உப நயனம் செய்ய முஹூர்த்தம் பார்க்க வேன்டிய முறை.
உபநயனம்;--
உத்திராயனத்தில் செய்ய வேண்டும்.
தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயணம்.
யஜுர் வேதிகள் சுக்ராஸ்தமனம் இல்லாத காலத்திலும், ருக் வேதிகள் குரு அஸ்தமனம் இல்லாத காலத்திலும், ஸாம வேதிகள் செவ்வாய் அஸ்தமனம் இல்லாத காலத்திலும், செய்ய வேண்டும்.
சுக்கிரன், குரு , செவ்வாய் நீச மில்லா காலங்களிலும் செய்ய வேண்டும்.
வேதம் பயில க்கூடாத நாட்களிலும் உபநயனம் செய்ய க்கூடாது.
உபநயன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் எந்த கிரஹமும் இருக்க கூடாது.
பையனுக்கு சந்திராஷ்டம தினத்திலும் செய்ய கூடாது.
பையனின் சஷ்டாஷ்டக ராசியிலும் லக்னமாக வைக்க வேண்டாம்.
சுக்ல பக்ஷம் சிறந்தது. ஜன்ம சந்திர லக்னங்கள் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும்.
தாரா பலம் சந்திர பலம் நன்றாக உள்ள நாட்களில் செய்ய வேண்டும்.
கசரம் சுத்த மாக இருக்க வேண்டும்.
பஞ்சகம் சுத்தமாக இருக்க வேண்டும்.
கரி நாள் , தனிய நாட்களில் செய்ய கூடாது.
மரண யோகம், உத்பாத யோக நாட்களில் செய்யக்கூடாது.
ஆடி, ஆவணி, புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் செய்யக்கூடாது.
அமாவாசை. பெளர்ணமி, பிரதமை. ரிக்தை ஸப்தமி அஷ்டமி, நவமி த்ரயோதசி, சதுர்தசி ஆகிய திதிகளில் உபநயனம் செய்யக்கூடாது.
பையன் ஜன்ம நக்ஷத்திலிருந்து எண்ணி 2,4,6,8,9 வர வேண்டும்.
1,3,5,7 நக்ஷத்திரங்களில் செய்ய க்கூடாது
அந்தந்த தமிழ் மாத விஷ சூன்ய திதி, நட்சத்திரம் லக்னம் வேண்டாம்.
திதிகளின் விஷ சூன்ய ராசிகளும் வேண்டாம்.
வருஷம், ருது மாதம், திதி, நக்ஷதிரம் முடிவில் செய்யக்கூடாது.
ஒரே நாளில் இரண்டு , நக்ஷத்திரமோ திதியோ உள்ள நாட்களும் வேண்டாம்.
திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் சிறந்தது.
உபநயனம் செய்ய போகும் தமிழ் மாதத்தில் இரண்டு பெளர்ணமியோ அல்லது இரண்டு அமாவாசையோ அல்லது மாதபிறப்பு இரண்டோ அல்லது மாத பிறப்பு இல்லாமலோ இருக்க கூடாது.
திதி , நக்ஷத்திர, லக்ன தியாஜ்யம் இல்லாத லக்னத்தில். உபநயனம் செய்ய வேண்டும்.
பையனின் தாயார் ஆறு மாததிற்கு மேல் கர்பமாக இருந்தால் அந்த பையனுக்கு அப்போது உபநயனம் செய்ய கூடாது.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம்,, பூரம், பூராடம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் உபநயனம் செய்வதற்கு சிலாக்கியமில்லை.,
ஸந்தியா காலங்கள், ராத்திரி, அபராஹ்னம் மலமாசம் சிலாக்கியமில்லை..
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் சுபம்.
ராகு காலம், யம கண்டம், இல்லாமல் இருக்க வேண்டும்.
சுப ஹோரையில் அமைய வேண்டும்.
அக்னி நக்ஷத்திர காலமும் சிலாக்கியமில்லை
வருட, மாத, ருது, முடியும் சமயங்களில் முஹுர்த்தம் வைக்ககூடாது. வருட முடிவிற்கு 15 நாட்கள்; ருது முடிவு 3 நாட்கள், மாத முடிவு 3 நாட்கள் முன்பாகத்தான் முஹுர்த்த நாட்கள் பார்க்க வேண்டும்.
சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் குரு நீசம் என்று வாக்கிய பஞ்சாங்கத்தில் உள்ள தால் உப நயனம் செய்வது சிலாக்கியமில்லை.