• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Shannavathi Doubt ( Tarpanam / Tharpanam )

முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய ஷண்ணவதி தர்ப்பணம் முறைகளை எப்படி செய்வது அதை செய்யாவிடில் என்ன விதமான பாவங்கள் நமக்கு வந்து சேரும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டு வருவதை மேலும் தொடர்கிறார்.*


*இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. அதாவது அமாவாஸ்ய யுகாதி மன்வாதி சங்கராந்தி வைதிருதி வய்தீபாதம் மஹாளயம் திஸ்ரோஷ்டகாஹா இந்த எட்டு புண்ணிய காலங்களை தான் நாம் ஷண்ணவதி என்று சொல்கிறோம். இப்படியாக தர்மசாஸ்திரம் காண்பித்த வழியிலே ஒவ்வொருவரும் இந்த 96 தர்ப்பணங்களை செய்ய வேண்டும்*


*காலப்போக்கில் எப்படியோ நாம் 1 or 2 புண்ணிய காலங்களில் மட்டும் செய்வது என்று வைத்துக் கொண்டுள்ளோம். ஆகையினால் இந்த நாட்களில் என்ன ஆகிவிட்டது என்றால் நான் ஷண்ணவதியை ஆரம்பித்து செய்துகொள்கிறேன் என்று சொல்லுவதை கேட்க முடிகிறது.*


*ஷண்ணவதி தர்ப்பண முறை என்று ஒன்று தனியாக இருப்பதாக நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் வருடத்திலே 96 தர்ப்பணங்கள் நாம் செய்ய வேண்டியது அதில் சில செய்கிறோம் சில. விட்டுவிடுகிறோம். விட்டுப்போன தர்ப்பணங்களுக்கு பாவங்கள் மிகவும் ஜாஸ்தி. முக்கியமாக பிதுர்

கர்மாக்கள் எப்பொழுதும் விட்டு போகவே கூடாது. மற்ற காரியங்களுக்கு கூட கௌன காலங்கள் உண்டு. கௌன காலங்கள் என்றால் சொல்லப்பட்ட காலத்தில் அதை செய்ய முடியவில்லை என்றால் தள்ளி செய்வதற்கான ஒரு காலம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் கௌன காலம் என்ற பெயர்.*


*இதை அனைத்திற்குமே சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது சந்தியாவந்தனம் மே விட்டுப் போயிருந்தால் அவ்வளவு சந்தியா வந்தனங்கள் செய்ய வேண்டும். அனைத்து சந்தியாவந்தனங் களுக்கும் சேர்த்து ஒரே சந்தியாவந்தனம் என்பது கிடையாது. ஒருவருக்கு 10 சந்தியா வந்தனங்கள் விட்டுப் போயிருந்தால் பத்து பத்து காயத்ரியாக செய்து சந்தியாவந்தனம் செய்யவேண்டும். பத்து நாட்கள் சந்தியாவந்தனம் விட்டு போய் இருந்தது என்றால் மாத்யானிகம் சேர்த்து 30 சந்தியா வந்தனங்கள் செய்ய வேண்டும்.*


*ஒரு மாதம் விட்டுப் போயிருந்தால் 90 செய்ய வேண்டும் ஒரு வருடமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் சேர்த்து சேர்த்து செய்ய வேண்டும்.*
*ஆனால் இந்த பித்ரு கர்மாக்களில், ஒரு புண்ணிய காலம் விட்டு போனால் அது விட்டு போனது தான். அதை பிறகு, சேர்த்து செய்ய முடியாது. அது அமாவாசை அல்லது மாதப்பிறப்பு அல்லது தாயார் தகப்பனார்களுக்காக செய்யக்கூடியதாக வருடாந்திர ஸ்ராத்தமாக இருந்தாலும் சரி, ஆகையினாலே தான் நம்முடைய தர்மசாஸ்திரம் அதை வலியுறுத்தி காண்பிக்கிறது.*


*அதை விட்டுவிட்டால் பிதுர் கர்மாவை விட்டு விட்ட தோஷம் 1 நித்தியமாக சொல்லப்பட்ட பிர்த்தியவாயம் என்பது 2 வேதம் நமக்கு பிறப்பித்த உத்தரவை மீறுவது என்பது 3. இந்த மூன்று விதமான பாவங்களின் மூலமாகத்தான் நாம் நிறைய வியாதிகளினால் கஷ்டபட வேண்டிய சூழ்நிலைகள் வருகின்றன.*


*நித்தியம் கட்டாயம் செய்து ஆக வேண்டும், என்று தர்ம சாஸ்திரம் எதை நமக்கு காண்பிக்கின்றதோ, அதை நாம் மீறவே கூடாது. அதாவது கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும்.*


*யார் அதை விட்டானோ அவன் நித்தியத்தை விட்டுவிட்டான் என்கின்ற தோஷம் 1 வேதத்தை அவமானம் செய்தான் என்கின்ற தோஷம் 2. இவைகளினால் பல்வேறு நோய்களின் மூலமாக நாம் திண்டாட வேண்டி வரும். ஆனால் சில காரணங்களினால் சில புண்ணிய காலங்களில் செய்ய முடியாமல் போனால், அப்போது என்ன செய்யலாம் என்றால், அதற்காக சில மந்திரங்களை நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*


*அதாவது ஒரு புண்ணிய காலம் விட்டுப் போகிறது என்பதற்கு சில காரணங்கள் இருக்க வேண்டும். ஒரு நோய் வந்துவிட்டது அதனால் மருத்துவமனையில் நாம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறோம், அந்த சமயத்தில் சில புண்ணிய காலங்கள் வந்தால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது ஒன்று. பிறப்பு அல்லது இறப்பு தீட்டு காலங்களில் புண்ணிய காலங்கள் வந்தால், செய்ய முடியாது. அந்த சமயங்களில் வந்த புண்ணிய காலங்கள் விட்டுப் போயிருந்தால் அதற்கு என்ன செய்யலாம் என்பது ஒரு முறை.*


*செய்யமுடியும் செய்யக்கூடிய நிலைமையில் நாம் இருக்கிறோம் அப்படியும் நாம் செய்யவில்லை என்றால், மறந்து போய் விட்டது அல்லது தெரிந்தே நாம் விட்டுவிட்டோம், என்பது மூன்றாவது முறை. இப்படி மூன்று பிரிவுகள் இருக்கின்றன.*


*ஒரு தீட்டு வந்து அதனால் சில புண்ணிய காலங்களில் நம்மால் அனுஷ்டிக்க முடியவில்லை என்றால் அது பாவங்கள் கிடையாது, ஏனென்றால் அங்கே ஒரு சூட்சுமம் இருக்கின்றது.*


*ஒரு பத்து நாள் தீட்டிலே நாம் இருக்கிறோம், அப்பொழுது ஒரு அமாவாசையோ அல்லது மாதப்பிறப்பு வந்தால், அந்தப் புண்ணிய கால தர்ப்பணம் செய்யக்கூடாது. அப்பொழுது அதை விட்டு போன பாவம் வராதா என்றால் வராது.*


*ஏனென்றால் ஒரு ஜீவனை உத்தேசித்து நாம் தீட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். அந்த தீட்டு காப்பது நாளையே இந்த புண்ணியகாலம் செய்ததாக ஆகிவிடுகிறது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*


*நமக்கு நோய்கள் வந்து நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தில் ஏதாவது புண்ணிய காலங்கள் வந்து அது விட்டுப் போயிருந்தால், அன்றைய தினம் மௌனமாக இருக்க வேண்டும். மருத்துவமனையில் கூடியவரையில் சாப்பிடாமலும் மௌனமாக இருக்க வேண்டும்.

மருந்துகள் சாப்பிடலாம் அதற்காக உறுதுணையாக ஏதாவது ஆதாரங்கள் சொல்லப்பட்டிருந்தால் அதை சாப்பிடலாம். அதைவிடுத்து பழங்களோ பால் மற்றும் இதர பானங்களோ சாப்பிட கூடாது. அப்படி உபவாசம் இருப்பதினாலேயே அந்த விட்டுப்போன புண்ணிய காலத்தின் மூலமாக ஏற்படக்கூடிய பாவங்கள் போய்விடுகிறது.*


*தெரிந்தோ அல்லது மறந்து ஒரு புண்ணிய காலம் விட்டு போய்விட்டால் அதற்காகத்தான் நமக்கு இந்த மந்திரங்களை காண்பித்து இருக்கின்றனர். ரிக் வேதத்திலும் யஜுர் வேதத்திலும் சில மந்திரங்களை நமக்கு எடுத்து காண்பித்து இருக்கின்றன. அந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி ஜபம் செய்ய வேண்டும். அப்படிக் ஜபம் செய்வதன் மூலம் விட்டுப்போன பாவங்கள் விலகும்.*




*அடுத்தமுறை அந்த புண்ணிய காலம் வரும் பொழுது நாம் விழித்துக்கொண்டு அதை செய்ய வேண்டும். இந்த மந்திரங்கள் தான் இருக்கின்றது என்று நாம் வழக்கமாக செய்யக்கூடிய அமாவாசை மட்டும் செய்துவிட்டு, மற்ற புண்ணிய காலங்கள் எல்லாம் வரும்போது அந்த மந்திரத்தை நாம் ஜெபம் செய்து கொண்டே இருக்கிறோம் என்று இருக்கக்கூடாது. ஒரு தடவை அல்லது இரண்டு தடவை விட்டுப் போனால் மட்டுமே அந்த மந்திரங்களை

சொல்லலாமே தவிர, அந்த மந்திரங்களே தர்ப்பணம் செய்ததாக ஆகாது. பரிகாரங்கள் இதெல்லாம் என்ன விதமான பலன் என்றால் அதிலே வித்தியாசங்கள் இருக்கின்றன.*
*ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு பரிகாரம் என்று நமக்கு காண்பித்திருக்கிறார்கள் அந்த பரிகாரம் என்ன செய்கிறது என்றால் அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

01/11/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் அது செய்யக் கூடிய முறை மேலும் அதற்கான காலங்கள் இவற்றையெல்லாம் நாம் விரிவாக பார்த்து வந்தோம். அந்த தர்ப்பணங்களை நாம் எந்தெந்த பித்ருக்களை உத்தேசித்து செய்கிறோம் என்பதையும், மேலும் அதன் மூலம் வரக்கூடிய பலன்களையும், விரிவாக நாம் தெரிந்து கொண்டோம்.*


*இப்பொழுது சில புண்ணிய கால தர்ப்பணங்கள் சில காரணங்களினால் விட்டுப் போனால், அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பார்க்க இருக்கிறோம்.*


*இந்த சந்தர்ப்பத்தில் பரிகாரம் என்பதை, நிறைய விதமாக நாம் செய்கிறோம். இந்த பரிகாரங்களுக்காண பலன்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பரிகாரம் என்றால் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும் ஏனென்றால், எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு பரிகாரத்தை செய்திருப்போம்.*


*குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பித்து நன்றாக படிப்பு வரவேண்டும், நல்ல இடத்தில் உத்தியோகம் கிடைக்க வேண்டும், கல்யாணம் ஆக வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்கள், குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்கான பரிகாரங்கள், ஐஸ்வர்யம் நிறைய வேண்டும், கடைசியில் பிதுர் தோஷங்கள் போக வேண்டும் என்பதற்கான பரிகாரங்கள் வரையில், அனைவரும் பலனை உத்தேசித்து ஏதோ ஒரு ஸ்தலங்களில் நாம் செய்திருப்போம். அதனால் பரிகாரங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.*




*ஆனால் இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அதற்கான பலன்கள் என்ன என்பதைப் பற்றி. இரண்டு விதமான பலன்களை பற்றி பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.*


*ஒவ்வொருவரும் காலையில் எழுந்ததில் இருந்து ஆரம்பித்து, இரவு படுத்துக் கொள்ளும் வரையிலும் நாம், செய்யவேண்டிய தான கடமைகள் என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு.*


*அதிலே சிலவற்றை செய்கிறோம் பலவற்றை விட்டுவிடுகிறோம். இந்த பரிகாரங்கள் எப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், நாம் செய்ய வேண்டிய காரியத்தை முறை தவறி செய்தால் சில பரிகாரங்கள். சில காரியங்களை செய்யாது விட்டு விட்டால் அதற்கான சில பரிகாரங்கள். இப்படி இரண்டு விதமான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.*


*பிராயச்சித்தம் என்று தர்ம சாஸ்திரத்தில் காண்பித்து இருப்பார்கள். இரண்டு விதமான பலன்களை உடையதாக இந்த பிராயச்சித்தங்கள் இருக்கின்றன. ஒரு சில பிராயசித்தங்கள்*


*நாம் செய்த தவறுகளுக்கு சில கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்தக் கஷ்டங்களை ஒரேசமயத்தில் அனுபவிக்காமல், நிறைந்து அனுபவிக்க செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள்.*
*ஒரு சில பரிகாரங்கள் அடுத்து செய்ய வேண்டியது தான காரியத்திற்கு அதிகாரத்தை கொடுக்கக் கூடியவை. இப்படியாக இரண்டு விதமான பரிகாரங்கள் நமக்கு பலன்களை கொடுக்கின்றன.*


*இதற்கு லௌகீகமான உதாரணங்களை பார்த்தோமேயானால், ஒரு வங்கியில் கடன் வாங்குகிறோம் அந்தக் கடனை சரியான முறையில் நாம் திருப்பி செலுத்தவில்லை. சில சமயங்களில் கட்டியும் சில சமயம் கட்டாமலும் குறைத்தும் கட்டி இருக்கிறோம். இது எல்லாம் முறைதவறி செய்தது. இதற்கு என்ன பரிகாரம் என்றால் வங்கியிலிருந்து நமக்கு தகவல் தெரிவித்து நம்மை நேரடியாக வரவழைத்து நம்மிடம் ஏன் உன்னால் கட்ட முடியவில்லை என்று கேட்டு, அந்தத் தொகையை நம்மால் கட்ட முடியவில்லை என்றால் அதை நிறந்து கட்டுவதற்கான வழிமுறைகளை காண்பித்து கொடுப்பார்கள்.*


*ஐந்து வருடத்தில் கட்ட முடியவில்லை என்றால் மேலும் இரண்டு மூன்று வருடங்களில் நீட்டித்து தவணை அதிகரித்து தொகையை குறைத்து கொடுப்பார்கள்.*


*இன்னுமொரு வழி கடன் வாங்கியிருக்கிறார் ஆனால் கட்டவே இல்லை. இங்கு அவருக்கு பரிகாரங்கள் வேறு மாதிரி. இந்த சமயத்தில் அவனுடைய சொத்துக்களை முடக்குவது அவனுடைய வங்கி கணக்கை முடக்குவது இதுபோன்று செய்வார்கள். இப்படி இரண்டு விதமான நடவடிக்கைகள் லோகத்தில் இருக்கின்றது நாம் பார்க்கிறோம்.*


*இதை நாம் மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய தர்ம சாஸ்திரம் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். இதே போல் தான் நம்முடைய கர்மாக்களில் நித்திய கர்மாக்கள் என்று இருக்கின்றன. தினமும் நாம் செய்ய வேண்டியது தான கர்மாக்கள்.*
*இந்த நித்திய கர்மாக்களை முறையாக நாம் செய்யாவிடில் அதற்கான பிராயச்சித்தம். செய்யவே இல்லை என்றால் அதற்கான சில பரிகாரங்கள். இப்படி இரண்டு விதமாக சொல்லப்பட்டிருக்கிறது.*


*பரிகாரங்களுக்கு ஆன பலன்கள் என்று பார்த்தால், நாம் விட்டுவிட்டோம் என்று அது எவ்வாறு வெளிப்படும், மகரிஷிகள் இதைச் சொல்லும் பொழுது ஜென்மாந்திரமாக நாம் செய்த தவறுகள் அதாவது போன போன பிறவிகளில் செய்த தவறுகள், அதாவது செய்யவேண்டிய தான கர்மாக்களை முறையாக செய்யாமலும், நல்லது செய்யவே இல்லை என்றாலோ, விட்டதின்னுடைய பாபங்கள் எல்லாம் நம்மிடத்தில் எவ்வாறு வெளிப்படும் என்றால், வியாதி ரூபமாக வந்து சேரும். ஒரு நோயின் மூலமாக நமக்கு அதை காண்பிக்கும்.*


*நீ செய்ய வேண்டிய கர்மாக்களை சரியாக செய்யவில்லை என்பதை அந்த நோய் மூலம் நமக்கு உணர்த்தும் அதை நாம் பார்த்து விழித்துக்கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நோய்கள் நமக்கு எதனால் வந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கான வழியைக் கூட புராணங்கள் மூலமாக மகரிஷிகள் நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*


*அதற்கு கர்ம விபாக அத்தியாயம் என்று ஒன்று இருக்கிறது. அனேகமாக அனைத்து புராணங்களிலும் இருக்கிறது. இந்த கர்ம விபாகத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்லக்கூடிய புராணம் கருட புராணம். இதில் தனியாகவே ஒரு அத்தியாயம் சொல்லப்பட்டு இருக்கிறது மற்ற புராணங்களிலும் ஆங்காங்கே காண்பிக்கப்படுகின்றன.*


*இந்த கர்ம விபாகம் என்றால் என்ன அர்த்தம்? நாம் செய்யவேண்டிய கர்மாக்களை விட்டதினால் அல்லது செய்யாமலேயே இருந்ததினால் அல்லது தவறாக செய்ததினால், வந்த தான பலன்களை நாம் எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பதை காண்பிப்பது தான் கர்ம விபாக அத்தியாயம்.*


*கருட புராணத்தில் ஒருவன், அவன் இருக்கக்கூடிய தான நிலைக்கும், அவர் இருக்கக்கூடிய தான வசதிக்கும் சம்மந்தம் இல்லாமலேயே இருக்கிறது. இதை உலகத்திலே நாம் பார்க்கிறோம். பணம் காசு ஐஸ்வர்யம் எல்லாம் நிறைய இருக்கின்றது ஆனால் மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றார்.

நேர்மாறாக புத்திசாலியாக இருக்கிறான் ஆனால் பணம் காசுகள் ஐஸ்வர்யம் எதுவுமில்லை. பணம் காசு ஐஸ்வர்யம் மனைவி குழந்தைகள் வீடு வாசல் எல்லாம் சௌகரியமாக இருக்கிறது ஆனால் வியாதி படுத்துகிறது. ஒரு வசதியும் இல்லை ஆனால் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இப்படி எல்லாம் வேறுபாடுகள் வருகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாம் ஊகிக்க முடியாது.*


*இதை நாம் சரிவர புரிந்து கொள்ளாத அதனால்தான் நாம் செய்யக்கூடிய கர்மாவுக்கும் அதனால் அனுபவிக்கக்கூடிய பலன்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை பார்க்கிறோம். ஆனால் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி தான் இந்த கர்ம விபாகா அத்தியாயம் காண்பிக்கின்றது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
02/11/2020*

*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய ஷண்ணவதி தர்ப்பணங்களில் சிலவற்றை விட்டு விட்டால் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.*



*இந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் நிறைய பரிகாரங்களையும் செய்து கொண்டிருக்கிறோம் செய்தோம் இன்னும் செய்ய இருக்கிறோம். இவற்றிற்கான பலன்கள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால், பல தவறான புரிதல்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன. எதையும் கடைசி வரையிலும் முழுமையாகத் தெரிந்து கொள்வது என்பது குறைந்துவிட்டது.*



*அதை நாம் அவசியம் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் முக்கியமாக நம்முடைய வேதம், தர்ம சாஸ்திரம், புராணங்கள் காட்டக்கூடிய தான பிராயச்சித்தங்கள். இதை நாம் சரியாக புரிந்து கொள்ளாத அதனால்தான் குழந்தைகளுக்கு எவ்வளவோ பரிகாரங்கள் செய்தும் கல்யாணமே வரன் அமையவில்லை என்று வருத்தமாகவும் கோபமாகவும் சொல்வதை நாம் பார்க்க முடிகிறது.*



*பரிகாரங்கள் நிறைய செய்துவிட்டோம் பெண் வர வேண்டியது தான் பாக்கி என்று சொல்கிறோம். அதேபோல ஸ்தலங்களுக்கு நிறைய போகிறோம். வியாதிகள் குறைப்பதற்காக ஆங்காங்கே சென்று நிறைய பரிகாரங்களை நாம் செய்கிறோம். ஆனால் வியாதிகள் குறையவில்லை போய்வந்த செலவுதான் அதிகமாக உள்ளது.*



*இப்படியெல்லாம் குறைபட்டு பேசக்கூடியவர்களை நாம் நிறைய பார்க்க முடிகிறது. ஏன் அவர்களுக்கு நடக்கவில்லை என்றால் அதிலுள்ள தத்துவத்தை நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இது விஷயமாக பரிகாரங்கள் என்று தனியாக உள்ளது அதை பார்ப்போம்.*

*இப்பொழுது இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களில் சில தர்ப்பணங்களை நாம் விட்டுவிட்டால், அதற்கு என்ன பிராயச்சித்தம் அதாவது பரிகாரங்கள். இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களும் நித்தியம் என்பதை முதலில் நாம் பார்த்தோம். அதாவது கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும்.*

*ஏனென்றால் இவைகள் எல்லாம் நித்திய கர்மா என்று பெயர். எப்படி நாம் தினமும் குளிக்கின்றோமோ / போஜனம் செய்கின்றோமோ அதேபோல் தான் இந்த தர்ப்பணங்கள். கட்டாயம் செய்ய வேண்டும் தவறவிடக் கூடாது. சில காரணங்களினால் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும்.*

*அதாவது தீட்டு வந்துவிட்டால் சில புண்ணிய காலங்கள் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது மட்டுமல்ல பல காரியங்கள் விட்டுப் போகும். இந்தப் புண்ணிய கர்மா இல்லாமல் சிவபூஜை வைஸ்யதேவம் ஹௌபாசனம் இப்படி நிறைய கர்மாக்களை நாம் செய்ய முடியாது இந்த தீட்டு காலங்களில் 10 நாள் தீட்டு வந்துவிட்டது என்றால். இதற்கெல்லாம் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கின்றன.

இது விஷயமாக மகரிஷிகள் சொல்கின்ற பொழுது, வேதத்தில் நித்தியமாக நமக்கு காண்பிக்கப்பட்டிருக்கிறது, கட்டாயம் தினமும் செய்யவேண்டும் விடக்கூடாது, என்று சொல்லப்பட்ட கர்மாக்களை தவறாக செய்தாலும், காலம் தவறு செய்தாலும், செய்யாமலேயே விட்டு விட்டாலும், அதற்கு முதல் பிராயச்சித்தம் என்னவென்றால் அபோஜனம் அதாவது உபவாசம் இருத்தல்.*



*காரணம் என்ன என்றால் நம்முடைய புத்தி சரியான முறையில் அங்கு வேலை செய்யவில்லை. நம்முடைய எண்ணம் சரியான முறையில் அங்கு வேலை செய்யவில்லை. அந்த காரியத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் நமக்கு வரவில்லை. விட்டு விட்டோம் என்றால் அது திரும்பவும் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் நமக்கு வரவில்லை.*



*அப்படிப்பட்ட நல்ல எண்ணங்களை கொடுப்பது எது என்றால் நாம் சாப்பிடக்கூடிய ஆகாரங்கள் தான் அதை கொடுக்கின்றது. மனோபலத்தையும் புத்தி சக்தியையும் நமக்கு எது கொடுப்பது என்றால் நாம் சாப்பிடக்கூடிய அன்னம் தான்.*



*அந்த உணவை சரியான முறையில் நாம் சாப்பிடவில்லை என்றால் நம்முடைய புத்தி சரியாக வேலை செய்யாது. நல்ல எண்ணங்கள் உருவாகாது. ஆகையினாலே தான் ஆகார விஷயங்களில் நிறைய கட்டுப்பாடுகளை தர்மசாஸ்திரம் நமக்கு சொல்லி இருக்கிறது.*

*இப்படித்தான் சாப்பிடவேண்டும், இப்படி உட்கார்ந்து கொண்டு தான் சாப்பிட வேண்டும், இன்ன வஸ்துக்களை தான் சாப்பிட வேண்டும், இந்த அளவில் தான் சாப்பிட வேண்டும் அப்படி எல்லாம் தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*



*இந்த நாட்களில் உணவு படிப்பு அனைத்துமே சுதந்திரமாக போய்விட்டது. சாப்பிடுகின்ற விஷயத்திலே என்ன கட்டுப்பாடு என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் நாம் சாப்பிடக்கூடிய சாப்பாடு சரியான முறையில் இல்லாவிடில் நம்முடைய புத்தி கெட்டுப் போய்விடும்.*

*மனது கெட்டுப்போய்விடும் பிராண சக்தி குறைந்து போய்விடும். நாம் உயிரோடு இருந்தும் நடைப்பிணம் ஆகவே இருக்க வேண்டிய நிலைமை வரும் நம்முடைய ஆஹாரங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத பொழுது.*





*ஆகையினாலே தான் நிறைய முறைகளை சாப்பிடுகின்ற விஷயத்திலே காண்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் இந்த முறையில் தான் இன்ன வஸ்துக்களை தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னதற்கு இதான் காரணம். அடிப்படையாக முதலில் இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.*



*அதுதான் ஒருவன் ஒரு தவறு செய்கிறான் என்றால், அவன் சாப்பிட்ட ஆகாரத்தை வைத்து அதை கணக்கு செய்துகொள்ளலாம். அதாவது நம்முடைய ஒரு நோய்க்காக ஒரு மருத்துவரிடம் செல்கிறோம், உடனே மருத்துவர் முதலில் கேட்பது என்ன நீ என்ன சாப்பிட்டாய் இன்றைக்கு? ஏன் நாம் சாப்பிடக்கூடிய உணவில்தான் அனைத்துமே இருக்கிறது.*



*ஒரு ஜுரம் வந்தது என்று நாம் மருத்துவரிடம் போனாலும் கூட அவர் நீ எந்த தண்ணீரில் குளித்தாய் எந்த தண்ணியை நீ குடித்தாய் என்று கேட்க மாட்டார், என்ன நீ சாப்பிட்டாய் என்றுதான் கேட்பார். அந்த உணவுதான் அடிப்படை யாக முக்கியமான சக்திகளை நமக்கு கொடுக்கிறது.*



*புத்தி சக்தி மனோபலம் பிராண சக்தி, இந்த மூன்றையும் நமக்கு அளிக்கக்கூடியது நாம் சாப்பிடக்கூடிய தான உணவு. ஆகையினாலே தான் தர்மசாஸ்திரம் நமக்கு முதல் பிராயச்சித்தமாக அபோஜனம் அதாவது உபவாசம் இருத்தல் வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.*



*பித்ரு கர்மாக்கள் எல்லாம் ஆரம்பிக்கின்ற பொழுது முதலில் நாம் எதுவுமே சாப்பிடாமல் தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் வாத்தியார் இடத்தில் நாம் என்ன சொல்கிறோம் என்றால் என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன் ஆனால் சாப்பாட்டில் மட்டும் கையை வைத்து விடாதீர்கள் என்று தான் சொல்வோம். எனக்கு அவ்வப்பொழுது ஒரு மணிக்கு ஒரு முறை காபி மட்டும் குடிக்கிறேன்.*



*ஆனால் நாம் சாப்பிடக்கூடிய ஆகாரம் வேறு மாதிரியாக இருந்தால், நமக்கு புத்தி சரியாக வேலை செய்யாது, மனது அந்த காரியங்களில் ஈடுபடாது, பிராண சக்தி நம்மிடம் இருக்காது. இதை கருத்தில் கொண்டு தான் உபவாசம் நம்முடைய எல்லா கர்மாக்களையும் முதலில் ஆரம்பிக்கின்றது. பிதுர் கர்மாக்களை செய்யும்பொழுது அப்படித்தான் இருக்க வேண்டும்.

உபவாசம் நாம் இருக்கும் போது நம்முடைய புத்தியானது பலவிதமான ஆற்றல்களை சக்திகளை வெளிப்படுத்தும். பசியோடு இருப்பவனுக்கு மூளை மிக வேகமாக வேலை செய்யும். மனசு மிகுந்த தெளிவுடன் இருக்கும். பிராண சக்தி மிகவும் அதிகமாக இருக்கும். அது எப்படி சாப்பிடாமல் இருந்தால் மயக்கம் தானே வரும், அதற்கான காரணம் நாம் அப்படி பழக்கப்பட்டு விட்டோம்.

ஏதோ ஒன்றை அடிக்கடி வாயில் போட்டு அரைத்துக் கொண்டு இருப்பதினால் தான் அப்படிப்பட்ட ஒரு எண்ணம் நமக்கு வருகிறது. அதனால் தான் அபோஜனம் என்கின்ற உபவாசத்தை முதலில் தர்மசாஸ்திரம் பிராயச்சித்தமாக நமக்கு காண்பிக்கின்றது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய ஷண்ணவதி தர்ப்பணம் முறைகளை எப்படி செய்வது அதை செய்யாவிடில் என்ன விதமான பாவங்கள் நமக்கு வந்து சேரும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டு வருவதை மேலும் தொடர்கிறார்.*


*இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. அதாவது அமாவாஸ்ய யுகாதி மன்வாதி சங்கராந்தி வைதிருதி வய்தீபாதம் மஹாளயம் திஸ்ரோஷ்டகாஹா இந்த எட்டு புண்ணிய காலங்களை தான் நாம் ஷண்ணவதி என்று சொல்கிறோம். இப்படியாக தர்மசாஸ்திரம் காண்பித்த வழியிலே ஒவ்வொருவரும் இந்த 96 தர்ப்பணங்களை செய்ய வேண்டும்*


*காலப்போக்கில் எப்படியோ நாம் 1 or 2 புண்ணிய காலங்களில் மட்டும் செய்வது என்று வைத்துக் கொண்டுள்ளோம். ஆகையினால் இந்த நாட்களில் என்ன ஆகிவிட்டது என்றால் நான் ஷண்ணவதியை ஆரம்பித்து செய்துகொள்கிறேன் என்று சொல்லுவதை கேட்க முடிகிறது.*


*ஷண்ணவதி தர்ப்பண முறை என்று ஒன்று தனியாக இருப்பதாக நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் வருடத்திலே 96 தர்ப்பணங்கள் நாம் செய்ய வேண்டியது அதில் சில செய்கிறோம் சில. விட்டுவிடுகிறோம். விட்டுப்போன தர்ப்பணங்களுக்கு பாவங்கள் மிகவும் ஜாஸ்தி. முக்கியமாக பிதுர்

கர்மாக்கள் எப்பொழுதும் விட்டு போகவே கூடாது. மற்ற காரியங்களுக்கு கூட கௌன காலங்கள் உண்டு. கௌன காலங்கள் என்றால் சொல்லப்பட்ட காலத்தில் அதை செய்ய முடியவில்லை என்றால் தள்ளி செய்வதற்கான ஒரு காலம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் கௌன காலம் என்ற பெயர்.*


*இதை அனைத்திற்குமே சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது சந்தியாவந்தனம் மே விட்டுப் போயிருந்தால் அவ்வளவு சந்தியா வந்தனங்கள் செய்ய வேண்டும். அனைத்து சந்தியாவந்தனங் களுக்கும் சேர்த்து ஒரே சந்தியாவந்தனம் என்பது கிடையாது. ஒருவருக்கு 10 சந்தியா வந்தனங்கள் விட்டுப் போயிருந்தால் பத்து பத்து காயத்ரியாக செய்து சந்தியாவந்தனம் செய்யவேண்டும். பத்து நாட்கள் சந்தியாவந்தனம் விட்டு போய் இருந்தது என்றால் மாத்யானிகம் சேர்த்து 30 சந்தியா வந்தனங்கள் செய்ய வேண்டும்.*


*ஒரு மாதம் விட்டுப் போயிருந்தால் 90 செய்ய வேண்டும் ஒரு வருடமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் சேர்த்து சேர்த்து செய்ய வேண்டும்.*
*ஆனால் இந்த பித்ரு கர்மாக்களில், ஒரு புண்ணிய காலம் விட்டு போனால் அது விட்டு போனது தான். அதை பிறகு, சேர்த்து செய்ய முடியாது. அது அமாவாசை அல்லது மாதப்பிறப்பு அல்லது தாயார் தகப்பனார்களுக்காக செய்யக்கூடியதாக வருடாந்திர ஸ்ராத்தமாக இருந்தாலும் சரி, ஆகையினாலே தான் நம்முடைய தர்மசாஸ்திரம் அதை வலியுறுத்தி காண்பிக்கிறது.*


*அதை விட்டுவிட்டால் பிதுர் கர்மாவை விட்டு விட்ட தோஷம் 1 நித்தியமாக சொல்லப்பட்ட பிர்த்தியவாயம் என்பது 2 வேதம் நமக்கு பிறப்பித்த உத்தரவை மீறுவது என்பது 3. இந்த மூன்று விதமான பாவங்களின் மூலமாகத்தான் நாம் நிறைய வியாதிகளினால் கஷ்டபட வேண்டிய சூழ்நிலைகள் வருகின்றன.*


*நித்தியம் கட்டாயம் செய்து ஆக வேண்டும், என்று தர்ம சாஸ்திரம் எதை நமக்கு காண்பிக்கின்றதோ, அதை நாம் மீறவே கூடாது. அதாவது கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும்.*


*யார் அதை விட்டானோ அவன் நித்தியத்தை விட்டுவிட்டான் என்கின்ற தோஷம் 1 வேதத்தை அவமானம் செய்தான் என்கின்ற தோஷம் 2. இவைகளினால் பல்வேறு நோய்களின் மூலமாக நாம் திண்டாட வேண்டி வரும். ஆனால் சில காரணங்களினால் சில புண்ணிய காலங்களில் செய்ய முடியாமல் போனால், அப்போது என்ன செய்யலாம் என்றால், அதற்காக சில மந்திரங்களை நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*


*அதாவது ஒரு புண்ணிய காலம் விட்டுப் போகிறது என்பதற்கு சில காரணங்கள் இருக்க வேண்டும். ஒரு நோய் வந்துவிட்டது அதனால் மருத்துவமனையில் நாம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறோம், அந்த சமயத்தில் சில புண்ணிய காலங்கள் வந்தால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது ஒன்று. பிறப்பு அல்லது இறப்பு தீட்டு காலங்களில் புண்ணிய காலங்கள் வந்தால், செய்ய முடியாது. அந்த சமயங்களில் வந்த புண்ணிய காலங்கள் விட்டுப் போயிருந்தால் அதற்கு என்ன செய்யலாம் என்பது ஒரு முறை.*


*செய்யமுடியும் செய்யக்கூடிய நிலைமையில் நாம் இருக்கிறோம் அப்படியும் நாம் செய்யவில்லை என்றால், மறந்து போய் விட்டது அல்லது தெரிந்தே நாம் விட்டுவிட்டோம், என்பது மூன்றாவது முறை. இப்படி மூன்று பிரிவுகள் இருக்கின்றன.*


*ஒரு தீட்டு வந்து அதனால் சில புண்ணிய காலங்களில் நம்மால் அனுஷ்டிக்க முடியவில்லை என்றால் அது பாவங்கள் கிடையாது, ஏனென்றால் அங்கே ஒரு சூட்சுமம் இருக்கின்றது.*


*ஒரு பத்து நாள் தீட்டிலே நாம் இருக்கிறோம், அப்பொழுது ஒரு அமாவாசையோ அல்லது மாதப்பிறப்பு வந்தால், அந்தப் புண்ணிய கால தர்ப்பணம் செய்யக்கூடாது. அப்பொழுது அதை விட்டு போன பாவம் வராதா என்றால் வராது.*


*ஏனென்றால் ஒரு ஜீவனை உத்தேசித்து நாம் தீட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். அந்த தீட்டு காப்பது நாளையே இந்த புண்ணியகாலம் செய்ததாக ஆகிவிடுகிறது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*


*நமக்கு நோய்கள் வந்து நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தில் ஏதாவது புண்ணிய காலங்கள் வந்து அது விட்டுப் போயிருந்தால், அன்றைய தினம் மௌனமாக இருக்க வேண்டும். மருத்துவமனையில் கூடியவரையில் சாப்பிடாமலும் மௌனமாக இருக்க வேண்டும்.

மருந்துகள் சாப்பிடலாம் அதற்காக உறுதுணையாக ஏதாவது ஆதாரங்கள் சொல்லப்பட்டிருந்தால் அதை சாப்பிடலாம். அதைவிடுத்து பழங்களோ பால் மற்றும் இதர பானங்களோ சாப்பிட கூடாது. அப்படி உபவாசம் இருப்பதினாலேயே அந்த விட்டுப்போன புண்ணிய காலத்தின் மூலமாக ஏற்படக்கூடிய பாவங்கள் போய்விடுகிறது.*


*தெரிந்தோ அல்லது மறந்து ஒரு புண்ணிய காலம் விட்டு போய்விட்டால் அதற்காகத்தான் நமக்கு இந்த மந்திரங்களை காண்பித்து இருக்கின்றனர். ரிக் வேதத்திலும் யஜுர் வேதத்திலும் சில மந்திரங்களை நமக்கு எடுத்து காண்பித்து இருக்கின்றன. அந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி ஜபம் செய்ய வேண்டும். அப்படிக் ஜபம் செய்வதன் மூலம் விட்டுப்போன பாவங்கள் விலகும்.*




*அடுத்தமுறை அந்த புண்ணிய காலம் வரும் பொழுது நாம் விழித்துக்கொண்டு அதை செய்ய வேண்டும். இந்த மந்திரங்கள் தான் இருக்கின்றது என்று நாம் வழக்கமாக செய்யக்கூடிய அமாவாசை மட்டும் செய்துவிட்டு, மற்ற புண்ணிய காலங்கள் எல்லாம் வரும்போது அந்த மந்திரத்தை நாம் ஜெபம் செய்து கொண்டே இருக்கிறோம் என்று இருக்கக்கூடாது. ஒரு தடவை அல்லது இரண்டு தடவை விட்டுப் போனால் மட்டுமே அந்த மந்திரங்களை

சொல்லலாமே தவிர, அந்த மந்திரங்களே தர்ப்பணம் செய்ததாக ஆகாது. பரிகாரங்கள் இதெல்லாம் என்ன விதமான பலன் என்றால் அதிலே வித்தியாசங்கள் இருக்கின்றன.*
*ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு பரிகாரம் என்று நமக்கு காண்பித்திருக்கிறார்கள் அந்த பரிகாரம் என்ன செய்கிறது என்றால் அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

01/11/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் அது செய்யக் கூடிய முறை மேலும் அதற்கான காலங்கள் இவற்றையெல்லாம் நாம் விரிவாக பார்த்து வந்தோம். அந்த தர்ப்பணங்களை நாம் எந்தெந்த பித்ருக்களை உத்தேசித்து செய்கிறோம் என்பதையும், மேலும் அதன் மூலம் வரக்கூடிய பலன்களையும், விரிவாக நாம் தெரிந்து கொண்டோம்.*


*இப்பொழுது சில புண்ணிய கால தர்ப்பணங்கள் சில காரணங்களினால் விட்டுப் போனால், அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பார்க்க இருக்கிறோம்.*


*இந்த சந்தர்ப்பத்தில் பரிகாரம் என்பதை, நிறைய விதமாக நாம் செய்கிறோம். இந்த பரிகாரங்களுக்காண பலன்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பரிகாரம் என்றால் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும் ஏனென்றால், எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு பரிகாரத்தை செய்திருப்போம்.*


*குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பித்து நன்றாக படிப்பு வரவேண்டும், நல்ல இடத்தில் உத்தியோகம் கிடைக்க வேண்டும், கல்யாணம் ஆக வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்கள், குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்கான பரிகாரங்கள், ஐஸ்வர்யம் நிறைய வேண்டும், கடைசியில் பிதுர் தோஷங்கள் போக வேண்டும் என்பதற்கான பரிகாரங்கள் வரையில், அனைவரும் பலனை உத்தேசித்து ஏதோ ஒரு ஸ்தலங்களில் நாம் செய்திருப்போம். அதனால் பரிகாரங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.*




*ஆனால் இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அதற்கான பலன்கள் என்ன என்பதைப் பற்றி. இரண்டு விதமான பலன்களை பற்றி பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.*


*ஒவ்வொருவரும் காலையில் எழுந்ததில் இருந்து ஆரம்பித்து, இரவு படுத்துக் கொள்ளும் வரையிலும் நாம், செய்யவேண்டிய தான கடமைகள் என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு.*


*அதிலே சிலவற்றை செய்கிறோம் பலவற்றை விட்டுவிடுகிறோம். இந்த பரிகாரங்கள் எப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், நாம் செய்ய வேண்டிய காரியத்தை முறை தவறி செய்தால் சில பரிகாரங்கள். சில காரியங்களை செய்யாது விட்டு விட்டால் அதற்கான சில பரிகாரங்கள். இப்படி இரண்டு விதமான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.*


*பிராயச்சித்தம் என்று தர்ம சாஸ்திரத்தில் காண்பித்து இருப்பார்கள். இரண்டு விதமான பலன்களை உடையதாக இந்த பிராயச்சித்தங்கள் இருக்கின்றன. ஒரு சில பிராயசித்தங்கள்*


*நாம் செய்த தவறுகளுக்கு சில கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்தக் கஷ்டங்களை ஒரேசமயத்தில் அனுபவிக்காமல், நிறைந்து அனுபவிக்க செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள்.*
*ஒரு சில பரிகாரங்கள் அடுத்து செய்ய வேண்டியது தான காரியத்திற்கு அதிகாரத்தை கொடுக்கக் கூடியவை. இப்படியாக இரண்டு விதமான பரிகாரங்கள் நமக்கு பலன்களை கொடுக்கின்றன.*


*இதற்கு லௌகீகமான உதாரணங்களை பார்த்தோமேயானால், ஒரு வங்கியில் கடன் வாங்குகிறோம் அந்தக் கடனை சரியான முறையில் நாம் திருப்பி செலுத்தவில்லை. சில சமயங்களில் கட்டியும் சில சமயம் கட்டாமலும் குறைத்தும் கட்டி இருக்கிறோம். இது எல்லாம் முறைதவறி செய்தது. இதற்கு என்ன பரிகாரம் என்றால் வங்கியிலிருந்து நமக்கு தகவல் தெரிவித்து நம்மை நேரடியாக வரவழைத்து நம்மிடம் ஏன் உன்னால் கட்ட முடியவில்லை என்று கேட்டு, அந்தத் தொகையை நம்மால் கட்ட முடியவில்லை என்றால் அதை நிறந்து கட்டுவதற்கான வழிமுறைகளை காண்பித்து கொடுப்பார்கள்.*


*ஐந்து வருடத்தில் கட்ட முடியவில்லை என்றால் மேலும் இரண்டு மூன்று வருடங்களில் நீட்டித்து தவணை அதிகரித்து தொகையை குறைத்து கொடுப்பார்கள்.*


*இன்னுமொரு வழி கடன் வாங்கியிருக்கிறார் ஆனால் கட்டவே இல்லை. இங்கு அவருக்கு பரிகாரங்கள் வேறு மாதிரி. இந்த சமயத்தில் அவனுடைய சொத்துக்களை முடக்குவது அவனுடைய வங்கி கணக்கை முடக்குவது இதுபோன்று செய்வார்கள். இப்படி இரண்டு விதமான நடவடிக்கைகள் லோகத்தில் இருக்கின்றது நாம் பார்க்கிறோம்.*


*இதை நாம் மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய தர்ம சாஸ்திரம் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். இதே போல் தான் நம்முடைய கர்மாக்களில் நித்திய கர்மாக்கள் என்று இருக்கின்றன. தினமும் நாம் செய்ய வேண்டியது தான கர்மாக்கள்.*
*இந்த நித்திய கர்மாக்களை முறையாக நாம் செய்யாவிடில் அதற்கான பிராயச்சித்தம். செய்யவே இல்லை என்றால் அதற்கான சில பரிகாரங்கள். இப்படி இரண்டு விதமாக சொல்லப்பட்டிருக்கிறது.*


*பரிகாரங்களுக்கு ஆன பலன்கள் என்று பார்த்தால், நாம் விட்டுவிட்டோம் என்று அது எவ்வாறு வெளிப்படும், மகரிஷிகள் இதைச் சொல்லும் பொழுது ஜென்மாந்திரமாக நாம் செய்த தவறுகள் அதாவது போன போன பிறவிகளில் செய்த தவறுகள், அதாவது செய்யவேண்டிய தான கர்மாக்களை முறையாக செய்யாமலும், நல்லது செய்யவே இல்லை என்றாலோ, விட்டதின்னுடைய பாபங்கள் எல்லாம் நம்மிடத்தில் எவ்வாறு வெளிப்படும் என்றால், வியாதி ரூபமாக வந்து சேரும். ஒரு நோயின் மூலமாக நமக்கு அதை காண்பிக்கும்.*


*நீ செய்ய வேண்டிய கர்மாக்களை சரியாக செய்யவில்லை என்பதை அந்த நோய் மூலம் நமக்கு உணர்த்தும் அதை நாம் பார்த்து விழித்துக்கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நோய்கள் நமக்கு எதனால் வந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கான வழியைக் கூட புராணங்கள் மூலமாக மகரிஷிகள் நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*


*அதற்கு கர்ம விபாக அத்தியாயம் என்று ஒன்று இருக்கிறது. அனேகமாக அனைத்து புராணங்களிலும் இருக்கிறது. இந்த கர்ம விபாகத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்லக்கூடிய புராணம் கருட புராணம். இதில் தனியாகவே ஒரு அத்தியாயம் சொல்லப்பட்டு இருக்கிறது மற்ற புராணங்களிலும் ஆங்காங்கே காண்பிக்கப்படுகின்றன.*


*இந்த கர்ம விபாகம் என்றால் என்ன அர்த்தம்? நாம் செய்யவேண்டிய கர்மாக்களை விட்டதினால் அல்லது செய்யாமலேயே இருந்ததினால் அல்லது தவறாக செய்ததினால், வந்த தான பலன்களை நாம் எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பதை காண்பிப்பது தான் கர்ம விபாக அத்தியாயம்.*


*கருட புராணத்தில் ஒருவன், அவன் இருக்கக்கூடிய தான நிலைக்கும், அவர் இருக்கக்கூடிய தான வசதிக்கும் சம்மந்தம் இல்லாமலேயே இருக்கிறது. இதை உலகத்திலே நாம் பார்க்கிறோம். பணம் காசு ஐஸ்வர்யம் எல்லாம் நிறைய இருக்கின்றது ஆனால் மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றார்.

நேர்மாறாக புத்திசாலியாக இருக்கிறான் ஆனால் பணம் காசுகள் ஐஸ்வர்யம் எதுவுமில்லை. பணம் காசு ஐஸ்வர்யம் மனைவி குழந்தைகள் வீடு வாசல் எல்லாம் சௌகரியமாக இருக்கிறது ஆனால் வியாதி படுத்துகிறது. ஒரு வசதியும் இல்லை ஆனால் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இப்படி எல்லாம் வேறுபாடுகள் வருகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாம் ஊகிக்க முடியாது.*


*இதை நாம் சரிவர புரிந்து கொள்ளாத அதனால்தான் நாம் செய்யக்கூடிய கர்மாவுக்கும் அதனால் அனுபவிக்கக்கூடிய பலன்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை பார்க்கிறோம். ஆனால் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி தான் இந்த கர்ம விபாகா அத்தியாயம் காண்பிக்கின்றது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
02/11/2020*

*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய ஷண்ணவதி தர்ப்பணங்களில் சிலவற்றை விட்டு விட்டால் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.*



*இந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் நிறைய பரிகாரங்களையும் செய்து கொண்டிருக்கிறோம் செய்தோம் இன்னும் செய்ய இருக்கிறோம். இவற்றிற்கான பலன்கள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால், பல தவறான புரிதல்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன. எதையும் கடைசி வரையிலும் முழுமையாகத் தெரிந்து கொள்வது என்பது குறைந்துவிட்டது.*



*அதை நாம் அவசியம் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் முக்கியமாக நம்முடைய வேதம், தர்ம சாஸ்திரம், புராணங்கள் காட்டக்கூடிய தான பிராயச்சித்தங்கள். இதை நாம் சரியாக புரிந்து கொள்ளாத அதனால்தான் குழந்தைகளுக்கு எவ்வளவோ பரிகாரங்கள் செய்தும் கல்யாணமே வரன் அமையவில்லை என்று வருத்தமாகவும் கோபமாகவும் சொல்வதை நாம் பார்க்க முடிகிறது.*



*பரிகாரங்கள் நிறைய செய்துவிட்டோம் பெண் வர வேண்டியது தான் பாக்கி என்று சொல்கிறோம். அதேபோல ஸ்தலங்களுக்கு நிறைய போகிறோம். வியாதிகள் குறைப்பதற்காக ஆங்காங்கே சென்று நிறைய பரிகாரங்களை நாம் செய்கிறோம். ஆனால் வியாதிகள் குறையவில்லை போய்வந்த செலவுதான் அதிகமாக உள்ளது.*



*இப்படியெல்லாம் குறைபட்டு பேசக்கூடியவர்களை நாம் நிறைய பார்க்க முடிகிறது. ஏன் அவர்களுக்கு நடக்கவில்லை என்றால் அதிலுள்ள தத்துவத்தை நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இது விஷயமாக பரிகாரங்கள் என்று தனியாக உள்ளது அதை பார்ப்போம்.*

*இப்பொழுது இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களில் சில தர்ப்பணங்களை நாம் விட்டுவிட்டால், அதற்கு என்ன பிராயச்சித்தம் அதாவது பரிகாரங்கள். இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களும் நித்தியம் என்பதை முதலில் நாம் பார்த்தோம். அதாவது கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும்.*

*ஏனென்றால் இவைகள் எல்லாம் நித்திய கர்மா என்று பெயர். எப்படி நாம் தினமும் குளிக்கின்றோமோ / போஜனம் செய்கின்றோமோ அதேபோல் தான் இந்த தர்ப்பணங்கள். கட்டாயம் செய்ய வேண்டும் தவறவிடக் கூடாது. சில காரணங்களினால் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும்.*

*அதாவது தீட்டு வந்துவிட்டால் சில புண்ணிய காலங்கள் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது மட்டுமல்ல பல காரியங்கள் விட்டுப் போகும். இந்தப் புண்ணிய கர்மா இல்லாமல் சிவபூஜை வைஸ்யதேவம் ஹௌபாசனம் இப்படி நிறைய கர்மாக்களை நாம் செய்ய முடியாது இந்த தீட்டு காலங்களில் 10 நாள் தீட்டு வந்துவிட்டது என்றால். இதற்கெல்லாம் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கின்றன.

இது விஷயமாக மகரிஷிகள் சொல்கின்ற பொழுது, வேதத்தில் நித்தியமாக நமக்கு காண்பிக்கப்பட்டிருக்கிறது, கட்டாயம் தினமும் செய்யவேண்டும் விடக்கூடாது, என்று சொல்லப்பட்ட கர்மாக்களை தவறாக செய்தாலும், காலம் தவறு செய்தாலும், செய்யாமலேயே விட்டு விட்டாலும், அதற்கு முதல் பிராயச்சித்தம் என்னவென்றால் அபோஜனம் அதாவது உபவாசம் இருத்தல்.*



*காரணம் என்ன என்றால் நம்முடைய புத்தி சரியான முறையில் அங்கு வேலை செய்யவில்லை. நம்முடைய எண்ணம் சரியான முறையில் அங்கு வேலை செய்யவில்லை. அந்த காரியத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் நமக்கு வரவில்லை. விட்டு விட்டோம் என்றால் அது திரும்பவும் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் நமக்கு வரவில்லை.*



*அப்படிப்பட்ட நல்ல எண்ணங்களை கொடுப்பது எது என்றால் நாம் சாப்பிடக்கூடிய ஆகாரங்கள் தான் அதை கொடுக்கின்றது. மனோபலத்தையும் புத்தி சக்தியையும் நமக்கு எது கொடுப்பது என்றால் நாம் சாப்பிடக்கூடிய அன்னம் தான்.*



*அந்த உணவை சரியான முறையில் நாம் சாப்பிடவில்லை என்றால் நம்முடைய புத்தி சரியாக வேலை செய்யாது. நல்ல எண்ணங்கள் உருவாகாது. ஆகையினாலே தான் ஆகார விஷயங்களில் நிறைய கட்டுப்பாடுகளை தர்மசாஸ்திரம் நமக்கு சொல்லி இருக்கிறது.*

*இப்படித்தான் சாப்பிடவேண்டும், இப்படி உட்கார்ந்து கொண்டு தான் சாப்பிட வேண்டும், இன்ன வஸ்துக்களை தான் சாப்பிட வேண்டும், இந்த அளவில் தான் சாப்பிட வேண்டும் அப்படி எல்லாம் தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*



*இந்த நாட்களில் உணவு படிப்பு அனைத்துமே சுதந்திரமாக போய்விட்டது. சாப்பிடுகின்ற விஷயத்திலே என்ன கட்டுப்பாடு என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் நாம் சாப்பிடக்கூடிய சாப்பாடு சரியான முறையில் இல்லாவிடில் நம்முடைய புத்தி கெட்டுப் போய்விடும்.*

*மனது கெட்டுப்போய்விடும் பிராண சக்தி குறைந்து போய்விடும். நாம் உயிரோடு இருந்தும் நடைப்பிணம் ஆகவே இருக்க வேண்டிய நிலைமை வரும் நம்முடைய ஆஹாரங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத பொழுது.*





*ஆகையினாலே தான் நிறைய முறைகளை சாப்பிடுகின்ற விஷயத்திலே காண்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் இந்த முறையில் தான் இன்ன வஸ்துக்களை தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னதற்கு இதான் காரணம். அடிப்படையாக முதலில் இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.*



*அதுதான் ஒருவன் ஒரு தவறு செய்கிறான் என்றால், அவன் சாப்பிட்ட ஆகாரத்தை வைத்து அதை கணக்கு செய்துகொள்ளலாம். அதாவது நம்முடைய ஒரு நோய்க்காக ஒரு மருத்துவரிடம் செல்கிறோம், உடனே மருத்துவர் முதலில் கேட்பது என்ன நீ என்ன சாப்பிட்டாய் இன்றைக்கு? ஏன் நாம் சாப்பிடக்கூடிய உணவில்தான் அனைத்துமே இருக்கிறது.*



*ஒரு ஜுரம் வந்தது என்று நாம் மருத்துவரிடம் போனாலும் கூட அவர் நீ எந்த தண்ணீரில் குளித்தாய் எந்த தண்ணியை நீ குடித்தாய் என்று கேட்க மாட்டார், என்ன நீ சாப்பிட்டாய் என்றுதான் கேட்பார். அந்த உணவுதான் அடிப்படை யாக முக்கியமான சக்திகளை நமக்கு கொடுக்கிறது.*



*புத்தி சக்தி மனோபலம் பிராண சக்தி, இந்த மூன்றையும் நமக்கு அளிக்கக்கூடியது நாம் சாப்பிடக்கூடிய தான உணவு. ஆகையினாலே தான் தர்மசாஸ்திரம் நமக்கு முதல் பிராயச்சித்தமாக அபோஜனம் அதாவது உபவாசம் இருத்தல் வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.*



*பித்ரு கர்மாக்கள் எல்லாம் ஆரம்பிக்கின்ற பொழுது முதலில் நாம் எதுவுமே சாப்பிடாமல் தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் வாத்தியார் இடத்தில் நாம் என்ன சொல்கிறோம் என்றால் என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன் ஆனால் சாப்பாட்டில் மட்டும் கையை வைத்து விடாதீர்கள் என்று தான் சொல்வோம். எனக்கு அவ்வப்பொழுது ஒரு மணிக்கு ஒரு முறை காபி மட்டும் குடிக்கிறேன்.*



*ஆனால் நாம் சாப்பிடக்கூடிய ஆகாரம் வேறு மாதிரியாக இருந்தால், நமக்கு புத்தி சரியாக வேலை செய்யாது, மனது அந்த காரியங்களில் ஈடுபடாது, பிராண சக்தி நம்மிடம் இருக்காது. இதை கருத்தில் கொண்டு தான் உபவாசம் நம்முடைய எல்லா கர்மாக்களையும் முதலில் ஆரம்பிக்கின்றது. பிதுர் கர்மாக்களை செய்யும்பொழுது அப்படித்தான் இருக்க வேண்டும்.

உபவாசம் நாம் இருக்கும் போது நம்முடைய புத்தியானது பலவிதமான ஆற்றல்களை சக்திகளை வெளிப்படுத்தும். பசியோடு இருப்பவனுக்கு மூளை மிக வேகமாக வேலை செய்யும். மனசு மிகுந்த தெளிவுடன் இருக்கும். பிராண சக்தி மிகவும் அதிகமாக இருக்கும். அது எப்படி சாப்பிடாமல் இருந்தால் மயக்கம் தானே வரும், அதற்கான காரணம் நாம் அப்படி பழக்கப்பட்டு விட்டோம்.

ஏதோ ஒன்றை அடிக்கடி வாயில் போட்டு அரைத்துக் கொண்டு இருப்பதினால் தான் அப்படிப்பட்ட ஒரு எண்ணம் நமக்கு வருகிறது. அதனால் தான் அபோஜனம் என்கின்ற உபவாசத்தை முதலில் தர்மசாஸ்திரம் பிராயச்சித்தமாக நமக்கு காண்பிக்கின்றது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Ayya roomba nandri ( Thank u so much )
But very sorry for a very very late reply from my side/
You are always helpful to me with worthy comments / replies / guidance.
nandri nandri nandri
 

Latest ads

Back
Top