில் இருந்த பக்தர்கள் பலரும் அவருடன் சென்றனர். அக்டோபர் 3ம் தேதி காசி எல்லையை அடைந்த சுவாமிகளை காசி மகாராஜா உள்ளிட்டோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

வரவேற்பு விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அக்டோபர் 7ல் மகாபெரியவர் கங்கையிலுள்ள மணிகர்ணிகை உள்ளிட்ட தீர்த்தக்கட்டங்களில் தீர்த்தமாடினார். பண்டித மதன்மோகன் மாளவியாவின் அழைப்பை ஏற்று காசி இந்து சர்வகலாசாலையில் (பல்கலைக்கழகம்) உரையாற்றினார்.

ஒவ்வொரு இந்துவும் வாழ்வில் ஒரு முறையேனும் காசி யாத்திரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

நாமும் மகாபெரியவர் ஆசியுடன், அடுத்த தீபாவளிக்குள் ஒருமுறை காசி யாத்திரை சென்று திரும்புவோம்.

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்

பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: Periyava's Diplomacy

One morning Sri Swamigal just entered the store room in the campsite and moved away through its exit.

Four or five chippantis (staff members) were preparing coffee in that room and taking it without Periyava’s knowledge. They were all worried now as to whether Periyava would have seen what they were at. But then since Periyava did not ask anyone anything about it, they came to the samadanam (acceptance) that Periyava might not have seen their act!

Calling me that night, Periyava told me to inform through the Manager that a meeting of the chippantis would be held after supper. He asked the Manager to bring the book of accounts when attending the meeting.

"Which book of accounts?" asked the Manager to me.

I went and told it to Periyava.

"Any one or two of the books of accounts..."

When the chippantis assembled, Periyava told them, "Declare that 'everything in this notebook is correct!' and do a namaskaram."

Some chippantis hesitated with nervousness in their hearts.

"What is the hesitation about? If everything is alright, you can do the namaskaram?"

"...Vandhu (that is)..."

"That expense (andha silavu), in which account does it figure?"

"As having purchased the cattlefeed of cotton seeds for the cows..."

Sri Swamigal understood the embarrassment of the employees. Since the custom was that they would take their meal only after Sri Maha Periyava had his bhiksha, and as that would be beyond two o'clock on many occasions, they needed some panam (drink) in the meantime. So Swamigal said: "From tomorrow I shall perform the first kala (session) Pooja before ten o'clock. After you people have had your meal, I shall do the bhiksha vandana Pooja after some leisure and then I shall have my bhiksha."

From then on that custom which was favourable to the staff members came into effect.

Author: N.Venkataraman, Mayiladuturai
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol. 2

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்

பெரியவா சரணம் !!!

" அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி "
பல வர்ஷங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண

"கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர்.

"பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்.........கொழந்தைகள்...ன்னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரகம் பண்ணணும்." பேச்சில் உருக்கம், பணிவு.

பக்கத்தில் வயஸான மனைவி. "வாழ்றதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?" "ஆமா........." "எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?" "உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்." அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார்.

அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள். "இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........." கையை உயர்த்தி ஆசி கூறினார்.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "பிடிப்பு வேணும்...னியே! இதோ........இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்." "செஞ்சுடறேன் செஞ்சுடறேன்." பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார்.

பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது........."ஆமா, இவ என் ரெண்டாவது சம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்!

"சரி..........ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?............."

"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". பெரியவாளுக்கு எப்டி தெரியும்? ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா......நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்.............."

துக்கத்தால் குரல் அடைத்தது. "ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ?

இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி! என்னது? இது சத்யம் சத்யம்! பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்!

உண்மைதான்! பல வர்ஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள். பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.

இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம் "எல்லாமே pre planned " என்பது. மஹான்களின் சந்நிதியில் அது சஹஜமாக, அனுபவத்திலும் வரும். நம் வீடுகளில் கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்டு, வீடு முழுக்க தேடியதும்,வீட்டார் யாராவது "இதோ இருக்கு" என்று எங்கிருந்தோ கண்ணாடியை எடுத்துக் குடுப்பது போல், சர்வ சாதாரணமாக "cosmic level " ல் விளையாடக்கூடியவா பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.

Courtesy Yogesh Sundararajan's

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

[h=1] [/h]
 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்

பெரியவா சரணம் !!

ஆலத்தூர் சகோதரர்கள் மஹா பெரியவாவிடம் பக்தி கொண்ட வித்வான்கள். அவர்கள் எப்போது ஸ்ரீ மடத்தில் வந்து பெரியவாவிடத்தில் பாடினாலும் பெரியவா தூங்கி விடுவார் என்ற குறை மட்டும் அவர்களுக்கு உண்டு.

இதை ஒரு முறை மகானிடமே தெரிவித்து விட்டனர். "அவ்வளவு தானே! இன்று இரவு பூஜை முடித்துக் கொண்டு வந்தவுடன், விடிய விடிய உங்கள் கச்சேரி தான். நீ எப்போ தூங்கு என்று சொல்கிறாயோ அப்போது தான் தூக்கம்."

சகோதரர்கள் இதைக் கேட்டு மயங்கி விழாத குறை தான். வித்வான்கள் மிகு‌ந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பூஜை முடிந்து மகானும் வந்தார். "சரி! கச்சேரி ஆரம்பமாகட்டும்." என்றார்.
'வாதாபி கணபதிம் ' பாதி பாடல் நடந்து கொண்டிருக்கும் போது ' மேனா'வை எடுத்து வரும் படி உத்தரவு. முனிவர் ஏறி அதில் அமர்ந்தார். பாடல் முடிந்து வித்வான்கள் கேதார கௌளை ராகம் பாடினர். கந்தவர்வ கானமாக இருந்தது பாடல்.

ஆனால் ராகம் தொடங்கிய சில நொடிகளிலேயே முனிவர் மேனாவிலேயே படுத்து, கதவையும் மூடிக் கொண்டு விட்டார். மேனாவைச் சுற்றி படுதாவை இறுக்கமாகப் போர்த்தவும் ஆணையிட்டார்.

எப்படி இருக்கும் சகோதரர்களுக்கு? கற்பனைக் கோட்டை தூள் தூளானது. அதற்கு மேல் வித்வான்களுக்கு உத்வேகம் இல்லை. சகோதரர்களில் ஸ்ரீனிவாச ஐயர், "பெரியவா இப்படி ஏமாற்றி இருக்க வேண்டாம். எங்களுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான்" என்று புலம்பினார்.
எடுத்த ராகத்தை சகோதரர்கள் அவசர அவசரமாக முடித்து விட்டு மீதிப் பாட்டையும் பேருக்குப் பாடிவிட்டு முடித்து விட்டனர். விடைபெற்றுக் கொள்ள காத்திருந்தனர்.

கதவு திறந்தால் அல்லவா விடைபெற முடியும். எப்போது 'விழித்துக் கொள்வார்?'

வித்வான்களுக்கு விடிய விடிய சிவராத்திரி தானா? என்ன சோதனை இது என்று அமர்ந்திருந்த போது உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டது. படுதா விலகி கதவு திறந்தது.

"நான் தூங்கி விட்டேன் என்று கேதார கௌளயை அவசர அவசரமாக முடித்து விட்டாயா? நிரவல், சுவரம் ஒண்ணும் வேண்டாம் என்று வைத்து விட்டாயாக்கும்? " என்றவுடன் வித்வான்கள் அழுதே விட்டனர்.

" தப்பு , தப்பு மன்னிக்க வேண்டும். "

" சீனு நீ ரொம்ப நல்லவன் தான்டா. ஆனா உனக்கு அஞ்ஞானம். நான் நேரா கண்ணைத் திறந்து கொண்டு கேட்டாத் தான் கேட்டதா உனக்கு நினைப்பு " என்றதும் இருவரும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தனர்.

" மன்னிக்கணும். பெரியவா சர்வக்ஞன் ; சர்வ வியாபி. தெரியாம அஞ்ஞானப் பட்டுட்டோம். "

" சரி, சரி எங்கே விட்டாயோ அங்கிருந்தே கேதாரகௌளயை ஆரம்பி " என்றார். சகோதரர்களும் ராகம், நிரவல், சுவரம் எல்லாவற்றையும் பாட, மஹா பெரியவா முழுவதும் கேட்டு மகிழ்ந்து வித்வான்களை இன்பக் கடலில் ஆழ்த்தி, வாழ்த்தி அனுப்பினார்.

நாதப் பிரம்மம் நம் பெரியவா......

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!

"பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது."

அது 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை.

திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம்.

திடீரெனப் பெரியவா வழிவிடச்சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிட...ைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம்.

“என்ன வேண்டும்?” என்று இரண்டு முறை கேட்டார்.

நாங்கள், “எதுவும் வேண்டாம்” என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம்.

மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார்.

உடனே “பிரசாதம் வேண்டும்” எனக் கூறினோம்.

உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.

பரதாழ்வார், ஸ்ரீராமரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றார். அது மகா
புண்ணியம். கேட்காமலேயே – மகா பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.

அந்த நொடியில் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது.

பரவசமான நேரம்! உயிர் உள்ளவரை இறைவனது எல்லையில்லாக் கருணை என்னை ஆள வேண்டும் என்ற

இறைஞ்சுதலுடன், அந்தப் பாதுகைகளைச் சுமந்து வந்தேன்.

தேரில் தெய்வம் உலா வந்து கொண்டிருக்கும்போது, தெருவில் இறங்கி, நாம் அந்தத் தெய்வத்தை தரிசனம் செய்யப் போகும் சமயத்தில், அந்தத் தெய்வம் தேரிலிருந்து இறங்கி வந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு கருணை செய்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு புளகாங்கிதம் அது.

காஞ்சியில் இருந்து திரும்பி வந்த உடன், வங்கியில் இருந்து அழைப்பு
வந்தது. ‘ஏதோ ஒரு டென்ஷனில் சொல்லிவிட்டோம். எத்தனை லட்சம்
வேண்டுமானாலும் கடன் தருகிறோம். வேண்டுமானால், செக்கை அனுப்பி
வைக்கிறோம்’ என்றனர்.

இப்படி ஒன்றிரண்டு அல்ல; 20 வருடங்களுக்கும் அதிகமாக வாடாமல் அதே மலர்களுடன், சந்தனப் பேழையில் இருந்துகொண்டு, நிறையத் திருப்பங்களை, நானே எதிர்பார்க்காத அளவுக்கு நடத்தி வருகின்றன, அந்தப் பாதுகைகள்.”

சொல்லும் போதே அவர் குரலில் பரவசம் தெறிக்கிறது. அந்தப் பரவசம்

நமக்குள்ளும் ததும்பத்தான் செய்கிறது

நன்றி : கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்.

Source: MAHA PERIYAVA Public Group/Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 



ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: “Are there two wings namely ‘Old wing and New wing’ in your palace?” Sri Maha Periyava

“He is verily the Kaliyug Avtar of The God” Spain visitor

Once a prominent person belonging to the Spanish Royal Family came to Sri Maha Periyava for darshan. A person was translating his Spanish speech to the Mahan.

He could have enquired about Spain’s President or its climate. Perhaps He could have spoken about people’s habits and culture. People could be aware of these matters by possibly reading tabloids and magazines.

But He did not enquire about these things Spanish Royal diplomat.

Let us see what He did enquire about.

“Are there two wings namely ‘Old wing and New wing’ in your palace?”

“Yes.”

In which wing do you stay at present?”

“New Wing” said the visitor.

Do you have water and other facilities in the New wing?”

Yes, since New Wing is very comfortable we are staying there”

Next Mahan put a shocker to him.

Then, perhaps you may renovate that unusable old wing into a garden”. After hearing the speech of Mahan, Spanish diplomat had a strong doubt in his mind.

Thinking about how this Mahan knew the details of a specified place of his country and further more able to suggest changes to that place, he asked the translator “When did Mahan visit Spain?”

Even before the translator was trying to translate this, the Mahan had answered the Spanish diplomat through a mere signal.

With His divine hands, He drew a circle like signal and gave out a compassionate smile to the Spanish diplomat. The Spanish diplomat immediately understood everything instantly.

After realizing that “He is verily the Kaliyug Avtar of The God”, the Spanish visitor reverentially prostrated at the feet of Venerable Mahan and got His blessings.

Author: Ra.Venkataswamy

Source: Kanchi Mahanin Karunai Ullam

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 

ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!

""எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறியே ""

காபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர் இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம்

பலவருடங்களுக்கு முன்னாள் மகானின் அருகே அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார் மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக் கொண்டு இருந்த நேரம். பக்தர்களின் வரிசை மெதுவாக நகர்ந்தது, அப்போது ஒரு பக்தர் கையில் ஒரு சிறிய பையுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார் அவரது முறை வந்தபோது மகானிடம் ஆசிபெற்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அவர் நகர முயற்சித்த போது பெரியவரின் குரல் அவரை நிறுத்தியது

"எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறியே "

பக்தர் திடுக்கிட்டு நின்றார். அவரது கையில் இருந்த பையில் நெல்லிக்கனிகள் அவரது தோட்டத்தில் விளைந்த முதல் கனிகள் அவை மகானுக்கு கொடுக்கவே அவர் கொண்டு வந்தார்.

"இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே தான் கொண்டு வந்ததை எடுத்துண்டு போறேன் ...".

ஒரு மூங்கில் தட்டை காண்பித்து "நீ கொண்டு வந்ததை எடுத்துவை" என்று மகான் உத்தரவிட பக்தர் தன் பையில் இருந்த நெல்லிக்கனிகளை எடுத்து தட்டில் பக்தியோடு வைத்தார்.

கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளுக்கு ஒரே வியப்பு பக்தர் நெல்லிக்கநிதான் கொண்டுவந்திருக்கிறார் என்று மகானுக்கு எப்படித் தெரியும்?

அன்று துவாதசி மகான் அக்கனியை விரும்பி ஏற்றுக் கொண்டதன் காரணம் இப்போது கனபாடிகளுக்கு புரிந்தது .

ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தபோது அவர் வாயிலிருந்து அப்போதே கனகதாரா ஸ்தோத்திரம் கிளம்பியது இப்போது இவ்வளவு கனிகளை மகானுக்கு சமர்பித்த அந்த பக்தர் எந்த அளவுக்கு உணர்ந்திருப்பார் என்று கனபாடிகள் வியந்தார்.

அண்மையில், மகான் நெல்லிக்கனி பெற்ற விவரத்தை கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள், சேலம் பெரியவா கிரகத்தைச் சேர்ந்த ராஜகோபாலிடம் சொன்னார். துவாதசியன்று நெல்லிக்கனியை உண்பது எவ்வளவு விசேடமானது என்பதை மகான் புரிய வைத்திருக்கிறார்.

இந்த நெல்லிக்கனி விஷயத்தில் மகான் இன்னொரு அற்புதத்தையும் சேலத்திலேயே நிகழ்த்தியிருக்கிறார். இங்கே பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .

இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி நடக்க மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் ஆராதனை என்பதால் யாரிடமும் எள்ளளவும் சுணக்கம் தென்படவில்லை.

அன்னதானம் செய்யும் போது பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் பச்சடி போன்றவை வழங்க வேண்டும் என்று தீர்மானித்து , நெல்லிக்கனியை தேடி சேலம் முழுதும் அலைந்தார்கள் ஆனால் முதல் நாளும் ஜெயந்தி அன்றும் எவ்வளவு தேடியும் யாருக்கும் கிடைக்கவில்லை. மிகவும் மனகிலேசம் அடைந்த ராஜகோபாலன் எல்லாம் பரிபூரணமாக இருக்க இந்த நெல்லிக்கனி விஷயத்தில் குறை ஏற்பட்டுவிட்டதே என்ற எண்னம் மேலோங்கியது. அதை அப்படியே விட்டு விட வேண்டியதுதான் என்று அநேகர் சாந்தமடைந்து விட்டனர்

பூஜைகள் ஆரம்பமாகி வேதியர்கள் அமர்ந்து முறைப்படி எல்லாமே நடைபெற்றுக் கொண்டிருந்தது

ஹால் நிறையக் கூட்டம்

அந்த நேரத்தில் பெரியவா கிரகத்தின் வாயிலில் ஒரு நபர் வந்து நின்றார்

அவரது கையில் ஒரு பை

நான் "ராஜகோபால் மாமாவை பார்க்கவேண்டும்" என்றார் வந்தவர்

"அவர் பூஜை செய்யும் வேதியர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார் இப்போது அவர் இங்கு வர முடியாது" இந்த பதிலைக் கேட்டு வந்தவர் சற்று தயங்கினார்

"சரி இந்த பையை அவரிடம் கொடுத்துவிடுங்கள்" என்று தன் கையில் இருந்த பையை கொடுத்தார்

"யார் தந்ததாகச் சொல்வது?"

"சங்கரன்" என்று சொல்லுங்கள், பையைக் கொடுத்தவர் விறு விறு என்று வந்தவழியே சென்றுவிட்டார்

அவர் கொடுத்த பையில் நிறைய நெல்லிக்கனிகள் இருந்தன அங்கே இருந்தவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

இதில் முக்கியமான விஷயம் அந்த சங்கரன் யார் என்றே இன்றுவரை ராஜகோபாலுக்குத் தெரியாது

பக்தர்களின் மனக்குறையை மகான் எவ்வாறு பூர்த்தி செய்கிறார் என்பதற்கு இதைவிட சான்று தேவையா?

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
Last edited by a moderator:


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!


“நாங்கள் காஞ்சி மகான் உத்தரவுப்படி வந்திருக்கிறோம். உங்கள் பெண்ணின் திருமணத்தை நல்லவிதமாக நடத்தித் தரச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்”

முசிறியில் சிவன் கோயிலில் அர்ச்சகர் அவர். சொற்ப வருமானம். அவர் மனைவிக்கோ ஈஸ்வரன் மீது இருந்த பக்தியை விட காஞ்சி முனிவர் மீது பக்தி அதிகம். சதா சர்வகாலமும் மகா பெரியவாளை மனதால் ஜெபித்துக் கொண்டே இருப்பார்.

இந்தத் தம்பதியின் ஒரே பெண்ணிற்கு வரன் குதிர்ந்தது. ‘கோயில் காணிக்கையைக் கொண்டு குடும்பம் நடத்துவதற்கே சிரமமாக இருக்கிறது இந்திலையில் மகளின் திருமணத்தை நடத்த வேண்டுமே’ என கவலை கொண்டனர்.

காஞ்சியில் மகானைத் தரிசித்த பிறகே தன் தொழிலைத் தொடங்கும் விசைத்தறி அதிபர் ஒருவர் இருந்தார். அவர் பெரியவா தரிசனத்திற்கு வந்த போது அவரை அருகே அழைத்த பெரியவா, “எனக்காக நீ ஒரு காரியம் செய்யணுமே!” என்றார். “சொல்லுங்கள் காத்திருக்கிறேன்” என பணிவுடன் கூறினார் விசைத்தறி அதிபர்.

மகான் நிதானமாகச் சொன்னார்: “முசிறியில் ஒரு ஈஸ்வரன் கோயில் இருக்கிறது. அங்குள்ள அர்ச்சகர் பரம ஏழை! அவர் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. நீ அங்கு போய் தங்கி, அந்தப் பெண்ணின் திருமணத்தை நல்லபடியாக முடித்துக் கொடுத்து விட்டு வா!” “அப்படியே செய்கிறேன்!” என்று மகானை வணங்கி விடைபெற்றுக் கொண்டார்.

திருச்சியில் உள்ள தன் பிரதிநிதிகளை அனுப்பி விசாரித்து, நேராக குருக்கள் வீட்டுக்குப் போய், “நாங்கள் காஞ்சி மகான் உத்தரவுப்படி வந்திருக்கிறோம். உங்கள் பெண்ணின் திருமணத்தை நல்லவிதமாக நடத்தித் தரச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்” என்று சுருக்காமாகச் சொன்னவர்கள் ‘மட மட’ வென காரியங்களைக் கவனித்தனர். ஊரார் வியக்கும் படி திருமனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், பெரியவா பக்தையான குருக்களின் மனைவி, தன் வாழ்நாளில் ஒரு தடவை கூட பெரியவாளை நேரில் தரிசித்தது கிடையாது!!

சாட்சாத் பரமாத்மா நம் பெரியவா!

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!

"என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே""
காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஒரு நாள் ஸாயங்காலம், பெரியவா தர்ஶனம் தந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வயஸான தம்பதி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

அந்த மாமாவின் பஞ்சகச்சம், மாமியின் மடிஸார் ரெண்டுமே புது வஸ்த்ரங்களாக இருந்தன. நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்த அவர்களை புன்னகையோடு கடாக்ஷித்தார்.

"என்ன..... எல்லாம் நல்லபடி ஆச்சா?"

"பெரியவா ஆஶீர்வாதத்ல... எல்லாம் நன்னா நடந்துது ....."

அந்த அம்மா, கண்ணில் வழிந்த நீரை கட்டுப்படுத்தமுடியாமல் தவித்தாள்.

"இங்கியே அப்டி ஒக்காந்துக்கோங்கோ.... ரெண்டுபேரும்"

கொஞ்சம் தள்ளி அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். அதன் பிறகு பெரியவா இவர்களிடம் எதுவும் பேசவில்லை. கூட்டம் இருந்ததால், மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் பெரியவாளுடைய கைகள் மட்டும், கிறுகிறுவென்று தன்னிச்சையாக ஒரு கார்யத்தை பண்ணிக் கொண்டிருந்தன.

தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் கிறுகிறுவென்று அங்குமிங்கும் பறந்து பறந்து மலர்களில் உள்ள மகரந்த தேனை ஸேகரிக்கும்.

நம்முடைய ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளோ, தன்னுடைய கைகளால் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் போல பரபரவென்று சுற்றி இருந்த பூக்களை எல்லாம் திரட்டி திரட்டி, அழகான மாலைகளாக தொடுத்துக்கொண்டிருந்தார்! வருவோர் போவோரிடம் பேசுவதற்கும் இதற்கும் ஸம்பந்தமேயில்லை என்பதுபோல், ஶம்-கரனின் கரங்கள் அற்புதமான மாலைகளை தொடுத்துக் கொண்டிருந்தன!

ஆஹா! ரெண்டு மாலைகள் தயார்!

யாருக்கு?

"இங்க வாங்கோ.. ரெண்டுபேரும் "

அந்த வயஸான தம்பதிகளை அழைத்தார்.

"இந்தா..... இந்த ரெண்டு மாலையையும் அவாகிட்ட குடு"

ஸாக்ஷாத் பகவான் கையாலேயே தொடுத்த ரெண்டு மாலைகளும் அந்த பாக்யஶாலி தம்பதி கைக்கு போனது.

"ம்ம்...! மாலை மாத்திக்கோங்கோ!...."

அருகிலிருந்த குறிப்பறிந்த வேதபண்டிதர்கள், மந்த்ரங்களை ஓதினார்கள்.

அந்த அம்மாவோ, "ஸர்வேஶ்வரா! ஸர்வேஶ்வரா!" என்று அரற்றவே ஆரம்பித்து விட்டாள்!
பெரியவாளுடைய அனுக்ரஹமே பரமானந்தம்! அதிலும் இது எப்பேர்ப்பட்ட ஆனந்த அதிர்ச்சியான அநுக்ரஹம்!

ரெண்டு பேருடைய கண்களும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கொட்டித் தீர்த்தன.
மறுபடியும் அவர்கள் நமஸ்காரம் பண்ணியதும், குங்கும ப்ரஸாதம் தந்து ஆஶீர்வதித்தார்.
சுற்றி இருந்தவர்களுக்கு உள்ளே ஒரே அரிப்பு!!

"என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே?...."

ஆவலை அடக்க முடியாமல் ஒருத்தர், மெதுவாக அந்த அம்மாவிடமே விஜாரித்தார்.
"எங்களுக்கு ஸொந்த ஊர் பெங்களூர்..! இன்னிக்கி இவரோட 70-வது பொறந்தநாள். எங்க பிள்ளை மெட்ராஸ்ல இருக்கான். காலேல பிள்ளையாத்ல பீமரதஶாந்தி பண்ணிண்டார். எங்களுக்கு எல்லாமே பெரியவாதான்! பிள்ளேட்ட "பெரியவாள எனக்கு இன்னிக்கி தர்ஶனம் பண்ணணும்-னு ரொம்ப ஆசையா இருக்குடா...."ன்னு சொன்னேன்.

அவனுக்கு நாளைக்கி பெங்களூர்ல ஏதோ அவஸர வேலை இருக்குன்னுட்டு, "அம்மா....இன்னிக்கி முடியாதும்மா! நிச்சியமா இன்னொரு தரம் பெரியவா தர்ஶனத்துக்கு கூட்டிண்டு போறேன்"-ன்னு சொன்னான். வேற என்ன பண்றது? மானஸீகமா பெரியவாளையே நெனச்சிண்டு, எல்லோருமா... ரெண்டு கார்ல பெங்களூர் கெளம்பினோம்.

வேலூர் பைபாஸ் ரோடுல, அவாள்ளாம் வந்துண்டிருந்த காரோட "ஆக்ஸில்" ஒடஞ்சுபோச்சு ! எப்டியும் ரெண்டு மணி நேரமாவது ஆகுன்னுட்டா! ஒடனே நா....."காஞ்சிபுரம் பக்கத்லதான இருக்கு! அப்பாவும் நானும் இன்னொரு கார்ல போய், பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு வரோம்!"-ன்னு சொல்லிட்டு, ஒடனேயே கெளம்பி வந்துட்டோம்..! பெரியவாளோட க்ருபையை தாங்கவே முடியல! எனக்கு இதுக்கு மேல ஒண்ணுமே வேணாம்....."

அந்த அம்மா அடக்கமாட்டாமல், ஆனந்தம் பொங்க அழுதாள்.

பகவான் தன்னிடம் ஆத்மார்த்தமாக பக்தி பூண்டவர்களை எந்த நிலையிலும் தன்னிடம் அழைத்துக் கொள்வான் !

நாம் செய்யவேண்டியது அவனிடம் படாடோபமில்லாத உண்மையான அன்பு வைப்பது மட்டுமே!

compiled & penned by gowri sukumar
Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 

ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!


Experiences with Maha Periyava: Emergency treatment

Sri Maha Periyava was giving darshan to devotees in the Kumbakonam Matham after completing His ChandraMouleeswara pooja.

A farmer who was connected to the SriMatham came rushing to Him with anxiety and fell at His legs and wailed, "Save my son, Kadavule (God)!"

Periyava asked one of His assistants to find out what happened.

The farmer had only one son. When he was taking food, a snake had climbed up his body and slithered away. The boy had fainted with fear. It was not possible to ascertain whether the snake had bitten the boy. Usually snake bites were countered with the chanting of certain mantras by people who were skilled at it but there was no one nearby who knew the mantras.

"Only Saamy should save him..."

Periyava gave him vibuti prasadam. "Smear it on the boy's forehead."

"Saringa" (a reverential yes).

"You have arappu podi (herbal soap powder) at home?"

"It is there", he nodded his head.

"Open the boy’s mouth, drop a little arappu podi into it. If the boy spits it saying it is bitter, it
means the snake has not bitten him. If he takes it saying it is sweet, then the snake has bitten him, and you should treat him accordingly. Go and give him arappu."

The farmer ran to his house and did as Periyava told him. As soon as the arappu podi was dropped into his mouth, the boy spat it saying "It's bitter, bitter!" The farmer was relieved that the snake did not bite him.

When the situation came back to normal, the farmer couple came with the boy for darshan. Periyava said to the woman, "Light a sesame oil lamp daily in your home."

Author: SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


 
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!


ஸ்ரீ மஹா பெரியவாவின் சரித்ரம் Part 117

மஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்


ஸ்ரீ சைலத்தை நோக்கி மகாபெரியவா பரிவாரத்தோடு யாத்திரை போயிண்டிருந்தபோது இது நடந்தது. கர்னூல் லே வரவேற்பு ஏற்றுக்கொண்டு பிரசங்கமும் பண்ணியாச்சு. மேற்கொண்டு யாத்திரை தொடர்ந்தபோது ஒரு சின்ன கிராமம். திடீரென்று மழை. 'சுவாமி சிவிகையில் ஏறிக்கணும்'. ' அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்துவரும்போது நான் சிவிகையிலா ? 'ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்' என பெரியவர் சொல்லிவிட்டார்..மேற்கொண்டு நடக்க முடியாதபடி மழை பலத்தது.


ஒரு பழைய சிவன் கோயில் தென்பட்டது. அதில் தங்க பெரியவா முடிவு பண்ணியாச்சு. காட்டு தீ போல, மஹா பெரியவா சிவன் கோயிலில் மழைக்கு தங்கி காஷாயம் மாற்றிகொண்ட செய்தி பரவ ஊர் ஜனங்கள் அனைவரும் பெரியவாளுக்கு பூரண கும்பத்தோடு வரவேற்பு தந்து அலைமோதினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு யாத்திரை தொடர்ந்தார் பெரியவா.

ஏழு,எட்டு மைல் தூரத்தில் ஒரு கிராமம். அதன் ஜமீன்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்துகொண்டு தங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய வேண்டிகொண்டார்கள். பெரியவாளுக்கு என்னதோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. விறு விறுவென்று கொட்டகை போடப்பட்டது.

மறுநாள் காலை. பெரியவா அருகில் இருந்த புஷ்கரணிக்கு ஸ்நானத்துக்கு போயாச்சு. மடத்து காரியஸ்தருக்கு மஹா கவலை. அந்த கிராமத்தில் பூஜைக்கு வில்வமே கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம் ஒன்றை மாதிரிக்கு காட்டி ஊர் ஜனங்களிடம் ஒரு கூடை இதுபோல இருக்கிற வில்வம் கொண்டு வர வேண்டும் என கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும் வில்வம் கிடைக்கவில்லை. மணி பத்தரை ஆயிற்று...

பெரியவா பூஜை சாமான்களையெல்லாம் பார்த்துவிட்டு 'வில்வம் இல்லையா?' என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர் 'சுவாமி ஜமீன்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்' என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துட்டார்.
பதினொன்னரை மணியிருக்கும். இன்னும் வில்வம் வரவில்லை. சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ, பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே'??? த்யானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா.

ஒரு சிறு புன்னகை.. ஒரு மடத்து பூஜா கைங்கர்ய பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலுன்னு நிறைய மூணு தள வில்வம்!!!. பெரியவாளுக்கு சந்தோஷம். ''வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.'யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பரிச்சிருக்கா??. வில்வம் தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்'' என்று பெரியவா சொல்லி, சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கியாச்சு. '' யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம்வாங்கிக்கட்டும்'' என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே 'பெரியவா இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்த கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே.'

' ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்'' என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜா இசைஇ பிரவசனம் பிரசங்கம் எல்லாம். ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். ஸ்ரீகார்யதுக்கு மட்டும் வயத்திலே புளி கரைச்சுது. நாளைக்கு என்ன பண்றது??? .

மறுநாள் காலை. வில்வம் கண்டுபிடித்து கொண்டுவந்த பையனையே கெஞ்சினார் ' 'அடே ஆபத்பாந்தவா!!! இன்னிக்கும் அந்த மண்டபம் மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு திண்ணையிலே வில்வம் கிடைக்குமா பாரேன்!!' சொல்லிவச்சாப்போல் அதே இடத்துலே இன்னிக்கும் ஒரு பெரிய கூடை நிறைய வில்வம்!!! மகாபெரியவா பூஜைக்கு தயாராகி பூஜா திரவியங்களை நோட்டம் விட்டு வில்வகூடையை பார்த்துவிட்டு ஸ்ரீ கார்யத்தை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார்.

'ஆமாம்! பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டுவச்ச வில்வகூடை தான் இது.' ' யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிரான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா''. என்று மகா பெரியவா உத்தரவு போட ஸ்ரீ கார்யம் மறுநாள் அதிகாலை மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன்இ தலையிலே கட்டு குடுமி அழுக்குவேஷ்டி மூலகச்சம் தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான்.

ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே 'போய் குளிச்சுட்டு தலையை முடிஞ்சுண்டு நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு, மத்யானம் வா சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்''.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி நெத்தி பூரா விபூதியும், எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைஞ்சான்.

எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது.

நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.

'நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன?

'புரந்தர கேசவலு''ங்கய்யா.

'தமிழ் பேசறியே எப்படி??'

Contd....../2

[h=1][/h]
 

Contd..../2

'அய்யா எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே பூட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு பொழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு.ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே பூட்டாரு. நான் தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ''.

''அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே ;உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது??'

'நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது ஒருதடவை அப்பாருஇ ''

ஏலேஇ புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு மரம் அது தான் வில்வம் மரம். சிவன் சாமிக்கு அது போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை''
அப்படின்னு சொன்னாரு.

மூணு நாள் முன்னே ஜமீன்லே அந்த இலை அர்ஜண்டா வேணும் எண்டு பேசிக்கிட்டாங்க. சாமி மடதுக்காரங்க கூட இலையைக்காட்டி கேட்டாங்க. மாடு மேக்க்றவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க''

மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே

''புரந்தரகேசவலு உனக்கு என்ன தேவை ஏதாவது ஆசை இருந்தா சொல்லு மடத்திலேருந்து
செய்ய சொல்றேன்'' என்றார்.

'சிவ சிவா!! சாமி எங்கப்பாரு 'ஏலே புரந்தரா எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்'' கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதை கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் ''புரந்தரா உன்னுடைய முதல் ஆசையை சொல்லு' என்றார்.

'சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தர தாசர் தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதைகேக்கணும்''. மஹா பெரியவா புலகாங்கிதமானாள். 'அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே'''. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார்.

பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.

21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன்நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து '' புரந்தரா உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?

' சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தரா நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமி எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க''

மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.''

புரந்தராஇ உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ'. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ'' என்றார்.

பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. பெரியவா கரையேறினா.

அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ ''கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ ''' புரந்தரகேசவலு சீரியஸ்'' என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா'' .
ஸ்ரீ கார்யதிடம் பெரியவா சொன்னது இது தான்:

''புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திரமௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்.

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!


Experiences with Maha Periyava: The Epitome of Compassion Who Appeased The Yearnings of the Distressed Soul

Sakshat Parameswaran Himself is showering His blessings on us in His Avatar as Sri Maha Periyava with the greatness of SukaBrahma Rishi due to the boundless love and affection He has on us.


There are many incidents where the Epitome of compassion has fulfilled the desires of many devotees.

Balachandar, a simple devotee was thinking about Sri Maha Periyava and was in great mental anguish. “Maha Periyava! People eulogize you as the Epitome of compassion! But I have not had the good fortune of having your Darshan for many days. After I had your Darshan in my childhood, many years ago when you visited our village, I have not been able to have your Darshan till today because of my poverty. You are now camping somewhere in the North.”—tears welled up in his eyes and were rolling down his cheeks.

Balachandar was working for a small income in Thiruvanmiyur to take care of his parents and sisters, who were living in some other place. He himself was staying with his relatives. His financial condition was so tight, that he had not been able to go anywhere outside Chennai.


When he returned from the office one evening, he was reading an article on Sri Maha Periyava in a weekly magazine. When he thought about his poverty stricken state and his inability to have His Darshan, it increased his grief and caused a heavy heart.


In spite of repeated persuasion by the lady of the house to have dinner, he refused to have dinner and after crying a lot, felt sleepy and slept off.


The next day dawned.


His face showed signs of crying in the night due to his craving for Periyava’s Darshan and the relatives asked him whether he had cried.


When he went to the office, the same question was asked by his colleagues at office also.


“Sir! Did you cry? You are looking highly perturbed and distressed!”


Balachandar confided in his close friend about his mental agony and started with his office work.


The company proprietor who entered the office just then, on his way to his room stopped at Balachandar’s desk and told him, “Balachandar ! Come to my room!”


Balachandar went inside his room thinking that he had called him to discuss about some office matter.


He was surprised when the proprietor asked him, “Do you know where Periyava is camping now?”


The boss then answered the question himself, “I think He is camping somewhere near Mahagoan. I had made reservations in the train to go there; but I cannot go as there is an important meeting here for me. I do not want to cancel the ticket. Please take this ticket, go there on my behalf and have Periyava’s Darshan. I shall arrange to convert this ticket in your name. Get ready and start”.


Balachandar was stunned at this sudden development; it looked as if the compassionate God, Sri Periyava had given this order in the proprietor’s roopam (form) to provide solace to his distressed soul.


He nodded his agreement to go and came out of the room. But another worry caught hold of him.


“I got a first class ticket to go and have Darshan, that is alright. Boss will not ask me money for this ticket. But where is the money for the travel from Mahagoan to the place where Periyava is camping and for the other expenses on the way and the return ticket to Chennai after the Darshan?”—his thoughts ran thus. He came back to his seat and told his close friend what had happened.


“Why do you worry? Periyava has showered His Grace on you as per your wishes. Start immediately without any worry. I will give you hundred rupees. The return ticket charge will be within that amount only”—-said his friend.


Balachandar accepted the money with hesitation. As he would not be able to return that sum in one lot, he made an agreement with his friend that he would return the amount in ten months at the rate of ten rupees per month.


As he had never crossed the boundaries of Chennai in his lifetime and he could not speak any other language, he was feeling anxious and scared till he reached Mahagoan.


When he was standing on the road thinking about whom to ask the way to where Periyava was camping, a lorry loaded with sugarcane came that way and he stopped it by waving his hand. He asked the driver in broken Hindi where Sankaracharyar was staying. The driver, as if he had known him very well, took him in his lorry and left him in the place where Periyava was camping. When he was worried as to how much money the driver would demand, the driver refused to accept even a paisa because he was happy to have taken him to Periyava’s place.


Balachandar was overwhelmed by the compassion showered on him by Sri Periyava. He ran inside to the place where Sri Maha Periyava was camping to have His Darshan. He had His Darshan to his full satisfaction. Although Periyava did not speak a word, he was happy that He fulfilled his desire of seeing the Sakshat Parameshwaran and with that happiness he started towards the railway station thanking Him in his mind.

Contd......./2

 
Last edited by a moderator:
Contd...../2

The train to Chennai was about to arrive. He stood in the queue with the hundred rupees in his pocket which he had got as loan. As he stood in the queue, he was thinking that he would return the balance money after paying for the ticket immediately after reaching Chennai and pay back the remaining outstanding amount at the rate of ten rupees per month.

At that time, he heard two men talking in Tamil. They came and stood just behind him in the queue. He was happy to see Tamil speaking people there. They asked him if he was travelling to Chennai. When he replied in the affirmative, they took him away from the queue.


“Three of us came here for Sri Maha Periyava’s Darshan. We had reserved three first class tickets to Chennai. But one among us is proceeding to Bombay (Mumbai) and we came here to cancel one ticket. Now that you are also going to Chennai, you can travel on this ticket with us. Why cancel it and waste the money?”


He was not able to digest the incidents happening one after the other in this way. He hesitated thinking whether they would ask him to pay the first class ticket amount.

One of them, Sri Raman said, “Why are you thinking? We are happy that we are able to take with us a Periyava devotee like you. You need not pay us anything for the ticket. Do come with us.”

Tears welled up in his eyes thinking about the abundant compassion showered on him now, the same way as on that day when he cried because of his inability to have His Darshan. With folded hands, he turned in the direction where that Mahan was staying, melting in his mind.


When he thought whether a God could bless him this way by fulfilling his desire without having to spend a paisa, his amazement was never-ending.


There was another incident connected with the same devotee. His sister’s marriage had been fixed. He could not find a way to arrange even for the minimum expenditure of thirty thousand rupees. There was only one solution and that was going and surrendering at the feet of Periyava and so he went to see Him.


There was a big crowd of devotees near Sri Maha Periyava. Unable to go anywhere near Him, Balachandar stood at some distance away. A rich man from Andhra who used to come to Sri Periyava every year after the harvest and submit a big amount to Him had come. Sri Periyava would normally direct him to give the money to a Veda Patasala. This man was standing before Periyava with his offerings.


“This time, give this money for another big requirement” saying this, Sri Periyava signaled to where Balachandar was standing. He thought Periyava was calling someone else. When
other devotees told him that Periyava was calling him only, he went near Him.


Sri Periyava told the rich man, “This man is conducting his sister’s marriage. Give this money to him”. Balachandar could not believe what was happening as he had not told anybody about his predicament. What compassion and mercy of Periyava!!!


The rich man gave the money to Balachandar as per Periyava’s orders. Did he need to count the amount that was given to him? The amount was exactly thirty thousand rupees!!!

The Trikala Gnani and Sarvagnar knows everything!


He will never let anyone down. It is certain that He will bestow us with all prosperity and auspiciousness if we surrender wholeheartedly to Him.


Compassion Will Continue To Flow……..


Source: Sri Periyava Mahimai Newsletter – Sep 29 2009
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb


Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!


யார் உன் குலதெய்வம்! குலதெய்வம் எதுன்னே தெரியாதா?

பெரியவா விளக்கம்

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது.

இருந்தும் அந்த விவசாயி, சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”


காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா…

அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

Contd..../2
 
Last edited by a moderator:
Contd...../2

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன்.

நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?” – பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம்.

இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

– பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது.


Source: https://swasthiktv.com/who-is-your-family-god-do-not-know-what/

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
Last edited by a moderator:


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!

பூந்தமல்லியில் இருந்த கண்பார்வையற்றோரின் பள்ளியிலிருந்து வந்த ஒரு ஆசிரியர் பெரியவாளிடம்,


"அடுத்த ஞாயித்துகிழமை பள்ளி குழந்தைகளை பெரியவா தரிசனத்துக்கு அழைச்சிண்டு வரேன். அதுகளால பெரியவாளை தரிசனம் பண்ண முடியாது. அதுனால, பெரியவா அந்த குழந்தைகள்
கிட்டே நாலு வார்த்தை பேசி ஆசீர்வாதம் பண்ணனும்"


பெரியவா திருச்செவியால் கேட்டுகொண்டார்.


அடுத்த ஞாயிறு அவர் அந்த குழந்தைகளோடு தனி பஸ்ஸில் வந்துவிட்டு, குழந்தைகளை வரிசையாக நிறுத்தினார்.


உடனிருந்தவர்கள், "பெரியவா நேத்திலேர்ந்து காஷ்ட்ட மௌனம்" அவ்வளவுதான்!


"ஐயோ இந்த குழந்தைகளுக்கு பெரியவாளை பாக்கத்தான் முடியாதே! நாலு வார்த்தை பேசினா சந்தோஷப்படுமேன்னு வந்தேனே! இவாளை ஏமாத்தின மகாப்பாவி ஆய்ட்டேனே!" என்று புலம்பினார்.


பெரியவா வெளியே வந்தார். கிணத்துக்கு பக்கத்திலேயே மணை போடச்சொல்லி, குழந்தைகளை அழைத்து, ஒவ்வொருவராக ஊர், பேர், எப்படி பார்வை போச்சு, மாதிரி பொறுமையாக கேட்டு, ஒரு மணிநேரத்துக்கு மேல் அவர்களோடு இருந்து, பிரசாதமும் கொடுத்து அனுப்பி வைத்தார்.


ஜனாதிபதி ஸ்ரீ கிரி, பிரதமர் திருமதி இந்திரா காந்தி இவர்கள் வந்தபோது கூட கலைக்காத மௌனத்தை, பார்வையற்ற குழந்தைகளுக்காக கலைத்த கருணை பெரியவாளுக்கே உரிய வாத்சல்யம்!



Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!

சங்கடத்துக்கு பரிபூரணமா நிவர்த்தி அடைஞ்ச
சம்பவம்.

தம்பதிக்கு பரமாசார்யாகிட்டே ஏதோ சொல்லி தீர்வு
கேட்கணும்னு கோரிக்கை இருந்தது. ஆனா, அவா
ஆசார்யா முன்னால வந்து நின்னதும் எதுவும்
சொல்றதுக்கு முன்னாலேயே குங்கும பிரசாதத்தைக்
குடுத்து அவாளை அனுப்பிவிட்டார் ஆசார்யா. அதனால
ரொம்பவே கவலையோட நகர்ந்த அவாகிட்டே மடத்து
சிப்பந்தி ஒருத்தர் பெரியவாளோட காஷ்ட மௌனத்தைப்
பத்தி சொல்லி,இன்னொரு நாள் மடத்துல இருக்கறச்சே
வந்து பாருங்கோன்னு ஆறுதலா சொல்லி அனுப்பினார்.

மறுபடியும் அதே தம்பதிகள் வேறொரு நாள் மடத்துக்கு
வந்து,வரிசைல நின்ற அவாளோட முறை வந்தது.
தன் முன்னால நின்ன அவாளை ஒருதரம் ஏற இறங்கப்
பார்த்தார் ஆசார்யா. கைகளைக் குவிச்சு நமஸ்காரம்
செஞ்ச அவா, தங்களோட குறையை சொல்ல நினைச்சு
"பெரியவா எங்க.." அப்படின்னு ஆரம்பிச்சதுதான் தாமதம்
சட்டுனு நிறுத்துங்கோங்கறமாதிரி கையைக் காட்டினார்
பரமாசார்யா.


என்னடா இது நம்ப பிரச்னைக்கு தீர்வே இல்லையோ?..
சொல்றதுக்கு முன்னாலயே வேண்டாம்னு தடுக்கறாரே
பெரியவா. காரணம் என்னவா இருக்கும்னு அவா திகைச்சு
நின்னா.சுத்தி இருந்தவா, ஆசார்யா அவாளைத் தடுத்ததுக்குக்
காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வப்பட்டா. ஆனா,
இதெல்லாம் எதையும் கவனிக்காதவர் மாதிரி,
"நீங்க ரெண்டுபேரும் இப்போ திரும்பிப் போங்கோ..
தங்கத்தால சின்னதா ஒரு வேல் பண்ணி எடுத்துண்டு
அப்புறம் இங்கே வாங்கோ!" அப்படின்னார், மகாபெரியவா.

வந்தவாளுக்கு ஒரே குழப்பம்.'நாம சொல்லவந்ததை ஏன்
பாதியிலேயே தடுத்தார்? ஒருவேளை அதுக்குத் தீர்வே
இல்லையோ! போனதரம் மௌன்விரதம்னு பேசாமே
இருந்துட்டார். இந்த தரம் இப்படி ஆயிடுத்து. ஏதாவது தெய்வ
குத்தமா இருக்குமோ! எதுக்காக வேல் பண்ணி எடுத்துண்டு
வரச் சொல்றார்னு புரியலை. சரி, தங்களோட கோரிக்கை
என்னன்னு கேட்டுட்டு இதைச் சொல்லி இருந்தாலாவது
அதுக்கான பரிகாரம்னு நினைச்சுக்கலாம். ஆனா, அதைக்
கேட்டுக்காமலே சொல்றாரே..இது எதனால இருக்கும்?
என்றெல்லாம் குழம்பினவா, சரி எல்லாம் தெய்வ சித்தம்.
நாம போய் வேல் செஞ்சு எடுத்துண்டு வந்து பார்ப்போம்.

அப்பவாவது கோரிக்கையை கேட்டுண்டு தீர்வு சொன்னார்னா
போதும்'னு நினைச்சுண்டு புறப்பட்டா.

பத்துப் பதினைஞ்சு நாள் கழிச்சு, பெரியவா சொன்ன மாதிரியே
தங்கத்தால சின்னதா வேல் செஞ்சு எடுத்துண்டு வந்தா அந்தத்
தம்பதி. வரிசையில் நின்ற அவாளைப் பார்த்த பெரியவா, கிட்டே
கூட்டிண்டு வரும்படி ஒரு சீடனை அனுப்பினார்.

"பெரியவா நீங்க சொன்னமாதிரியே வேல் செஞ்சு எடுத்துண்டு
வந்துட்டோம். எங்களுக்கு ஒரு...!" தம்பதிகள் முடிக்குமுன்
இந்தமுறையும் அவாளை எதுவும் சொல்ல வேண்டாம்கறமாதிரி
கையைக் காட்டினார், பரமாசார்யா.

"இந்த வேலை உங்க அகத்துல பூஜை அறையில் வைச்சு தினமும்
பசும்பாலால் அபிஷேகம் பண்ணு. அதோட வாரம் ஒரு தரம்
செம்பருத்திப் பூவால முருகன் நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை
செஞ்சுண்டே வா!" சொல்லிட்டு கொஞ்சம் நிறுத்தினார் ஆசார்யா.

'நம்ப கோரிக்கை என்னன்னே கேட்டுக்காம இவரா ஏதோ சொல்றார்.

ஒருவேளை நாம சொல்ல வந்த விஷயத்துக்குத் தீர்வே கிடையாதோ
இல்லை இப்போ இவர் சொல்றது ஏதாவது பரிகாரமா இருக்குமோ?
ஒண்ணும் புரியாம பிரசாதத்தை வாங்கிண்டு புறப்படலாம்னு
நினைச்சுண்டு பவ்யமா கையை நீட்டினா ரெண்டுபேரும்.

"என்ன,முக்கியமான விஷயத்தை சொல்லி முடிக்கறதுக்குள்ளே
அவசரமா? இன்னும் நான் சொல்லி முடிக்கலை. அதையும்
கேட்டுட்டுப் புறப்படுங்கோ. வேலுக்கு தினமும் பால் அபிஷேகம்
பண்ணச் சொன்னேன் இல்லையா? அந்தப் பாலையும் அர்ச்சனை
பண்ணின அப்புறம் செம்பருத்திப் பூவையும் உன்னோட மாமியாருக்கு
குடுத்துடு. அவாளை தெனமும் ரெண்டு மூணு செம்பருத்திப் பூவை
சாப்டுட்டு அந்தப் பாலையும் குடிக்கச் சொல்லு. அவாளோட
சிரமத்துக்கு அதுதான் தீர்வு" பரமாசார்யா சொல்லச் சொல்ல,
அப்படியே திகைச்சுப் போய் நின்னா, அந்தத் தம்பதி. அவா

ரெண்டுபேரோட உடம்பும் சிலிர்த்துண்டு அந்த ஆச்சரியத்துல லேசா
நடுங்கினதுகூட அங்கே இருந்தவா எல்லாருக்கும் தெரிஞ்சுது.
கொஞ்சநாழி கழிச்சு,சுயபிரக்ஞைக்கு வந்தவா, ஆசார்யாளை
நமஸ்காரம் பண்ணினா. சாத்துக்குடி பழம் ஒண்ணைத் தந்து
அவாளை ஆசிர்வாதம் பண்ணினார் ஆசார்யா.

வரிசையில் நின்ற பலரும் அவளுடைய திகைப்புக்கு காரணம் கேட்க;
"என்னோட மாமியாருக்கு ரெண்டு மூணு வருஷமாவே அடிக்கடி
வயத்துவலி வந்து பாடாப் படுத்திண்டு இருந்தது. சமீபகாலமா
அந்த வலி அவாளுக்கு நிரந்தரமாவே ஆயிடுத்து. பார்க்காத
வைத்தியம் இல்லை. வேண்டாத சுவாமி இல்லை. ஆனாலும்
தினமும் அவா துடிக்கறதைப் பார்க்கறச்சே எனக்கே தாள முடியலை.

தாயாரோட கஷ்டத்தைப் பார்க்க சகிக்காம இவரும் வேதனைப்
பட்டுண்டு இருக்கார்.பெரியவாகிட்டே சொன்னா, தீர்வு கிடைக்கும்னு
தெரிஞ்சவா சொன்னா. அதான் வந்தோம். பரமாசார்யா எங்களைப்
பேசவிடாம தடுத்தப்போ,மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது!. ஆனா
இப்போ.." பேசமுடியாம நாக்கு தழுதழுக்க கொஞ்சம் நிறுத்தினா.

"இப்போ நாங்க எதையும் சொல்லாம அவராவே என் மாமியாரோட
பிரச்னைக்கு தீர்வு சொல்லியிருக்கார். இப்படிக் கண்ணுக்கு முன்னால
நடமாடற தெய்வத்தை, நாம சொன்னதைக் கேட்கலையேன்னு தப்பா
நினைச்சுட்டோமேங்கறதை நினைச்சா அழுகை அழுகையா வருது!"
சொல்லி முடிச்சா. அப்புறம் பெரியவா இருந்த திசைப்பக்கமா திரும்பி
நமஸ்காரம் செஞ்சுட்டு புறப்பட்டா.

கொஞ்ச நாள் கழிச்சு அந்தத் தம்பதி திரும்ப வந்தா, "பெரியவா உங்க
அனுகிரகத்தால என் மாமியாரோட வயத்து வலி பரிபூரணமா
குணமாயிடுத்து"ன்னு பெரியவாகிட்டே சொன்னா அந்தப் பெண்மணி.
"இதெல்லாம் என்னோட வேலை இல்லை. எல்லாம் பரமேஸ்வரனோட
கிருபை. முருகனை நினைச்சுண்டு நீ பண்ணின பூஜையோட பலன்!"
அப்படின்னு சொன்ன பரமாசார்யா,அவாளை பரிபூரண சௌக்யமா
இருங்கோன்னு ஆசிர்வாதம் செஞ்சு அனுப்பினார்

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!


Experiences with Maha Periyava: No hot water for Me today!


It was a cold morning in the month of Karthigai (Nov-Dec). One of the shishya's was about to light the 'Kottai aduppu' (traditional stove).

Periyava called him and said “I do not need hot water today. So, don't light the kottai aduppu”. The shishya thought ‘Ok, but how can we make 'neivedhyam (food offering for Gods)?’


Maha Swami said, “Use the 'irumbu aduppu' (iron stove)”. It was about 7 am in the morning. There was a sound ' meaow'. The shishya was scared that the cat might lick the 'neivedhyam'. He rushed searching for the cat. He found it inside the 'kottai aduppu' with 4 kittens!!


He shuddered at the thought of what would have happened had he lit the kottai aduppu. Now, he could understand Periyava's order, “No hot water for me today”. The kittens were unable to bear the cold and so the cat had put the kittens inside the 'aduppu'.


Ekam Sath. Not mere words. Uyir thathuvam.


Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!!


"நடு இரவில் கிடைத்த 100 லிட்டர் பால்!"


சென்னை எழும்பூரில் ஒரு தடவை ஸ்ரீமகாபெரியவாளின் ஜெயந்தி உற்சவம். உற்சவம் என்றால் அங்கு வரும் வேத விற்பன்னர்களை, மகானின் அம்சமாகவே கருதும் பெரும் மனம் படைத்தவர் பிரதோஷம் மாமா.அவர்களை உபசரிப்பதில் எந்த விதமான குறையும் இருக்கக்கூடாது என்று சிரத்தையோடு உழைப்பவர். ஜெயந்தி மூன்று நாட்கள் நடக்கும்.


அடுத்தநாள் மகானின் திருநட்சத்திரமான அனுஷ தினம். கோலாகலமாகக் கொண்டாடப்பட இருந்தது.அன்றைய தினம் வைதீகர்களுக்கு நேர்த்தியான சாப்பாடு போட வேண்டும் என்பது நடைமுறை.பிரதோஷம் மாமாவுக்க
சொல்லியா தரவேண்டும்?

முதல் நாள் இரவு,மாமாவுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. எல்லோருக்கும் இனி அமுதமாக

பால்பாயசம் போடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.


இதற்காக நூறு லிட்டர் பால் தேவைப்படலாம்.


முன்னேற்பாடாகச் சொல்லாமல் பால் எப்படிக்
கிடைக்கும் என்றெல்லாம் மாமா யோசிக்கவே இல்லை.


"ஜெயந்திக்கு பால் பாயசம் போடணும் ஏற்பாடு பண்ணிடு" என்று, இரவே சமையலறை நிர்வாகியிடம் சொன்னார்.


நூறு லிட்டர் பால் தேவைப்படும். சமையலறை நிர்வாகி
"செய்கிறேன்!" என்று எப்படித் தைரியமாகச் சொல்லுவார்.


1980-ம் வருடம் இந்தச் சம்பவம் நடந்தது.பால் எவ்வளவு
தேவையென்றாலும் முன் பணம் கட்டவேண்டும்.

எப்படிப் பால் பாயசத்தைத் தயாரிப்பது?.

"முடியாது!" என்று பிரதோஷம் மாமாவிடம்
சொல்ல முடியுமா...தயங்கித் தயங்கி நின்றார்.


"என்னப்பா பதிலையே காணோமே?"-மாமா கேட்டார்.


என்ன பதில் சொல்வது என்று இவர் இக்கட்டான
சூழ்நிலையில் இருக்க அப்போது திடீரென போன் ஒலித்தது.


மாமாவின் உத்தரவின்படி,காரியஸ்தர் போனை எடுத்தார்.


போனில் கேட்ட செய்தி அன்பரின் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்தது.மகாபெரியவாளின் எல்லையற்ற அருளும் பிரதோஷம் மாமாவின் ஆழ்ந்த பக்தியும் .


அங்கே வெளிப்பட்ட போனில் வந்த செய்திதான் என்ன?


ஜோஷி என்கிற வடக்கத்திய அன்பர்,மகானிடம்
அளவற்ற அன்பு பூண்டவர். பசுக்களை வைத்து

பண்ணையை நடத்துபவர்,

"ஜெயந்திக்கு, பால் அனுப்பினால், அதைப் பிரசாதமாக
ஏற்றுக் கொள்ள முடியுமா?" என்றுதான் போனில்

கேட்டார் ஜோஷி.
எப்படிப்பட்ட நேரத்தில் வருகிறது இந்தச் செய்தி!


பால் பாயசத்திற்கு வேண்டிய பால் கிடைத்துவிட்டது.

பிரதோஷம் மாமா, மகானின் அருளில் எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தால் இதைப்
போன்ற காரியங்களைச் சாதிக்க முடியும்!


கட்டுரை-ரா.வேங்கடசாமி

காஞ்சி மகானின் கருணை
நிழலில் புத்தகத்திலிருந்து.

புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!


Experiences with Maha Periyava: Blessings and Financial help

It is the kind hearted Lord Shiva who has come to this world in the form of Sri Maha Periyava. Only few of them have been lucky to experience and understand the avatar of His Holiness. One such great devotee is Brahmashri Pradosham Mama.

Sri Maha Periyava has always been bound by the extreme devotion of Pradosham Mama and has showered him with all the kindness and blessings.Pradosham Mama always thought he would not be able to repay the kindness that Periyava showed on him.

Pradosham Mama’s devotion to Periyava is seen in all the monthly Anusham celebrations, yearly Jayanthi, Maharudra and Suhasini poojas that he has conducted regularly.

Pradosham Mama was a retired railway employee and his pension was not sufficient to run his family. The only wealth that he had was Periyava’s blessings. That one thing made him run all these events in the best way possible. Nobody could have bettered him in running these events.
Once Sri Maha Periyava was camping at Mahagaon. Suddenly, He called Ramamurthy Iyer and asked to collect money for His Bhiksha. Everybody present there was shocked as Periyava had asked money for Bhiksha. Periyava was never interested in all the money that was given by the kings or rich men. They would be accepted by the Matham and then immediately given to the needy people who reached out to Periyava for help.

Everybody present was puzzled by Sri Maha Periyava’s request. Following His orders, Ramamurty collected Rs. 1500/- from 5 Brahmins present there.

“Give this to him”, said Periyava referring to Pradosham Mama who was also called as the 64th Nayanmar (after the famous 63 Nayanmars – devotee of Shiva).

This money grew manifold and helped Pradosham Mama. During the next Pradosham, when Pradosham Mama went to meet Periyava, He blessed him saying, “Put that money in the bank”. This is the same money that was used for conducting Periyava celebrations, in protecting Vedas and cows and big temple events. Pradosham Mama is only one to be blessed like this.
Loka Matha (Mother of the World) – Kalki Diwali Special Edition ‘96

Once when Sri Maha Periyava was camping in Satara during winter he gave a blanket to Sri Balu Mama and asked him to send it to Kumbakonam Pattu Paati.

Kumbakonam Pattu Paati was a devotee of Sri Maha Periyava. She did not have any kids and had donated her two houses to the Kanchi Mutt. She was good natured and moved well with others.
On the same night, when Periyava had given the blanket, His Holiness got up from His sleep and woke up Sri Balu Mama and asked if he had given the blanket to Paati. Since Balu Mama had forgotten, he just stood still.

Periyava asked Balu Mama to immediately go and find her and give the blanket. It was the middle of a very cold night and Balu Mama hesitated and said he would give it to her in the morning.

“No, this blanket needs to reach her now. It is very cold in the night” said Sri Maha Periyava. Without a choice, Sri Balu Mama left in the cold night to search her and at last found her at Kabileswar’s house. When Balu Mama saw her shivering in the cold and lying down, he understood why Periyava was adamant in giving the blanket immediately to her. As she took the blanket, she felt as if she was surrounded by Periyava’s kindness.

Similar to the previous incident, once Sri Balu Mama was also lucky to experience Periyava’s kindness. Sri Balu Mama was sleeping in an open space in the temple at Samboti during the peak winter season. He did not have any blanket. In the morning when he got up, he realized he had slept peacefully in spite of the coldness. He had a shawl wrapped around him. He thought that some of the Mutt colleagues would have done that and forgot about the incident.

Four days passed. On seeing Balu Mama with the shawl, Periyava told that the shawl was good and asked him where he got it from. Balu Mama told Periyava his thought that some of the Mutt colleagues would have wrapped it around him. On hearing this, Periyava with a little smile shook His head and touched Himself to say that He had wrapped it.

“You were sleeping bare bodied on that cold floor. What will your mother think if she saw you like that?” said Periyava to Sri Balu Mama.

Sri Maha Periyava’s kindness is like the warmth in coldness, like a shade in summer, like an umbrella during rains. Let us all devote ourselves to Him and get all the peace and happiness in life.

Source: Sri Sri Sri Maha Periyava Newsletter
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!


Experiences with Maha Periyava: Asked for a Pillaiyar but got a whole Temple

Once some important people from a village came to SriMatham for darshan.


They informed Periyava that the Pillaiyar vigraham (Ganesh statue) in the village had been stolen and requested Him to help in getting another one in its place.


“Is there a lake in your village?"--asked Periyava.


“Yes"


"Is there water in it?"


The villagers looked at each other and replied, “It has not been cleaned by the Panchayat, and so water is very less...."


“If there is plenty of water in the lake, it will be useful for all people and cattle, is it not?"


“Yes...”


"First, all of you clean and deepen the lake...”----thus saying, He gave Prasadam to them ---indirectly indicating that they could leave!


They were all greatly disappointed. Even if He had said that it is not available then, they might have felt alright, He did not talk about the Vigraham at all, they thought.


Deepening the lake is the task of the Government machinery. Why should we do it?


But, some elders from the village argued, “Periyava has asked us to do that job, and if we disobey, all of us will be in trouble"


So, there was no other way, we have bought this ourselves! There is no point in further postponing this. --decided the villagers!


On a particular day, some strong-bodied persons got down into the lake with pickaxes and baskets and started the work!


After about an hour, one of them hit something, producing a "Tang" noise.


“Brother, there is some noise here..."---he called others.


They carefully removed the mud in that place using their hands. You know, what they got? Yes, a Pillaiyar vigraham (not the stolen one, but another)


After some time, another "Tang" noise, and now they got a Shivalinga!


Next followed Bull (Nandi), Ambal, Murugan, Balipeetam, Durga....


All of them ran back to Kanchipuram.


“We asked Saami (meaning 'Periyava) only for a Pillaiyar vigraham, but now we have got a whole Temple..."----their joy knew no bounds!


"Construct a thatched shed near the bank, install all the vigrahas there, light lamps and perform pooja daily with fruits....."-----Periyava told them.


"What about a temple?"----asked the villagers.


"Pillaiyar has come to you now, is it not? He will take care of it..."


Source: Mahaperiaval Darisana Anubavangal Vol. 6
Narrator-----SriMatham Balu Mama
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!


எழுத்தாளர் சுஜாதா காஞ்சி பெரியவரைப் பற்றி கூறியது
‘சாயம் வெளுத்துவிட்டது’
---------------------------
பெண்ணுக்கு குங்குமம், ஆணுக்கு விபூதி, திருமண் என்கிற அடையாளங்களை ஒரு பழக்கமாகவும் வழக்கமாகவும் ஆக்கி அளித்திருக்கிற அந்த ஆன்மிக நெறிப்பாட்டின் பின்னாலே, ஒரு பெரும் பொருள் இருக்கிறது.

இதற்கான விடையை நான் எவ்வளவோ பேரிடம் கேட்டிருக்கிறேன். யாரும் நெற்றியில் தரிக்கும் விபூதிக்கோ, இல்லை திருமண்ணுக்கோ என் நெஞ்சம் நிரம்பும் வண்ணம் ஒரு பதிலைச் சொன்னதில்லை.

கண்ணதாசன் மட்டும் தன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஓரளவு சொன்னார்.

ஒவ்வொரு முறை விபூதியை தரிக்கும் போதும், ஒவ்வொரு இந்துவும், இந்த உடம்பும் ஒருநாள் ‘இந்த விபூதிச் சாம்பல் போல் ஆகப் போகிறது’ என்பதை உணர்ந்து கொள்கிறான்.

திருமண்ணோ இந்த உடம்பை மண் தின்னப்போகிறது என்று சொல்லாமல் சொல்கிறது. எனவே, ‘நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கை வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அர்த்தமுள்ள செயல்பாடுகளுக்கு ஒதுக்கி அடக்கத்துடனும் ஆரவாரம் இல்லாமலும் வாழ வேண்டும்’ என்று விபூதி, திருமண்ணுக்கு அவர் சொன்ன பொருள் ஏற்புடையதாக இருந்தது.

பெரியவரோ, இம்மட்டில் வெகு ஆழமான விளக்கத்தை அளித்திருக்கிறார். அதை நான் அறிய நேர்ந்தபோது, என் நெற்றித் திருமண்ணை ஒரு சார்புக்குறியாக மட்டும் நான் கருதவில்லை. நம் சான்றோர்களின் ஆழமான பேரறிவை எண்ணி வியந்து போனேன்.

‘விறகினை அக்னி எரித்து சாம்பலாக்குகிறது. இறுதியில் அந்த சாம்பலே பஸ்மமாக மிஞ்சுகிறது. அதேபோல ஞானம் என்கிற நெருப்பு மனித வாழ்வின் கர்மங்களை எல்லாம் எரித்து பஸ்மமாக்குகிறது’ என்கிறான் கண்ணன் கீதையில்…

கண்ணனின் கருத்துப்படி பார்த்தால், ஞானத்தின் தோற்றம்தான் பஸ்மம்; அதாவது விபூதி! இதைச் சுட்டிக்காட்டி தன் கருத்தைக் கூற முன் வரும் பெரியவர், வெகு அழகாக அதற்காக அஸ்திவாரமிடுகிறார்.

‘பல வர்ணங்களைக் கொண்ட பொருள்களைக் காண்கிறோம். ஆனால், அவை அவ்வளவும் எரிந்தபின் மாறிவிடுகின்றன. கடைசியில் வெளுத்துப் போவிடுகின்றன. நாம் சாயம் வெளுத்துப் போய் விட்டது என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். என்றால், மெய்யான ஆத்மாவின் வடிவம் தூய வெண்ணிறம் – வடிவம் கொடுத்தால் அது விபூதி. பொய்யானது இந்த தேகம். இதன் மேல் விபூதியை பூசிக் கொள்கிறோம். ஒரு நாள் இதுவும் எரிந்து, இறுதியில் இந்த வெண்ணிற விபூதியை சார்ந்து நிற்கிறது.

ஆக, விபூதி நாம் யார் என்பதையும், நம் முடிவு எப்படிப்பட்டது என்பதையும் முதலிலேயே சொல்லி விடுகிறது’ என்கிறார்.

அப்படியே திருமண்ணுக்கும் விளக்கம் தருகிறார். வைஷ்ணவர்கள் துளசிச் செடியின் அடி மண்ணைத்தான் திருமண் என்று இட்டுக்கொள்வார்கள். அதை உடம்பின் பன்னிரெண்டு இடங்களில் இட்டுக்கொள்வார்கள். அப்படி இட்டுக் கொள்ளும்போது, விஷ்ணுவின் நாமங்களை (பெயரை) _கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர_ என்று சொல்லிச் சொல்லி இட்டுக்கொள்வார்கள்.
இப்படி நாமங்களைச் சொல்லி இட்டுக்கொண்டது தான் பின்னாளில், ‘நாமம் போடுவது’ என்றாகிவிட்டது’ என்கிறார்.

என்ன ஒரு நேர்த்தியான வியாக்யானம்! பெரியவரின் இந்த கருத்தை தெய்வத்தின் குரல் வாயிலாக அறிந்த பிறகு விபூதி, திருமண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவர் சொன்ன ‘சாயம் வெளுத்து விட்டது’ உதாரணமும், நாமம் சொல்லிப் போட்டது ‘நாமம் போடுவது’ என்றாகிவிட்டதும் நினைவுக்கு வரும்.

(எழுத்தாளர் சுஜாதா மஹாபெரியவரைப் பற்றி கூறியது)

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


பெரியவா சரணம் !!



"சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண் ணாக்கையும் தையல் இலையையும் எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ "

தர்மசாஸ்திரத்தை வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட ஆன்றோர்கள், கடல் கடந்து செல்வதை சாஸ்திரம் அனுமதிக்காது என்பார்கள்.

காஞ்சி மகாபெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றி வந்தார். இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. குடும்ப நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியே என்றாலும், ‘சாஸ்திரத்தை மீறிவிட்டோமோ’ என்ற உறுத்தல், பக்தரை வாட்டியது. தனது மனக்கலக்கத்துக்கு மருந்தாக… மகாபெரியவாளை அனுதினமும் தியானித்து வந்தார்!

அவருக்கு காஞ்சி மகான் திருவருள் புரிந்த சம்பவத்தை உள்ளம் உருக விவரித்தார் அகிலா கார்த்திகேயன்…

”ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசை ஆசையாகச் செய்தார். குடும்பத்தாரைப் பார்க்கப் போகிறோம் என்பதைவிட, வெகு நாட்களுக்குப் பிறகு காஞ்சி மகானைத் தரிசிக்கப் போகிறோம் என்ற குதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது.

சென்னை வந்ததும், விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து காஞ்சிபுரம் சென்றார்.
காஞ்சி மடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார் மகா பெரியவா. தரிசனத்துக்காக வந்திருந்த அடியவர்களுக்கு வியப்பு. ‘சமையல் இன்னின்ன மாதிரியெல்லாம் இருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு பெரியவா சிரத்தை எடுத்துக்கொள்கிறாரே? இதுவரை இப்படியெல்லாம் சொன்னது கிடையாதே’ என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.

இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்து சேர்ந்தார் பக்தர். மகா பெரியவாளைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த பெரியவா, சிப்பந்திகளை அழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோ” என்றார்.

வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படி பெரியவா சொல்வது ஏன் என்று ஊழியர் களுக்குப் புரியவில்லை. ஆனால், கடல் கடந்து தன் பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிசிக்க ஓடி வந்துவிட்டான். எனில், அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத் தெரியாதா?!

வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மகா பெரியவாளுக்கு எதிரில் வந்து நின்றார். அவரை உற்றுப் பார்த்த பெரியவா, ”என்ன… உன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?”
என்றார் கருணையும் கரிசனமும் பொங்க.

அதைக் கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்து வார்த்தைகளே வரவில்லை! ‘பெரியவா… பெரியவா…’ என்று திருப்பித் திருப்பிச் சொன்னபடியே இருந்தார்; கண்களில் கரகரவென நீர் வழிந்தது!

மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மகான், ”நானே சொல்லி டறேன்!” என்று ஆரம்பித்தார்… ”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கே புறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும் எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கற வரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு சங்கல்பத்தோட விரதமா இருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப் பார்த்து, ”என்ன நான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார்.

அவ்வளவுதான்… தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்துபோனார்கள். எனில், அந்தப் பக்தரை கேட்கவும் வேணுமா… நெக்குருகி நின்றார் அவர்!

இதற்கு நடுவில் இன்னொரு சம்பவமும் நடந்தது. அந்த பக்தர் சாப்பிடச் சென்றிருந்த நேரத்தில், தன்னை தரிசிக்க வந்திருந்த மற்ற அன்பர்களிடம், ”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே வந்திருக்காரே… அவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு சொல்லுங்கோ” என்று கேட்டாராம்.

இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில், எவரிடமும் ‘இதைக் கொடு, அதைக் கொடு’ என்று எதையும் கேட்டறியாதவர் பெரியவர். ஆகவே, பதில் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள்.

இந்த வேளையில்தான்… சாப்பிட்டு முடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார் அந்த பக்தர்! அவரையும் சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன் பார்த்த மகாபெரியவா, ”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமே சொல்லலையே…” என்று கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்…

”சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண் ணாக்கையும் தையல் இலையையும் எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!” என்றார்.

அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார். ‘தெய்வத்துக்கு நிகரான காஞ்சி மகான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரே’ என்று நெகிழ்ந்தார்..ஆனால், மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்று தவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே கேட்கவும் தயக்கம்!
இதையெல்லாம் உணராமல் இருப்பாரா பெரியவா. அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர், ”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார். எங்கிட்ட இருக்கற பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படறார். ஆனா கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும் வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது. இருந்தாலும் எனக்கு என்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை நோகவிட்டுட முடியுமா?” என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்து பேசினார்.

”இப்போ அவர் வாங்கிண்டு வர எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிற பசு மாட்டுக்குக் கொடுங்கோ அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிற பாலை எனக்குக் கொடுங்கோ. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். ஏன்னா, இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கற பாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ? பசு மாட்டு வழியா வந்தா எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும். அதனால அவர் மனசுல நெனச்சபடி, எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு. அதை நான் ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?” என்றார் விளக்கம் சொல்வது போல!

இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும் பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை, மகாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்?

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top