த3ச’கம் 45 ( 1 to 5)
பா3ல லீலா
அயி ஸப3ல முராரே பாணி ஜானு ப்ரசாரை :
கிமபி ப4வனா பா4கா3ன் பூ4ஷயந்தௌ ப4வந்தௌ |
சலித சரண குஞ்சௌ மஞ்ஜூ மஞ்ஜீர சி’ஞ்ஜா
ச்’ரவண குதுக பா4ஜௌ சேரதுச்’சாரு வேகா3த் ||(45 – 1)
பலராமனோடு கூடிய முராரியே! நீங்கள் இருவரும் தவழ்ந்து செல்வதால் நந்த கோபனுடைய வீட்டின் எல்லா இடங்களையும் இந்த விதம் என்று சொல்ல முடியாதவாறு அலங்கரித்தீர்கள் அல்லவா? சலிப்பிக்கபட்ட பாதாரவிந்தங்களோடு, அழகிய சலங்கையின் இனிய ஓசையைக் கேட்க விரும்பி, இங்கும் அங்கும் வேகமாகவும் சஞ்சரித்தீர்கள் அல்லவா? (45 – 1)
ம்ருது3 ம்ருது3 விஹஸந்தா வுன்மிஷத்3 த3ந்த வந்தௌ
வத3ன பதித கேசௌ’ த்3ருச்’ய பா3தா3ப்3ஜ தே3சௌ’ |
பு4ஜ கலித கராந்த வ்யாலக3த் கங்கணாங்கௌ
மதிமஹரத முச்சை: பச்’யதாம் விஸ்வந்ரூணாம் ||(45 – 2 )
மிகவும் மெதுவாக சிரிக்கும்போது வெளியில் தெரியும் அழகிய பற்கள். திருமுகத்தில் தொங்கும் அழகிய மயிர்க் கற்றைகள் . வஜ்ரம், அங்குசம் இவற்றின் அடையாளங்கள் காணப்படும் அழகிய பாதங்கள். மேல்கைகளில் இருந்து நழுவி விழுந்து மணிக்கட்டுகளில் தங்கும் வளையல்கள் அங்கு ஏற்படுத்தும் அடையாளங்கள். இந்த விதமாக தாங்கள் காண்போர் மனத்தைக் கவர்ந்தீர்கள் அல்லவா? ( 45 – 2)
அனுஸரதி கௌதுக வ்யாகுலாக்ஷே
கிமபி க்ருத நிதா3னம் மா நௌ த்3ரவந்தௌ |
வலித வத3ன பத்3மம் ப்ருஷ்டதோ த3த்த த்3ருஷ்டி
கிமிவ ந வித3தா4தே கௌதுகம் வாஸுதேவ ||(45 – 3)
வசுதேவரின் புதல்வரே! கோகுலத்து ஜனங்கள் குதூகலத்தால் அசையும் கண்களுடன் உங்களைப் பின் தொடர்ந்து வரும்போது, அவ்யக்த மதுரமாகச் சிரித்துக் கொண்டு ஓடுவீர்கள். தாமரை முகங்களைப் பின்புறம் திருப்பிக் கொண்டு நீங்கள் பார்க்கும்போது அவர்கள் எந்த சந்தோஷத்தைத் தான் அடையவில்லை? ( 45 – 3)
த்3ருத க3திஷு பதந்தௌ உத்தி2தௌ லிப்தபங்கௌ
தி3வி முனிபி4ரபங்கை: ஸஸ்மிதம் வந்த்3யா மாநௌ |
த்3ருத மத2 ஜனனீப்4யாம் ஸானுகம்பம் க்3ருஹீதௌ
முஹுரபி பரிரப்தௌ4 த்3ராக்3 யுவாம் சும்பிதௌ ச ||(45 – 4)
வேகமாக ஓடும் போது கீழே விழுவீர்கள். அதனால் மேனியில் சேற்றைப் பூசிக் கொள்வீர்கள். பிறகு எழுவீர்கள். ஆகாயத்தில் களங்கமற்ற முனிவர்களால் வணங்கப்படும் நீங்கள் இருவரும் வேகமாக வரும்போது, தாய்மார்கள் உங்களைக் கருணையுடன் எடுத்து, அணைத்து, முத்தம் இடுவார்கள் அல்லவா? ( 45 – 4)
ஸ்னுத குசப4ரமங்கே தா4ரயந்தீ ப4வந்தம்
தரளமதி யசோ3தா3 ஸ்தன்யதா3 த4ன்யத4ன்யா |
கபட பசு’ப மத்3யே முக்3த4 ஹாஸாங்குரம் தே
த3ச’ன முகுல ஹ்ருத்3யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷ ||(45 – 5)
சஞ்சலமான மனத்துடன், பால் பெருகும் குச பாரத்துடனும், தங்களை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு பால் தருகின்ற யசோதை மிகவும் பாக்கியசாலி. கபடமாக இடையார் வேடம் பூண்ட கண்ணா! பால் குடிக்கும்போது பூ அரும்பு போன்ற பற்கள் தெரியத் தங்கள் புன்முறுவல் செய்யும் போது, தங்கள் திருமுகத்தைப் பார்த்து யசோதை சந்தோஷம் அடைந்தாள் அல்லவா? ( 45 – 5)