• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்- Part 1

Status
Not open for further replies.
இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்- Part 1

ganesa.jpg


Picture: Lord Ganesh
( முன்னர் ஏற்றப்பட்ட (1) 20,000 தமிழ் பழமொழிகள், (2) யானை பற்றிய 100 பழமொழிகள், (3) பழமொழிகளில் இந்துமதம் ஆகிய மூன்று கட்டுரைகளையும் (4) Amazing Collection of 20,000 Tamil Proverbs கட்டுரையும் காண்க ).
இந்து மதத்தின் மாபெரும் தத்துவங்களை, ஒரு சில சொற்களைக் கொண்டே பழமொழிகள் விளக்குகின்றன. இத்தகைய 14 பழமொழிகளை விளக்கி 2009ஆம் ஆண்டில் எழுதிய எனது கட்டுரை இலண்டன் தென் இந்திய சங்க தீபாவளி மலரிலும் பல பிளாக்குகளிலும் வெளியாகியது இப்போது மேலும் சில நூறு பழமொழிகளை மட்டும் பார்ப்போம்.
கங்கை நதி ,காசி பற்றி மட்டுமே பத்துப் பதினைந்து பழ மொழிகள் இருக்கின்றன. ராமனும் கண்ணனும், அரியும் சிவனும், கங்கையும் காசியும் சுவர்க்கமும் நரகமும், கோவிலும் சுவாமியும் தமிழர்கள் வாழ்வில் எப்படி இரண்டறக் கலந்திருக்கின்றன என்ற பேருண்மையை பழமொழிகள் பட்டவர்த்தனமாகப் பறை சாற்றுகின்றன.

பழமொழிகள்
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது
அரசன் அன்றேகொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
கல்லைக் கண்டால் நாயைக் காணும், நாயைக் கண்டால் கல்லைக் காணும் ( மரத்தை மறைத்தது மாமத யானை……….என்பதும் அதுவே)
லங்கணம் பரம ஔஷதம் (ருக்மாங்கனின் ஏகாதசி விரதக் கதை)
தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமா?
சட்டியில் இருந்தால் தானே அகப்பைஅயில் வரும் (கந்த சஷ்டி பற்றிய பழமொழி)

இது என்ன வேத வாக்கா?
அவன் சரியான பிரஹஸ்பதி (காலப்போக்கில் பொருள் மாறிய மொழி)
அவன் சரியான அசமஞ்சன் (புராணக் கதை)
இது என்ன பிரம்ம வித்தையா?
காலம்–கலி காலம், நாம் என்ன செய்ய?
கெடுவான் கேடு நினைப்பான் (விநாச காலே விபரீத புத்தி)
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி
இருக்குதே தண்ணீர் வண்டி, இல்லாவிட்டால் தம்பிரான் பதவி
என்ன ரொம்ப வேதாந்தம் பேசுகிறாய்?
அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனை பாடுவேனா?
அடியைப் பிடியடா, பாரத பட்டா
அவனின்றி ஒரு அணுவும் அசையாது (20)
பிள்ளையார் சுழி போட்டாயிற்று
பிள்ளையார் பிடிக்க குரங்கானது
உரு ஏறத் திரு ஏறும்
ஒன்றாகக் காண்பதே காட்சி
ஆருமில்லார்க்கு தெய்வமே துணை (அகதிக்குத் தெய்வமே துணை)
தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் (தனக்கும் மிஞ்சியதுதான் தானம்)
அரியும் சிவனும்
சிவ பூஜையில் கரடி புகுந்தது போல
சிவனொடுக்கும் தெய்வம் தேடினும் இல்லை (சிவாத் பரதரம் நாஸ்தி)
அரன் அதிகம் அரி அதிகம் என்போருக்கு பரகதி இல்லை (கம்பன்)
அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு
தோத்திரத்துக்கு திருவாசகம் சாத்திரத்துக்கு திருமந்திரம்
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
சித்தம் போக்கு சிவம் போக்கு, ஆண்டி போக்கும் அதே போக்கு
கல்லாடம் படித்தவனிடம் சொல்லாடாதே

அன்பே சிவம்
சிவத்தைப் பேணிற் தவத்திற்கழகு
சிவனே என்று கிட
சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கரும் மீனாட்சியும்
எறும்புக்கும் படி அளப்பான் ஈசன் (சிவநி ஆக்ஞாலேக சீம கறவது: தெலுங்கு)

பிச்சைச் சோற்றிற்குப் பிறப்பு இல்லை (40)
என் கடன் பணி செய்து கிடப்பதே (அப்பர்)
நீரில்லாத நெற்றி பாழ்; நெய் இல்லாத உண்டி பாழ்
சும்மா இருப்பதே சுகம் (சும்ம இரு, சொல்லற)
தருமம் தலை காக்கும்
வானத்துக்கு வால்மீகி போருக்கு வியாசர்
காணாமற் கோணாமற் கண்டு கொடு (முக்கால சந்தியா வந்தனம் செய்யும் நேரம் பற்றிய பழமொழி )
வயிறு நிறைந்தால் வாய் வாழ்த்தும் (அன்ன தானப் பெருமை)
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தது போல
வேலும் மயிலும்
வேலை வணங்குவதே எமக்கு வேலை (பாரதி)
வேலுண்டு வினை இல்லை; மயிலுண்டு பயமில்லை
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
குன்று தோராடும் குமரன் (50)
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வதாற்போல்
கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்
நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு
கடவுளை நம்பினார் கைவிடப் படார்
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போக
கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
பசித்திரு, தனித்திரு, விழித்திரு
நாலாம் பிறை பார்த்தவன் கதி நாய் பட்டபாடு தான்
ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண்பேச்சு
கருடா சவுக்கியமா என்றதாம் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு
கருடா சவுக்கியமா என்று கேட்டதற்கு அவரவர் இருக்கிற இடத்தில் இருந்தால் சவுக்கியம் என்றதாம்
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது
அவன் ஒரு ருத்திராட்சப் பூனை (65)
கோவிலோ கோவில்

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கோபுர தரிசனம் பாப விநாசம்
கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான்
கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள்
கோவிலை அடைத்துக் கொள்ளை இடுகிறவனா குருக்களுக்குத் தட்சினை கொடுப்பான்?
கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொள்ளை பார்த்துக் கும்பிடுகிறதா?
கோவில் மணியம் என்கிற பேர் இருந்தால் போதும்
கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா?
கோவில் விளங்கக் குடி விளங்கும்
கண்ட இடம் கைலாசம்
கண்ட கண்ட கோவில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டேன்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யறது
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது (கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
ஒரு மனப் படு, ஓதுவார்க்குதவு (80)
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
கங்கையும் காசியும்

கங்கா ஸ்நானம் துங்கா பானம்
கங்கைக்குப் போன கடாவின் கதை போல
கங்கை ஆடப் போன கடாவை கட்டி அழுதானாம்
கங்கையிலே படிந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது
கங்கையில் ஆடினாலும் கணமும் விடாமற் செய்த பாவம் தொலையாது
கங்கையிலே பிறந்த நத்தை சாலக்கிராமம் ஆகாது
கங்கையில் ஆடினாலும் பாவம் தீருமா?
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
வைகைக் கரைக்கு வார்த்தையும் கங்கைக் கரைக்குக் கீர்த்தியும்
கங்கையிலுள்ள மீன் எல்லாம் சொர்க்கத்துக்குப் போகாது (ரா.கி.பரமஹம்சர்
காசி இரண்டு எழுத்துத் தானே காண எத்தனை நாள் செல்லும்?
காசிக்குப் போயும் கரும தொலையவில்லை
காசிக்குப் போயும் மூடத் தவசி காலில் விழுகிறதா?
ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது
காசிக்குப் போனாலும் அகப்பை அரைக் காசு
காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை
காசிக்குப் போனேன் காவடி கொண்டு வந்தேன்
காசி முதல் ராமேசுவரம் பரியந்தம்
காசி முதல் ராமேசுவரம் வரையில் தெரிந்தவன் (100)
காசியில் இருந்தவன் கண்ணைக் குத்த காஞ்சீபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போனானாம்






 
I do not know how to convey my appreciation . It requires patience and perseverance to compile these

valuable quotes. Many thanks sir.

PC RAMABADRAN
 
Sir,
The quotes are good and it would be better to explain the philosophy behind these
proverbs. Stone and dog quote conveys - if you see the stone only , then you dont
see the dog and vice versa. This is conveyed by Saint Tirumoolar in his verse
of wood and elephant. That is , if you see the adhistanam you do not see the
aarOpitham.
 
Saint-poet Auvaiyar's saying Odhamal oru naalum refers to Veda adhyayanam.
Chant the vedas daily. This is what sri Adi sankara said in his parting advice to
his disciples - saadhana panchakam.
 
It is normal procedure to commence the rituals with puja to Lord Ganesa
and end it with puja to Lord Anjaneya - begin with pillaiyar and end with
Anjaneya. This is conveyed by the proverb -pillaiyar pidikka .......
 
dear swaminthan !
nice proverbs.
while the pandaram is starving for food ,the lingam wanted panjamirtham(pandaram pindaththukku azhugum pothu lingam panjamirthakku azhuthutham)
pasu mattai kontru seruppu dhanam panninar pola (like offering chappal killing the cow)
adi uthai pola annan thambi uthavamaataan (even your brothers can not help like beating and kicking)-some says it is explain the help of sri hanuman &garuda to sri RAMA
thiruvarooril theru ezhukka kumbakonathil varinthu kattiyathu pola .(getting ready in kumbakonam itself for the car festival of thiru varoor)
kozhi chollum kuti perumal (rumour telling small deity)-sri chandikeswarar is mentioned like this after seeing the arudtra dharishanam in Lalgudi
kandathe katchi kondathey kolam
guruvayurappan
 
This proves or at least indicates that reciting and listening of vedams was available to all.

obviously some sections of manusmrithi were ignored; as students leave out some portions of the syllabus while preparing for the exam with the full knowledge that the examiner too will omit those sections.

Saint-poet Auvaiyar's saying Odhamal oru naalum refers to Veda adhyayanam.
Chant the vedas daily. This is what sri Adi sankara said in his parting advice to
his disciples - saadhana panchakam.
 
Killing of cow and offering its skin as chappals as charity are two different acts
or karmas. One does not cancel out the other. You will have to suffer for killing the
cow and the charity does not nullify your sin.
 
Killing of cow and offering its skin as chappals as charity are two different acts
or karmas. One does not cancel out the other. You will have to suffer for killing the
cow and the charity does not nullify your sin.
dear N.R.Ranganathan sir !
you have rightly said what our elder said . it is not profit and loss a/c to tally . you have to under go the the pain /relief of papam (sin) and punniyam
guruvayurappan
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top