• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என்னுடைய தமிழ்க் கவிதைகள்

Status
Not open for further replies.
அறியாமை


வரலாறு வராது
வணிகவியல் வார்த்தை தெரியாது
வாழ்வியல் வாய்க்காது
விலங்கியல் விளங்காது
புவியியல் புரியாது
புள்ளியியல் புதிரானது
பொருளாதாரம் பொருள் அறியாது
அறிவியல் அறியாது
ஆங்கிலம் அகராதி தெரியாது
கணிதம் கடினம்
கணக்கியல் கஷ்டம்
இயற்பியல் இயல்பறியாது
வேதியியல் வேட்கை கிடையாது
உயிரியல் உணராது
தாவரவியல் தடயம் தெரியாது
மறையியல் மனதறியாது
மருத்துவம் மண்டையில் ஏறாது
தொழில்நுட்பம் துளியும் தெரியாது
தொல்பொருளியல் துப்பு தெரியாது
மொழிகள் அறியாது
மௌனம் புரியாது
இலக்கியம், இலக்கணம் இனமறியாது
சாஸ்திரங்கள் சரிவராது
சாதனைகள் செய்தது கிடையாது
விளையாட்டு விரலளவும் கிடையாது
அரசியல் அர்த்தம் தெரியாது
கணினியின் கட்டமைப்பு தெரியாது
உளவியல் உணராது
உறவுகள் புரியாது
இயற்கை புரியாது
இங்கிதம் தெரியாது

இப்படி எதுவுமே தெரியாமல் நாட்களைக் கடத்துகிறேன்.

கண்ணதாசன் சொன்னது போல்
"வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை"
("எங்கிருந்தோ வந்தாள்" திரைப்படத்தின் "நான் உன்னை அழைக்கவில்லை..." பாடல்)

பாராதியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்
"சொல்லடி சிவசக்தி! நிலச் சுமையென வாழ்குதல் புரிகுவையோ?"
 
Last edited:
அறியாமை
....................
இப்படி எதுவுமே தெரியாமல் நாட்களைக் கடத்துகிறேன்.

கண்ணதாசன் சொன்னது போல்
"வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை"..........

பாராதியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்
"சொல்லடி சிவசக்தி! நிலச் சுமையென வாழ்குதல் புரிகுவையோ?"

என்ன ஆயிற்று சிவா சார்? ஒரே 'புலம்பல்ஸ்'??

இன்றுதான் எழுதினேன், என் நண்பரின் கொள்கையை:

ஊக்கம் உயர்ச்சி தரும்! :thumb:
 
கடந்த கால நினைவுகள்

அறியாமை


வரலாறு வராது
வணிகவியல் வார்த்தை தெரியாது
வாழ்வியல் வாய்க்காது
விலங்கியல் விளங்காது
''புவியியல் புரியாது
புள்ளியியல் புதிரானது
பொருளாதாரம் பொருள் அறியாது
அறிவியல் அறியாது
ஆங்கிலம் அகராதி தெரியாது
கணிதம் கடினம்...................''

இப்படி நீங்கள் எழுதும் பொழுது என் கடந்த கால நினைவுகள் வருகிறது ...

எங்கள் நண்பர்கள் எல்லோரும் இப்படித்தான் பேசிச் சிரித்துக்கொண்டிருப்போம் ....

'' சரித்திரம் அது தரித்திரம்
கணக்கு நமக்கு பிணக்கு
physics அது பிச்சுக்குச்சு''

சிவசண்முகம்
 
Last edited:
அறியாமை

........'' சரித்திரம் .............".......
எதிர்காலம் ஒரு '?'

இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள் கையில்!

இந்த எண்ணங்கள் இருந்தால், நாடு என்ன ஆகும்? :noidea:
 
என்ன ஆயிற்று சிவா சார்? ஒரே 'புலம்பல்ஸ்'??

இன்றுதான் எழுதினேன், என் நண்பரின் கொள்கையை:

ஊக்கம் உயர்ச்சி தரும்! :thumb:

புலமபல் என்றில்லை. உண்மையும் கூட.
அவ்வை கற்றதே கையளவு என்றால் நான் எம்மாத்திரம்?
நான் என் பிறந்த நாளை பெரிய அளவில் இதுவரைக் கொண்டாடாமல் இருப்பதற்கு நான் எதுவும் சாதனை செய்து விடவில்லை என்பது ஒரு முக்கியமான காரணம்.

They say, "true knowledge is something of everything and everything of something". My knowledge is "something of something".

Confucius said, "Admit your ignorance. That is the first step for your progress".
 
All the days viz "Valentine's Day", "Mother's Day", "Father's Day",

''Women"s Day, 'Children's day are celebrated once a year!

Why is Bus Day "celebrated" for so many days?

A day for each bus? :noidea:

To add to the misery of the crazy traffic, bumpy roads, over crowded

buses, instant road blocks as and when four people decide to go ahead

with it...?

Adding fuel to fire or proving the statement of what will happen when

a monkey is 'dead-drunk' and is also bitten by a scorpion!

I get a picture of how the original vanara sena must have looked and

behaved after Hanuman located Sita Devi and the other monkeys took

the liberty of destroying the Madhu Vanam by drinking all its honey and

eating all the fruits.
:llama:
 
உளவியல் உணராது:caked:
உறவுகள் புரியாது :argue:

இயற்கை புரியாது :boink:

இங்கிதம் தெரியாது :heh:

Dear Mr. Haridasa Siva,

I am sure the poem is NOT about anyone who knows the existence and names

of so many subjects to be learnt.

But if a person is ignorant on the above four, lives of the people living

around him are bound to be miserable indeed!

And glorifying one's own incompetence in rhyming words is unpardonable!

Refer to the post by your name's sake!

with warm regards,
Mrs. V.R.
 
Last edited:
உளவியல் உணராது:caked:
உறவுகள் புரியாது :argue:

இயற்கை புரியாது :boink:

இங்கிதம் தெரியாது :heh:

Dear Mr. Haridasa Siva,

I am sure the poem is NOT about anyone who knows the existence and names

of so many subjects to be learnt.

But if a person is ignorant on the above four, lives of the people living

around him are bound to be miserable indeed!

And glorifying one's own incompetence in rhyming words is unpardonable!

Refer to the post by your name's sake!

with warm regards,
Mrs. V.R.

Your words are 100% true. But I was not trying to glorify my incompetence in rhyming words. It is a simple acknowledgement of fact. I don't think we would have so much problems in our life everyone knew at least these four. The existence of problems surrounding our relationship very much underline the fact that I am not alone. And again the ignorance may not necessarily be at all times. But you would know that even a one time slip could cost one dearly.
 
dear Mr. Siva,

I never said you are trying to glorify your incompetence in rhyming words.

It was done by your names sake.


I saw the bus day celebration at least three or four times. Boys dancing on the

top of the bus half dressed (Half undressed?!). I don't know how many people

were delayed for the appointments (medical, official and others). How many

people suffered because of this monkey business!

with best wishes,
Mrs. V.R.
 
சொன்னாலும் வெட்க்கமடா

எதிர்காலம் ஒரு '?'

இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள் கையில்!

இந்த எண்ணங்கள் இருந்தால், நாடு என்ன ஆகும்? :noidea:

கடந்த காலத்தைப் பற்றிய கவலையும்
நிகழ் காலத்தைப் பற்றிய அச்சமும் ..
வரும் காலத்தைப் பற்றிய கேள்வியும்
ஈங்கு எமக்கு இல்லை !

வருவதை நினைத்து வாழ்க்கையைத் தொலைத்தால்
அதைப்போல் மடமை வேறேதும் இல்லை
இருப்பது சிலநாள் அழுவது பலநாள்
இப்படி இருந்தால் உலகம் சிரிக்காதோ?

'' முன்னாலே தெரிவது அவன் வீடு
பின்னாலே தெரிவது அடிச் சுவடு
நடுவினிலே நீ விளையாடு என்றும்
நல்லதை நினைத்தே போராடு '' !

சிவசண்முகம்

சொன்னாலும் வெட்க்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
 
...............
என்றும்
நல்லதை நினைத்தே போராடு '' !
நல்லதை நினைத்துப் போராட, நல்ல அறிவு வேண்டாமோ?
நன்கு படிக்கும் காலத்தை விரயம் செய்தால், என்ன ஆகுமோ?

எதிர்காலத்தைப் பற்றிக் கொஞ்சமேனும் கவலை கொள்ளாது,
நிகழ்காலத்தைத் தொலைத்தால், வரும் துன்பம் என்றேன்!

:ballchain:

In today's post, I mentioned the first sentence our professor said, in our post grad class:
Laziness begins with cobwebs but ends in iron chains! :decision:
 
Last edited:
எல்லோரும் இளமை கடந்தே வருகிறார்கள் .
இந்த இளமைக்கே உண்டான துறு துறுப்பும்
ஆர்வமும் அலட்சியமும் கலந்ததே வாழ்க்கை
இதில் ஒன்றும் தவறில்லை ..அவர்களே பொது
வாழ்கையில் அடி எடுத்து வைக்கும் பொழுது
தனது வாழ்கையைத் திருத்தி அமைத்துக்கொள்வார்கள்
வீட்டில் பெரியவர்கள் பேசுவார்களே '' எல்லாம் கல்யாணம்
பண்ணினால் சரியாகிவிடும் '' என்று ..அது போன்று .
 
எல்லோரும் இளமை கடந்தே வருகிறார்கள் .
இந்த இளமைக்கே உண்டான துறு துறுப்பும்
ஆர்வமும் அலட்சியமும் கலந்ததே வாழ்க்கை
இதில் ஒன்றும் தவறில்லை .................

தவறுதான்!

தவறான அணுகுமுறையைத் தவறு இல்லை என்று சொன்னால்,
தவறான அணுகுமுறை, தவறு இல்லை என்று ஆகாது, நண்பரே!

பொதுவாழ்க்கைக்கு வரும் முன், தன் அறிவை மேம்படுத்தாதவர்,
பொதுவாழ்வில் எப்படிச் சிறக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

'இளமையில் கல்' என்பதை, இளமையில் கல்லால் அடிப்பதெனவும்,
இளமையில் 'கள்' எனவும் சிலர் புரிந்து கொள்வதால் வரும் வினை!

உரிய காலத்தில் செய்யாத எந்த நல்ல செயலும், அந்தச் செயலுக்கு
உரிய மதிப்பைப் பெற முடியாது என்பது, என் திண்ணமான எண்ணம்!

:drum:
 
இளமையில் கல்வி கல் மேல் எழுத்து.
முதுமையில் கல்வி நீர் மேல் எழுத்து.

கள் ஒரு நாளும் பாலாக மாறாது .
பதர் ஒருநாளும் நெல்லாக மாறாது.

கணக்குடன் பிணங்கியவர்களும்
சரித்திரத்தை ஒரு தரித்திரமாகவே

எண்ணி வெறுத்தவர்களும் இதை
அறியாததில் அதிசயம் இல்லையே !


 
இப்படியே அரை நிர்வாணப் பக்கிரியாக
தப்பாமல் bus கூரையின் மேல் ஆடினால்
:llama:

Physics பிச்சுக்கும், கணிதம் கடிக்கும்:croc:


மொத்தத்தில் எல்லாமே புட்டுக்கும்!
:bolt:
 
தவறுதான்!

தவறான அணுகுமுறையைத் தவறு இல்லை என்று சொன்னால்,
தவறான அணுகுமுறை, தவறு இல்லை என்று ஆகாது, நண்பரே!

பொதுவாழ்க்கைக்கு வரும் முன், தன் அறிவை மேம்படுத்தாதவர்,
பொதுவாழ்வில் எப்படிச் சிறக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

'இளமையில் கல்' என்பதை, இளமையில் கல்லால் அடிப்பதெனவும்,
இளமையில் 'கள்' எனவும் சிலர் புரிந்து கொள்வதால் வரும் வினை!

உரிய காலத்தில் செய்யாத எந்த நல்ல செயலும், அந்தச் செயலுக்கு
உரிய மதிப்பைப் பெற முடியாது என்பது, என் திண்ணமான எண்ணம்!

:drum:

அன்புள்ள ராஜி ராம்


நீங்கள் சொல்வதை வரிக்கு வரி
அப்படியே எற்றுக்கு கொள்ள என்னால்
முடியாது . மன்னிக்கவும். நான் சொல்வதையும்
உங்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது .

பள்ளி கல்லூரி நாட்களில் துடுக்குத்தனமாகவும்
சற்றே படிப்பில் கவனம் இல்லாமலும்
இருந்த மாணவர்கள் பின்னாட்களில் வாழ்கையில்
வெற்றி பெற்று இருக்கிறார்கள்( They are succeed in their life .
Say in an another word they are shining in the life)
வீரத்துறவி விவேகானந்தர் ஒருமுறை கூறினார்
'' நல்ல குமாஸ்தாக்களை உருவாக்கும் இந்த முறைக்
கல்வியால்
யாருக்கு என்ன லாபம்''? என்று.

வேண்டுமானால் நமது
MECHALEY'S (EDUCATION SYSTEM) 1835 மாற்றி
U S '' creative educational system பின்பற்றலாமே?

எனது மதிப்பிற்குரிய V.R. இதுபற்றி கட்டுரை
வரைந்தால்
மிகவும் நன்றாக இருக்கும்.

என்மீது உள்ள கோபமும் தீரும் .

சிவசண்முகம்
 
U S இன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே, பிற நாட்டு மேதாவிகள் என அறியீரோ?

சில படிக்காத மேதைகளையும், கல்வியில்லாது புகழ் அடைந்தோரையும் காரணம் காட்டி,

பல மாணவர்கள் சீர்கெட்டுப் போவதுதான், மன வேதனை அளிக்கிறது! இது நிஜமும்தான்!

:humble:
 
"Arise, Awake and stop not until your goal is reached!"

What WAS the goal Swami Vivekananda had in mind?

Indifference, Irresponsibility, Indecency and Idleness?
:mmph:

If 'Succees in life' means only earning more money, then I don't want

to talk to that person.

Even a decoit/ thief/politician/ beggar makes more money in life

than an educated man doing a honest job!!
 
மன வேதனை அளிக்கிறது!

U S இன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே, பிற நாட்டு மேதாவிகள் என அறியீரோ?

சில படிக்காத மேதைகளையும், கல்வியில்லாது புகழ் அடைந்தோரையும் காரணம் காட்டி,

பல மாணவர்கள் சீர்கெட்டுப் போவதுதான், மன வேதனை அளிக்கிறது! இது நிஜமும்தான்!

:humble:

Here i ment only success in their carriers.
I never quote ''only earning more money''
I dont know why my beloved mom using
the harsh words such as ''then I don't want
to talk to that person''.

U S is a land of settlers..

பல்வேறு சூழ்நிலையில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு குடியேறி உள்ளனர்.அந்தந்த நாட்டினருக்கு உண்டான கல்வி முறையில் கல்வி கற்றோர்களும் அங்கு வந்து வாழ்கிறார்கள் .
அவர்கள் பொதுவான , அதாவது அமெரிக்காவின் கல்விமுறையை ஏற்று மற்ற நாட்டினரைக் காட்டிலும் சிறப்பாகவே செயல்படுகின்றனர் பிரிட்டிஷ் oxford uny யை விட இன்று அவர்களின் Harvard Uny
முதலிடம் வகிக்கிறது..
 
I would be happy if this thread is left with only poems and comments on such poems. Let us not go further than that. Thank you for your cooperation.
 
I would be happy if this thread is left with only poems and comments on such poems. Let us not go further than that. Thank you for your cooperation.
Nice request Siva Sir! Actually, when I was about to post my poem from 'எண்ண அலைகள்'

in this, I saw your post.... Anyway, I wish to continue, so that peace will prevail!

:peace:
சினம் வேண்டாம்

சினம் கொள்ளுதல் என்பதை, எவர்
தினம் செய்தாலும், தீயதே! தனது

மனம் கெடுவது மட்டுமின்றி, பிறர்
மனம் கெடவும், வழி வகுக்கும் அது!

சினம் அதிகமானால், நினைப்பதும்
சுடும் சொற்களாகத் தோன்றிவிடும்.

கொதிக்கும் சொற்களே, வெளி வரும்;
கொதிக்கும் குருதியை, உடல் பெறும்!

சுற்றத்தின் குற்றம் காண வைக்கும்;
உற்றாரே இல்லாதும் செய்துவிடும்.

சேர்ந்தாரைக் கொல்லியாக இருக்கும்;
சோர்ந்து மனம் போகவும் வைக்கும்.

அருகில் வரவே அஞ்சவும் வைக்கும்;
எளிதில் போகாது, மிஞ்சியே நிற்கும்!

நல்ல இன்பம் இழந்து, சுற்றத்தையும்
அல்லல் படுத்தும், சினம் வேண்டாம்!

:nono:
 
அனுபவ சித்தன்

I would be happy if this thread is left with only poems and comments on such poems. Let us not go further than that. Thank you for your cooperation.

உணர்ச்சித் தொகுப்பை உண்மையாய்
இங்கு வடித்தவன் நீயே!
உலக வரலாறு புரிந்தவனே !
அதை இங்கு பதிந்தவனே.

ஊருக்குத் தான் உபதேசம்
எனக்கு மட்டும் இல்லை
என்றே நீ சொல்லாமல்
திறந்த புத்தகமாய் திரும்பிப்
பார்க்க வைத்தவன் நீயே !

வணிகவியல் தெரிந்தார்ப்போல் சில
விலங்கியல் உலவும் நாட்டில்
வாழ்வியலும் வாய்க்காது என்றே
உண்மை பகன்ற செம்மலே !

புள்ளியியல் புதிரை பள்ளியில்
படிக்காது தெள்ளிய அறிவால்
அனுபவ வாழ்வியல் பொருளாதார-
இலக்கணம் கண்ட சித்தனே !

ஹரிதாச சிவ பக்தனே !

நீவிர் வாழ்க பல்லாண்டு.
 
வாழும் முறை


குழந்தையாய் உலகிற்கு வந்தபோது நாம் அழுதோம்; பிறர் சிரித்தார்;
வாழும்போது நாம் சிரிப்பதாய் எண்ணி பிறரை அழ வைக்கிறோம்.
சிலசமயம் பிறரைச் சிரிக்க வைப்பதற்காக நாம் அழுகிறோம்.
இறக்கும்போது நாம் அழக்கூடும்; பிறர் சிரித்துவிடுவாரோ?

நீண்ட காலம் வாழ ஆசைப்படுகிறோம்;
சிறப்பாக வாழ ஆசைப்படுகிறோமா?
சுயநலத்தில் சுற்றி வருகிறோமே
பிறர் நலம் நோக்குதல் பாவமா?

ஒவ்வொருவரும் இறைவனின் வடிவம் என்றால்
பிறரைப் பழிக்கும் போது இறைவனை அல்லவா பழிக்கிறோம்?
பிறரைப் பணியும் போது இறைவனை அல்லவா பணிகிறோம்?
நாம் இறைவனைப் பழித்தல் உகந்ததா? பணிதல் உகந்ததா?

பிறரை எதிரியாய்ப் பார்ப்பதால் அந்த 'எதிரி'க்கு நஷ்டமில்லை
அவர் தரும் 'இன்னல்'களை ஒதுக்குவதால் நமக்கு நஷ்டமில்லை
தீய நினைவுகளைத் தேக்கி வைப்பதால் யாருக்கும் லாபமில்லை
வேண்டாத வாதத்தால் வருவது வீண் தொல்லை.

மனிதன், இறைவன் செய்த வீணை
இந்த நல்லதோர் வீணையை நலங்கெடப் புழுதியில் எறியலாகுமா?
நாம் சுரம் இசைப்போம்; பா சுரம் சமைப்போம்
படைத்தவனைப் பெருமை கொள்ளச் செய்வோம்!

This poem is inspired by Mahatma Gandhi’s quote: “It has always been a mystery to me how men can feel themselves honoured by the humiliation of their fellow beings”
 
வாழும் முறை
....................
நாம் சுரம் இசைப்போம்; பா சுரம் சமைப்போம்
படைத்தவனைப் பெருமை கொள்ளச் செய்வோம்!

This poem is inspired by Mahatma Gandhi’s quote: “It has always been a mystery to me how men can feel themselves honoured by the humiliation of their fellow beings”
Mahatma's quote in bigger font!

This poem is inspired by Mahatma Gandhi’s quote:

'It has always been a mystery to me how men can feel themselves honoured by the humiliation of their fellow beings'
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top