ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்
ஆனந்த3ரூப (38:1)
ஆனந்த ரூபியாகிய பகவானே! தங்கள் திரு அவதார சமயம் நெருங்கியபோது, தங்கள் திருமேனியில் இருந்து வெளிப்படும் கிரணக் கூட்டங்களை ஒத்த மேகக் கூட்டங்கள், வான வெளியை மறைத்துக் கொண்டு இருக்கும் மழைக் காலமாக இருந்தது.
ஆசா'ஸு சீ'தல தராஸு (38:2)
மழைநீரால் எல்லா திசைகளும் நன்கு குளிர்ந்து, நல்லோர்கள் தாங்கள் விரும்பிய காரியம் கைகூடியதால் ஆனந்த பரவசம் அடைந்தபோது, நடு நிசியில், சந்திரன் உதிக்கும் வேளையில், மூவுலகங்களின் துயர்களைத் துடைக்க வந்த தாங்கள் திரு அவதாரம் செய்தீர்கள்.
பா3ல்வஸ்ப்ருசா' அபி (38:3)
பால பாவத்தை அடைந்திருந்தாலும் ஐஸ்வர்யங்களைத் தரிக்கின்றதும்; ஜொலிக்கின்ற கிரீடம், கை வளைகள், தோள் வளைகள், முத்துமாலைகள் இவற்றால் காந்தியுடன் விளங்குவதும்; சங்கம், சக்கரம், பத்மம், கதை இவற்றுடன் விளங்குவதும்; மேகம் போன்ற நீல நிறத்தை உடையதும் ஆன திருமேனியுடன் பிரசவ அறையில் தாங்கள் விளங்கினீர்கள்.
வக்ஷ:ஸ்த2லீஸு2க நிலீன(38:4)
ஹே வாசுதேவனே ! உங்கள் மார்பில் சுகமாக வாசம் செய்யும் அழகுடைய லக்ஷ்மி தேவியின் வெட்கம் கலந்த கண் பார்வையால், அந்த அறையில் துஷ்டனான கம்சனால் உண்டு பண்ணப்பட்ட அலக்ஷ்மியை நாசம் செய்தீர்கள் நீங்கள்.
சௌ'ரிஸ்து தீ4ரமுனிமண்ட3ல (38:5)
வசுதேவர்,ஞானிகளாகிய முனிவர்களின் புத்திக்கு எட்டாமல் வெகு தூரத்தில் இருக்கும்
தங்கள் திருவடிகளைத் தன் கண்களால் தரிசித்து; ஆனந்தக் கண்ணீர், மயிர்க் கூச்சம், குரல் தழுதழுப்பு இவற்றால் கனிந்து; கண்களுக்குப் பூந்தேன் போன்று இருக்கும் தங்களைத் துதித்தார்.
தே3வ ப்ரஸீத (38:6)
ஸ்வயம் பிரகாசரூபியே! பரபிரம்ம ஸ்வரூபியே! துன்பத் தழைகளை அறுப்பதில் கத்தி போன்றவரே! எல்லோரையும் அடக்கி ஆளுகின்ற, தனது அம்சமான மாயைக் கொண்டு சிருஷ்டி முதலியவற்றைச் செய்கின்ற ஈசா! அருள்வேண்டும். கருணை நிறைந்த கடைக்கண் பார்வையால் வருத்தங்களை அகற்றவேண்டும்" என்றெல்லாம் வசுதேவர் மகிழ்ச்சியுடன் உங்களைத் துதித்தார்.
மாத்ரா ச நேத்ர (38:7)
கண்ணீரால் நனைந்த கொடி போன்ற சரீரத்தை உடைய தாயாலும் புகழ் வசனங்களால் துதிக்கப்பட்டீர். கருணாநிதியாகிய தாங்கள் முந்தைய இரண்டு பிறவிகளிலும் அவர்களின் மகனகப் பிறந்ததைக் கூறினீர். பின்னர் தாயின் சொற்படி மானிடக் குழந்தையின் வடிவை எடுத்துக் கொண்டீர்.
(முந்தைய பிறவிகளில் பிருச்னி சுதபஸ் என்பவர்களுக்குப் பிருச்னிகர்ப்பனாகவும்,
அதிதி கச்யபர்களுக்கு வாமனனாகவும் விஷ்ணு அவதரித்து இருந்தார்.)
தத்ப்ரேரிஸ்தத3னு (38:8)
அதன் பிறகு தங்கள் வசுதேவரை ஏவினீர்கள். நந்தகோபனுடைய பெண்ணுடன் இடம் மாற்றுவதற்கு யோகிகளால் மனத்தில் தரிக்க தகுந்தவரும், தாமரை மலரில் வீற்றிருக்கும் இருக்கும் ஹம்சக் குஞ்சுபோன்ற தங்களை கையில் எடுத்துக் கொண்டார்.
ஜாதா ததா3 பசு'பசஸத்3மனி (38:9)
அப்போது தங்களுடைய ஏவுதலால் நந்தகோபர் வீ ட்டில் அவதரித்திருந்த யோகமாயை பட்டணத்து ஜனங்களை நித்திரையில் ஆழ்த்தினாள். அறிவற்றவைகளும், நன்கு பூட்டப்பட்டு இருந்தவைகளும் ஆகிய கதவுகளும் தாமாகவே திறந்து கொண்டன! என்ன ஆச்சரியம்!
சேஷேண பூ3ரிப2ண (38:10)
அநேகம் படங்களைக் கொண்ட ஆதிசே ஷேன் மழைக்குக் குடை பிடித்தது.
தன் தலைகளில் உள்ள ரத்தினங்களால் வழி காட்டியது. மஹாபாக்கியவனாகிய வசுதேவர்,
எந்தத் தடையும் இன்றித் தங்களை எடுத்துக் கொண்டு சென்றார்.
ஆனந்த3ரூப (38:1)
ஆனந்த ரூபியாகிய பகவானே! தங்கள் திரு அவதார சமயம் நெருங்கியபோது, தங்கள் திருமேனியில் இருந்து வெளிப்படும் கிரணக் கூட்டங்களை ஒத்த மேகக் கூட்டங்கள், வான வெளியை மறைத்துக் கொண்டு இருக்கும் மழைக் காலமாக இருந்தது.
ஆசா'ஸு சீ'தல தராஸு (38:2)
மழைநீரால் எல்லா திசைகளும் நன்கு குளிர்ந்து, நல்லோர்கள் தாங்கள் விரும்பிய காரியம் கைகூடியதால் ஆனந்த பரவசம் அடைந்தபோது, நடு நிசியில், சந்திரன் உதிக்கும் வேளையில், மூவுலகங்களின் துயர்களைத் துடைக்க வந்த தாங்கள் திரு அவதாரம் செய்தீர்கள்.
பா3ல்வஸ்ப்ருசா' அபி (38:3)
பால பாவத்தை அடைந்திருந்தாலும் ஐஸ்வர்யங்களைத் தரிக்கின்றதும்; ஜொலிக்கின்ற கிரீடம், கை வளைகள், தோள் வளைகள், முத்துமாலைகள் இவற்றால் காந்தியுடன் விளங்குவதும்; சங்கம், சக்கரம், பத்மம், கதை இவற்றுடன் விளங்குவதும்; மேகம் போன்ற நீல நிறத்தை உடையதும் ஆன திருமேனியுடன் பிரசவ அறையில் தாங்கள் விளங்கினீர்கள்.
வக்ஷ:ஸ்த2லீஸு2க நிலீன(38:4)
ஹே வாசுதேவனே ! உங்கள் மார்பில் சுகமாக வாசம் செய்யும் அழகுடைய லக்ஷ்மி தேவியின் வெட்கம் கலந்த கண் பார்வையால், அந்த அறையில் துஷ்டனான கம்சனால் உண்டு பண்ணப்பட்ட அலக்ஷ்மியை நாசம் செய்தீர்கள் நீங்கள்.
சௌ'ரிஸ்து தீ4ரமுனிமண்ட3ல (38:5)
வசுதேவர்,ஞானிகளாகிய முனிவர்களின் புத்திக்கு எட்டாமல் வெகு தூரத்தில் இருக்கும்
தங்கள் திருவடிகளைத் தன் கண்களால் தரிசித்து; ஆனந்தக் கண்ணீர், மயிர்க் கூச்சம், குரல் தழுதழுப்பு இவற்றால் கனிந்து; கண்களுக்குப் பூந்தேன் போன்று இருக்கும் தங்களைத் துதித்தார்.
தே3வ ப்ரஸீத (38:6)
ஸ்வயம் பிரகாசரூபியே! பரபிரம்ம ஸ்வரூபியே! துன்பத் தழைகளை அறுப்பதில் கத்தி போன்றவரே! எல்லோரையும் அடக்கி ஆளுகின்ற, தனது அம்சமான மாயைக் கொண்டு சிருஷ்டி முதலியவற்றைச் செய்கின்ற ஈசா! அருள்வேண்டும். கருணை நிறைந்த கடைக்கண் பார்வையால் வருத்தங்களை அகற்றவேண்டும்" என்றெல்லாம் வசுதேவர் மகிழ்ச்சியுடன் உங்களைத் துதித்தார்.
மாத்ரா ச நேத்ர (38:7)
கண்ணீரால் நனைந்த கொடி போன்ற சரீரத்தை உடைய தாயாலும் புகழ் வசனங்களால் துதிக்கப்பட்டீர். கருணாநிதியாகிய தாங்கள் முந்தைய இரண்டு பிறவிகளிலும் அவர்களின் மகனகப் பிறந்ததைக் கூறினீர். பின்னர் தாயின் சொற்படி மானிடக் குழந்தையின் வடிவை எடுத்துக் கொண்டீர்.
(முந்தைய பிறவிகளில் பிருச்னி சுதபஸ் என்பவர்களுக்குப் பிருச்னிகர்ப்பனாகவும்,
அதிதி கச்யபர்களுக்கு வாமனனாகவும் விஷ்ணு அவதரித்து இருந்தார்.)
தத்ப்ரேரிஸ்தத3னு (38:8)
அதன் பிறகு தங்கள் வசுதேவரை ஏவினீர்கள். நந்தகோபனுடைய பெண்ணுடன் இடம் மாற்றுவதற்கு யோகிகளால் மனத்தில் தரிக்க தகுந்தவரும், தாமரை மலரில் வீற்றிருக்கும் இருக்கும் ஹம்சக் குஞ்சுபோன்ற தங்களை கையில் எடுத்துக் கொண்டார்.
ஜாதா ததா3 பசு'பசஸத்3மனி (38:9)
அப்போது தங்களுடைய ஏவுதலால் நந்தகோபர் வீ ட்டில் அவதரித்திருந்த யோகமாயை பட்டணத்து ஜனங்களை நித்திரையில் ஆழ்த்தினாள். அறிவற்றவைகளும், நன்கு பூட்டப்பட்டு இருந்தவைகளும் ஆகிய கதவுகளும் தாமாகவே திறந்து கொண்டன! என்ன ஆச்சரியம்!
சேஷேண பூ3ரிப2ண (38:10)
அநேகம் படங்களைக் கொண்ட ஆதிசே ஷேன் மழைக்குக் குடை பிடித்தது.
தன் தலைகளில் உள்ள ரத்தினங்களால் வழி காட்டியது. மஹாபாக்கியவனாகிய வசுதேவர்,
எந்தத் தடையும் இன்றித் தங்களை எடுத்துக் கொண்டு சென்றார்.
Last edited: