ஸநாதன தர்ம சொல்லகராதி

Status
Not open for further replies.

natkaushik

Active member
ஸநாதன தர்ம சொல்லகராதி

உச்சரிப்பு
--ங்கை ட--கும் --பாம் --இன்ம் ரு--ருஷி --பாம்


ப்ஹகவான்
உத்பத்திம் ப்ரளயம் சைவ ப்ஹூதானாம் ஆதிம் திம்,
வேத்தி வித்யாம் அவித்யாம்ச ஸ வாச்யோ ப்ஹகவான் இதி.

உயிர்களின் படைப்பு, அழிவு,வருவது, போவது, ஜ்னானம், அஜ்னானம் இவைகளை அறிந்தவரே பகவான் எனப்படுவர்.

ஜ்ஞான க்திர் பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸி அசேஷ: ,
ப்ஹகவச்ச்ஹப்த வாச்யானி வினாஹேயை: குணாதிப்ஹி:.

எவரிடம் ஜ்ஞானம், சக்தி, பலம், செலவம், வீரம், தேஜஸ், ஆகிய
உன்னத குணங்கள் இருக்கின்றனவோ அவரே பகவான்.


ஐஸ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய த்ஹர்மஸ்ய ய: ச்ரிய:,
ஜ்ஞான வைராக்யயோச்சைவ ஷண்ணாம் ப்ஹக இதீரிணா.
வஸந்தி தத்ர ப்ஹூதானி ப்ஹூதாத்மனி அக்ஹிலாத்மனி,
ஸ ச ப்ஹூதேஷு அசேஷேஷு வகாரார்த்த்: ததோsவ்யய:.
ஏவமேஷ மஹான் சப்த: மைத்ரேய ப்ஹகவான் இதி,
பரப்ரஹ்மப்ஹூதஸ்ய வாஸுதேவஸ்ய ந அன்யக: .

அனைத்து செல்வங்கள், அறம், நிறைந்தபுகழ், ஜ்ஞாநம், வைராக்கியம்,
இவைக்கு பக எனறு பெயர்.இவ்வாறும் எவரிடத்தில் இருக்கின்றனவோ, எவரிடம் உயிர்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றனவோ, எவர் உயிர்கள் அனைத்துள்ளும் பரவி நிற்கிறாரோ, அவரே பகவான்.இச்சொல் பரம்பொருளான வாஸுதேவன் ஒருவருக்கே பொருந்தும்.


(விஷ்ணுபுராணம்)

பிழைகளை மன்னிக்கவும். தோஷா: க்ஷந்தவ்யா: .


நன்றி: முன்னுரை, பாவத மஹாபுராணம், கீதா பிரெஸ், கோரக்பூர்.
 
Status
Not open for further replies.
Back
Top