• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


For sure we can NOT use 'Google translate' software. :nono:

The first verse,

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.'

is translated like this:

'Adi alphabet first eluttellam
Mutarre pakavan world.'

P.S: This morning I found a new thread asking for 'vatteluttu' and wondered what on earth is வட்டெலுட்டு! :twitch:

Google search helped me later to find வட்டெழுத்து!
icon3.png


 

திருமலைக்கு ஒரு பயணம் - 8

பசி வந்
தால் பத்தும் பறந்துபோம்! அனைவரின்
பசி தீர்த்திட, வைத்த பத்து வகை உணவுகளும்,

பறந்து போயின; பாத்திரங்கள் எல்லாம் காலி!
சிறந்த விருந்தும் முடிந்தது! வழிகாட்டி, 'இனி

திருச்சானூர் செல்ல வேண்டுமா?' என வினவ,
ஒருமனதாக எல்லோரும் வேண்டுமெனக் கூற,

அங்கே சென்று, பத்மாவதித் தாயாரை தரிசித்து,
அங்கேயும் பெற்றோம், பிரசாதமாக ஒரு லட்டு!

இனிய இல்லம் திரும்பப் பேருந்திலே அமர்ந்து,
சிறிய உறக்கத்துடன் பயணித்து வந்து, போரூர்

சந்திப்பிலே இறங்க, இரவு மணி பதினொன்று.
சிந்தித்தேன் இந்த நேரத்தில் எப்படித் துள்ளுந்து

கிடைக்கும் என்று! மலையப்பன் நினைத்தால்
கிடைக்கும் அல்லவா? எங்கிருந்தோ, பெருத்த

ஓசையுடன், புயல் போன்று வந்தது துள்ளுந்து!
ஆசையுடன் ஒரு முதியவர் அருகிலே நிறுத்தி,

சிங்காரச் சென்னை அறிந்திராத மென்குரலில்,
'எங்கே போக வேண்டும் அம்மா?' எனக் கேட்க,

'இருநூறு கேட்டாலும் தரலாமே, இந்த நேரத்தில்
இருவரையும் பத்திரமாக அழைத்துப் போக', என

எண்ணியபடி நான் நிற்க, நூறு ரூபாய் ஆகும் என
கண்ணியமாகக் கூறினார் முதியவர்! விமானம்

பறக்கும் வேகம் போலப் பத்து நிமிடப் பயணமே!
சிறந்த அனுபவம் தந்தது எங்கள் குல தெய்வமே!

திருமலையான் புகழ் வாழ்க! :hail:

 

ஒரு முறை திருமலையில் V I P தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது! அதை எண்ண அலைகளில் பதித்துள்ளேன்.

மீண்டும் இங்கு பதிவு செய்வேன், நாளை! :typing:
 

திருமலையில் ஒரு சிறப்பு தரிசனம்!


இறையருளும் குருவருளும் கூடியதால் வந்தமைந்த
நிறைவான எங்கள் சுற்றத்தார் வீட்டுத் திருமணம்.

திருப்பதியில் நடப்பதால் எங்களில் ஒரு சிலர் மட்டும்
திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் ஒருவர் உதவியுடன்,

விரும்பும் குல தெய்வத்தைத் தரிசிக்க ஏற்பாடு நடக்க,
'கரும்பு தின்னக் கூலியா?' என விரைந்தோம் மனம் துடிக்க!

'நீராட நேரமில்லையே! காலைக் குளியலே போதுமே!' என
வாதாடும் மனத்துடன் உடன்பாடு செய்து கொண்டு,

பேருந்துப் பயணம் குலுக்கியும், அலுங்காதிருந்த உடையிலே
சீருந்தில் ஏறினோம் ஏழுமலையானைக் கண்டு களிக்க!

அம்புபோலப் பறந்தது வண்டி; மாலை ஆறுமணிக்குத் திருமலை.
தெம்பு தரும் A C அறையில் கொஞ்சம் ஓய்வு மிகவும் திருப்தி!

சுத்தமான அந்த அறையில் உடனிருந்த குளியலறை;
சத்தம் போடாமல் சிலர் உறங்க, மற்றவர் அமர்ந்திருக்க,

மேலை நாட்டு வகையில் அமைந்த அதிவேகச் சுடுநீரில்,
காலை நன்கு காட்டியதும், பறந்தது பயணக் களைப்பு!

சிறு பிள்ளையின் ஆர்வத்தோடு மன மகிழ்ச்சி பொங்க,
பெருமானைக் காண ஆவலுடன் புறப்பட்டோம் அனைவரும்.

கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓய்வு, என்று படிப் படியாக,
நெஞ்சம் கவர் வேங்கடத்தான் திசை நோக்கி நடந்தோம்.

பொற்கூரை கண்டதும், மலையப்பன் நெஞ்சில் நிழலாட,
சொற்கள் தேட முடியுமா அவன்தன் புகழ் பாட?

இரண்டு மணி நேரம் மெதுவாக நகர்ந்து, நகர்ந்து சென்று,
திரண்டு வரும் கூட்டம் குறையச் சன்னதி அருகே நின்றோம்!

எத்தனை அழகு மிளிரும் சங்கு போன்ற வடிவ 'கிரில்'கள்!
இத்தனை நாட்கள் கண்களில் படாதிருந்த வடிவங்கள்!

'தயவு செய்து உள்ளே வாருங்கள்' என அழைப்பால் மகிழ,
தயை புரியும் ஐயனைக் காண விரைந்தோம், மனம் நெகிழ!

அடிமேல் அடி வைத்து, வைகுண்ட வாசல் உள்ளே செல்ல,
வடிவழகாய் மேற்புறம் உள்ளன தசாவதார உருவங்கள்!

மேற்புறம் நோக்கினால், பத்துத் தங்கத் திருமேனிகள்;
உட்புறம் நோக்கினால், வேங்கடத்தானின் திருமேனி!

தங்க மயமாய் எல்லாம் ஒளி வெள்ளத்தால் தகதகக்க,
பொங்கி வரும் பரவசத்தால் உள்ளமெலாம் படபடக்க,

இன்றுவரை கேட்காத PLEASE MADAM என்ற சொற்கள்,
இன்று ஒருபோல எல்லாப் பணியாளரும் உரைக்க,

'கலி நாளுக்கிரங்கிக் கல்லிலே இறங்கி' அருள் தர நிற்கும்
கலி தீர்க்கும் பெருமானின் அருகில் மெதுவாகச் சென்றோம்!

காலில் கஞ்சி கொட்டியதுபோல் விரட்டப்படும் நாட்களில்,
நேரில் நிற்கும் கணப் பொழுதில் என்னதான் காண முடியும்?

திருமேனி முழுதும் கண்டு மகிழ மனம் விழையும்;
திரு முகம் தாண்டிக் கண்கள் கீழே செல்ல மறுக்கும்!

கன்னக் கதுப்புகள் அருகில் கண்டதும் வேறு எந்த
எண்ணம் ஏதுமில்லாது மனம் அதில் லயித்தது.

அருமையான வண்ண மாலைகளில் அவன் ஒளிர்ந்தாலும்,
கருமையான திருமேனியே மிக உயர்வாகத் தெரிந்தது!

கிடைத்த அந்த அரிய வாய்ப்பைக் கொஞ்சமும் நழுவ விடாது,
கிடைத்த மணித் துளிகளில் முழு அழகு கண்டோம் விடாது!

மனம் நிறையத் திருமலையான் தரிசனம் கிடைத்தது.
மனம் முழுதும் அவனின் திரு உருவமும் பதிந்தது!

வெளிப் பிரகாரத்தில் சிறியதாக அமைந்த ஒரு சன்னதியில்
ஒளி நிறைந்த முகத்தினனாம் மணி வண்ணனை ஈன்றவள்!

பிரகாரம் சுற்றி வந்ததும், ஒரு மண்டபத்தில் அமர்த்தி,
பிரசாதம் எமக்குத் தர வேண்டிப் பண்டிதர்கள் நின்றார்கள்!

எதிர் நிற்கின்ற பண்டிதர் வேத கோஷ ஆசீர்வாதத்துடன்,
எதிர்பாரா நிகழ்வாகப் பொன்னாடைகள் போர்த்திவிட,

ஒவ்வொருவருக்கும் அபிஷேக தீர்த்தமும், சந்தனமும்,
வெவ்வேறு பைகளில் பத்து 'சீர்' லட்டுவுடன் கிடைக்க,

'என்றுமில்லாத் திருநாள்தான் இன்று', என மனம் உரைக்க,
அன்று கிடைத்த பாக்கியத்தை என்னவென்று உரைக்க?

இந்திய ஜனாதிபதியும், பிரதமரும் பெறும் பெரும் பேறு
விந்தையாய் எமக்கும் அன்று கிடைத்தும் பெரும் பேறு!

குறையின்றி வாழ்வளிக்கும் குணக் குன்றைக் கண்டு,
நிறைவான மனத்துடன் ஆனந்தித்தோம் அன்று!

:first: . . . :dance:
 

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 1


எவர் சிங்காரச் சென்னைக்கு முதன்முறை வந்தாலும்,

அவர் காண விழைவர், 'உயிர் காலேஜ்'; 'செத்த காலேஜ்'!

உயிருடன் விலங்குகள் உலவுவதுதான், உயிர் காலேஜ்;
உயிரற்ற விலங்குகள் வைக்கப்பட்டது, செத்த காலேஜ்!

மெட்ராஸ் ஜூவாக 1855 -ல் நிறுவப்பட்டு, அதற்குப் பின்,
மெட்ராஸ் சென்னையாகிவிட, நூறாண்டுகளுக்குப் பின்,

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாக உருவெடுத்து,
பெரிய அளவான சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில், பற்பல

விலங்குகளும், பறவைகளும், இயற்கையான சூழலிலே
விளங்குமாறு, இன்று அமைந்துள்ளது வண்டலூரிலே!

வேலை நாளில் சென்றால், கூட்டம் குறைவு என்பதால்,
காலை புறப்பட்டோம், சென்ற வியாழக்கிழமையன்று!

சிற்றுண்டி உண்டு, உற்சாகமாய் அசோக் நகர் சென்று,
சற்று நேரத்தில், ஒரு குளு குளுப் பேருந்து வர, சென்று

அதில் அமர்ந்து, ஒரு சின்ன நோட்டிற்கு இரு சீட்டுக்கள்
எளிதில் எடுத்து, மென்பொருள் பொறியாளர்களுடன்

தலைமுடிகூடக் கலையாது பயணித்து, இறங்கினோம்,
அலை மோதும் கூட்டமே இல்லாத அந்தப் பூங்காவில்!

ஒரு கல் யானை அழகாகக் கட்டியம் கூறி அங்கு நிற்க,
இரு நுழைவுச் சீட்டுக்கள் வாங்கி, நுழைவு வாயிலிலே

நீர் கொட்டாத நீர்வீழ்ச்சியைப் பார்த்து, உள்ளே செல்ல,
நீரில் அளைந்து மகிழ்ந்தன வெண்வாத்துக்கள், மெல்ல!

பாட்டரி காரில் செல்லலாம் என்று தீர்மானித்து, அந்த
பாட்டரி காரிலே காத்திருந்தோம், ஒன்பது பேருக்காக!

தொடரும் .................... :car:
 
Last edited:

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 2


பன்னிருவர் அமரும் பாட்டரி ஊர்தி அது! ஓட்டுனர்

பதினோரு பேர் வந்ததும், டிக்கட் தருவதாகக் கூற,

எங்களை தவிர இன்னும் எட்டுப் பேர் வந்து ஏறிட,
எங்கள் தேவை இன்னும் ஒருவர்; காத்திருந்தோம்.

அழகில்லை வாத்துக்கள் என்போர், அன்னம்போல்
அழகான கழுத்துடன் வெண்வாத்துக்கள் கண்டால்,

எண்ணத்தையே மாற்றிக்கொள்வர்; அன்று அங்கு
கண்களைக் கவரும் வண்ணம் அவை விளங்கின.

நீர் குடித்தும், இறக்கைகளை விரித்தும், மெதுவாக
நீரில் மிதந்தவாறு நகர்ந்தும் மனதை மகிழ்வித்தன.

முப்பது நிமிடங்களில் இன்னொருவர் வந்து ஏறிட,
அப்போது டிக்கட் வழங்கப்பட்டு, வண்டி புறப்பட்டது.

இதோ உள்ளன குரங்குகள், அதோ உள்ளன கரடிகள்
இதோ காட்டுக் கழுதைகள் என்று கூறிய, ஓட்டுனர்

புலிகள் இருந்த இடத்தில் நிறுத்தினார். அங்கு ஒரு
புலி மட்டுமே கண்ணிலே பட்டது! சில வினாடிகள்

தரிசனம் தந்த அது, மரத்திடையே மறைந்தது! ஒரு
அரிமா தன் துணையுடன் எதிர்ப் பக்கக் கூண்டிலே,

தன் வாலை ஆட்டியவாறு படுத்திருந்தது. அதையே
என் காமராவில் சிறைப் பிடித்து வந்தேன். அதையே

'பிக்காஸா'வில் இட்டு எடிட் செய்தால், படம் மிகவும்
பக்கத்தில் போய் எடுத்ததுபோலவே ஏமாற்றலாமே!

புலி மீண்டும் எழுந்து வந்து ஒரு 'போஸ்' கொடுத்தது!
எளிதாகப் புகைப்படம் எடுக்கும் வழியைச் செய்தது!

தொடரும் ...................
 
Last edited:

புலி மீண்டும் எழுந்து வந்து ஒரு 'போஸ்' கொடுத்தது! - A zoom shot from a long distance and edited in Picasa!

IMG_3716.JPG
 
Hello RR Mam ,wow ,such a wonderful way ,style of narrating is simply superb. One can feel, imagine the presence of the place you have describe.Keep rocking mam.:cheer2:
 
Have you got the permission to bring tiger inside the forum? I enjoy reading your payanakkavidhaigal and you are taking us with you to the place with the beautiful supporting of pictures. Kindly continue this technique for all the places where ever you visit..
 

Dear Dr. Narayani and S. R. Sir,

Very glad to note that you enjoy reading the write-ups. I should thank my son for presenting me a better camera recently.

The pictures are clear and editing in Picasa software makes them appear as if they are close-up shots! Could anyone go so

near the tiger? It was actually standing about 60 feet away! :D
 
Dear RR madam when you go next time to Tirupati by steps, you can capture beautiful scenaries on your way. There is a deer park on the way and once we have seen a big deer standing in the foot steps. Many times they come closer to eat things given by passer by. I wish you should make a trip abroad and post good snaps in the forum for members.
 
...... I wish you should make a trip abroad and post good snaps in the forum for members.
Dear Sir,

Please do not say that you feel bored to view the earlier pages! I started this thread with my write-up about my trip to Malaysia.

I have also written about all the three visits to the USA. You can read about a few trips in India also in this thread. My humble

suggestion is this: Please start from the first page of this thread and read about two or three pages / day!

Thank you. :)
 

நீர் குடித்தும், இறக்கைகளை விரித்தும், மெதுவாக

நீரில் மிதந்தவாறு நகர்ந்தும், மனதை மகிழ்வித்தன.


IMG_3702.JPG
 

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 3


அருகில் இருந்த பெரிய மான் கூட்டம், தாகம் தீரப்

பருகி நின்றன நீரை, ஒரு பெரிய தொட்டியிலிருந்து.

புள்ளி மான்களினருகில் வண்டி நிற்கவில்லை; அக்
கொள்ளை அழகைப் படம் பிடிக்க இயலவில்லை!

பல விலங்குகளின் இருப்பிடங்களிலே நிறுத்தாது,
சில இடங்களில் மட்டுமே வண்டி நிறுத்தப்பட்டது!

வெள்ளைப் புலிகள் சில மர நிழலிலே படுத்திருக்க,
வெளியே நடை பயின்ற ஒன்றுதான் தலைவனோ?

சுற்றியுள்ள அகழி இருந்தது சின்னப் பள்ளமாகவே!
வெற்றியுடன் புலிகள் வெளி வருமோ என்று ஐயம்!

வெய்யிலின் தாக்கம் அதிகமிருக்க, விலங்குகளை
வைத்த இடங்களும் பரந்து விரிந்து கிடக்க, அவை

உண்ட மயக்கத்தோடு ஏதோ மூலைகளிலே படுக்க,
கண்களில் சில வகை விலங்குகள் தெரியவில்லை!

பாம்பு வகைகள் இருந்த கண்ணாடிக் கூண்டுகளில்,
பாம்புகள் சுருண்டு, தலைகளைக் காட்டாது கிடக்க,

நீண்டு கிடந்த பாம்புச் சட்டைதான் காட்டியது, அதன்
நீளம் எத்தனை இருக்கும் என்று! பயமும் எழுந்தது!

'ஒத்தைச்சக்கி ஓணான் தின்னி' எனக் கேலி செய்வர்!
ஒத்தைச்சக்கியாக அங்கு ஒரு ஓணானே உலவியது!

நீரில் மிதந்து வாழ்வை அனுபவித்தன, ஒரு ஜோடி
நீர் யானைகள், கவலையே இல்லாது! அருகிலேயே

யானைகளின் இருப்பிடம்; அவைகள் நீராடுவதை
யாவரும் காணலாமாம் மாலை மூன்று மணிக்கு!

தொடரும் ....................
 

சுற்றியுள்ள அகழி இருந்தது சின்னப் பள்ளமாகவே!
வெற்றியுடன் புலிகள் வெளி வருமோ என்று ஐயம்!

IMG_3727.JPG
 

Latest ads

Back
Top