11. அக்னி காரியம் (வேள்வித் தீ ஓம்புதல்)
# 214. வேள்விப் பயன்கள்
வசை இல் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவு இலா அந்தனன்ர் ஆகுதி வேட்கிலே.
வேதங்கள் கூறுகின்ற அற வழியில் நின்று,
தளர்ச்சி இல்லாத அந்தணர்கள் செய்யும் வேள்விகளால்,
வானத்தில் வாழ்பவர்கள், நிலத்தில் வாழ்பவர்கள்,
எட்டு திசைகளில் வாழ்பவர்கள், திசைகளின் தேவதைகள்,
என்னும் அனைவருமே மிகுந்த நன்மை அடைவார்கள்.