Thiruppugazh திருப்புகழ்/ வாதம் பித்தம் (பழநி)

Status
Not open for further replies.
Thiruppugazh திருப்புகழ்/ வாதம் பித்தம் (பழநி)

[FONT=TSCu_SaiIndira]வாதம் பித்தம்


[/FONT]
[FONT=TSCu_SaiIndira]வாதம் பித்தமி டாவயி றீளைகள்[/FONT]
[FONT=TSCu_SaiIndira]சீதம் பற்சனி சூலைம கோதர[/FONT]
[FONT=TSCu_SaiIndira]மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம்[/FONT]

[FONT=TSCu_SaiIndira]மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி[/FONT]
[FONT=TSCu_SaiIndira]யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு[/FONT]
[FONT=TSCu_SaiIndira]வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர்[/FONT]

[FONT=TSCu_SaiIndira]சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ[/FONT]
[FONT=TSCu_SaiIndira]டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்[/FONT]
[FONT=TSCu_SaiIndira]சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித்[/FONT]

[FONT=TSCu_SaiIndira]தூசின் பொற்சர மோடுகு லாயுல[/FONT]
[FONT=TSCu_SaiIndira]கேழும் பிற்பட வோடிடு மூடனை[/FONT]
[FONT=TSCu_SaiIndira]தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய்

[/FONT]
[FONT=TSCu_SaiIndira]தீதந் தித்திமி தீதக தோதிமி[/FONT]
[FONT=TSCu_SaiIndira]டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு[/FONT]
[FONT=TSCu_SaiIndira]சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி

[/FONT]
[FONT=TSCu_SaiIndira]சேடன் சொக்கிட வேலைக டாகமெ[/FONT]
[FONT=TSCu_SaiIndira]லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி[/FONT]
[FONT=TSCu_SaiIndira]தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா[/FONT]

[FONT=TSCu_SaiIndira]வேதன் பொற்சிர மீதுக டாவிந[/FONT]
[FONT=TSCu_SaiIndira]லீசன் சற்குரு வாயவர் காதினில்[/FONT]
[FONT=TSCu_SaiIndira]மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே[/FONT]

[FONT=TSCu_SaiIndira]வேஷங் கட்டிபி னேகிம காவளி[/FONT]
[FONT=TSCu_SaiIndira]மாலின் பித்துற வாகிவி ணோர்பணி[/FONT]
[FONT=TSCu_SaiIndira]வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.[/FONT]
 
திருப்புகழ் /நாத விந்து (பழநி)

நாத விந்து கலாதீ நமோநம[FONT=TSCu_SaiIndira]


நாத விந்துக லாதீ நமோநம[/FONT]

[FONT=TSCu_SaiIndira]வேத மந்த்ரசொ ரூபா நமோநம[/FONT]
[FONT=TSCu_SaiIndira]ஞான பண்டித ாமீ நமோநம ...... வெகுகோடி[/FONT]

[FONT=TSCu_SaiIndira]நாம சம்புகு மாரா நமோநம[/FONT]
[FONT=TSCu_SaiIndira]போக அந்தரி பாலா நமோநம[/FONT]
[FONT=TSCu_SaiIndira]நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்[/FONT]

[FONT=TSCu_SaiIndira]சேத தண்டவி நோதா நமோநம[/FONT]
[FONT=TSCu_SaiIndira]கீத கிண்கிணி பாதா நமோநம[/FONT]
[FONT=TSCu_SaiIndira]தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ[/FONT]

[FONT=TSCu_SaiIndira]தீப மங்கள ஜோதீ நமோநம[/FONT]
[FONT=TSCu_SaiIndira]தூய அம்பல லீலா நமோநம[/FONT]
[FONT=TSCu_SaiIndira]தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

[/FONT]
[FONT=TSCu_SaiIndira]ஈத லும்பல கோலா லபூஜையும்[/FONT]
[FONT=TSCu_SaiIndira]ஓத லுங்குண ஆசா ரநீதியும்[/FONT]
[FONT=TSCu_SaiIndira]ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

[/FONT]
[FONT=TSCu_SaiIndira]ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை[/FONT]
[FONT=TSCu_SaiIndira]சோழ மண்டல மீதே மநோகர[/FONT]
[FONT=TSCu_SaiIndira]ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா[/FONT]

[FONT=TSCu_SaiIndira]ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை[/FONT]
[FONT=TSCu_SaiIndira]சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்[/FONT]
[FONT=TSCu_SaiIndira]ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி[/FONT]

[FONT=TSCu_SaiIndira]ஆதி யந்தவு லாவா சுபாடிய[/FONT]
[FONT=TSCu_SaiIndira]சேரர் கொங்குவை காவூர் நனாடதில்[/FONT]
[FONT=TSCu_SaiIndira]ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.[/FONT]
 
ஆழ்வார் அமுதம்

1513787_909968709053463_4185593445170125392_n.jpg



குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி
தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயுலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்கீர் உலகத்தீரே!'

- தொண்டரடிப் பெரியாழ்வார்.
ஆத்ம நமஸ்காரம்.
 
Below one look tough.. but if you read it everyday once for 5 days it is very easy to sing this...
mutthai tharu patthi thirunakai
atthukkiRai satthi saravaNa
mutthikkoru vitthu guru para ena Othum
mukkat para maRku suruthiyin
muRpattathu kaRpith- thiruvarum
muppatthu muvarkkath- thamararum adi pENa
patthuth- thalai thatthak kaNaithodu
otRaig- giri matthaip poruthoru
pattap- pakal vattath- thikiriyil iravaaka
patthaRkira thatthaik kadaviya
pacchaippuyal mecchath thaku poruL
patshatthodu rakshith tharuLvathum oru naaLE
thitthitheya otthap paripura
nirttha paDam vaitthup bayiravi
Dikkotka nadikkak kazhuvodu kazhuthaada
Dikkup pari attap bayiravar
thokkutthoku thokkuth thokuthoku
chithrappavurikkuth thrikadaka ena Otha
kotthup paRai kottak kaLamisai
kukku kukuk kukukuku
kutthip puthai pukkup pidiyena muthukookai
kotputRezha natpatR avuNarai
vetti baliyittuk kulagiri
kutthup pada otthup poravala perumaaLE
 
Hi, you can get it in tamil lyrics itself as below with meaning:
[FONT=TSCu_SaiIndira]முத்தைத்தரு பத்தித் திருநகை[/FONT]
[FONT=TSCu_SaiIndira] அத்திக்கிறை சத்திச் சரவண[/FONT]
[FONT=TSCu_SaiIndira] முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்[/FONT]

[FONT=TSCu_SaiIndira]முக்கட்பர மற்குச் சுருதியின்[/FONT]
[FONT=TSCu_SaiIndira] முற்பட்டது கற்பித் திருவரும்[/FONT]
[FONT=TSCu_SaiIndira] முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்[/FONT]

[FONT=TSCu_SaiIndira]பத்துத்தலை தத்தக் கணைதொடு[/FONT]
[FONT=TSCu_SaiIndira] ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு[/FONT]
[FONT=TSCu_SaiIndira] பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்[/FONT]

[FONT=TSCu_SaiIndira]பத்தற்கிர தத்தைக் கடவிய[/FONT]
[FONT=TSCu_SaiIndira] பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்[/FONT]
[FONT=TSCu_SaiIndira] பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே[/FONT]

[FONT=TSCu_SaiIndira]தித்தித்தெய ஒத்தப் பரிபுர[/FONT]
[FONT=TSCu_SaiIndira] நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி[/FONT]
[FONT=TSCu_SaiIndira] திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்[/FONT]

[FONT=TSCu_SaiIndira]திக்குப்பரி அட்டப் பயிரவர்[/FONT]
[FONT=TSCu_SaiIndira] தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு[/FONT]
[FONT=TSCu_SaiIndira] சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்[/FONT]

[FONT=TSCu_SaiIndira]கொத்துப்பறை கொட்டக் களமிசை[/FONT]
[FONT=TSCu_SaiIndira] குக்குக்குகு குக்குக் குகுகுகு[/FONT]
[FONT=TSCu_SaiIndira] குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

[/FONT]
[FONT=TSCu_SaiIndira]கொட்புற்றெழ நட்பற் றவுணரை[/FONT]
[FONT=TSCu_SaiIndira] வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி[/FONT]
[FONT=TSCu_SaiIndira] குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

[/FONT]
முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி
முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.

[FONT=TSCu_SaiIndira]முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.[/FONT]
 
Status
Not open for further replies.
Back
Top