• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2

Status
Not open for further replies.
நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2

pirai-sudi.jpg
Hindu God Shiva with crescent moon ( in Tamil Pirai Soodi)
நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2

(நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு Part -1 என்ற எனது முந்திய கட்டுரையைப் படித்துவிட்டு இதனைப் படிக்கவும்:லண்டன் சுவாமிநாதன்)


பிரிட்டிஷ் மஹாராணியின் பேரன் வில்லியத்துக்கு ஆண் குழந்தை பிறந்த (July, 2013) நாளன்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒரு செய்தி வெளியிட்டன. அது மேலை நாடுகளில் சந்திரன் பற்றிய நம்பிக்கை என்ன என்பதைக் காட்டுகிறது. பௌர்ணமியை ஒட்டி புதிய ராஜா பிறப்பார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று மகப்பேறு தாதிமார்கள் கூறினர்.


பிரிட்டனில் பிரசவ ஆஸ்பத்திரிகளில் வேலை பார்க்கும் தாதியர் இப்படி அலுத்துக் கொள்வார்களாம்: ‘’அடடா! இன்று பௌர்ணமி தினம்! நான் இன்று சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டும். இன்று மிகவும் வேலை வரும்”. அதாவது பௌர்ணமி என்றால் அதிகம் குழந்தைகள் பிறக்கும் என்பது மேலை நாட்டார் நம்பிக்கை. கடல் அலைகள் பௌர்ணமி அன்று பொங்கும், அது போல தாய்மார்களின் கருப்பையில் குழந்தையைச் சுற்றி இருக்கும் நீரும் (பனிக்குடம்) பொங்கி குழந்தையை விரைவில் வெளியே தள்ளும் எனபது இதன் பொருள். ஆயினுமிது விஞ்ஞான உண்மையா எனபதை நிரூபிக்க போதுமான புள்ளி விவரம் கிடைக்கவில்லை.


பிராமணர்களும் பௌத்தர்களும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் படிப்பதை விட்டு உபவாசம் இருப்பதில் பொருள் இருப்பதை சமீபத்திய பத்திரிக்கை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அஷ்டமி, சதுர்தசி நாட்களில் பிராமண வேத அத்தியயனம் இருக்காது. இதே போல பவுத்தர்கள் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி தினங்களில் உபோசத் (உபவாசம்) இருப்பார்கள். இந்த நாட்களில் கடல் அலைகளின் சீற்ற்ம அதிகரிப்பதால் மீனவர்கள் கூட மீன் பிடிக்கச் செல்வதில்லை. ஆக கடலில் ஏற்படும் மாற்றம் உடலிலும் உண்டு என்பதை இந்துக்கள் அறிந்திருந்தார்கள். ‘’அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு’’ என்பது இந்துக்களின் கொள்கை.


கடல் அலைகளில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அளந்து பார்த்ததில் பௌர்ணமி நாட்களில் இரு மடங்கு இருப்பது விஞ்ஞானிகளுக்கு வியப்பைத் தந்துள்ளது.( The level of bacteria in water varies with the lunar cycle and highest during a full and new moon, a study of California beaches found). கடலில் வளரும் பவளம் என்னும் பிரணிகளில் இருந்தே நமக்கு நவரத்தினக்களில் ஒன்றான பவளம் கிடைக்கிறது. இந்தப் பவளப்பூச்சிகள் பௌர்ணமி அன்று கோடிக்கணக்கில் முட்டைகளை வெளியிடுகின்றன.

sikh-with-crescent-moon.jpg

A Sikh with crescent moon

பசிபிக் தீவுகளில் வாழும் நண்டுகள் பௌர்ணமி அன்று கோடிக்கணக்கில் குடியேற்றம் செய்கின்றன. ஆக முழு நிலவு எனபது பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்பது உயிரியல் விஞ்ஞானிகள் அறிந்ததே.

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)


சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் முழு நிலவு (பௌர்ணமி) நாட்களில் நித்திரை/தூகம் கெடுவது உண்மையே. மக்களின் ஹார்மோன் அளவை அளந்து பார்த்ததில் ஹார்மோன் அளவு குறைவதும் இதனால் 20 நிமிடம் தூக்கம் குறைவதும் தெரியவந்துள்ளது. (Despite modern comforts, lunar cycles still alter our brain activity. Swiss researchers found hormones which regulate our sleep drop during a full moon, giving us 20 minutes less in the land of nod).


சிலருக்கு நிமிடக் கணக்கில் இல்லாமல் மணிக் கணக்கிலும் போகலாம். மொட்டை மாடியில் சந்திரனுக்கு நேரே தூங்கக்கூடாது என்று பாட்டிமார்கள் சொல்லுவதிலும் உண்மை இருக்கிறது.

இந்த ஆராய்ச்சிச் செய்திகள் அனைத்தும் விஞ்ஞான பத்திரிக்கைகளில் வந்தவற்றின் சுருக்கம். மேலும் விவரம் வேண்டுவோர் New Scientist, Nature பத்திரிக்கைகளில் பெறலாம்.


தமிழில் பிறை வழிபாடு பற்றிய பாடல்கள்: குறு.178, நெடும் பல்லியத்தனார்; குறு. 307-கடம்பனூர் சாண்டில்யன்; அகம் 239,எயினந்தை மகன் இளங்கீரனார்; மதுரைக்கஞ்சி.வரி193,மாங்குடி மருதன்; சிலம்பு 2-38; புறம் 1, பாரதம் பாடிய பெருந்தேவனார்; மு நிலவு-புறம் 60.
cylindersealmoongod.jpg

Moon was worshiped as Nanna in Mesopotamia

ஏற்கனவே ஆங்கிலத்தில் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.
Pictures are taken from various websites; thanks.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top