#386. சிவ சக்தியர்
புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை ஆயனாய்
புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே.
புவனத்தைப் படைப்பது சிவ சக்தியர். அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள் உள்ளனர். அவர்கள் முறையே நான்முகன், திருமால், ருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆவர். படைக்கும் போது சிவசக்தியர் பிரம்மனிடம் பொருந்தி இருப்பர். நிலம், நீர், தீ, வளி, வெளி, விந்து, நாதம், சக்தி, சிவன் என்ற ஒன்பதையும் படைப்பர்.