Quotable Quotes Part II



When you are just you, without thinking or trying to say something special, just saying what is on your mind and how you feel, then there is naturally self-respect.
Shunryu Suzuki

I thought respecting oneself is self respect!!!

I think what is meant by the quote is

" Be yourself without trying to project imaginary images

and thereby lose what little respect you have already earned".

Any takers or any :boxing:???
 
எத்தான் மறவாதே நினைக்கின்றேன்
மனத்துன்னை வைத்தாய்.
சுந்தரர்.

பலசாலி ஆக விரும்புபவர், உடற் பயிற்சி செய்ய வேண்டும்.
அறிவாளியாக விரும்புபவர், அறிவைத் தீட்ட வேண்டும்.
மன அமைதியை நாடுபவர், அதைத் தங்கள் உள்ளத்தின் உள்ளே தேடவேண்டும்.
இருக்கும் இடம் அறிந்து அதைப் பெற முயன்றால், எதையும் பெற முடியும்.
 
1150369_705331836150640_1353401262_n.jpg



Evil is always associated with black color and red heat.

Hell as depicted by any religion!


th



th



th
 
அல்லும் பகலும் அகண்ட வடிவே! உனைநான்
புல்லும் படி எனக்கோர் போதனை தான் இல்லையோ ?
தாயுமானவர்.

உயர்வை விரும்புகின்றவனுக்கும்,
உயர்வைத் தேடுகின்றவனுக்கும்,
உயர்வு வருவதில்லை.
உயர்வதற்குத் தகுதி உடையவனை
உயர்வு தானே தேடி வருகிறது.
 
காலமொரு மூன்றும் கருத்தில் உணர்ந்தாலும் அதை
ஞாலம் தனக்குரையர் நல்லோர் பராபரமே.
தாயுமானவர்.

கால அளவைக் கருத்தில் வாங்காது எப்போதும் என்
என் கடமையையைச் சரிவரச் செய்வேன் ஆகுக.

காலத்தைப் பொருட்படுத்தாது இயற்கை தன் கடன் ஆற்றுகிறது.

ஒரு முறை வட்டமிட ஓரு வால் நட்சத்திரம்
ஓராயிரம் ஆண்டு எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கல்லைத் தேய்க்கக் கடல் அலைகள்
ப தினாயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.

"இத்தனை காலமா?" என்று இயற்கை ஏங்கியோ, சோம்பியோ இருப்பது இல்லை.

மனிதன் மட்டுமே தன் அற்ப காரியங்கள் அதி விரைவில் நடக்க வேண்டும்
என்று ஆவல் கொள்கின்றான். அல்லல் படுகின்றான்.

அறிவில்லாமல் இயற்கை வளத்தைச் சூறையாடுகின்றான்.
 
மெய்கலந் தாரோடு மெய்கலந்தான் தன்னை
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந் தூழித் தலைவனு மாய்நிற்கும்
மெய் கலந்தின்பம் விளிந்திடும் மெய்யர்க்கே.
திருமந்திரம்.

நான் எனது என்பன பொய்.

பொய்யை வளர்க்கும் அளவுக்குத்
துன்பமும், புன்மையும் வளருகின்றன.

நான் எனது என்பவை அகன்ற இடம் மெய்மை.
மெய்மை வளரும் அளவுக்கு இன்பம் வளருகிறது.

மனதில் மேன்மையும் வளருகின்றது.
மெய்மையும் மேன்மையும் ஒன்றே.
 
th



வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக் கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
ஔவையார்.
 
Without mud, you cannot have a lotus flower. Without suffering, you have no ways in order to learn how to be understanding and compassionate. Happiness is the lotus flower, and the suffering is the mud. So the practice is how to make use of the suffering, make use of the mud, to create the flower, the happiness, and this is possible.

~ Thich Nhat Hanh
 
Back
Top