Dear Raji Ram
I used to wonder your ability to write poems at will, and it is not something which everyone can do it.
Recently i came across a reply given by one Thennammai Lakshmanan about writing poems:
கவிதை என்பது ஒரு சம்பவம் போல என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சி., துக்கம்., சோகம்., விரக்தி, வெறுப்பு., அசூயை., கோபம்., வீரம்., தன்னம்பிக்கை ., என எல்லா நிலைகளிலும் சில உணர்வுகள் கவிதைவரிகளாய்ப் பிரசவிக்கின்றன.
Her Kavithagal like yours are very simple;
1) முட்டையிடக்
கூடுகட்டும் பறவைகள்
வாழ்ந்த சுவடுகளைப்
பதித்து வைப்பதில்லை.
என்னுது என்னுதென்னும்
இறுக்கமில்லை.
கைவிட்டுப் போமோவென்ற
நடுக்கமில்லை.
என் செய்வோமென்ற
சிந்தனையில்லை.
அலகுகளால் உயிர்ப்பித்து
இறக்கைகளால்
பறக்கக் கற்பித்தபின்
விட்டு விடுதலையாகின்றன
ஒன்றிடமிருந்து ஒன்று..
2)கிளையோடும்
இலையோடும்
காற்றோடும் கலந்து
சிதறிக் கிடக்கும் சுள்ளிகளில்
வரலாறாய்க் கிடக்கிறது
வம்சம்பெருகிய காவியம்.2) கறுப்பென்றாலும்
சிவப்பென்றாலும்
வெள்ளையென்றாலும்
கொஞ்சம் பயமெனக்கு.
தினமும் மையிட்டுக் கொள்கிறேன்.
நெற்றி வகிட்டில் குங்குமம்.
வெள்ளி மிஞ்சியும் கூட.
பாசச் சந்தனமும்
விபூதியும் பற்றாகக் கூட.,
பச்சையமாய் சமைக்கிறேன்.
மஞ்சள் நிலவில்
அடர் நீல இரவில்
வண்ணங்கள் தெறிக்கும் கனவில்..
உறங்கும் குருவிதானென்றாலும்
விழிப்பு வந்ததும்
எட்டிய உயரம்வரை
பறக்க மறப்பதேயில்லை தினமும்
3)எளிய மனிதர்களும், ஊர்களும்.:-
எளிய ஊர்களைப் போலவே
இருக்கின்றார்கள்
எளிய மனிதர்களும்.
நதிக்கரையோர
சணல்படுதா குடிசைகள்,
புட்டாமா அடித்துப்
பொட்டுவைத்த குழந்தைகள்,
ஏதோ ஒரு போராட்டக்கல்
உடைத்த ஜன்னலுடன் பேருந்து,
புகையிலை வாடையுடன் வரும்
பழக்கூடைக்காரி,
வீசும் கொட்டைக்கோ பழத்துக்கோ
தோப்பிலிருந்து வால் தூக்கி
சலாமடிக்கும் அணில்கள்,
குழையக் குழையச் சேறோடு
மணக்கும் சம்பா வயல்கள்,
எளிய மனிதர்களைப் போலவே
காவி காட்டிச் சிரிக்கின்றன
எளிய ஊர்களும்..
Kannadasan Movie songs had wonderful meanings, very seldom we come across such great poets.
You are doing a great job, wish you to continue seeing Goodness in every thing!!