Thought for today!

Did youfind this useful Yes - No

  • YES

    Votes: 44 88.0%
  • NO.

    Votes: 6 12.0%

  • Total voters
    50
0
 
மனம் உயர்ந்தால்
சிந்தனை உயரும் !

சிந்தனை உயர்ந்தால்
செயல் உயரும் !

செயல் உயர்ந்தால்
வாழ்க்கை உயரும் !

வாழ்க்கை உயர்ந்தால்
நிம்மதி தானாக வரும் !

அதெல்லாம் சரி ! ! !
மனம் உயர்வது எப்படி ?

தேவையில்லாத சிந்தனைகளை
மனத்திலிருந்து எடுத்தாலே
மனம் தானாக உயரும் !

தேவையில்லாத சிந்தனைகளை
எடுப்பது எப்படி ? ? ?

அது கஷ்டமேயில்லை ! ! !

எப்பொழுதும் பகவானின்
நாம ஜபத்தில் நீ ஈடுபடுவாய் . . .

எப்பொழுதும் முடியாவிட்டால்,
முடியும்பொழுதெல்லாம் நாம ஜபம் செய்வாய் !

சிறிது சிறிதாக உனக்குத் தெரியாமலேயே
நீ நாம ஜபத்தில் உன்னை ஒப்படைப்பாய் !

அப்பொழுது உனக்கு
நாம ஜபம் தொடர்ந்து வரும் !

அதனால் உன் மனதின்
தேவையில்லாத சிந்தனைகள்
தானாக உன்னை விட்டு விலகும் !

நிம்மதி உன்னைத் தேடி வரும் !
இனியும் நிம்மதியைத் தேடி அலையாதே !
 
Back
Top