Quotable Quotes Part II

#1366. நவாக்கரி சக்கரத்துக்கு நிவேதனம்

ஏய்ந்த மர உரி தன்னில் எழுதி
வாய்ந்த இப்பெண் எண்பத்தொன்றில் நிரைத்தபின்
காய்ந்த ஆவி, நெய்யுள் கலந்து உடன் ஓமமும்
ஆந்தலத்து, ஆம்உயிர் ஆகுதி பண்ணுமே.


பொருத்தமான மரப் பட்டையில் எண்பத்தொரு அறைகளில் சக்தி பீசங்களை அடைக்க வேண்டும். பின்பு அவிசை நெய்யுடன் கலந்து ஹோமமும் ஆஹூதியும் செய்யவேண்டும்.

#1367. சிவனுடன் சேர வேண்டும்


பண்ணிய பொன்னைப் பரப்பு அற நீ பிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்த பின்
துண்ணென நேயநற் சேர்க்கலும் ஆமே.


சக்கரத்தில் அமைக்கப்பட்ட பொன் போன்ற சக்திதேவியை நீ சிக்கெனப் பிடித்துக் கொள். தியானம் செய்யத் தொடங்கிய நாள் முதலே இன்பம் உண்டாகும். வேள்விகளின் தலைவன் நான்முகனைச் சேர்ந்தபின் சிவபெருமானைச் சேர வேண்டும்.

#1368. நறுமணப் பொருட்கள் ஒன்பது


ஆகின்ற சந்தனங் குங்குமங் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகு நெய்
ஆகின்ற கற்பூரம் ஆகோ சனநீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே.


அரைக்கப்பட்ட சந்தனம், குங்குமப் பூ, கத்தூரி, சவ்வாது, புனுகு, நெய், பச்சைக் கற்பூரம், பசுவின் கோரோசனை, பன்னீர் என்ற ஒன்பது நறுமணப் பொருட்களையும் கலந்து சக்கரத்துக்குச் சார்த்த வேண்டும்.

#1369. தியானிக்கும் முறை


வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்,
கைச்சிறு கொங்கை கலந்துஎழு கன்னியைத்
தச்சு இதுவாகச் சமைந்த இம்மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

பொன் போன்ற சக்தியுடன் சாதகனைச் சேர்த்து வைக்கும் இந்தத் தவத்தை செய்வதற்கு , இளங் கொங்கைகள் உடைய வலைக் குமரியாக அவளை எண்ணி, நவாக்கரி மந்திரத்தை பல ஆயிரம் முறைகள் உருச் செய்ய வேண்டும்.

#1370. நவாக்கரி சக்தியின் ஆறு ஆயுதங்கள்


சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இரு மூன்றும் உள்ளது
பந்தமா சூலம் படை பாசம் வில்லம்பு
முந்த கிலீஎழ முன்னிருந்தாளே.


தந்தையும் தாயுமாக நம் உள்ளத்தில் ஒளி வடிவாக உள்ள நவாக்கரி சக்திக்கு ஆறு கரங்கள். அவற்றில் அவள் மழு, சூலம், அங்குசம், பாசம், வில், அம்பு என்ற ஆறு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள். கிலீம் என்ற பீசத்தை உடைய தேவி முதலில் சாதகன் முன்னால் வெளிப்படுவாள்.
 
These poems must have appeared Here yesterday!
Sorry for the oversight and THE posting of the
next 5 POEMS (1365 TO 1370) yesterday.

#1361. அவளே அனைத்தும் ஆனவள்

தானே வெளி என எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளி அது ஆனவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்;
தானே அனைத்து உள அண்ட சகலமே.


சக்தி தேவி நுண்ணிய வானத்தைப் போல எங்கும் நீக்கமற நிறைந்திருப்பாள். அவளே பரமாகாசம் ஆகி நிற்பாள். அவளே அனைத்துப் பொருட்களையும் ஆக்குபவள், அழிப்பவள், தனக்குள் அடக்குபவள். எல்லா அண்டங்களாகவும் காட்சி தருபவள் சக்தி தேவியே ஆவாள்.

#1362. சிரசின் மேல் விளங்குவாள் சக்தி


அண்டத்தினுள்ளே அளப்பரிது ஆனவள்
பிண்டதினுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும்
கண்டத்தின் நின்ற கலப்பு அறியார்களே.


அனைத்து அண்டங்களிலும் அளப்பதற்கு அறியவளாக இருப்பவள் இவள். பிண்டம் ஆகிய சீவனின் உடலில் ஞானம் விளங்கும் பெருவெளியில் இருப்பவள் இவள். குண்டத்தில் செய்யும் ஓமங்கள் மூலம் பல நன்மைகள் பெறுபவர்களும் கண்டத்துக்கு மேலே இவள் கலந்து உறைவதை அறியாது இருக்கின்றார்களே!

#1363. நாதத்தை அறியாது நலிந்தவர்


கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம்
உலப்பு அறியார் உடலோடு உயிர் தன்னைச்
சிலப்பு அறியார், சில தேவரை நாடித்
தலைப் பறியாகச் சமைந்தவர் தானே.


கடல் சூழ்ந்த உலகம் எங்கும் சக்தி தேவி கலந்திருப்பதை சிலர் அறியார்.
உடலுடன் கூடிய உயிர் ஒரு நாள் உடலை விட்டுப் பிரிந்துவிடும் என்பதை அவர்கள் அறியார். சிறு சிறு தெய்வங்களை நாடியதால் அவர்கள் நாதத்தை அறியார். இங்ஙனம் அவர்கள் நடந்து கொள்வதற்குக் காரணம் அவர்களின் தலையெழுத்து

#1364. நவாக்கரி சக்கரத்தின் அமைப்பு


தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின்
மானே மதி வரை பத்து இட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில்
தானே கலந்த அறை எண்பத்தொன்றுமே.


மானே! தானே தோன்றிய இந்தச் சக்கரத்தின் அமைப்பு இதுவே. குறுக்கும் நெடுக்குமாகப் பத்துப் பத்துக் கோடுகள் கீறி வரைக.தேனே! இந்த ரேகைகளுக்குள் ஒன்பது ஒன்பது என எண்பத்தொரு அறைகள் அமையும்.

#1365. சக்கரத்தில் அமையும் நிறங்கள்


ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்,
வென்றிகொள் மேனி மதி வட்டம் பொன்மையாம்;
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்,
என்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே


கட்டங்களுக்கு வெளியான மதி மண்டலம் பொன்னிறம் கொண்டது. கட்டங்களில் அமைந்துள்ள கீற்றுகள் செந்நிறம் கொண்டவை. சக்தி தேவியின் எழுத்துக்கள் அடைக்கும் கட்டங்கள் பச்சை நிறம் கொண்டவை.
 
For the sake of continuity here are the next 5 poems.

#1366. நவாக்கரி சக்கரத்துக்கு நிவேதனம்

ஏய்ந்த மர உரி தன்னில் எழுதி
வாய்ந்த இப்பெண் எண்பத்தொன்றில் நிரைத்தபின்
காய்ந்த ஆவி, நெய்யுள் கலந்து உடன் ஓமமும்
ஆந்தலத்து, ஆம்உயிர் ஆகுதி பண்ணுமே.


பொருத்தமான மரப் பட்டையில் எண்பத்தொரு அறைகளில் சக்தி பீசங்களை அடைக்க வேண்டும். பின்பு அவிசை நெய்யுடன் கலந்து ஹோமமும் ஆஹூதியும் செய்யவேண்டும்.

#1367. சிவனுடன் சேர வேண்டும்


பண்ணிய பொன்னைப் பரப்பு அற நீ பிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்த பின்
துண்ணென நேயநற் சேர்க்கலும் ஆமே.


சக்கரத்தில் அமைக்கப்பட்ட பொன் போன்ற சக்திதேவியை நீ சிக்கெனப் பிடித்துக் கொள். தியானம் செய்யத் தொடங்கிய நாள் முதலே இன்பம் உண்டாகும். வேள்விகளின் தலைவன் நான்முகனைச் சேர்ந்தபின் சிவபெருமானைச் சேர வேண்டும்.

#1368. நறுமணப் பொருட்கள் ஒன்பது


ஆகின்ற சந்தனங் குங்குமங் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகு நெய்
ஆகின்ற கற்பூரம் ஆகோ சனநீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே.


அரைக்கப்பட்ட சந்தனம், குங்குமப் பூ, கத்தூரி, சவ்வாது, புனுகு, நெய், பச்சைக் கற்பூரம், பசுவின் கோரோசனை, பன்னீர் என்ற ஒன்பது நறுமணப் பொருட்களையும் கலந்து சக்கரத்துக்குச் சார்த்த வேண்டும்.

#1369. தியானிக்கும் முறை


வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்,
கைச்சிறு கொங்கை கலந்துஎழு கன்னியைத்
தச்சு இதுவாகச் சமைந்த இம்மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

பொன் போன்ற சக்தியுடன் சாதகனைச் சேர்த்து வைக்கும் இந்தத் தவத்தை செய்வதற்கு , இளங் கொங்கைகள் உடைய வலைக் குமரியாக அவளை எண்ணி, நவாக்கரி மந்திரத்தை பல ஆயிரம் முறைகள் உருச் செய்ய வேண்டும்.

#1370. நவாக்கரி சக்தியின் ஆறு ஆயுதங்கள்


சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இரு மூன்றும் உள்ளது
பந்தமா சூலம் படை பாசம் வில்லம்பு
முந்த கிலீஎழ முன்னிருந்தாளே.


தந்தையும் தாயுமாக நம் உள்ளத்தில் ஒளி வடிவாக உள்ள நவாக்கரி சக்திக்கு ஆறு கரங்கள். அவற்றில் அவள் மழு, சூலம், அங்குசம், பாசம், வில், அம்பு என்ற ஆறு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள். கிலீம் என்ற பீசத்தை உடைய தேவி முதலில் சாதகன் முன்னால் வெளிப்படுவாள்.
 
#1371 to #1375

#1371. அறுபத்து நான்கு சக்தியர்

இருந்தனர் சக்தியர் அறுபத்து நால்வர்;

இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்;
இருந்தனள் சூழ எதிர் சக்கரத்தே
இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே.

அன்னையைச் சுற்றி அறுபத்து நான்கு சக்தியர் இருப்பார். வாமை, சேட்டை, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்ரதமனி, சர்வபூத தமனி என்ற எட்டு கன்னிரும் இருப்பர். அவர்கள் தங்கள் இரு கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி இருப்பர். இந்த யோகினி சக்தியர் அனைவரும் சக்கரத்தைப் பார்த்த வண்ணம் அதைச் சூழ்ந்து இருப்பர்.

#1372. சக்தியின் வடிவழகு


கொண்ட கனகம், குழை, முடி, ஆடையாய்க்

கண்ட இம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
பண்டு அமர் சோதிப் படர் இதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி, உணர வல்லார்க்கே.

பொற் காதணிகள் அணிந்து, பொன் முடி விளங்க, பொன்னே ஆடையாக உடையவள் அன்னை. அக்கினியே இவள் திருமேனி. முன்பிருந்தே பேரொளியைத் தன் இருப்பிடமாகக் கொண்டு வசிப்பவள் இவள். இந்தக் கோலத்தில் இவளை தியானிப்பவர்களுக்கு அன்னை இவ்விதமான வடிவழகுடன் வெளிப்பட்டு அருள் புரிவாள்.

#1373. ஊர்த்துவ சகசிரதளம் அமையும்


உணர்ந்து இருந்து, உள்ளே ஒருத்தியை நோக்கில்

கலந்திருந்து எங்கும் கருணை பொழியும்,
மணந்து எழும் ஓசை ஒளி அது காணும்
தணந்து ஏழு சகரம் தான் தருவாளே.

ஒப்பரும் மிக்காரும் இல்லாத சக்தியை நன்கு அறிந்து கொண்டு அவளை தரிசனம் செய்தால், அவள் பார்க்கும் இடம் எல்லாம் நீக்கமற நிறைந்து நமக்கு அருள் புரிவாள். அதன் பின் நாதமும் ஒளியும் ஆகிய, எங்கும் கலந்துள்ள, பிரணவம் தோன்றும். உடலைத் தாண்டிய மேல் நோக்கிய ஊர்த்துவ சகசிர தளம் அமையும்.

#1374. ஞானமும், வீடுபேறும் தரும்


தருவழி யாகிய தத்துவ ஞானம்

குருவழி யாகும் குணங்களுள் நின்று
கருவழி யாகும் கணக்கை அறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே.

குருமண்டலத்தில் இருந்து கொண்டு, பேரொளி வடிவினளாகிய சக்தி, உண்மையான தத்துவ ஞானத்தை அன்பருக்கு அருள்வாள். அவர்களிடம் தெய்வ குணங்கள் ஓங்கி விளங்கச் செய்வாள். அவர்கள் கருவில் வாசம் செய்து மீண்டும் உலகில் பிறவி எடுக்கும் செயலை நீக்குவாள். அவர்களுக்கு பெருநெறியாகிய வீடு பேற்றினைத் தருவாள்.

#1375. பாரொளியாகப் பரவி நிற்பாள்


பேரொளி ஆய பெரிய பெருஞ்சுடர்

சீரொளி யாகித் திகழ்தரு நாயகி,
கார்ஒளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பார்ஒளி யாகிப் பரந்து நின்றாளே.

பேரொளியும், பெருஞ்சுடரும் ஆகி ஒளிருபவள் தேவி. சீரோளியாகித் திகழும் தனிநாயகி. காரொளி போன்ற கன்னியான அவள், பொன்னிறத்துடன் பூமித் தத்துவத்தின் ஒளியாகப் பாரெங்கும் பரவி நின்றாள்.
 
#1376 to #1380

#1376. தேவியின் வடிவழகு

பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி,
பரிந்தருள் கொங்கைகள் முத்துஆர் பவளம்
இருந்தநல் லாடை மணி பொதிந் தன்றே.


மேலே தூக்கிய இரு கரங்களில் சக்தி தேவி இரு தாமரை மலர்களை ஏந்தி இருப்பாள். குவிந்த இரு தளிர்க் கரங்களில் அபயமும், வரதமும் அளிப்பாள். தனங்கள் மேல் முத்து மாலைகளும், பவழ மாலைகளும் புரளும். நல்ல மணிகள் பதித்த ஆடைகள் அணிந்திருப்பாள்.

#1377. பணிவோர்க்குப் பரகதி தருவாள்


மணிமுடி, பாதம் சிலம்பு அணி மங்கை
அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்அருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே?


சக்தி தேவி தன் தலையில் அழகிய மணிமுடி தரித்திருப்பாள். பாதங்களில் சிலம்பு அணிந்திருப்பாள். அவளைத் தவிர அருள் வழங்குவதற்கு வேறு எவரும் இல்லை. புலன்களின் வழியே போகாமல், அவற்றை அடக்கி ஆள்பவர்களின் மனத்தில், இவள் அருள் புரிந்து எழுந்தருள்வாள். தன் அன்பர்களுக்குப் பரகதி தருவாள்.

#1378. சக்தியர் புடை சூழ விளங்குவாள்


பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிக ளப்படி சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவ ரேத்தும் சிறீதன மாமே.


நவாக்கரிச் சக்கரத்தைச் சூழ்ந்து உள்முகமாக மறைந்து உறைவர் அறுபது சக்தியரும் எட்டுக் கன்னியரும். அவர்களின் நடுவே, இரு கரங்களிலும் மலர்களை ஏந்தி, ‘ஸ்ரீம்’ என்னும் பீசத்துக்கு உரிய, செல்வத்தின் அதிபதியாகச் சக்தி தேவி விளங்குவாள்.

#1379. சிவசூரியனைச் சேரலாம்


தனமது வாகிய தையலை நோக்கி
மனமது வோடி மரிக்கிலோ ராண்டிற்
கனமவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகர னாரிட செய்திய தாமே.

செல்வத்தின் நாயகியாகிய தேவியை இங்கனம் உள்ளத்தில் நிறுத்தித் தியானிக்க வேண்டும். உள்ளம் வெளியுலகை நோக்கி ஓடாமல் இருந்தால், ஓராண்டில் ஆசைகள் அறவே அழிந்து மனச் சுமை விலகிப் போகும். கருதியவை கைக் கூடும், சிவ சூரியனிடம் சென்று பொருந்த இயலும்.

#1380. ஒளி மண்டலம் ஆகும்


ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி ஆய மலரது ஆய்,
போகின்ற பூரணமாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே.


மூலாதாரத்தில் எழும் முழு மலருக்கு நான்கு இதழ்கள். அதில் ஏழு பேரொளி உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து செல்லும் போது பூரணமாகி விடும். அப்போது மூலாதாரம் முதல் துவாதசாந்தம் வரை ஒளி மண்டலமாக விளங்கும்.
 
#1381. சக்திகளின் நடுவே வீற்றிருப்பாள்

ஆகின்ற மண்டலத்துள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத் தறுவகை ஆனவள்
ஆகின்ற ஐம்பத் தறு சக்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத் தறு வகை சூழவே.


இந்த சோதி மண்டலத்தில் விருப்பத்துடன் இருப்பவள் சக்தி தேவி. உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், வித்து எழுத்துக்கள் என்ற ஐம்பத்தாறு எழுத்துக்களை இயக்கும் ஐம்பத்தாறு சக்திகளின் நடுவே அவள் வீற்றிருப்பாள்.

#1382. சக்தியின் எழில்


சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதமாய்
ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கை அவை தார் கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.


அடி முதல் முடி வரை சக்தி ஓர் ஒளிப் பிழம்பாகக் காட்சி தருவாள். அவள் திருமேனி பெரிய முத்தைப் போல விளங்கும். அவள் அழகிய கரங்கள் இரண்டில் மஞ்சள் வரையுடைய பைங்கிளியையும் ஞான முத்திரையையும் ஏந்தி இருப்பாள். மேலே தூக்கிய இரு கரங்களில் பாசமும், அங்குசமும் ஏந்தி இருப்பாள்.

#1383. கண்ணுதல் ஆகிவிடலாம்


பாசம தாகிய வேரை அறுத்திட்டு
நேசம தாக நினைந்திரு மும்மளே
நாசம தெல்லா நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுத லாகுமே.


சக்தி தேவியின் நாதமாகிய ஞான முத்திரையை உணருங்கள். பாசமாகிய வேரை அறுத்து விடுங்கள். இடையறாது மனதில் சத்தியை நினைத்த வண்ணமே இருங்கள். இங்கனம் செய்தால் ஐந்தாண்டுகளில் உள்ள கேடுகள் எல்லாம் அகன்றுவிடும். அதன் பின்னர் சாதனையாளன் மண்ணுலகத்துக்கு மேல் அமர்ந்துள்ள கண்ணுதல் ஆகி விடலாம்.

#1384. சக்தி மண்டலம் அமையும்


கண்ணுடை நாயகி தன்அருள் ஆம்வழி
பண்உறு நாதம் பகை அற நின்றிடில்,
விண்அமர் சோதி விளங்க ஹிரீங்காரம்
மண்உடை நாயகி மண்டலம் ஆகுமே.


முக்கண்களை உடைய நாயகியின் அருளைப் பெறும் வழி இதுவே. தடையில்லாத நாதம் தனக்குள்ளே அமையும் என்றால், வான மண்டலத்தில் உள்ள பேரொளி விளங்கும் வண்ணம் ஹ்ரீம் என்னும் பீசத்துக்கு உரிய சக்தியின் மண்டலம் அமையும்.

ஹ்ரீம் என்பது சக்தி மண்டலத்தின் முடிவு. இதற்கு அப்பால் நாதாந்தம் தோன்றும். நாத தரிசனம் பெற்றவருக்கு சக்தி மண்டலம் அமையும்


#1385. ஆதாரங்கள் ஒரே வழியை அடையும்


மண்டலத்துள்ளே மலர்ந்து எழு தீபத்தைக்
கண்டு, அகத்துள்ளே கருதி இருந்திடும்
விண்டகத்துள்ளே விளங்கி வருவதால்
தண்டகத்துள் அவை தாங்கலும் ஆமே.

ஹ்ரீங்கார மண்டலத்தில் எழும் பேரொளியை மனத்தில் நினைவில் நிறுத்துங்கள். அது மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி உடலின் உள்ளே எழும். அப்போது வீணாத் தண்டில் தொடர்பு கொண்ட ஆறு ஆதாரங்களும் ஒரே வழியை அடைந்து தமக்குள் ஒருமைப்பாட்டை அடையும்.
 
#1386. நாதம் வன்மையுடன் மேலெழும்

தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து
ஓங்கி எழும் கலைக்கு உள்ளுணர்வு ஆனவள்
ஏங்க வரும் பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆமே.


நாபிக் கமலத்தில் பிரணவம் ஓங்கி மேல் நோக்கி எழும். அதன் உள்ளுணர்வாக உள்ளவள் சக்தி. வருத்தம் தரும் பிறவியை நீக்கிவிட்டால், அதுவரையில் அடங்கி இருந்த நாதம், மிகுந்த வலிமையுடன் ஓங்கி மேலே எழுந்து விளங்கும்.

#1387. உயிர்களின் தலைவி மனோன்மணி


நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தாள்
ஆவுக்கு நாயகி யங்கமர்ந் தாளே.


வாகீசுவரியாக நல்ல அணிமணிகளை அணிந்திருப்பாள். திருமகளாகப் பொன் முடியும் பொன் ஆடையும் கொண்டிருப்பாள். கலைமகளாகப் பா இயற்றும் ஆற்றலை அருளி வெண்ணிற ஒளியில் விளங்குவாள் உயிர்களின் தலைவியாக மனோன்மணி சகசிரதளத்தில் எழுந்தருளுவாள்.

#1388. காரணியைக் காணலாம்


அன்றுஇரு கையில் அளந்த பொருள்முறை
இன்று இரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்று அது காணும் வழிஅது வாகவே
கண்டு அங்கு இருந்தஅக் காரணி காணுமே.


சக்தி வழிபாட்டுக்கு முன்பு இடைகலை, பிங்கலை வழியே வெளிச் சென்று கொண்டிருந்தது உயிர் வளியின் இயக்கம். சக்தியை வழிபட்ட பிறகு, வெண்ணிற அமுத கலசங்களாகப் பொன்னம்பலத்தைத் தரிசிக்கும் வழியாக ஆனது. அதை அறிந்து கொண்டு அங்கு இருப்பவர் தத்துவங்களை இயக்குகின்ற சக்தி தேவியைக் காணலாம்.

#1389. தன் அருளாகி நிற்பாள்


காரணி சத்திக ளைம்பத் திரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
காரணி சக்கரத்துள்ளே கரந்தெங்கும்
காரணி தன்னரு ளாகி நின்றாளே.

காரணிகளாகிய எழுத்துச் சக்திகள் ஐம்பத்து இரண்டு. காரணியாக இருந்து அவற்றை இயக்குபவர் ஐம்பத்து இருவர். இவ்வாறு காரணி பொன்னம்பலத்தில் வெளிப்படுவாள். மற்ற தத்துவங்களில் மறைந்து உறைவாள். தன் அருளால் அவள் தன் அன்பர்களுக்கு வெளிப்படுவாள்.

#1390. மன்றிலாடும் மணி காணும்


நின்றவிச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டவிவ் வன்னி கலந்திடு மோராண்டிற்
கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்
மன்றி லாடு மணியது காணுமே.


காரணியாகிய இந்த சக்தி சகசிரதளத்தில் நிலை பெற்றிருக்கும் போது ஓராண்டு காலம் பயிற்சி செய்ய வேண்டும். அப்போது அந்த சக்தி நம்மை விட்டு விலகிச் செல்லாமல் நம்முடனே இருப்பாள். மேற்கொண்ட விரதம் பங்கம் ஆகாமல் இருந்தால் அதன் பின்னர் மன்றில் ஆடும் மணியினைக் காண இயலும்.
 
#1391. மனத்தில் இனிது இருந்தாள்

கண்ட விச் சத்தி யிருதய பங்கயம்
கொண்டவித் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை அறுத்திட
இன்றென் மனத்து ளினிதிருந் தாளே.


அன்பர்களின் மனம் உலகப் பொருட்களுடன் பொருந்தி இருக்கும் போது சக்தி தேவி இதயத் தாமரையில் இருந்து வருவாள். உலகப் பொருட்களுடன் தொடர்பினை விலக்கி விட்டு; உலக காரணமாகிய நாதம், விந்து இவற்றுடன் அன்பரின் சித்தம் பொருந்தும் போது; தேவி சீவன், அதன் உடல் இவற்றின் மீது இருந்து வந்த வாயுவின் கட்டினை நீக்கி விடுவாள். சீவனின் மனதில் இன்பம் பெருக்குபவளாக ஆகி விடுவாள்.

#1392. தேவியின் தோற்றம்


இருந்த இச்சத்தி இரு நாலு கையில்
பரந்த இப் பூங்கிளி, பாசம், மழு வாள்
கரந்திடு கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு
குரந்தங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே.


இந்த சக்தி தன் எட்டுக் கரங்களில் விரிந்த மலர், கிளி, பாசம், மழு, வாள், கேடயம், வில், அம்பு என்னும் எட்டு பொருட்களைத் தங்கி இருப்பாள். ஆரவாரம் செய்த வண்ணம் தன் கூத்தையும் விருப்பத்துடன் புரிந்தாள்.

#1393. பச்சை நிறம் அவள் மேனி


உகந்தனள் பொன்முடி முத்தாரமாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
தழைந்தங் கிருந்தவள் தான் பச்சையாமே
.

சக்தி தேவி பொன் முடியையும், முத்து மாலைகளையும் மிகவும் விரும்புவாள். பவழ மாலை அணிந்து கொண்டு, செம்பட்டு ஆடையை உடுத்துவாள். மலர்ந்து எழும் கொங்கைகளில் அவள் மணிகள் பதித்த கச்சையை அணிந்திருப்பாள். விரும்பி அன்பர் உள்ளத்தில் உறையும் அந்தத் தேவியின் நிறம் பச்சை.

#1394. பாங்கிமார் நாற்பத்தெண்மர்


பச்சை யிவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டு
கொச்சை யாரெண்மர்கள் கூடி வருதலால்
கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச இடைச்சி இனிதிருந் தாளே.


பச்சை நிறம் கொண்ட இந்தத் தேவிக்குப் பாங்கிமார் நாற்பது எட்டுப் பெண்கள். எப்போதும் கூடவே இருக்கும் எட்டுத் தோழியர் இனிய மழலையில் மிழற்றுவர். எனவே இரு புறங்களிலும் காவல் உடையவளாகக் கச்சணிந்த தேவி மெலிந்த இடையுடன் இனிதாக அமர்ந்திருப்பாள்.

#1395. பரந்தெழு விண்ணில்!


தாளதின் உள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்துகொள் என்று
மாலது வாக வழிபாடு செய்து நீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.


மூலாதாரத்தில் இருக்கும் சக்தி பேரொளி வடிவானவள். அவளைச் ” சுழுமுனை வழியே மேலே சென்று சிவனுடன் கலந்து கொள்!” என்னும் போது அவள் விருப்பமும் அதுவே ஆகும். மூலாதார வாயுவை மேல் நோக்கிச் செலுத்தினால் காதலனைக் கூடச் செல்லும் காதலியைப் போல நீயும் விண்ணில் பரந்தெழ இயலும்.
 
#1396. சந்திர மண்டலம் தழைக்கும்

விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்
கண்ணமர் கூபம் கலந்து வருதலால்
பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது
தன்னமர் கூபம் தழைத்தது காணுமே.


நாபிக்கும் இருதயத்துக்கும் இடையே உள்ளான் கதிரவன். அவன் கண்ணில் விளங்கும் சந்திரனுடன் சென்று சேர்ந்தால் ஞானசக்தி தரும் ஞானக் கதிரவன் ஆகிவிடுவான். இது சந்திர மண்டலம் விரிவடைவதைக் காட்டுகின்றது.

#1397. சூலம் பாசத்தை அறுக்கும்

கூபத்துச் சத்தி குளிர் முகம் பத்துள
தாபத்து சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைக ளடைந்தன நாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.


விழிகளுக்கு மேலாக விளங்குகின்ற சக்தி தேவிக்கு பத்து திசைகளே பத்து முகங்கள். தாபத்தை உண்டாக்கும் கதிரவன் தன்னிலையை விட்டு வெளியேறி சந்திர மண்டலத்தில் மெல்ல அடங்குவான். அப்போது ஆபத்தைச் செய்கின்றதும், மேலும் கீழுமாக ஓடுகின்றதும் ஆகிய பத்து நாடிகள் செயல் அடங்கும். சாதகன் பாசத்தினை அறுக்க, முத்தலைச் சூலம் போன்ற சுழுமுனையை சக்தி நன்கு விளங்கச் செய்வாள்.

#1398. தேவியின் கரங்களில் உள்ளவை


சூலந்தண் டொள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேலம்பு தமருக மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக் கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.


சூலம், தண்டு, வாள், பறை, ஒளிரும் ஞான வடிவானவேல், அம்பு, உடுக்கை, கிளி, வில், காலம், பூ, பாசம், மழு, கத்தி, இவற்றுடன் சங்கு, அபயம், வரதம் விளங்குகின்ற தேவியின் கரங்களைத் தியானிப்பாய்.

#1399. எண்ணங்களைக் கடந்து நிற்பாள்


எண்அமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண அமர் கன்னிகள் நாற்பது நால்வராம்
எண்ணிய பூவிதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே.


சாதகனின் எண்ணத்தில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்து இருக்கும் சக்தியர் நாற்பத்து நால்வர். அவர்களுடன் அமர்ந்திருக்கும் தோழியரும் நாற்பது நால்வர் ஆவர். சகசிர தளத்தில் இருக்கும் சக்தி தேவி, சாதகன் உலகத்தைப் பற்றிய எண்ணங்களைக் கடந்து நிற்கும்போது சாதகனுக்கு நன்கு விளங்கும்படி நின்றாள்.

#1400. வாலை, குமரி, குண்டலினி, பராசக்தியே!


கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தஅணி முத்து, பவளம்கச்சு ஆகப்
படர்ந்த அல்குல் பட்டாடை, பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்து நின்றாளே.


உலக எண்ணங்களைக் கடந்து நிற்கின்ற தேவி; பொன் முடி, முத்துக்களும், பவழங்களும் விரவிய கச்சு, பட்டாடைகள், சிலம்பு இவற்றை அணிந்து வாலைப் பெண் வடிவில் வீற்றிருந்தாள்.
 
#1401. மெய்யறிவு பிறக்கும்

நின்ற இச்சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தான்ஆகிப்
பண்டைய ஆனின் பகட்டை அறுத்திட
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே.


இவ்வாறு வீற்றிருக்கும் சக்தி புருவ மத்தியில், இடையீடு இல்லாமல், அணிமா முதலிய எட்டு சத்திகள் ஆவாள். முன்பு கற்றிருந்த சாத்திர அறிவினை அகற்றி விடுவாள். அவள் பேரொளியை உணர்ந்தவருக்கு மெய்யறிவு பிறக்கும்.

#1402. சதாசிவ நாயகியின் வடிவம்


உண்டு ஓர் அதோ முகம், உத்தம மானது
கண்ட இச்சக்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம் ஐந்து, கூறும் கரங்களும்
ஒன்றுஇரண் டாகவே மூன்று நால் ஆனதே.


கீழ் நோக்கிய சகசிர தளத்தில் இருப்பவள் சதாசிவ நாயகியாகிய மனோன்மணி. இவள் நாயகனைப் போலவே இவளுக்கும் முகங்கள் ஐந்தும் கரங்கள் பத்தும் உள்ளன.

#1403. சதாசிவ நாயகியின் வடிவழகு


நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கண்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே.


நன்மணியுடன் சூலம், கபாலம், கிளி, பன்மணிகளை உடைய பாம்பு, மழு,
கத்தி, மாணிக்கம் போன்று சிவந்து ஒளிரும் தாமரை, உடுக்கை இவற்றை அவள் தன் கரங்களில் கொண்டுள்ளாள். பொன்னும் மணியும் பூண்டுள்ளாள்.

#1404. நாற்பது சக்தியர் நடுவே பராசக்தி


பூசனை சத்திகள் எண்ஐவர் சூழவே
நேசவள் கண்ணிகள் நாற்பது நேரதாய்க்
காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசு அடையாமல் மகிழ்ந்திருந் தார்களே.

தன்னைப் பூசிக்கும் நாற்பது சக்தியரும் தன்னைச் சூழ்ந்திருக்க, சீவனின் மீது நேசம் கொண்ட பராசக்தி அந்த நாற்பது கன்னியருக்கு நேராகச் சீவனின் உடலில் உள்ள சகசிர தளத்தில் கலந்திருப்பாள். அவர்கள் அனைவரும் எந்தக் குற்றமும் சராதபடி மகிழ்ச்சியுடன் அங்கே வீற்றிருபார்கள்.

ஸ்ரீ சக்கரத்தில் மொத்தம் நாற்பது மூன்று முக்கோணங்கள் உள்ளன. நடுவில் உள்ள மூன்று முக்கோணங்கள் நீங்கலாக மீதம் நாற்பது முக்கோணங்கள் உள்ளன. அவற்றில் இந்த நாற்பது சக்தியர் வீற்றிருப்பர்.


#1405. பராசக்தி வெளிப்படுவாள்


தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியைப்
பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட
வேர் அது ஒன்றி நின்று எண்ணும் மனோமயம்
கார் அது போலக் கலந்து எழு மண்ணிலே.


பிரணவத்துள் ஒரு பேரொளி விளங்கும். சுமையான உடலுள் அது மேல் நோக்கி எழும். எழுந்து சீவனின் உடலைக் கடக்கும். தனக்கு ஆதாரம் அதுவே என்பதை சீவன் உணரவேண்டும். அந்தப் பிரணவத்தில் மனோலயம் அடைய வேண்டும். இதைச் செய்யும் வல்லமை இருந்தால், நீரைப் பருகிவிட்டு மண்ணிலிருந்து மேலெழும் கார் மேகம் போலப் பராசக்தி அவர் தலையில் வெளிப்படுவாள்.
 
#1406 to #1410

#1406. விந்து நாதங்களாக வெளிப்படும் தேவி

மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நாம என்று
கண்ணில் எழுந்தது காண்பரிது அன்று கொல்
கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே.


அகார, உகாரங்கள் சுவாதிட்டனச் சக்கரத்தில் நிலை கொண்டுள்ளன. இவை சகசிர தளத்தை அடையும் போது, அகக் கண்களுக்குப் புலப்படும் வண்ணம் விந்து நாதங்களாக மாறிச் ‘சிவாயநம’ என்று வெளிப்படும். இது காண்பதற்கு அரிய காட்சி அன்று. இது இங்ஙனம் எழுவது சாதகனைத் தன் திருவடியில் வைத்துக் கொள்ளும் பொருட்டே ஆகும்.

#1407. ஒளியாக விளங்குவாள்


என்று அங்கு இருந்த அமுதக் கலையிடைச்
சென்று அங்கு இருந்த அமுதபயோதரி
கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண்ணடை
கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே.


சந்திர கலையிடை அமுதம் விளங்கும். பராசக்தி அதைத் தன் அழகிய கொங்கைகளில் ஏந்தி அமுத பயோதரி ஆவாள். அவள் சுவாதிட்டானத்தில் செயல்படும் சுக்கிலத்தையும், சுரோணிதத்தையும் இடைகலை, பிங்கலைகளின் உதவியினால் அக்கினிக் கண்டத்துக்குக் கொண்டு வந்து கொண்டு அங்கு அமுத மயமாக இருப்பாள்.

#1408. வெண்ணிற ஒளியாக வெளிப்படுவாள்


அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழு முள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெமுதம தாகிய கேடிலி தானே.


நீல மலரும் முத்தும் கலந்தது போன்ற குளிர்ந்த ஒளியில்; ஆனந்த மயமாகி அழிவு என்பதே இல்லாத சக்தி தேவி; அமுதம் போன்ற அழகிய மேனியுடன்; படிகம் போன்ற வெண்ணிற ஒளியுடன் வெளிப்டுவாள்.

#1409. சூழ்ந்திருக்கும் சக்தியரும் பாங்கியரும்


கேடுஇலி சக்திகள் முப்பத் தறுவரும்
நாடுஇலி கன்னிகள் நால்ஒன் பதின்மரும்
பூஇலி பூவிதழ் உள்ளே இருந்திவர்
நாள்இலி தன்னை நணுகிநின் றார்களே.


அழிவு என்பது இல்லாத முப்பத்தாறு சக்திகளும், நாடுவதற்கு அறியவராகிய அவர்களது முப்பத்தாறு தோழியரும் அம்மையின் சக்கரத்தில் வசிப்பவர்கள். சக்கரத்தின் இதழ்களில் இவர்கள் குடியிருப்பார்கள். காலம் என்னும் தத்துவத்தைக் கடந்து நிற்கும் அம்மையை இவர்கள் சூழ்ந்து நிற்பார்கள்.

#1410. பீச எழுத்து சித்திக்கும்


நின்றது புந்தி நிறைந்திடு வன்னியும்
கண்டது சோதி கருத்து ளிருந்திடக்
கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு
விண்டவென காரம் விளங்கின அன்றே.


புத்தித் தத்துவத்தில் சிவம் நாதமாக நிறைந்து நின்றது. ஒளியாகிய சோதி உள்ளத்திலிருந்து நீங்காமல் நின்றது. ஓராண்டு சாதனைக்குப் பின்னர் பீச எழுத்து வசப்பட்டது.
 
#1411. வானவரும் வந்து வணங்குவர்

விளங்கிடும் வானிடை நின்றவை எல்லாம்
வணங்கிடும் மண்டலம் மன்னு யிராக,
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச்
சுணங்கிடை நின்று, அவை சொல்லலும் ஆமே.


சாதனையாளரை மண்ணில் வாழ்பவர்கள் மட்டுமின்றி விண்ணில் வாழும் உயிர்களும் வந்து வணங்கி நிற்கும். திருமாலைப் போன்று ஒருவர் பெரும் இன்பங்களைப் பற்றித் துன்பங்கள் நிறைந்த ஓர் இடத்தில் இருந்து சொல்ல முடியாது அல்லவா?

#1412. பூமேல் வரும் பொற்கொடி


ஆமே அதோமுகம், மேலே அமுதமாய்த்
தானே உகாரம் தழைத்து எழுஞ் சோமனும்,
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது,
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.


மூலாதாரத்தில் கீழே நோக்குபவளாக இருந்தவள் குண்டலினி சக்தி. பின்னர் அவள் உகாரத்துடன் பொருந்தி இடை நாடியில் விளங்கினாள். பின்பு ஒளியாக எழுந்து மேலே சென்று சகசிர தளத்தை அடைந்தாள். அங்கு நிலைபெற்றாள். சீவன் எண்ணும் எண்ணங்களை நிறைவு செய்யும் கற்பகத் தரு ஆனாள். அனைத்து சித்திகளையும் நல்கிடும் இலக்குமி தேவியும் அவளே ஆவாள்.

#1413. ஆங்காரம் நீங்கிவிடும்


பொற்கொடி யாளுடன் பூசனை செய்திட
அக்களி ஆகிய ஆங்காரம் போயிடும்,
மற்கடம் ஆகிய மண்டலம் தன்னுள்ளே
பிற்கொடி ஆகிய பேதையைக் காணுமே.


பொற்கொடி போன்ற பராசக்தியை பூசியுங்கள். அப்போது உங்கள் அகங்காரம் நீங்கி விடும். நிலை பெற்று விளங்கும் பரமாகாயத்தில் பின்னியகொடி போன்ற இந்த மின்னல் கொடியாளைக் காணலாம்.

#1414. மண்ணுலகம் ஒரு திலகம்


பேதை இவளுக்குப் பெண்மை அழகு ஆகும்,
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்,
மாது ஐ அவளுக்கு மண்ணும் திலகமாய்க்
கோதையர் சூழக் குவிந்த இடம் காணுமே.


பெண்மையே பராசக்திக்கு அழகு ஆகும். சிவபெருமானே இவளுக்குத் தந்தை ஆவான். பரந்து, விரிந்த இந்த மண்ணுலகு பராசக்தியின் சிறு திலகம் போன்றது. பல சக்தியர் சூழ்ந்திருக்க இவள் மேலே ஒரு குவிந்த இடத்தில் இருப்பாள்.

#1415. பரந்த இதழ் பங்கயம்


குவிந்தனர் சக்தியர் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்த இதழ் ஆகிய பங்கயத் துள்ளே
இருந்தனர் காணும் இடம் பல கொண்டே


கன்னியராகிய சக்தியர் முப்பத்திருவர் உள்ளனர். பரவிய இதழ்களைக் கொண்ட சகசிரதளத்தில் பராசக்தி பல இடங்களைத் தனதாக்கிக் கொண்டாள்.
 
#1416 to #1418

#1416. சக்தி சாதகனை ஆட்கொள்வாள்

கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்ட அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடுமால்
இன்று என் மனத்துளே இல் அடைந்து ஆளுமே.

நவாக்கரி சக்கரத்தில் இருக்கும் சக்தியர் கூத்த பிரானுடைய ஒளியைக் கண்ட வண்ணம் மேல் நோக்கிய சகசிர தளத்தில் இருப்பார்கள். இந்த சக்தியரும் சிவ பெருமானும் உலகத்தின் தோற்றத்துக்கு காரணமானவர்கள். வேதம் தேடும் உண்மைப் பொருளும் இவர்களே. இதனை பெருமை வாய்ந்த சிவசக்தி என் உடலிலும் என் மனதிலும் வந்து பொருந்தி என்னை ஆட்கொண்டது.

#1417. இல்லாதது ஒன்றில்லை


இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை
இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல் ஆனையே.


சிவசக்தியால் ஆளப்படுபவருக்கு இல்லாதது என்றும் எதுவும் இல்லை. இவர் எவரிடமும் சென்று எதுவுமே இரப்பது இல்லை. இவருக்கு வானவரும் ஈடாக மாட்டர்கள். சிவசக்தி இவர் ஆன்மாவில் குடி கொண்டுள்ளதால் இவர் இல்லாத இடம் என்பதே இல்லை.

#1418. அறுபத்து நான்கும் ஆன்மாவும்


ஆனை மயக்கும் அறுபத்து நால் தறி,
ஆனை இருக்கும் அறுபத்து நால் ஒளி,
ஆனை இருக்கும் அறுபத்து நால் அறை,
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.

தத்துவங்களின் தலைவனாகிய ஆன்மா அறுபத்து நான்கு தரிகளால் கட்டப்பட்டுள்ளது.
ஆன்மாவாகிய பிரணவம் அறுபது நான்கு ஒளிக் கதிர்களால் ஆனது. ஆன்மா அறுபத்து நான்கு கலைகளில் விளங்குகின்றது. ஆன்மாவும் பிரணவமும் இங்ஙனம் அறுபத்து நான்கு விதங்களாக விளங்கும்.

திருமந்திரம் நான்காம் தந்திரம் முற்றுப் பெற்றது.

 
ஐந்தாம் தந்திரம்

1. ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே


ஐங்கரன், ஆனைமுகன், இளம் பிறை போன்ற தந்தங்களை உடையவன்;
சிவன் மகன், ஞான வடிவானவன், அவன் திருவடிகளை வணங்குகின்றேன்

2. ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான் இருந்தான் ; உணர்ந்து எட்டே
.

ஒரே மெய்ப் பொருளானவன்,
சிவ சக்தியராக இரண்டானவன்,
பிரமன், திருமால் ருத்திரன்என்ற மும் மூர்த்திகளுமானவன்,
நான்கு புருஷார்த்தங்களை (அறம் பொருள் இன்பம் வீடு) உணர்ந்தவன்,
ஐம் பொறிகளை ( மெய், கண், மூக்கு, வாய், செவி ) வென்றவன்,
ஆறு சக்கரங்களில் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாஹாதம், விசுத்தி, ஆக்ஞைகளில் ) விரிந்தவன்,
ஏழாவது சக்கரமான ஸஹஸ்ர தளத்தில் இருப்பவன்,
எட்டுப் பொருட்களில் ( நிலம், ஜலம், தீ, வளி, வெளி,
கதிரவன், நிலவு, ஆன்மா ) கலந்து விளங்குபவன்.

3. கூற்றுதைத்தான் போற்றி!

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.


தூயவனாக இனிய உயிரில் பொருந்தி உள்ளான்,
நான்கு திசைகளுக்கும், சக்திக்கும் அவனே நாயகன்,
தென்திசை மன்னனாகிய யமனை உதைத்தவன்,
அந்த இறைவனை நான் புகழ்ந்து போற்றுகின்றேன்.
 
#1419 to #1422

1. சுத்த சைவம்

சடங்குகளோடு நின்று விடாமல் பதி (தலைவன்), பசு (சீவன்), பாசம் (தளை) இவற்றை நன்கு உணர்ந்து கொண்டு தளைகளிலிருந்து நீங்கித் தலைவனை அடைவது சுத்த சைவம்.

சைவத்தில் சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ் சுத்த சைவம் என்று நான்கு வகைகள் உண்டு.

#1419. இறைவன் பெருமை

ஊரு முலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடின்
மேருவு மூவுல காளியி லங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

ஊர், உலகங்களை ஒரு சேரப் படைக்கும் பேரறிவாளன் பெருமையைக் கூறப்புகுந்தால் மேரு மலையும், மூவுலகாளும் இறைவன் தோற்றுவித்த உலகமும், நால் வகைச் சைவமும் இவன் பெருமைக்கு சமமானவை.
விளக்கம்
மேருமலையின் உயரத்தைம், உலகின் அகலத்தையும், சமயத்தின் ஆழத்தையும் ஒருங்கே கொண்டவன் ஈசன்.

#1420. சிவமாதல் சுத்த சைவம்

சத்துஅ சத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்துஅ சித்தும் சேர்வுறா மேநீத்தும்
சுத்த மசுத்தமுந் தோய்வுறா மேநின்று
நித்தம் பரஞ் சுத்த செய்வார்க்கு நேயமே.

அழியும் பொருள் எது, அழியாத பொருள் எது என்ற வேறுபாட்டினை அறிந்து கொள்ள வேண்டும். அறிவும் அறியாமையும் ஒன்று சேராமல் இருத்த வேண்டும். சுத்த மாயை அசுத்த மாயை என்னும் இரண்டிலும் பொருந்தாமல் நிற்க வேண்டும். நித்தமும் நித்தியமான பரம்பொருளான இறைவனைப் பார்த்தபடி இருப்பது சுத்த சைவருக்கு ஏற்றது.
சத்து = உண்மைப் பொருள் = சிவபெருமான்.
அசத்து = பொய்யானது = பாசம்
சதசத்து = ஆன்மா = உயிர் = சீவன்
சித்து = அறிவு
அசித்து = அறியாமை

#1421. சைவ சிந்தாந்தர் யார்?

கற்பன கற்றுக் கலைமன்னும் மெய்யோகம் ,
முற்பத ஞானம் முறை முறை நண்ணியே
சொற்பதம் மேவி, துரிசு அற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

கற்க வேண்டியவற்றைக் கற்க வேண்டும். பதினாறு கலைகளை உடைய சந்திர கலையை அறிந்து கொள்ள வேண்டும். சிவ யோகத்தைப் பயில வேண்டும். அகர, உகர, மகர விந்து நாதங்களைப் பற்றிய சரியான அறிவைப் பெற வேண்டும். பிரணவத்தைப் புரியவைக்கும் சந்தீயாதீத கலைகளில் பொருந்த வேண்டும். மாயையை விலக்கி விட்டு உண்மைப் பொருளான சிவனைக் காண்பவர் உண்மையான சைவ சிந்தாந்தர் ஆவர்.

#1422. அறிந்து கொள்ள வேண்டியது யாது?

வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்தம் போதாந்த மாகப் புனஞ்செய்ய
நாதந்த பூரணர் ஞானதே யத்தரே.

சுத்த சைவ சித்தாந்தமே வேதாந்தம் ஆகும். இந்த நல்ல நெறியில் நிற்பவரே நாதாந்தமாகிய சிவனைத் தரிசிப்பவர்கள். அவர்கள் எந்த விதச் சலனமும் இன்றி உலகில் வாழ்வர். பூதாந்தமாகிய தத்துவ முடிவைப் போதாந்தமாகப் (ஞான மயமாகப் ) பயன்படுத்தினால் நாதாந்ததில் பூரணனாகிய சிவன் நம்மால் அறியப்படவேண்டிய பொருள் ஆவான்.
 
#1423 to #1426

2. அசுத்த சைவம்

சைவ வேடம் பூண்டுச் சரியை, கிரியை என்னும் இரண்டு நெறியில் நிற்பவர்களைப் பற்றிக் கூறுவது அசுத்த சைவம் ஆகும்.


#1423. சரியை கிரியையினர்

இணைஆர் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து
இணைஆர் இணைக்குழை, ஈரணை முத்திரை
குணம் ஆர் இணைக் கண்டமாலையும் குன்றாது
அணைவாம் சரியை கிரியை யினார்க்கே.


இறைவனின் இணையடிகளைச் சரியை கிரியை என்பவற்றால் தொழும் அடியவர்களின் அடையாளங்கள் இவை ஆகும். ஒவ்வொரு காதிலும் இரண்டு இரண்டாகப் பொருந்தியுள குண்டலங்கள்; திருநீற்றுப் பூச்சு; தலையில் அணியும் உருத்திராக்க மாலை; கண்டத்தில் அணியும் செப மாலை, கண்ட மாலை என்னும் இரண்டு மாலைகள்.

சரியை – இது உடலால் இறைவனுக்குத் தொண்டு செய்வது

கிரியை – இது உடலாலும் உள்ளத்தாலும் இறைவனை வழிபடுவது.

#1424. அசுத்த சைவரில் ஒருவகை

காதுப்பொ னார்ந்த கடுக்க னிரண்டுஞ்ச் சேர்த்
தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து வுபதேச மார்க்கராய்
ஓதி இருப்பார் ஒரு சைவ ராகுமே.


காதில் பொன்னால் ஆகிய இரண்டு கடுக்கன்கள் அணிந்து கொண்டு ; இடையில் ஓராடை, மேலே ஓராடை அணிந்து கொண்டு; அத்துவா சோதனை செய்து கொண்டு; குருவுடம் உபதேசம் பெற்றுக் கொண்டு; சைவ ஆகமங்களைச் சொல்லிக் கொண்டு இருப்பவர் அசுத்த சைவர்களில் ஒரு வகையினர் ஆவர்.

#1425. கடுஞ் சுத்த சைவர்

கண்டங்க ளொன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்க ளொன்பதும் கண்டா யாரும்பொருள்
கண்டங்க ளொன்பதும் கண்டவர் கண்டமாம்
கண்டங்கள் கண்டோர் கடுஞ் சுத்த சைவரே.


மண், நீர், ஒளி, வளி, வெளி, கதிரவன், திங்கள், அக்கினி, விண்மீன் என்னும் ஒன்பதும் நம் உடலிலும் உள்ளன என்று அறிந்து கொண்டவர் அறிய வேண்டியவற்றை அறிந்து கொண்டவர் ஆவர். நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவன் என்னும் ஒன்பதாக விளங்கும் மேலான சிவத்தை அறிந்து கொண்டவர் அறிய வேண்டியவற்றை அறிந்து கொண்டவர் ஆவர். இங்கனம் ஒன்பதாக விளங்கும் சிவத்தைத் தமக்குளே கண்டு கொண்டவர் உலகங்கள் அனைத்தையும் கண்டு கொண்டவர் ஆவர்.

#1426. ஞானியர் அறிவாற்றல் உடையவர்

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையு முழு வெண்ணெண் சித்தியும்
ஏனை நிலமு மெழுதா மறையீறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.


ஞானியர் உலகில் தோன்றும் ஞான நூல்கள், மோன நிலை, எண் பெரும் சித்திகள், பிற உலகங்களைப் பற்றிய அறிவு, உபநிடத அறிவு இவை மட்டுமன்றிச் சிவனையும், தன்னையும் நன்கு அறிந்து கொள்ளும் அறிவாற்றல் பெற்றவர்.
 
#1427 to #1430

3. மார்க்க சைவம்

சைவ மார்க்கத்தில் நின்று; வேதாந்தம் , சித்தாந்தம் இவற்றில் நுண்ணிய அறிவு பெற்று, தன் ஆத்ம போதம் முற்றும் இழந்து சிவபோதத்திலேயே நிலைத்திருப்பது மார்க்க சைவம்.

#1427. சுத்த சைவ நெறியினரின் ஒழுக்கம்

பொன் னாற்சிவ சாதனம், பூதி சாதனம்,
நன்மார்க்க சாதனம், மாஞான சாதனம்,
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனனம்
சன்மார்க்க சாதனமாம் சுத்த சைவர்க்கே.


பொன்னால் செய்யப்பட்ட உருத்திராக்கம் அணிதல், திருநீற்றுப் பூச்சு, ஞான சாதனமாகிய ஐந்தெழுத்து மந்திரம், தீயவருடன் சேராமல் நல்லவர்களுடன் சேர்ந்து இருத்தல் இவை சுத்த சைவ நெறி பற்றியவருக்கு உரிய சன்மார்க்கம் ஆகும்.

#1428. ஞானி எனப்படுபவர் யார்?

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வப்பத்த நித்தனே
.

குற்றங்கள் நீங்கிய ஒரு ஞானி ஒளிரும் ஞானத்துக்கு மன்னன் ஆவான். துன்பங்களைப் போக்கும் வேதாந்த சித்தாந்தங்களில் சிறந்தவன் உண்மையான முத்தி நிலையை அறிந்தவன் ஆவான். சிறந்த சுத்த சைவத்தில் பற்றுக் கொண்டவன் அழிவில்லாத நித்தியன் ஆவான்.

#1429. சுத்த சைவமும் ஆகமங்களும்

ஆகமம் ஒன்பான், அதில் ஆன நால் ஏழு,
மோகம் இல் நாலேழும் முப்பேதம் உற்று உடன்
வேகம் இல் வேதாந்த சித்தாந்த மெய்ம்மை ஒன்று
ஆக முடிந்த அருஞ் சுத்த சைவமே.


ஆகமங்கள் ஒன்பது:

(1). காரணம், (2). காமிகம் (3). வீரம் (4). சிந்தம் (5). வாதுளம் (6). யாமளம் (7). காலோத்தரம் (8) சுப்பிர பேதம் (9) மகுடம்.

இவையே பின்பு விரிவடைந்து இருபதெட்டு ஆகமங்களாயின. அவை சைவம், ரௌத்திரம், ஆரிடம் என்று மூன்று வகைகள் ஆயின. சுத்த சைவருக்கு வேதாந்தம், சித்தாந்தம், உண்மை என்ற மூன்றும் ஒன்றாயின.

#1430. அத்தனின் அருட்சக்தியே அம்மை

சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர்ஏழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கும் ஆமே.

பிறவிக்கு முன்பும், சீவன் பிறவி எடுத்த பின்பும் ஆன்மா மொத்தம் ஏழு வேறு பட்ட நிலைகளில் இருக்கும். அவை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்து வேறுபட்ட நிலைகளில் அடங்கும். இவற்றையும், சத்து, அசத்து என்பவற்றையும் கடந்து விளங்கும் பராபரையே சீவனைச் செலுத்துபவள். அவளே சீவனின் உயிரில் உயிராகப் பொருந்தி இருப்பவள். அவள் சிவனின் அருட் சக்தியாக எங்கும் பரவியும், விரவியும், நிறைந்தும் உள்ளாள்.
 
#1431 to #1434

#1431. ஞானி எல்லாம் வல்ல சித்தர் ஆவார்

சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய்,
முத்தியுள், ஆனந்த சத்தியுள் மூழ்கினோர்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.


சத்து, அசத்து என்ற இரண்டையும் கடந்துவிட்ட ஒரு ஞானி; அறிவு, அறியாமை என்னும் இரண்டையும் கடந்து; ‘நானே சிவம்’ என்னும் உயரிய நிலையினை அடைவார். சீவனும், சிவனும் ஒன்றிவிட்ட முத்தி நிலையில், ஆனந்த சக்தியுள் மூழ்கி இருக்கும் அவரிடம் அனைத்துச் சித்திகளும் தாமே சிறந்து விளங்கும்.

#1432. சுத்த சைவர் உபாயம்

தன்னைப் பரனைச் சதாசிவ னென்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே.


ஆன்மாவாகிய தன்னையும், பரனாகிய சிவனையும், சதாசிவன் என்னும் மன்னனையும், பதி, பசு, பாசம் என்ற மூன்றினையும், அனாதியாகிய பாசத் தளையினையும், முத்தி நிலை என்னும் வீடு பேற்றினையும் தடைகளை நீக்கும் வழிகளாகக் கருதுவர் சுத்த சைவர்.

#1433. ஆன்ம போதம் கெட்டால் சிவ போகம் கிட்டும்

பூரணம் தன்னிலே வைத்துஅற்ற அப்போதம்
ஆரணம் அந்தம் மதித்து, ஆனந்தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும் போகம்
காரணம் ஆம்சுத்த சைவர்க்குக் காட்சியே.


பூரணனாகிய சிவத்தில் சித்தத்தைப் பொருத்த வேண்டும். ஆன்ம போதத்தை அறவே அழிக்க வேண்டும். வேதாந்தத்தைப் பெரிதாக எண்ண வேண்டும். இதைச் செய்யும் சுத்த சைவர், துவாதசாந்த நிலையில் உயரிய சிவபோகம் அடைந்து அதில் திளைப்பர்.

#1434. மார்க்க சைவ ஞானி

மாறாத ஞான மதிப்பற மாயோகத்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறி நிற்றல்
கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.

ஞானிக்கு உரிய சரியை எது தெரியுமா ?
சிறந்த ஞானத்தில் மதிப்பு இல்லாமல்; சிறந்த யோகம் பெரிது என்று அறியாமல் இருக்கும் சிந்தையைத் தெளியச் செய்ய வேண்டும். அதில் சிவத்தை குடியேற்ற வேண்டும். ‘சிவோகம்’ என்ற பாவனையுடன் நிலைத்து இருப்பதே ஞானிக்கு உரிய சரியை ஆகும்.
 
#1435 to #1437

#1435. சிவத்துடன் சேர்பவர் யார் ?

வேதாந்தம் கண்டோர் பிரமமித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மில்லாத சித்தாந்தம் கண்டுளோர்
சாதாரண மன்ன சைவ ருபாயமே.

வேதாந்தத்தை அறிந்தவர்கள் பிரம்ம வித்தையை அறிந்தவர்கள். நாதந்தத்தை அறிந்து கொண்டவர்கள், நன்மைகள் வரும்போது துள்ளாமலும், தீமைகள் வரும் போது துவளாமலும் இருக்கும் சலனமற்ற யோகியர் ஆவர். வேதாந்தக் கொள்கையிலிருந்து மாறுபட்டச் சித்தாந்த அனுபவம் உடையவர்களும் தகுந்த வேறு ஒரு உபாயத்தால் சிவனைச் சேருவர்.

வேதாந்தம் (ஞான மார்க்கம்) கூறுவது:
“வைராக்கியத்தால் சிவனைச் சென்று அடையலாம்”

சித்தாந்தம் (பக்தி மார்க்கம்) கூறுவது:
“அன்பால் சிவனைச் சென்று அடையலாம் ”

எல்லா மார்க்கங்களும் ஒரே ஈசனிடம் அவன் அன்பர்களைச் செலுத்தும்.

#1436. பசுவும், பாசமும் பதியை அணுகா!

விண்ணினைச் சென்று அணுகா வியன் மேகங்கள்,
கண்ணினைச் சென்று அணுகாப் பல காட்சிகள்,
எண்ணினைச் சென்று அணுகாமல் எனப்படும்
அண்ணலைச் சென்று அணுகா பசு பாசமே.


வானைத் தம் இருப்பிடமாகக் கொண்ட மேகங்கள், வானத்தில் ஒட்டிக் கொள்ளா! கண்ணில் காணும் காட்சிகள் எல்லாம் கண்களில் வந்து ஒட்டிக் கொள்ளா. அது போன்றே எண்ணங்களைக் கடந்து விளங்கும், சிவபெருமானிடம் பசுவான சீவனைத் தளைப்படுத்தும் பாசம் சென்று ஒட்டிக் கொள்ளாது.

விளக்கம்:

முகில்கள் வானில் உலவினாலும் அவற்றால் வானம் முழுவதும் பரவ இயலாது.
காணும் காட்சி ஒன்றானாலும் அது மனிதரிடம் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் வேறுபாடும்.
சிவத்தை வழிபடும் சீவர்களின் தகுதி அவரவர் பாசநிலைக்கு ஏற்ப மாறுபடும்.
பசுத் தன்மை மிகுந்துள்ளவர்களால் சிவத்தை அறிந்து கொள்ள முடியாது.

#1437. சித்தாந்தம் தரும் சித்தி என்ன?

ஒன்றும் , இரண்டும், இலதுமாய், ஒன்றாக
நின்று , சமய நிராகாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால்
சென்று, சிவமாதல், சித்தாந்த சத்தியே.


“பிரமம் ஒன்றே!” என்று கூறும் அத்வைத வேதாந்தம். “சிவன் வேறு சீவன் வேறு!” என்று கூறும் துவைத வேதாந்தம். “இயல்பினால் வேறுபடும் பொருட்கள் கலப்பினால் ஒன்றாகும்!” என்று கூறும் சுத்தாத்வைத வேதாந்தம். இந்த சுத்தாத்வைத பாவனையில் நிலை பெற்றுச் சமய நிந்தனையை ஒழிக்க வேண்டும். பராபரையை என்னும் இனிய பொருளைத் திருவடி ஞானத்தால் பெற்ற ஒருவரைச் சிவமாகவே மாற்றிவிடுவது சித்தாந்தம் தரும் சித்தி ஆகும்.
 
#1438 to #1442

4. கடுஞ் சுத்த சைவம்

ஆடம்பரமும், ஆரவாரமும் இன்றி ஞான நிலையில் ‘தானே அவனாக’ நிற்கும் நிலை கடுஞ் சுத்த சைவம். கிரியைகளைத் துறந்து விட்டுத் தூய ஞானம் பெறுவதன் மூலம் கடுஞ் சுத்த சைவர் சாயுச்சியம் அடைவர்


#1438. யார் சுத்த சைவர்?

வேடங் கடந்து விகிர்தன்தன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சம் செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடுஞ் சிவாபோத கர்சுத்த சைவரே


சுத்த சைவர்கள் வெளிக் கோலங்களில் விருப்பம் கொள்ளார். அவர்கள் உலகியல் ஆடம்பரம் இல்லாதவர். ஆசைகளையும், பற்றுகளையும் நீத்து விட்டுப் பிறவிப் பிணியில் பிணைக்கின்ற சீவ போதத்தையும், பாசத்தையும் அழித்து விட்டு அவர்கள் இறைவனைச் சென்று அடைவர்.

#1439. எது சித்தாந்த நெறி?

உடலான ஐந்தையு மோராறு மைந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
பாடலான கேவல பாசம் துடைத்துத்
திடமாய்த் தனையுற்றல் சித்தாந்த மார்க்கமே.

உடல் என்று எண்ணி நாம் மயங்கும் ஐந்து கோசங்கள் இவை:
(1). அன்னமய கோசம், (2). பிராணமய கோசம், (3). மனோமய கோசம், (4). விஞ்ஞானமய கோசம், (5). ஆனந்தமய கோசம்.

உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் இவை :
(1). மூலாதாரம், (2). சுவாதிட்டானம், (3). மணிபூரகம், (4). அனாஹதம், (5). விசுத்தி, (6). ஆக்ஞா

சிவ தத்துவங்கள் ஐந்து எனப்படுபவை இவை:
(1). சுத்த வித்தை (2). மகேசுரம் (3). சாதக்கியம் (4). விந்து (5). நாதம்.

இவற்றையும், இவற்றைச் சார்ந்ததவற்றையும் முற்றிலுமாக நீக்கிவிட்டுச் சீவன் தன் உண்மை நிலையினை அறிந்து கொண்டு, அதில் நிலைத்து நிற்பதுவே சித்தாந்த நெறி.

#1440. ஞானமே பெரிது!

சுத்த சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
மத்தகை யான்மா அரனை யடைந்தற்றால்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.


சிவன் அருளிய ஆகமங்கள் முக்தியின் நான்கு நிலைகளைக் கூறும்.
(1). சாலோகம், (2). சாரூபம், (3). சாமீபம், (4). சாயுச்சியம் எனப்படும் இந்நான்கு நிலைகளையும் சாராமல், பிரணவ நெறியின் மூலம் நேராக சாயுச்சியம் அடைவது சாலச் சிறந்தது. முக்தர்கள் பிரணவ நெறியின் மூலம் முக்தி அடைவது பரமுக்தியின் மூலம் ஆகும். ஆன்மா உலகப் பொருட்களை வெறுத்து நீக்கிவிட்டுப் பிரணவப் பொருளான இறைவனை அறிந்து கொண்டால் அதுவும் சுத்த சிவமாகவே மாறிவிடும். இத்தகைய முக்தர்கள் சுத்த சைவர்.

#1441. “அது நீ ஆகின்றாய்!”

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டில்லாத் தற்பதம்
தானென்று நானெற்ற தத்துவ நல்கலால்
தானென்றும் நானெற்றுஞ் சாற்றகில் லேனே.

அறிபவன் நான், அறியப்படும் பொருள் சிவன் என்று எண்ணி ஆராய்ந்து நான் சிவனைச் சென்று சேர்ந்தேன். அப்போது சிவன், சீவன் என்ற இரு வேறு நிலைகள் இல்லை! சீவனே சிவன் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். அதனால் நான், அறிபவன் அறியப்படும் பொருள் என்ற நிலைகளைக் கடந்து, பிரித்து அறிய இயலாத பெரு நிலையை அடைந்து விட்டேன். ‘அது’வாக நானே மாறிவிட்டேன். சிவன், சீவன் என்ற வேறுபாடுகள் இன்றி அவனுடன் ஒன்றி விட்டேன்.

#1442. பர சாயுச்சிய நிலை

சாற்றரிதாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிவிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய் நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

சொல்ல இயலாத அந்தப் பெரு நிலையை அடைந்துவிட்டால், அடக்குவதற்கு அரிதாகிய ஐம்பொறிகளும் தாமே செயல் இழந்து அடங்கி விடும். அதன் பின்னர் ஞானம் விளக்கின் ஒளி போன்று நன்கு ஒளிரும். சிரசின் மேல் சீவன் சிவனுடன் ஒன்றி நிற்றல் கூடும்.
 
Last edited:
#1443 to #1446

5. சரியை
பலத் திருத் தலங்களுக்குச் சென்று சிவனைப் புகழ்ந்து படுவதும், அவனைக் கோவில்களுக்குச் சென்று வழிபடுவதும் சரியை என்று கூறப்படும்.


#1443. சரியை உயிர்நெறி ஆகும்

நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத் துயிரதே.


காலாங்கி, கஞ்ச மலையமான், கந்துரு என்னும் மாணவர்களே கேளுங்கள்! வீடு பேற்றை அடைவதற்கு முதல் அங்கமான சரியை, சுத்த சைவர்களுக்கு உயிரைப் போன்று மிகவும் உயர்ந்தது ஆகும்.

#1444. சிவ பூசை

உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை,
உயிர்க்குஒளி நோக்கல் மகாயோக பூஜை,
உயிர்பெறும் ஆவாகனம் புறப்பூசை
செயிற்கு அடை நேசம் சிவபூசை யாமே.

உயிரின் உயிராக இறைவன் இருப்பதை அறிந்து கொள்ளுதல் சிறந்த ஞான பூசை.
உயிருக்கு ஒளி தருபவன் இறைவன் என்று அறிந்து கொள்ளுதல் உயர்ந்த யோக பூசை.
இறைவனைப் பிராணப் பிரதிட்டையாகச் செய்து அன்போடு வழிபடுவது புற பூசை.
வெளியே செய்யும் சிவனின் புறபூசை பின்னர் ஞானபூசையின் வாயிலாக அமையும்.

#1445. நெஞ்சமே அவன் ஆலயம்

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.


நாடுகள், நகரங்கள், நல்ல திருக்கோவில்கள் இவற்றைத் தேடிச் செல்லுங்கள். சிவன் வீற்றிருக்கும் தலங்களைப் பாடுங்கள். பாடி அன்புடன் வணங்குங்கள். வணங்கிய அன்பரில் நெஞ்சத்தையே தன் ஆலயமாகக் கொண்டு சிவன் அங்கே விருப்புடன் உறைவான்.

#1446. பக்தி செய்யும் வகைகள்

பத்தர் சரியை படுவோர், கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் செய்து எய்து வோர்களே.


கோவிலில் வழிபாடுகள் செய்து சரியை நெறியில் நின்று சிவனிடம் பக்தி செய்பவர் பக்தர்.
கிரியை வழியில் நின்று சிவ சாதனங்களை அணிந்து கொண்டு சிவ வேடம் தாங்குபவர் தொண்டர்.
அட்டாங்க யோக நெறிகளை உணர்ந்தோ கொண்டு அந்தத் தூய நெறியில் நிற்பவர் தூய யோகியர்.
சிவத்தைத் தனக்குள்ளேயே கண்டு கொண்டு அதனுடன் ஒன்றி நிற்பவர் அனைவரிலும் சிறந்த சித்தர்.
 
#1447 to #1450

#1447. நெறிகளுக்குரிய செயல்கள்

சார்ந்த மெய்ஞானத்தோர் தான் அவனாயினோர்
சேர்ந்தஎண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அர்ச்சனை தப்பாதோர்;
தேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.


இறைவனோடு இரண்டற ஒன்றி விட்டவர்கள் ஞானம் அடைந்தவர்கள்.
அட்டாங்க யோக நெறியில் நின்று அதன் மூலம் சமாதி அடைந்தவர் யோகியர். தவறாமல் பூசை, அர்ச்சனை இவற்றைச் செய்பவர்கள் கிரியை செய்பவர். திருத்தலங்களுக்குப் பிரயாணம் செய்பவர் சரியை நெறியில் நிற்பவர்கள்.

#1448. உருவ, அருவ வழிபாடுகள்

கிரியை, யோகங்கள், கிளர் ஞான பூசை
அரிய சிவன்உரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை யாமே.

கிரியை நெறியில் நிற்பவர்கள் சிவனுடைய உருவ வழிபாட்டை மேற்கொள்ளுவர். மெய் ஞானம் அடைந்தவர் அருவ வழிபாட்டினை மேற்கொள்ளுவர். அன்பர்கள் தம் மனப் பக்குவத்துக்கு ஏற்ற வண்ணம் இறைவனை உருவமாகவோ அல்லது அருவமாகவோ வழிபடுவார்கள்.

#1449. மருளும் அருளும்

சரியா ஆதி நான்கும், தரும் ஞானம் நான்கும்,
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது; நந்தி பொன்னகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே.


சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கினாலும் பெறுகின்ற ஞானம் நான்கு வகையானவை. இவை வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் இவற்றால் பெறும் ஆறு வகை முடிவுகளைக் கொண்டவை. மருள் கொண்டு மயங்கி நிற்கும் சீவர்களுக்கு, அருள் தந்து அறிவைத் தருவதற்குச் சிவன் சரியை முதலிய நான்கு நெறிகளையும், ஆறு அந்தங்களையும் ஏற்படுத்தி வைத்துள்ளான்.

#1950. தீட்சைகளின் வகைகள்

சமையம் பலசுத்தி தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமு மரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தியாகும்
அமைமன்னு ஞானமார்க்கம் அபி டேகமே.


ஆன்மாவில் குடி கொண்டுள்ள மலங்களை அகற்ற சமய தீட்சை உதவிடும். மந்திரதீட்சை ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை அகற்ற உதவும். நிர்வாண தீட்சை கலைகளில் உள்ள மலங்களை நீக்கி ஆன்மாவை மேன்மைப் படுத்தும். திரு முழுக்கட்டு என்னும் அபிடேகம் ஆன்மா ஞான மார்க்கத்தில் நிலை பெற உதவும்.
 
6. கிரியை

மலர்த் தூவி இறைவனை உள்ளத்திலும் புறத்திலும் பூசித்தல் கிரியை எனப்படும்.


#1451. வினைகள் வாரா! வினைகள் சாரா!

பத்துத் திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு
எத்திக்கு இவர் இல்லை என்ப அமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரண் எனத்
ததும் வினைக்கடல் சாராது காணுமே.


பத்துத் திக்குகளிலும் சிவம் பரவி நிற்கின்றது. எத்திக்கில் இல்லை சிவம்? எக்காலத்தில் இல்லை சிவம்? எங்கும் எப்போதும் உள்ளது சிவம். மலம் நீங்கித் தூய்மை அடைந்தவர்கள் அரன் திருவடிகளே சரண் என்று பற்றிக் கொண்டால், தத்தியும் தாவியும் வருகின்ற கடலை ஒத்த வினைகள் நம் அருகில் வாரா! நம்மைச் சாரா!

#1452. உடல் பற்றை ஒழிக்க வேண்டும்

கானுறு கோடி கடிகமழ் சந்தானம்
வானுற மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி யுணர்பவர்க்கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.


காட்டில் மணம் வீசும் சந்தனம், வானளவாக வளர்ந்த மரங்களின் நறுமண மலர்கள், இவற்றால் இறைவனைப் பூசை செய்தாலும்: உடல் பற்றை முற்றிலுமாக ஒழித்தால் அன்றி, ஒருவனால் சகசிரதளத்தில் தேன் போன்று இனிக்கும் இறைவனின் திருவடிகளை அடைய முடியாது.

#1453. அருளுக்குப் பாத்திரம் ஆகலாம்

கோனக் கன்று ஆயே குரைகழல் ஏத்துமின்
ஞானக் கன்று ஆகிய நடுவேஉழிதரும்
வானக் கன்று ஆகிய வானவர் கைதொழும்
மானக் கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே.

ஆவினைத் தொடரும் பசுங் கன்று போல, இறைவனின் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளைத் தொடர்ந்து போற்றுங்கள். அப்போது ஞானத்தைத் தரும் சுழுமுனையின் நடுவே தோன்றும் ஈசனை வானக் கன்றுகளாகிய தேவர்கள் வந்து பணிவர். பெருமை மிகுந்த காளையை ஊர்தியாகக் கொண்ட இறைவனின் திருவருளுக்குப் பாத்திரம் ஆவீர்கள்.
 
#1454 to #1456

#1454. பக்தியும் அன்பு தான்

இது பணிந்து எண்திசை மண்டலம் எல்லாம்
அது பணி செய்கின்றவள் ஒரு கூறன்
இதுபணி மானிடர் செய்பணி, ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே .


இவனை வணங்கி எட்டு திசைகளிலும் உள்ள மண்டலங்கள் எல்லவற்றிலும் இவன் பணியைச் செய்பவள் சக்தி. அவளைத் தன் உடலின் ஒரு அங்கமாகக் கொண்டவன் ஈசன். அவன் பெருமைகளைப் போற்றிப் புகழ்வதே நாம் செய்ய வேண்டிய பணி . இங்ஙனம் அவனிடம் பக்தி செய்வதும் அன்பின் வெளிப்பாடே.

#1455. சித்தம் சிவமயம் ஆகும்

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருஅருளால் சிவம் ஆகுமே.


பக்தன் சரியை, கிரியை இவற்றைப் பயின்று சுத்த மாயையின் அருள் தரும் ஆற்றலைப் பெறுவான். குற்றமற்ற யோகம் கூறும் நெறியில் தன்னைப் பொருத்திக் கொண்டு, அவன் மெய் ஞானம் அடையும் போது, குரு மண்டல பிரவேசத்தால் அவன் சித்தம் சிவமயம் ஆகிவிடும்.

#1456. விழைவது இறையருளே!

அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன்
செம்பொன் செய் மேனிக் கமலத் திருவடி
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்குஅருள்
என்பினுட் சோதி இலங்குகின் றானே.

அன்பினால் உள்ளம் உருகுவேன். தினமும் வழிபாடு செய்வேன். “செம்பொன் போன்ற சகசிர தளத்தில் விளங்குகின்ற உன் திருவடிகளை வணங்கித் துதிக்கும் பேற்றினை எனக்கு அருள்வாய்!” என்று வேண்டுவேன். அப்போது இறைவன் என் தலையின் மேல் சோதி வடிவில் விளங்கி எனக்கு அருள் புரிவான்.
 
#1457 to #1461

7. யோகம் = பொருந்துதல்
மூலாதாரத்தில் குண்டலினியுடன் உள்ள பிராணனை மேலே ஏற்றிச் சென்று, துவாதசாந்தத்தில் உள்ள சிவத்துடன் பொருத்துதல் யோகம் எனப்படும். இவ்வாறு பொருத்தி தியானம் செய்தால் ஒளி தோன்றும்.

#1457. உடல் நினைவு கெடும்.

நெறி வழியே சென்று, நேர்மையுள் ஒன்றித்
தறி இருந்தாற் போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண் என்று உணராக்
குறிஅறி வாளர்க்குக் கூடலும் ஆமே.


மூலாதாரத்தில் இருந்து நேராகச் சென்று பிரமரந்திரத்தை அடைய வேண்டும். அங்கு மெய்ப்பொருளாகிய சிவத்துடன் பொருந்தி இருக்க வேண்டும். மரக்கட்டை போல உடல் உணர்வு என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். உடலைச் சொரிந்தாலும் அன்றித் தாக்கினாலும் அதை அறியாமல் இருக்க வேண்டும். சிவத்தை அறிந்து அவனுடன் பொருந்தியவருக்கு இதைச் செய்ய இயலும்.

#1458. உச்சியில் உள்ளான்

ஊழி தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழிதோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளர்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உள்ளானே.


நெடுங்காலம் யோகம் பயின்று ஞானம் பெற்றவர்கள் நீங்கலாக வேறு எவராலும் நெடுங் காலமாக உணரப்படாதவன் சிவன். ஆழியில் துயிலும் அரி, அவன் உந்தித் தாமரையில் உள்ள அயன் போன்ற தெய்வங்கள் எத்தனை காலம் முயன்றாலும் அடைய முடியாத உயர்ந்த இடத்தில் உள்ளான் சிவன்.

#1459. சிவயோகத்தின் பயன்

பூவினில் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு
நாவி அணைந்த நடுத்தறி ஆமே.


இயற்கையாகவே பூவில் மணம் பொருந்தியுள்ளது. ஆனால் அது மலர்
மலரும் போது வெளிப்படுகின்றது. அது போன்றே சீவனுள் சிவம் பொருந்தியுள்ளது. சீவன் பக்குவம் அடைந்தவுடன் சிவம் வெளிப்படும் . ஓவியம் போன்று அசைவின்றி இருந்து சிவத்தை அறிந்து கொண்டவர்கள் புனுகுப் பூனையால் நறுமணம் பெரும் தூணைப் போலச் சிவ ஒளி பெறுவர்.

#1460. பிறவிப் பிணியின் வித்து

உய்ந்தனம் என்பீர், உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கரக்கின்ற நந்தியைச்
சிந்தை உறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித்து ஆமே.


உய்ந்தோம் என்று கூறுவீர் ஆனால் உள்ளே உறையும் உண்மைப் பொருளைக் காண்கிலீர். இன்பம் தரும் சுவதிட்டன மலரில் ஒளிந்திருக்கும் சிவனை சிந்தையில் பொருத்தித் தெளிவு அடைய மாட்டீர். இங்ஙனம் பொருத்தி சிந்தை தெளிந்து அறியாமை இருளை நீக்கிவிட்டால், தொன்று தொட்டு வரும் பிறவிப் பிணியின் விதை நீங்கிவிடும்.

#1461. பிறவி நீங்கும்!

எழுத்தொடு பாடலு மெண்ணென் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கார்
அழித்தலைச் சோமனோடங்கி யருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே
.

இலக்கண அறிவோ, இலக்கிய அறிவோ, ஆய கலைகள் அறுபத்து நான்கின் அறிவோ, பழியைத் தரும் பாசத்தின் விளைவாகிய பிறவிப் பிணியை அகற்றா. கீழ் நோக்கிய நிலையில் அழிவைத் தரும் மதி, கதிரவன், அக்கினி இவற்றை வகைப் படுத்தி மேல் நோக்கிச் செலுத்தினேன்! அங்கே ஒளி அமைவதை நான் உணர்ந்தேன்.
 
Back
Top