உக்ர ரத சாந்தி:-
59 ஆவது வயது முடிந்து 60 ஆவது வயது ஆரம்பிக்கும் தமிழ் மாத பிறந்த நக்ஷத்திரதன்று உக்ர ரத சாந்தி செய்ய வேண்டும்.
சாந்தி குஸுமாகரம் என்ற பழைய க்ரந்த நூலில் உள்ளது.
18 கலசங்கள் அமைக்க வேண்டும்.
1. ம்ருத்யுஞ்சயர். 2. ப்ரஜாபதி. 3. யமன்,. 4, நவகிரஹங்கள்; 5. புண்ணிய நதிகள்.; 6முதல் 13 வரை அஷ்ட திக் பாலகர்கள்.; 14. சிரஞ்சீவிகள். 15.நவதுர்கை.; 16. மஹாகணபதி; 17. விஷ்ணு.; 18 வருணன்.
கலசங்கள் அமைத்துள்ள வேதிகைக்கு மேற்கில் ஹோம குண்டம் நிறுவவும்
வேதிகை மத்தியில் ப்ரதான கலசம். அதற்கு ம்ருதுஞ்சயர் ப்ரதிமை சார்த்தவும்.in gold, silver, or copper..
ப்ரதான கலசத்திற்கு தெற்கே ப்ரஜாபதி; வடக்கே யம தர்ம ராஜா. சுற்றிலும் அந்தந்த திசைகளில் அஷ்ட திக் பாலகர்கள்; அல்லது இதே எட்டு பேருக்குமாக கிழக்கே ஒரு கலசம்; நவகிரஹங்களுக்கு அதி ப்ரதி தேவதையுடன் வடக்கே ஒரு கலசம்.; 7 புண்ணிய நதிகளுக்காக தெற்கே ஒரு கலசம்.
கங்கா, யமுனை, ஸரஸ்வதி, நர்மதை, ஸிந்து, காவேரி, கோதாவரி—7 நதிகள்.
7 சிரஞ்சீவிகளுக்காக வடக்கே ஒரு கலசம். ( அஸ்வத்தாமா, மஹா பலி; வ்யாஸர், ஹனுமான், விபீஷ்ணர்; க்ருபர்; பரசுராமர் )
தென்மேற்கே ஒரு கலசம் நவ துர்கைகளுக்காக ( ப்ருஹ்மசாரிணீ, சைலபுத்ரி. சந்த்ரகண்டா; கூஷ்மாண்டா; ஸ்கந்த மாதா; காத்யாயினி; காளராத்ரி, மஹாகெளரி, ஸித்திப்ரதாயினி)
மேற்கே மஹா கணபதிக்கு ஒரு கலசம்; அதன் பக்கத்தில் விஷ்ணுவிற்கும் வருணனுக்கும் ஒவ்வொரு கலசங்கள்.
எல்லா கலசங்களையும் அலங்கரிக்கவும்.
யஜமானனும், அவரது மனைவியும் சபையினரிடம் அனுக்ஞை, ஆசி பெற்று விக்னேஸ்வர பூஜை, ஸங்கல்பம்,, விக்னேஸ்வரர் யதாஸ்தானம், க்ரஹப்ரீதி, க்ருச்சரம், நாந்தி சிராத்தம், புண்யாவசனம், வருண ஆவாஹணம், வருண பூஜை.
ஆசார்ய வரணம், ருத்விக் வரணம், வேதோக்த கட ஸ்தாபனம். ஸ்துஹி ச்ருதம் மந்திரம் சொல்லி ஸாங்கம், ஸபரிவாரம், ம்ருத்யுஞ்சயர் ஆவாஹணம்.
ப்ராஜபதே நத்வத் ப்ரஜாபதி ஆவாஹணம். இமம் யம—யம ஆவாஹனம்; அஷ்ட திக் பாலகர்கள் ஆவாஹணம். ( இந்திரன், யமன், அக்னி, நிரூதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.)
ஸப்த சிரஞீவி, புண்ணிய நதிகள், நவகிரஹம், நவ துர்கை, மஹா கணபதி
வருணன், விஷ்ணு ஆவாஹனம்; ப்ராண ப்ரதிஷ்டை. 16 உபசார பூஜைகள் செய்யவும்.
ருத்விக்குகள் செய்ய வேண்டிய ஜப மந்திரங்கள்;-- ஸ்துஹி ஸ்ருதம்----ஸேநா: த்ரயம்பகம் யஜாமஹே ; இவ்விரண்டு மந்திரங்களையும் தனிதனியாக 108 அல்லது 1008 தடவை ஜபிக்க வேண்டும்.
ப்ரஜாபதே நத்வத்;; மற்றும் இமம் யம இவ்விரண்டு மந்திரங்களையும் தனிதனியே 108 அல்லது 10 ஆவுருத்திகள் ஜபிக்கவும்.
நவக்ரஹ மந்திரம் ஒவ்வொன்றும் குறைந்தது 10 ஆவர்த்திகள் ஜபம்; அதி ப்ரதி அதி தேவதை மந்திரம் ஒரு தடவை ஒவ்வொரு க்ரஹதிற்கும்.
திக் பாலக மந்திரம் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 தடவை; துர்கா ஸூக்தம், 10 ஆவர்த்திகள்; கணபதிக்கு கணானாந்த்வா--- 10 ஆவர்த்திகள்;
சதுர்வேத பாராயணம், ஸம்ஹிதா பாராயணம், ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம், பூ ஸூக்தம், ஆயுஷ்ய ஸூக்தம், பஞ்ச ஷாந்தி, கோஷ சாந்தி; ருக் வேத மஹா ஸெளரம், ஆபோஹிஷ்டா, ஹிரண்ய வர்ணாம், பவமான ஸூக்தம், முஞ்சாமித்வ, ப்ருஹ்ம
ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ருத்ர ஸூக்தம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம், சிவ கவச ஸ்தோத்ரங்களும் சொல்ல வேண்டும். நிறைவாக ஓம் நமோ ப்ருஹ்மணே---மூன்று தடவை சொல்லி முடிக்க வேண்டும்.
பிறகு ஹோமம்;- ஆசார்யரும் 8 ருத்விக்குகளும் சேர்ந்து ஹவிஸ், நெய், பாயஸம், எருக்கு ஸமித்து, எள், முதலிய வைகளால் ஸ்வஸூத்ரப்படி
நவகிரஹங்களுக்கு அவரவர் சமித்தாலும், ப்ரதான ஹோமங்கள், அவரவர்களுக்கு குறைந்த பக்ஷம் 14 ஆவர்த்தி ஹோமம் செய்யலாம்.
ருத்ர ம்ருத்யஞ்சயர் ---ஸ்துஹு ஸ்ருதம்—குறைந்தது 14 முறை; ப்ரஜாபதி குறைந்தது 10 ஆவர்த்தி, நவகிரஹம் குறைந்தது 10 ஆவர்த்தி. அஷ்ட திக் பாலகர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒராவர்த்தி. ஸப்த
சிரஞ்ஜீவிகளுக்கும்,, ஸப்த புண்ய நதிகளுக்கும்,நவ துர்கைகளுக்கும், மஹா கணபதிக்கும் குறைந்தது ஒரு ஆவர்த்தி ஹோமம் செய்யவும். வருணனுக்கு இரு ஹோமங்கள், விஷ்ணுவிற்கு விஷ்ணோர் நுகம் வீர்யானி 6 ருக்குகள் ஒவ்வொன்றாலும் ஹோமம்.;
தம்பதிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நக்ஷத்திர தேவதைகளுக்கு அந்தந்த நக்ஷத்திர அஷ்ட வாக்கியம் சொல்லி ஹோமம்.
க்ருத ஸூக்தம் எட்டு ஆவர்த்தி ஹோமம். த்ரயம்பகம் 108 ஆவர்த்தி ஹோமம். ஆயுஷ்ய ஸூக்த ஹோமம்.
ஸ்வஷ்ட க்ருத் ஹோமம், ஜயாதி ஹோமம், லேப கார்யம், அக்னி உபஸ்தானம்.
கலச தேவதைகளுக்கு புனர் பூஜை, தூபம், தீபம், நைவேத்யம், தீபாராதனை, மந்திர புஷ்பம், யதா ஸ்தானம்.
கலச தீர்த்த ப்ரோக்ஷணம், ப்ராசனம்.
யஜமானருக்கும் பத்னிக்கும் அபிஷேகம்.
யஜமானரும், யஜமானியும் புத்தாடை உடுத்தி. நெற்றிக்கு இட்டு கொண்டு வந்தவுடன் ஈர வஸ்த்ர தானம். ப்ரதான கலசம், வஸ்த்ரம், ப்ரதிமை தானம். ருத்விக் ஸம்பாவனை.
இரும்பு வாணலியில் நெய் விட்டு முகம் பார்த்து விட்டு தானம்.
தச தானம், இரும்பு தடி, பஞ்சு, கம்பளி நவகிரஹ தான்யங்கள் தானம்,பல தானம், பூரி தக்ஷிணை. ஆசீர்வாதம், ஆசார்ய ஸம்பாவனை; ஹாரத்ஹ்டி, ப்ராஹ்மண போஜனம்.
திருமாங்கல்ய தாரணம் சொல்ல படவில்லை. இருக்கும் வீட்டிலேயே இதை செய்வது மிக சிறந்தது. இது வீட்டில் முடிந்த பிறகு திருக்கடவூர், குல தெய்வம் கோயில்களுக்கு செல்லலாம்.