(இறுதிப் பகுதி)
வெண்டலை யேந்தியே வேல்விழி யாரிடம் வேண்டினனே
பண்டொரு நாள்தனில் பார்த்தனுக் கீந்தனன் பாசுபதம்
தண்டலை யார்மலர் தாங்குத லைதனில் ஆறிழிய
வெண்பொடி கொண்டருள் மேனியன் வெண்ணியில் மேவினனே. ... 9
[வெண்டலையேந்தியே = பிச்சாடனார் கோலத்தில் பிரமனின் தலையோட்டை ஏந்தியே; தண்டலை = சோலை]
சுருதியைத் தள்ளியே சூனியம் பேசிடும் சூதுநெறி
தருவது வாழ்வினில் தக்கதி லையெனத் தள்ளுவராய்
வருவினை வீட்டிடும் வள்ளலின் பூங்கழல் வாழ்த்திடுவோர்
வெருவினை நீக்கவே வெண்ணியில் மேவினன் வித்தகனே. ... 10
[வீட்டுதல் = அழித்தல்; நீக்குதல்]
நினைவுறின் வல்வினை நீங்கிடும் இல்லையேல் நீளுமென
வினவுசம் பந்தரின் விண்டுரை யுள்வரின் வீழலிலை
அனலுறும் கண்ணனை அப்பரும் பாடிய தார்ந்துளத்தில்
வினயமாய் வாழ்த்திட வெண்ணியின் வேந்தனாய் மேவினனே. ... 11
--ரமணி, 09/10/2014
*****
வெண்டலை யேந்தியே வேல்விழி யாரிடம் வேண்டினனே
பண்டொரு நாள்தனில் பார்த்தனுக் கீந்தனன் பாசுபதம்
தண்டலை யார்மலர் தாங்குத லைதனில் ஆறிழிய
வெண்பொடி கொண்டருள் மேனியன் வெண்ணியில் மேவினனே. ... 9
[வெண்டலையேந்தியே = பிச்சாடனார் கோலத்தில் பிரமனின் தலையோட்டை ஏந்தியே; தண்டலை = சோலை]
சுருதியைத் தள்ளியே சூனியம் பேசிடும் சூதுநெறி
தருவது வாழ்வினில் தக்கதி லையெனத் தள்ளுவராய்
வருவினை வீட்டிடும் வள்ளலின் பூங்கழல் வாழ்த்திடுவோர்
வெருவினை நீக்கவே வெண்ணியில் மேவினன் வித்தகனே. ... 10
[வீட்டுதல் = அழித்தல்; நீக்குதல்]
நினைவுறின் வல்வினை நீங்கிடும் இல்லையேல் நீளுமென
வினவுசம் பந்தரின் விண்டுரை யுள்வரின் வீழலிலை
அனலுறும் கண்ணனை அப்பரும் பாடிய தார்ந்துளத்தில்
வினயமாய் வாழ்த்திட வெண்ணியின் வேந்தனாய் மேவினனே. ... 11
--ரமணி, 09/10/2014
*****