There is a recent post I received, concerned with Gothram, is shared here with: If someone had posted it earlier then it would easy to locate in 2026 recent post and bear with it.
கோத்திரங்களும்,
பிரவரங்களும்---
கோத்திரங்கள் எத்தனை ?
கோத்திரங்கள் மொத்தம் - *552 *
அவை கீழ்கண்டவாறு பிறிக்கப் பட்டுள்ளது.
1-ஏகார்ஷ்ய கோத்திரங்கள்-- 27.
2-த்வயார்ஷேய கோத்திரங்கள்-- 20.
3-தர்யார்ஷேய. கோத்திரங்கள்-- 430
4-பஞ்சர்ஷய கோத்திரங்கள்-- 73.
5-ஸப்தாரஷேய கோத்திரங்கள்-- 02
______
மொத்தம----->>>. 552
______
ஸூத்ரங்கள்--- >>>. 21.
நடைமுறையில் நமக்கு தெரிந்த
கோத்திரங்கள்- ----->>>. 20
ஸூத்திரங்கள்---- -->>>. 04
கோத்திர பிரிவு ------- >>>. 504.
கோத்ரம், அபிவாதயே, சூத்ரம் இவைகளை பற்றி சில விவரங்கள்....
ஸூத்ரங்கள், ஒவ்வொருவரும் வாழ்வில் அனுஷ்டிக்க வேண்டிய தர்ம ஸம்ஸ்காரங்களைத்தான் குறிப்பிடுகின்றன. ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா எழுதியுள்ள “சதாசரம்” என்ற புத்தகத்திலிருந்து சில குறிப்புகள்.
அபிவாதயே, பார்கவ, ஸ்யாவன, ஆப்நவாந, ஔர்வ, ஜாமதக்ன்ய, பஞ்சார்ஷேய, ப்ரவரான்வித (ஸ்ரீ வத்ஸ கோத்ர

ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜுஸ்சாகாத்யாயீ, சுப்ரமண்ய சர்மா நாமாஹம் அஸ்மிபோ: என்பது போல, அவரவர் ப்ரவரம், கோத்ரம், ஸூத்ரம், வேதம், சர்மா நாம – இவைகளைக் கூற வேண்டும். ப்ரவரான் விதஹ என்று கூறாமல், ப்ரவரான் வித என்று கூற வேண்டும்.
நமது கோத்ர ரிஷியினிடமிருந்து உண்டான, ப்ரபலமான, யோக்யதையுள்ள ரிஷிகளே, ப்ரவர ரிஷிகள் எனப்படுகிறார்கள். சில கோத்ரத்தில் 7 ப்ரவர ரிஷிகள், சிலதில் 5, சிலதில் 3, சிலதில் 1 – இருக்கலாம். ஆதலால் ஸப்தார்ஷேய, பஞ்சார்ஷேய, த்ரயார்ஷேய, ஏகார்ஷேய எனக் கூறுகிறோம். ‘அபிவாதயே’ எனில் இவைகளைச் சொல்லி நான் யாரெனத் தெரிவிக்கிறேன் என்று பொருள்.
ஆதியில் 9 ரிஷிகளிடமிருந்தே கோத்ரங்கள் உண்டாயின. அவை பின்னர் நூற்றுக்கணக்காக வளர்ந்தன. நாம் எந்த ரிஷியின் பரம்பரையிலிருந்து நேராக உண்டானோமோ, அவர்களையே கோத்ர ரிஷி என்கிறோம். சமானமான கோத்ரம் உள்ளவர் சகோதரர். சமமான ப்ரவரமுள்ளவர் சப்ரவர். சகோதரர்களையும், சமான ப்ரவர்களையும் மணந்து கொள்ளக் கூடாது.
முதலில் ப்ரவரம், பிறகு கோத்ரம், பிறகு ஸூத்ரம் என்பதைக் கூறுகிறோம். அதன் பிறகு நமது வேதம் எது என்றும், பிறகு சர்மா என்னவென்றும், அதன் பின் நாமா என்ன என்றும் கூறுகிறோம். அதன்பின் அஸ்மிபோ என்கிறோம். ‘அஸ்மி’ என்றால் (மேலே சொன்னவைகளுடன் கூடியவனாக) இருக்கிறேன் என்று பொருள். “போ” எனில் பெரியோர்களை மரியாதையாக அழைப்பதாம்.
ஆஸ்வலாயநம், கௌஷீதகம், போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம், ஸத்யாஷாடம், வைகாநஸம், காத்யாயனம், த்ராக்யாயனம், ஜைமினீயம் என ஸூத்ரங்கள் பல உள்ளன. அந்தந்த ரிஷிகள் ‘கர்பாதானம்’ முதல் என்னென்ன ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும் என விதித்திருக்கிறார்கள். மங்களமானவற்றை பூர்வப்ரயோகம் என்றும், மரண விஷயமானதை அபரம் என்றும் கூறுவர்.
ரிக்வேதத்திற்கு ஆஸ்வலாயனம், கிருஷ்ண யஜுர் வேதத்திற்கு போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம், ஸத்யாஷாடம், வைகானஸம் என்ற ஸூத்ரங்கள் ப்ரசித்தமானவை. சுக்ல யஜுர்வேதத்திற்கு காத்யாயனம், ஸாம வேதத்திற்கு த்ராஹ்யாயனம் என்ற ஸூத்ரங்களாம்.
ஒரு வேதத்திற்குப் பல ரிஷிகள் ஸூத்ரம் இயற்றினாலும், நமது பெரியோர் கைக்கொண்ட ஸூத்ரத்தையே நாம் அனுஷ்டிக்க வேண்டும். சிகை, புண்டரம், ஸூத்ரம், ஆசாரம் இவைகளை நம் பெரியோர்கள் ஆசரித்தபடி நாம் செய்ய வேண்டும். நம் ஸூத்ரம் செய்து வைப்பவர் கிடைக்கவில்லையென்று அன்னிய ஸூத்ரத்தால் செய்வது தகாது.
தொகுப்பாசிரியர்- ஆன்மீகம்- சந்தானம் மாம்பலம்.