• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Jokes in Thamizh

Status
Not open for further replies.
கண்கள் பேசினால் காதல்
கண்ணீர் பேசினால் நட்பு
பணம் பேசினால் சொந்தம்
எல்லோரும் பேசினால் உலகம்
நீமட்டும் பேசினால் ’லூஸு’.

ஒரு திருடன்: அந்த வக்கீல நம்ம கேச நடத்தவிடவேண்டாம்னு ஏன் சொல்ற?
அவன் சகா: வீட்டு வாசல்ல வாய்மையே வெல்லும்னு போர்டு போட்டிருக்காரே! பிறகு இவர் எதுக்கு?

அந்தாளு குடிச்சிட்டு நிதானம் இல்லாம இருக்கார்னு எப்படி சொல்றே?
என்னப் பார்த்து நீங்க ரெண்டுபேரும் டுவின்ஸான்னு கேக்கறார்.

மேனேஜர்: எங்க பேங்க்ல இண்டரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.
கஸ்டமர், எடக்காக: கொடுக்கறதக் கொஞ்சம் சந்தோஷமா கொடுக்கலாம்ல, ஏன் இண்டரஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?

ஒருவர்: ஜாக்கிரதையா இல்லைனா வேற எவனாவது நம்ம செக்ல கையெழுத்து போட்டு பணத்தை எடுத்திருவான்.
மற்றவர்: வேற யாரும் கையெழுத்து போட்டுடக்கூடாதுன்னுதான் நானே எல்ல செக்லயும் கையெழுத்து போட்டு வெச்சுட்டேன், பணம் எடுக்க வசதியா!

ஏங்க அடிக்கடி சமயல்கட்டு பக்கம் போறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்கச்சொன்னார்.

ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன், ஆசீவாதம் பண்ணு பாட்டி!
பாத்து மெதுவா ஓடு, வேகமா ஒடிக் கையைக்கால ஒடிச்சுக்கப்போறே!

அப்பா: டேய் ஏண்டா இன்டர்வியூக்கு போகல?
மகன்: நீங்கதானப்பா நாலுபேர் கேள்வி கேட்கிறமாதிரி நடந்துக்கக் கூடாதுன்னு சொன்னீங்க?

பையன்: அப்பா நாம நாளயிலேர்ந்து பணக்காரராயிடலாம்!
எப்படிடா?
எங்க கணக்கு வாத்தியார் பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு நாளைக்கு சொல்லித்தரப்போறார்.

டைம் இஸ் கோல்டுன்னா ஏன் நீ ஒத்துக்கமாட்டேங்கற?
அதை அடமானம் வெக்கமுடியாதே!

*****
 
Sorry i tried to type in tamil but did not succeed. Let me know how to do that, but here is a good one from my side..
cheers:

Hassan and Habib are beggars.
They beg in different areas of Britain.
Habib begs just as long as Hassan but only collects£2 to £3 every day.

Hassan brings home a suitcase FULL of £10 notes, drives a Mercedes,
lives in a mortgage-free house and has a lot of money to spend.

Habib says to Hassan, 'I work just as long and hard as you do but how
do you bring home a suitcase full of £10 notes every day?'

Hassan says, 'Look at your sign, what does it say ?'

Habib's sign reads; 'I have no work, a wife and 6 kids to support'.

Hassan says, 'No wonder you only get £2-£3 !'

Habib says... 'So what does your sign say ?'

Hassan shows Habib his sign....

It reads: 'I only need another£10 to move back to Pakistan
 
நீதிபதி: நீ இரண்டாம் கல்யாணம் பண்ணியதற்கான குற்றம் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப் படவில்லை.எனவே உன்னை விடுதலை செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்:: எந்த வீட்டுக்குங்கய்யா?
dear mahakavi !
it is like the joke in of kamalfilm
the wife was telling that there is a prostitude in their colony and heard only one man not had contact with that lady.the husband will ask the wife "who will be that man ?"
guruvayurappan
 

For the benefit of members who wish to learn to type Tamil Fonts .... re-post :D


தமிழில் எளிதாய் எழுத.......

உங்களிடம் G mail இல்லாவிட்டால் Type in Tamil - Google Transliterationஎன்னும் பக்கத்தைத் தேடி எடுங்கள்.

வரும் பக்கத்தில் ஆங்கிலத்தில் தமிழ்ச் சொற்களை எழுதவும்!

ammaa, aadu, ilai, ee, ural, oosi, eli, என்பது போல

ஆங்கிலத்தில் எழுதிவிட்டு space bar தட்டினால் தமிழ்ச் சொற்கள் வரும்.

Back space இன் பயன்பாடும் உண்டு.

சொற்களின் எழுத்துக்கள் மாறுபட்டால், (அம்மா, அம்ம என்பதுபோல) backspace தட்டினால் ஒரு பட்டியலில் தெரியும்.

வேண்டிய சொல் மேல் சொடுக்கினால் அது வந்துவிடும்.

ஒரு உதாரணம் ஏணி....

eni அடித்துவிட்டு back space போட்டால் இதற்கு இனி, ஏணி, எனி, எனை, எணி, eni பட்டியல் வரும்! இதில் தேர்வு செய்யலாம்.

aiyan = ஐயன் awvai = ஔவை akthu = அஃது

உங்களிடம் G mail இருந்தால், இன்னும் எளிது!

Compose mail பக்கத்தில் இடது ஓரத்தில் 'அ' மீது கலர் இருக்கும்படி சொடுக்கவும் (click! )
{ இது B என்பதற்கு இடப்பக்கம் இருக்கும் }

மேற்கண்ட விதத்தில் தட்டெழுதவும்.

இடையிடையே ஆங்கிலம் எழுத மீண்டும் 'அ' மீது சொடுக்கிக் கலர் இல்லாது செய்ய வேண்டும்.

கலர் இருந்தால் தமிழ் ... இல்லாவிடில் ஆங்கிலம் ஆகும்.

வேண்டியவை தட்டெழுதிய பின், வேண்டிய இடத்தில் copy paste செய்யலாம்.

முயன்றால் முடியும் எளிதில்!

ராஜி ராம்.
 
கடித்துக் குதறுவதில் ஒரு மாமா வல்லவர். இதோ ஓர் உரையாடல்:

பெண்: மாமா! மாம்பழம் நறிக்கிப் போடவா?


மாமா: நரிக்கு ஏம்மா போடறே! எனக்கே போடேன்!
:heh:

என் அப்பா சொன்னாரே நீங்க ரொம்ப தந்திரமான பேர்வழி என்று, அதனால் தான் கேட்டேன்:eyebrows:
 
கண்ணுக்கு உகந்தது கார்ட்டூன், காதுக்கு உகந்தது கடிஜோக்ஸ்;
பல்லுக்கு உகந்ததா என்றால் பல்லைப் பொறுத்தது!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்கிலும் அப்பொருளின்
மெய்ப்பொருள் நெட்டில் தேடுவது அறிவு.

பழக்க தோஷத்திலே என்னுடைய சுயசரிதம் நூல்லே ஒரு வரி எழுதினதால விற்கவே இல்லை!
என்ன வரி?
இது என் சொந்தக்கற்பனைனு எழுதிட்டேன்.

எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்துவிழுந்து படிக்கறே?
நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!

எங்க ஆஃபீஸ்ல மேனேஜர் இருக்காருங்க, நாலு கிளார்க் இருக்காங்க.
எதுக்கு இதெல்லாம் எங்கிட்ட சொல்லறீங்க?
நீங்தானே யாராவது படிச்சிட்டு வேலையில்லாம இருந்தா சொல்லச்சொன்னீங்க!

வகுப்பறையில் ஒரு மாணவன்: போடா முட்டாள்!
மற்றொரு மாணவன்: நானாடா முட்டாள், நீதாண்டா முட்டாள்.
ஆசிரியர்: என்ன சத்தம் அங்கே? நான் ஒருத்தன் இங்க இருக்கறதையே மறந்துட்டீங்களா?

ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?
தெரியலையே?
நான் பார்க்க நான் பார்க்க நான்.

லாண்டரியில் வேட்டி கடனுக்கு வாங்கவந்த ஒருவர் பக்கத்தில் நின்றிருந்தவருடைய வேட்டியைத் தவறுதலாக எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். இதை சற்றுத் தாமதமாகக் கவனித்த கடைக்காரர் எதிரில் போய்க்கொண்டிருந்தவரை நோக்கிச் "சார் சார், வேட்டி அவருது சார்" என்று உரக்கக்கத்தினார். போய்க்கொண்டிருந்தவர் தன் இடுப்பு வேட்டியைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு ஓடியே போய்விட்டார்!

மேட்டூர் நீர்மேல இந்த பத்திரிகைக்காரங்களுக்கு அப்படி என்ன கோபம்?
ஏன்?
மேட்டூர் நீர் மட்டம்னு தினமும் போடறாங்களே!

நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டையாமே?
ஆமா ஆன்டி...
முதல்ல என்கிட்டேயில்லை கேக்கணும்?
உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!

*****
 
Recycled from the net.

ப்ரியா : அப்பா , நான் அருண லவ் பண்றேன். அவன் இல்லாடி உயிர் வாழ முடியாது..
அப்பா : சரி .. சாகும் போது என்ன நாமினியா போடு . உன் தங்க கல்யாணதுக்கு உதவும்.

அருண் : என் கிட்ட என்ன குறை கண்ட ?
ப்ரியா : உன்னோட பாங்க் பாலன்ஸ் தான்.

தாத்தா : ஏன்டா ரகு, அருண் பெயில் (fail) ஆனதுக்கு ஏண்டா இப்படி திட்டற? ஊர்ல யாருமே பெயில் ஆனது இல்லயா?
அருண் : நல்ல கேளுங்க தாத்தா .
ரகு ( அப்பா) : பெயில் ஆனது பெரிய விஷயம் இல்ல .. ஆனா கொஸ்டின் பேப்பர் ஔட் ஆன எஃஸாம்ல கூட பெயில் ஆனா எப்படி எடுதுக்கறது ?

ப்ரியா : அருண் , நேத்திக்கு நீ ரம்யா கூட தனியா இங்கலிஸ் சினிமா போனியா ?
அருண் : பச்ச பொய் .. என்ன பிடிக்காத யாரோ சொலியிருக்காங்க...நான் இங்கலிஸ் படமே போனது இல்ல ..

தாத்தா : டேய் அருண் , நான் போனதுக்குப்புறம் இந்த தங்க செயின் உனக்கு தான்
அருண் : தாத்தா , எனக்கு தங்க செயின் ரொம்ப பிடிக்கும். அது சீக்கிரமா கிடைக்க வழி பண்ண முடியுமா ?
 
[FONT=&quot]பிடெல் காஸ்ட்ரோ நாலு மணி நேரமாக பேசிக்கொண்டிருந்தார். பேசுவதை நிறுத்தாமலே ஒரு துண்டு காகிதத்தில் " வரிசை 8 ----

4 வது மனிதர்" என்று
[/FONT]

[FONT=&quot][/FONT]
[FONT=&quot][/FONT]
[FONT=&quot]
எழுதி
[/FONT]
[FONT=&quot]செயலாளரிடம் கொடுத்தார். போலீஸ் வந்து அந்த ஆளை வெளியே அழைத்துச் சென்றனர். சேர்மன் பிடெளைப

பாராட்டினார், "எப்படி அந்த
[/FONT]

[FONT=&quot][/FONT]
[FONT=&quot][/FONT]
[FONT=&quot]
துரோகியைக் கண்டுபிடித்தீர்?". "சுலபம்" காஸ்ட்ரோ சொன்னார் " லெனின் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறேன்,

சோஷலிசத்தின் பகைவர்கள் ஒரு
[/FONT]

[FONT=&quot][/FONT]
[FONT=&quot][/FONT]
[FONT=&quot]
போதும் தூங்குவதில்லை".
[/FONT]

[FONT=&quot][/FONT]
 
ஒரு பணக்காரர் இறக்கும் தறுவாயில் தன்னுடைய பாதிரி, மருத்துவர், வக்கீல் மூவரையும் கூப்பிட்டு ஒவ்வொருவரிடமும் முப்பதாயிரம டாலர் கொடுத்து என்னுடைய பிணப்பெட்டியில் வையுங்கள். நான் அவற்றை என்னுடன் எடுத்துச் செல்லப்போகிறேன் என்றார். அப்படியே அவர் இறந்தவுடன் பாதிரி 20000 டாலரை போட்டுவிட்டு 10000 டாலரை தன்னுடைய சர்ச்சுக்கு வைத்துக் கொண்டார். டாக்டர் 10000 பெட்டியில் போட்டுவிட்டு 20000 டாலரை மருத்துவ ஆராய்ச்சிக்கு வைத்துக்கொண்டார். ஆனால் வக்கீல் மட்டும் நாணயமாக முழு 30000 டாலரையும் பிணப்பெட்டியிலேயே போட்டுவிட்டார் (மொத்தமாக ஒரே செக்காக எழுதி ). இப்போது புரிகிறதா வக்கீல்கள் நாணயச்தர்கள் என்று?
 
ஏனுங்க லட்சத்துக்கு எத்தினி சைபரு?
அது தெரிஞ்சா நான் ஏன் கோடீஸ்வரனா இருக்கேன்?

டாக்டரோட வீட்டில முன்னாடி வேலைபார்த்தேன்னு சொல்றீங்களே? சர்டிபிகேட் ஏதுமிருக்கா?
அவரோட ஸ்டெதாஸ்கோப்பே இருக்கு சார்.

(புயல் மழையில் ஒருவன் பிட்ஸா வாங்கக் கடைக்குப் போகிறான்.)
கடைக்காரர்: சார் உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுத்தா?
வந்தவர்: பின்ன! இந்தப் புயல் மழையில எங்கம்மாவா என்னை பிட்ஸா வாங்க அனுப்புவாங்க?

என்னதான் நீங்க சென்டிமென்ட் பார்த்தாலும், கப்பல் கிளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்கமுடியாது. சங்கு ஊதிட்டுதான் கிளம்பனும்.

எதுக்காகத் தைலடப்பாவைத் தடவிக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர்தான் தலைவலிக்கு இதைத் தடவச் சொன்னார்.

காது கேட்கலைன்னுதானே சொன்னீங்க... கண்ணாடி போட்டுட்டு வர்றீங்க?
தெரியாத்தனமா கண்டாக்டர்கிட்ட போயிட்டேன்.

சிங்காரச் சென்னையை ரீங்காரச் சென்னைன்னு மாத்தனும்னு அவங்க போராட்டம் நடத்தறாங்களே, ஏன்?
சென்னை முழுக்கக் கொசுத்தொல்லை அதிகமா இருக்கற காரணத்தினாலேதான்.

என்ன கல்யாணப்பெண்ணோட கழுத்து, காது, கையிலேயெல்லாம் பூவைச்சுத்தி அனுப்பியிருக்காங்க?
பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தால் போதும்னு சம்பந்தி வீட்டுல சொல்லி இருந்தாங்களாம்.

தன்னோட கட்சி ஆட்சி அமைக்கும்கிற நம்பிக்கை தலைவருக்கே இல்லைன்னு எப்படிச் சொல்றே?
ஊழல் அற்ற ஆட்சி அமைப்போம்னு வாக்கு தர்றாரே!

தமிழர்களின் துயரத்தில் நானும் பங்கு எடுத்துக்கொள்கிறேன்...
சொன்னேன்ல, நம்ம தலைவர் எதுலயும் பங்கு எடுத்துக்காம விடமாட்டார்னு!

*****
 
1. ஒரே தப்பை நீங்க ரெண்டு பேரும் செஞ்சிருந்தாலும், உன் அம்மா உன்னை
விட்டுட்டு, உன் அக்காவை மட்டும் ஏன் அடிக்கறாங்க?''
''அவ எங்க பாட்டி சாயல்ல இருக்கிறாளாம்!''
2. ''என்ன பாட்டி, கதையைப் பாதியிலே நிறுத்திட்டு 'ஹார்லிக்ஸ்' குடிக்கறே?''
''இது விளம்பர இடைவேளைடா செல்லம்!''
3. ''என் மாமியார் ஆனாலும் ரொம்பப் பொல்லாதவங்க.''
''நிஜமாவா?''
''ஆமாம்! டி.வி. சீரியல்ல வர்ற மருமகளைத்கூடத் திட்டுவாங்கனா பாரேன்...''
4. ''டாக்டர் எதுக்கு இத்தனை மாத்திரை எழுதியிருக்கீங்க..?''
''ஏதாவது ஒரு மாத்திரையில் உங்க வியாதி குணமாயிடும்னுதான்...''
5. ''உங்க படத்தை மூணு தடவை பார்த்துட்டேன். கதை என்னன்னு புரியமாட்டேங்குதே!''
''நீங்க சொல்றதுதான் பெரிய கதையா இருக்கு. என் படத்துலதான் கதையே கிடையாதே!''
 
6. ''சாகும்வரை உண்ணாவிரதம்னு சொல்லிட்டு ரெண்டே நாள்ல உண்ணாவிரத்தை
முடிச்சுக்கிட்டாரே தலைவர்?''
''நிருபர்கள் கேட்டதுக்கு, 'சாகும்வரை அடிக்கடி இந்த மாதி உண்ணாவிரதம்
இருப்பேன்'னுதான் சொன்னாராம்!''
7. ''எனக்கு அடுத்த வாரம் கல்யாணம் அவசியம் வந்துடுங்க.''
''உங்களுக்கு ஒரு ஆபத்துன்னா வராம இருப்பேனா?''
8. ''இந்த டானிக்கை தொடர்ச்சியா குடிச்சு வந்தா 'தண்ணியடிக்கிற பழக்கமே
வராது.''
''ஊறுகாயை 'தொட்டுக்கலாமா' டாக்டர்?''
9. ''டாக்டர் பட்டம் வாங்கின நமது தலைவர் ஏன் பயப்படுகிறார்?''
''போலி டாக்டர்களையெல்லாம் கைது பண்றாங்களே, நம்மையும்
பண்ணிடுவாங்களோன்னுதான்.''
10. ''ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படித் தங்க முடியும்? கொஞ்சம்
பெரிசா பாருங்களேன்!''
''யோவ், இது 'லிஃப்ட்'யா. ரூம் மாடியில இருக்கு!''

நன்றி: ஆனந்த விகடன் கல்கி. கலைமகள் இருந்து திரட்டியது
 
அன்பிற்குரிய ராஜி ராம் அவர்களுக்கு !
ஜிமெயில் மூலம் கோப்பி மற்றும் பேஸ்ட் முறையில் தமிழில் கடிதம் நமது போரத்தில்
எழுதலாம் என்பதை விளக்கியதற்கு மிக்க நன்றி .அழகி மூலம் முயன்று தோல்வி
குருவாயுரப்பன்
 
சபாஷ், சரியான போட்டி! இதோ என்னும் சில கடிகள்...

மன்னர் எதுக்கு போர்க்களத்தில் சாக்கடைக்கால்வாய் வெட்டச்சொல்கிறார்?
எதிரிப் படைகளைக் கொசுப்படை கொண்டு விரட்டப்போகிறாராம்!

டாக்டர் இந்த மருந்துக்கு சைட்-எஃபெக்ட் இருக்காதுன்னு சொன்னீங்க, ஆனா வயிறு வீங்கிப்போச்சே?
வயிறு நடுவிலதானே இருக்கு, சைட்ல இல்லயே?

வைக்கோல் சாப்பிட்டா கண்பார்வைக்கு நல்லது.
சும்மா அளக்காதே!
உண்மையாத்தான் சொல்றேன், எந்த மாடாவது மூக்குக்கண்ணாடி போட்டிருக்கா?

என்பிள்ளக்குக் கண்ணைத் திறந்துவிட்டவர் அவர்தான்.
அவனோட காலேஜ் புரொபசரா?
இல்லை, அவனுக்கு முடி வெட்டிவிட்டவர்.

இனி ஒரு விதி செய்வோம்னு தலைவர் முழங்கறாரே, எதுக்காம்?
எல்லா விதிமீறல்களையும் செஞ்சிட்டாராம், இனிமேல் விதி புதுசா செய்தால்தான் உண்டு.

என்னது, அவர் ரெண்டு சுயசரிதை எழுதியிருக்காரா?
ஆமாம், அவருக்கு ’ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி’ நோய் இருக்கே!

காதலிச்ச உங்களைக் கைவிட முடியலை.
அதனாலே?
கல்யாணம் பண்ணிகிட்டு டைவர்ஸ் பண்ணப்போறேன்.

என் கணவர் எப்போதுமே டாக்டர் அட்வைஸ்படிதான் நடப்பார்.
அட, நடக்கறதுக்குக்கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன?

உங்க பையன் படிப்பில இவ்வளவு பெரிய சாதனை செஞ்சதுக்கு நீங்க ஊக்குவித்ததுதானே முதல் காரணம்?
தப்பா சொல்றீங்க, பாக்குவித்துதான் என் பையனைப் படிக்க வெச்சேன்.

எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணனுமாம், டாக்டர் சொல்லிட்டாரு!
டாக்டர் இருக்கும்போது எதுக்கு மேஜர் ஆபரேஷன் பண்றாரு?

*****
 
ஒரு பணக்காரர் இறக்கும் தறுவாயில் தன்னுடைய பாதிரி, மருத்துவர், வக்கீல் மூவரையும் கூப்பிட்டு ஒவ்வொருவரிடமும் முப்பதாயிரம டாலர் கொடுத்து என்னுடைய பிணப்பெட்டியில் வையுங்கள். நான் அவற்றை என்னுடன் எடுத்துச் செல்லப்போகிறேன் என்றார். அப்படியே அவர் இறந்தவுடன் பாதிரி 20000 டாலரை போட்டுவிட்டு 10000 டாலரை தன்னுடைய சர்ச்சுக்கு வைத்துக் கொண்டார். டாக்டர் 10000 பெட்டியில் போட்டுவிட்டு 20000 டாலரை மருத்துவ ஆராய்ச்சிக்கு வைத்துக்கொண்டார். ஆனால் வக்கீல் மட்டும் நாணயமாக முழு 30000 டாலரையும் பிணப்பெட்டியிலேயே போட்டுவிட்டார் (மொத்தமாக ஒரே செக்காக எழுதி ). இப்போது புரிகிறதா வக்கீல்கள் நாணயச்தர்கள் என்று?
டியர் மகாகவி !
அந்த வக்கீல் நாணயஸ்தன் தா ன் ஏன் என்றால் செக்கை மாத்தாதது அவர் தப்பில்லை
குருவாயுரப்பன்
 
1. ஒரே தப்பை நீங்க ரெண்டு பேரும் செஞ்சிருந்தாலும், உன் அம்மா உன்னை
விட்டுட்டு, உன் அக்காவை மட்டும் ஏன் அடிக்கறாங்க?''
''அவ எங்க பாட்டி சாயல்ல இருக்கிறாளாம்!''
''

Note: Here pATTi means paternal grandmother (the mother's mother-in-law). If the akka looked like her own mother she would not punish her (akkA)
 
டியர் மகாகவி !
அந்த வக்கீல் நாணயஸ்தன் தா ன் ஏன் என்றால் செக்கை மாத்தாதது அவர் தப்பில்லை
குருவாயுரப்பன்

புரியாமல் பேசுகிறீர். வக்கீலுக்குத் தெரியாதா அந்த செக் மரண லோகத்தில் செல்லாது என்று?

அப்படியே அந்த செக்கை காஷ் செய்ய முயன்றாலும் வக்கீல் "ஸ்டாப் பேமென்ட்" போட்டு விடா மாட்டாரா?

 
அன்பிற்குரிய ராஜி ராம் அவர்களுக்கு !
ஜிமெயில் மூலம் கோப்பி மற்றும் பேஸ்ட் முறையில் தமிழில் கடிதம் நமது போரத்தில்
எழுதலாம் என்பதை விளக்கியதற்கு மிக்க நன்றி .அழகி மூலம் முயன்று தோல்வி
குருவாயுரப்பன்
சந்தோஷம் குரு சார்! இதை நான் 16 - 11 - 2010 - ல் 'வந்ததை எண்ணி அழவில்லை' என்ற நூலில் எழுதினேன்.

அன்றே Blog செய்திருந்தேன்.
இதோ -
வந்ததை எண்ணி அழவில்லை
'அழகி' மிகவும் படுத்துவாள்! இதோ என் பெயர்: ტ áõ !!!
:bump2:
 
sarang;145711 8. ''இந்த டானிக்கை தொடர்ச்சியா குடிச்சு வந்தா 'தண்ணியடிக்கிற பழக்கமே வராது.'' ''ஊறுகாயை 'தொட்டுக்கலாமா' டாக்டர்?'' [/QUOTE said:
I am reminded of the song "taNNit toTTi tEDi vanda..." song in sindhubhairavi movie where it goes, "UrugAyak koNDA onnaiyum toTTukkarEn". It was gregarious. I am not famililar with the practice in India where they use pickle instead of nuts/snacks to go with the liquor.
 
புரியாமல் பேசுகிறீர். வக்கீலுக்குத் தெரியாதா அந்த செக் மரண லோகத்தில் செல்லாது என்று? ..........
செக்கை 'க்ராஸ்' செய்திருப்பாரே!

எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதைதான்!!
icon14.png
 
11. ''ஏங்க... உங்க வீட்ல ஃபீஸ் போயி ஒரு மாசம் ஆவுது... இப்ப வந்து புகார்
சொல்றீங்களே?''
''ஹி... ஹி! பவர் கட்னு நினைச்சிட்டோம்!''
12. ''தலைவர் ஏன் கோபமா இருக்கார்?''
''அவருக்கு 'லேடி டாக்டர்' பட்டம் குடுத்துட்டாங்களாம்... அதான்!''
13. ''அந்த ஹோட்டல்ல மட்டும் அவ்வளவு கூட்டம் எப்படி?''
'' 'ராசிக் கல் தோசை'ன்னு புது அயிட்டம் ஒண்ணு அறிமுகப்படுத்தி
இருக்காங்களாம்... அதான்!''
14. ''ரயில் விபத்து நடந்ததைப் பார்வையிட நான் போயிருக்க வேண்டும் என்று மக்கள்
சொல்கிறார்களா?''
''இல்லை தலைவரே... விபத்து நடந்த ரயிலில் நீங்கள் போயிருக்க வேண்டும் என்றுதான்
சொல்கிறார்கள்!''
15. ''தலைவருக்குப் பொது அறிவு கொஞ்சம் கம்மினு எதை வெச்சுச் சொல்றே?''
''பின்ன, 'ஆக்டோபஸ்' பெட்ரோல்ல ஓடுமா, பேட்டரில ஓடுமான்னு கேக்குறார்னா
பாரேன்!''
 
சந்தோஷம் குரு சார்! இதை நான் 16 - 11 - 2010 - ல் 'வந்ததை எண்ணி அழவில்லை' என்ற நூலில் எழுதினேன்.

அன்றே Blog செய்திருந்தேன்.
இதோ -
வந்ததை எண்ணி அழவில்லை
'அழகி' மிகவும் படுத்துவாள்! இதோ என் பெயர்: ტ áõ !!!
:bump2:


ராஜிராம்..அவர்களே... இது அழகியில் எழுதியதுதான்...


எனக்கு அழகி எப்போதும் ஆதரவுதான்...


நட்புடன்,


டிவிகே
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top