• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
namaskaram.jpg

நமஸ்காரம்






நமஸ்காரம் எனும் சொல்லுக்கு வணக்கம் செலுத்துகின்றேன் என்று பொருள்.வணக்கம் செலுத்துதல் மிக நாகரீகமான மரபு.

மாதா எனும் அன்னைக்கும், பிதா எனும் தந்தைக்கும் தினமும் பாத பூஜை செய்பவருக்கும், பாதத்தைத் தொட்டு வணங்குபவருக்கும் ஏழேழு ஜன்மங்களிலும் செய்த பாவம் தொலையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.


பாதத்தைத் தொட்டு வணங்குதலுக்கு உரியவர்கள் பெற்றவர்களே.



வித்யை எனும் கல்வியை வழங்கும் குருவுக்கு வணக்கம் செலுத்துவது இரு கைகளையும் நெற்றிக்கு நேராக கூப்பிய வண்ணம் செய்வது குருவருளை பெறத்தக்கது.


தெய்வங்களை வணங்குவது இரு கைகளையும் மேலே தூக்கி அஞ்சலி செய்வது தெய்வப்பலன்களைப் பெறக்கூடியது. இரு கைகளையும் தூக்கி வணக்கம் செய்வது சரணாகதி - தெய்வமே கதி என்பதைக் காட்டுகின்றது.



சக மனிதர்களுக்கும், இதயத்துக்கு இதமான நண்பர்களுக்கும் வணக்கம் செலுத்துவது - இரு கைகளையும் இருதயத்துக்கு நேராக கூப்புவது நலம் பயக்கும்.


மரியாதைக்கு உரியவர்களை, நம் முகத்துக்கு நேராக இரு கைகளையும் கூப்பிச் செய்வது - நல் அபிப்ராயத்தைப் பெற உதவும்.


வணக்கம் என்பது இணக்கம் ஏற்படுத்தக் கூடியது. நல்ல மதிப்பைப் பெறக் கூடியது
.


வணக்கம் சொல்லி எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிப்பது வெற்றியாக முடியும்.


பிரச்னைகளுக்குரிய இடத்தில் கூட, விரோதியாக இருப்பவருக்குக் கூட வணக்கம் செலுத்துவது சுணக்கத்தை நீக்கி இணக்கத்தைத் தரக்கூடியது.


நமஸ்கரிக்கும் வழக்கம் - தொன்று தொட்டு வரக்கூடியது. வேத காலத்திலிருந்தே நமஸ்கரிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.

நான்கு வேதங்களில் இரண்டாவதாக இருக்கும், யஜுர் வேதத்தின் இருதயம் போன்று இருக்கும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த ஸ்ரீ ருத்ர மந்திரத்தின் சிறப்பு பகுதியாக விளங்குவது ருத்ரனை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்த பகுதி நமகம்."ருத்ராயா ததாவினே க்ஷேத்ராணாம் பதயே நமோ நமோ" (துன்பங்களைத் துடைப்பவரும், உலகைப் படைத்துக் காப்பவரும் ஆகிய ருத்ரனாகிய பரமேஸ்வரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்)

நமகம் எனும் மந்திரத்தை உள்ளடக்கிய ஸ்ரீ ருத்ரத்தைச் சொல்வதும், கேட்பதும் பரமேஸ்வரனையே ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து நமஸ்கரித்தலுக்கான பலன் கிடைக்கும்.


ஸ்ரீ ருத்ர மந்திரங்களால் மகேஸ்வரனை மானசீகமாக நமஸ்கரிப்பது மகத்தான பலனைத் தரக்கூடியது.


சைவ வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளில், திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத்தில், நின்ற திருத்தாண்டகம் எனும் பகுதி வடமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரத்தின் தமிழின் நேர் வடிவம் என்று ஆய்வாளர்கள் மதிக்கின்றார்கள்.


நின்ற திருத்தாண்டகம் பாடும்போதும், கேட்கும்போதும் சிவனை நமஸ்கரிப்பது சிறந்த பலனைத் தரக்கூடியது.



"மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்கோதா விரியாய்க் குமரி யாகிக்கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்போதாய மலர்கொண்டு போற்றி நின்றுபுனைவார் பிறப்பறுக்கும் புனித னாகியாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகிஅழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே." (நின்ற திருத்தாண்டகம்)


தெய்வங்களை வணங்கும் வகைகள் பற்றி சாஸ்திரங்கள் கூறுவதைப் பார்ப்போம்.


தெய்வ ஸன்னிதானத்திலுள்ள தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிவிட்டு, ஆலயத்தில் கொடிமரம் இருந்தால் - தெய்வத்திற்கும் கொடிமரத்தைக்கும் இடைப்பட்ட இடத்தில் இல்லாமல், கொடிமரத்திற்குப் பின்னே நமஸ்கரிக்க வேண்டும்.


கொடிமரத்திற்கும் தெய்வ ஸன்னிதானத்திற்கும் இடையில் நமஸ்கரிக்கக் கூடாது.

முதலில் ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் பற்றிக் காண்போம்.


அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்யக் கூடியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.


உடல் முழுவதும் முதலில் பூமியில் படும்படி பொருத்தி,


(1) வலது கையை முதலில் தலைக்கு நேரே தூக்கி பிறகு


(2) இடது கையை தலைக்கு நேரே தூக்கி அஞ்சலி (கூப்பிய கரம்) செய்யவேண்டும். முகத்தை நேராக தரையில் கொண்டு வந்து


(3) நெற்றியைத் தரையில் படச் செய்து, முன்னர் செய்தது போல வலக்கையை இடுப்புக்கு நேரே கொண்டுவந்து,

வலது புஜம் எனும் வலது தோள்

(4) தரையில் படச்செய்து,

பிறகு இடது கையை இடுப்புக்குக் கொண்டு வந்து,
இடது

(5) தோளைத் தரையில் படச்செய்ய வேண்டும்.

பின்னர், முதலில் வலது (6) காதையும் பிறகு
இடது
(7) காதையும் தரையில் படச்செய்ய வேண்டும்.

பின்னர் மோவாய்
(8) தரையில் பட வேண்டும்.

இதுவே ஸாஷ்டாங்க (எட்டு அங்கங்களும் - எட்டு உறுப்புகளும் தரையில்படக்கூடிய) நமஸ்காரம் எனப்படும்.

இறைவன் படைத்த உடல் இறைவனுக்கே அர்ப்பணம் எனும் செயலைக் காட்டுவதே அஷ்டாங்க (8 உடல் உறுப்புகள்) நமஸ்காரம். இந்த நமஸ்காரம் தெய்வீகப் பலனை வாரி வழங்கக் கூடியது.


பெண்கள் செய்யக் கூடியது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.


பெண்கள் முதலில் இரண்டு (1,2) முழங்கால்களைத் தரையில் பொருந்தச் செய்து, முதுகை வளைத்து, பின் இரண்டு (3,4) கைகளையும் கூப்பியவாறு தரையில் படச் செய்து, பின் நெற்றியினை (5) தரையில் படச் செய்ய வேண்டும்.

இதுவே ஐந்து உடல் உறுப்புகள் தரையில் படச்செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். பெண்களுக்கு நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மணவாழ்க்கையையும் அருளுவது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.
பெண்களின் திருமாங்கல்யம் எந்நிலையிலும் தரையில் படக்கூடாது.


அங்கப்ரதக்ஷ¢ணம் : தெய்வங்களுக்கு அங்க பிரதக்ஷ¢ணம் செய்வது என்பது ஒரு விசேஷ வழிபாடு. உடலின் அனைத்து பாகங்களும் தரையில் படும்படி நமஸ்கரித்துக் கொண்டே ஆலயத்தை வலம் வருவது பெரும் புண்யங்களைத் தரக்கூடியது. பக்தர்கள், பெரியோர்கள், தவசீலர்கள் வலம் வந்த பாதையில் அவர்களின் பாதங்கள் பட்ட இடங்களையும் நமஸ்கரிப்பதால், அடியவர்க்கும் அடியவராக விளங்கக்கூடிய பெருமானின் பூரண அருளைத் தரக் கூடியது. 'நான்' என்ற அகந்தையை நீக்கக் கூடியது. இறைவன் ஒருவனைத் தவிர வேறு கதியில்லை என்ற செயலைக் காட்டுவது அங்க பிரதக்ஷ¢ணம் ஆகும்.


யாரை நமஸ்கரிக்கக் கூடாது ?


இறைவனை எண்ணிக்கொண்டு ஜெபம் செய்து கொண்டிருப்பவரையும், தானம் செய்து கொண்டிருப்பவரையும், தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருப்பவரையும், யாகங்கள் செய்து கொண்டிருப்பவரையும், தர்ப்பணம் செய்து கொண்டிருப்பவரையும், சிரார்த்தம் செய்பவரையும் நமஸ்கரிக்கக் கூடாது.


பெரும் புண்யம் நல்கும் நமஸ்காரம் :


பெரும் தவசீலர்கள் உள்ள சபையிலும், தெய்வங்கள் உறைந்திருக்கும் யாகசாலையிலும், ஆலயங்களிலும், புண்ய §க்ஷத்ரங்களிலும், புண்ய தீர்த்தங்களை நோக்கியும், வேத கோஷம் முழங்கும் இடங்களிலும் - செய்யக் கூடிய பிரத்யேக நமஸ்காரங்கள் பலமடங்கு புண்யங்களைத் தரக்கூடியது.


நமஸ்கரிக்கும் திசை :


நமஸ்கரிக்கும் போது நமது தலை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ அமையவேண்டும். தெற்கு நோக்கி நமஸ்கரித்தல் கூடாது.


புண்யங்கள் தரும் நமஸ்காரம் பற்றி அறிந்தோம்.
பெரும் புண்யத்தையும் தேக ஆரோக்கியத்தையும் நல்கக் கூடிது "சூர்ய நமஸ்காரம்" ஆகும்.

சூர்ய நமஸ்காரமும் வேத காலத்திய பழமை வாய்ந்தது.

சூர்ய நமஸ்காரம் பற்றி யோக சாஸ்திரங்கள் பல்வேறு விதமானப் புகழாரங்களைக் கூறுகின்றன.

வைதீக சம்பிரதாயங்களில் சூர்ய நமஸ்காரம் பிரதான இடம் பெறுகின்றது. வேதங்கள் போற்றும் வேதநாயகர் சூர்யபகவான்.


"நமஸ்கார ப்ரியோ பானு:" என்ற சொல்வழக்கப் படி, உலகை ஜீவிக்கக் கூடிய உலக நாயகனாகிய சூர்ய பகவானை வேத மந்திரங்கள் (அருண ப்ரச்னம்) சொல்லி வணங்குவது நல் தேக ஆரோக்கியத்தையும், தெளிவான கண் பார்வையையும், நீடித்த ஆயுளையும், நல்லறிவையும் நல்கக் கூடியது.


சூர்ய பகவான் ஸஹஸ்ர வியாகரண பண்டிதர் என்றும் அனைத்துக் கலைகளுக்கும் நாயகன் என்றும் லோக குரு என்றும் பத்ம புராணம் கூறுகின்றது.


கண்கண்ட தெய்வமான, லோக குருவான சூர்ய பகவானிடம் பாடம் கற்க விருப்பம் தெரிவிக்கின்றார் ஹனுமன். சூர்ய பகவான் தன்னால் ஒரு இடத்தில் நின்று பாடம் சொல்லித் தர இயலாது என்கின்றார். அதற்கு ஹனுமன் சூர்யன் சுற்றி வரும் பாதையிலேயே, அவரை நோக்கிய வண்ணம் பின்புறம் நடந்துகொண்டே, கைகள் கூப்பிய வண்ணம் பாடம் கற்கின்றார். அவரை "நவ வியாகரண பண்டிதர்" என்று புராணங்கள் புகழும். சூர்யனிடம் பாடம் கற்றதால் பெரும் அறிவாளியாகின்றார், ஆகையால் அவர் சொல்லின்செல்வர் என்று புகழப்படுகின்றார்.


சாக்த வழிபாடு என்பது சக்தியை அம்பிகையை வழிபடுவது. இந்த சாக்த வழிபாட்டின் உச்ச நிலை வழிபாடாகிய ஸ்ரீ துர்கா ஸப்தசதீ (சண்டி ஹோமத்தின் போது சொல்லப்படக் கூடிய எழுநூறு ஸ்லோகங்கள்) எனும் ஸ்லோகங்கள் அம்பிகையின் அருட்கடாட்சத்தை அருளக்கூடியது.


பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட துர்கா ஸப்தசதீயின் ஐந்தாவது அத்தியாயம் மிக முக்கியம் வாய்ந்தது. அருட்செயல்கள் புரிந்த தேவியை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்தது ஐந்தாவது அத்தியாயம் .


"யா தேவி ஸர்வபூதேஷ¤ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

(அனைத்துலகையும் ஈன்று எடுத்த அன்னை வடிவாகிய அம்பிகைக்கு வணக்கம். மீண்டும் வணக்கம். என்றென்றும் வணக்கம்)

இந்த அத்தியாயத்தில் வரும் மற்ற ஸ்லோகங்களிலும் வரும் "நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: " என்று சொல்லும்போதெல்லாம் அம்பிகையை நமஸ்கரிப்பது, வாழ்வில் ஏற்படக் கூடிய துன்பங்கள் அனைத்து அகற்றி, அளவற்ற அருளை பெறக் கூடியது.


நமஸ்கரிப்பதால் ஏற்படும் நற்பலன்களைப் பெறுவோம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
 
Thaipusam

murugan_batucaves.jpg



Thaipusam is an important festival observed by the Hindus of southern India during the Tamil month of Thai (January - February). Outside of India, it is celebrated mainly by the Tamil speaking community settled in Malaysia, Singapore, South Africa, Sri Lanka and elsewhere around the world.


Dedicated to Lord Murugan or Kartikeya


Thaipusam is dedicated to the Hindu god Murugan, the son of Shiva and Parvati. Murugan is also known as Kartikeya, Subramaniam, Sanmukha, Shadanana, Skanda and Guha. It is believed that on this day, Goddess Parvati presented a lance to Lord Murgan to vanquish the demon army of Tarakasura and combat their evil deeds. Therefore, Thaipusam is a celebration of the victory of good over evil.



How to Celebrate Thaipusam

On the Thaipusam day, most devotees of Lord Murugan offer him fruits and flowers of yellow or orange color - his favorite colors and also adorn dresses of the same color. Many devotees bear milk, water, fruits and floral tributes on pails hung from a yoke and carry them on their shoulders to various Murugan temples, far and near. This wooden or bamboo structure called 'Kavadi' is covered with cloth and decorated with feathers of peacock - the vehicle of Lord Murugan.


Thaipusam in Southeast Asia


Thaipusam celebrations in Malaysia and Singapore are known for their festive fervor. The most famous Kavadi pilgrimage on the Thaipusam day takes place at the Batu Caves in Malaysia, where a large number of devotees head towards the Murugan temple in procession carrying the 'Kavadi'. This festival attracts over a million people each year at the Batu Caves, near Kuala Lampur, which houses several Hindu shrines and the 42.7 meter high statue of Lord Murugan that was unveiled in January 2006. Pilgrims need to climb 272 steps to access the temple on the hilltop. Many foreigners also take part in this Kavadi pilgrimage. Notable among them are Australian Carl Vedivella Belle, who has been taking part in the pilgrimage for more than a decade, and German Rainer Krieg, who went on his first Kavadi in the 1970s.


Body Piercing on Thaipusam


Many fanatical devotees go to such extent as to torture their bodies to appease the Lord. So, a major feature of Thaipusam celebrations is body piercing with hooks, skewers and small lances called 'vel'. Many of these devotees even pull chariots and heavy objects with hooks attached to their bodies. Many others pierce their tongue and cheek to impede speech and thereby attain full concentration on the Lord. Most devotees enter into a trance during such piercing due to the incessant drumming and chanting of "vel vel shakti vel.

Thaipusam: The Murugan Festival
 
How the Times were measured by Ancient Hindus


The Hindu 'panchanga` system (analogously derived in its etymology from the 'fine limbs`) is any day more complicated than western calendars. In the Hindu panchanga, there are five basic elements in time division:

The vara (weekday) is the natural solar day (savana divasa) beginning at sunrise. This vara has numerous sub_divisions:
A sura (prativa pala) = 0.006 secs
60 prativa palas = 1 vipala = 0.4 secs

60 vipalas = 1 pala = 24 secs
60 palas = 1 ghatika = 24 min

60 ghatikas = 1 divasa

A further refinement was the division:

10 vipalas = 1 prana (4 secs)

6 pranas = 1 pala (24 secs)

Artha´saastra and for nimisha.
The measures of time are thus defined in the Puranas:
15 nimesa = 1 kastha
30kastha= 1 kala
30 kala = 1 muhurta
30 muhurta = 1 day-and-night


Hindu Wisdom

Hindu Idea of Time | History of Hinduism - Hindu Dharma
 
ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்கு களை எதற்காகச் செய்கிறார்கள்?

இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன் பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என் னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்ல ப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண் டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு... வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்து க்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப் படும்போ து காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரி யும்.

மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழு வதும் அகன்றுவிடுவதில்லை. என வே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச்சுற்றிக்கொண்டு இரு ப்பது பயன் தராது என்று அந்த உயிரு க்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நி லைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக் கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்ப டுத்தும். இது இறந்து போன மனி தருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களு க்கும் நல்லதல்ல.

இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விர ல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிற போது கால்கள் அகலமாகத் திறந்து கொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக் கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.

எனவே, கால் கட்டை விரல்க ளைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூட ப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற் காக நீங்கள் கால்கட்டை விரல் களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாக வே மூடிக்கொள்ளும். இதையேதான் இற ந்தவர்களுக்கும் செய்கி றார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.

மூலாதாரம் திறந்திருக்கிற போது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக் கூடும். மாந் திரீகப் பயிற்சி மேற் கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்த க்கூடும். அப்படி அந்த உடல் வேறு வித த்தில் பயன் படுததப் பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன் புறுத்துவதாக இருக்கும். அதனால் தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன.

aanmigam: January 2014
 
[h=3]பண்டைத் தமிழர்களின் கால அளவு முறைகள்[/h] பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள். பண்டைய தமிழர்களின் கால அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாகவும், துல்லியமாகவும் இருந்துள்ளது.

"நிமைநோடி மாத்திரை நேர்முற் றிதனை
இணைகுரு பற்றும உயிரென்றார் - அனையஉயிர்
ஆறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம்"



[h=4]விளக்கம் :[/h] 2 கண்ணிமை=1 கைந்நொடி (0.125 செகன்ட்)

2 கைந்நொடி=1 மாத்திரை (0.25 செகன்ட்)

2 மாத்திரை=1 குரு (0.5 செகன்ட்)

2 குரு=1 உயிர் (1 செகன்ட்)

6 உயிர்=1 கஷணிகம்

12 கஷணிகம்=1 விநாடி

60 விநாடி=1 நாழிகை.


இத்தோடு இல்லாமல், பொழுது, நாள், வாரம், மாதம் என நீண்டுகொண்டே செல்கிறது. மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.


"நாழிகை ஏழரை நற்சாமந் தானாலாம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் - தோழி
தினமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே"



[h=4]விளக்கம் :[/h] 60 விநாடி=1 நாழிகை

2½ நாழிகை=1 ஓரை

3¾ நாழிகை=1 முகூர்த்தம்

7½ நாழிகை=1 சாமம்

4 சாமம்=1 பொழுது

2 பொழுது=1 நாள்

7 நாள்=1 கிழமை

15 நாள்=1 பக்கம்

30 நாள்=1 திங்கள்

6 திங்கள்=1 அயனம்

2 அயனம்=1 ஆண்டு


( Konjam Thala Sutharathu)

??????? ??????????? ??? ???? ???????
 
Significance of Atchatha in Poja Rituals

இந்து மத அமைப்பினர் அனைவரும் பாரம்பரியமாக, வாழ்த்துக்களை தெரிவிக்க மணமக்களுக்கு, தமது குழந்தைகளுக்கு மற்றும் புதிதாக தொழில் துவங்கும் தமது வாரிசுகளுக்கு " அட்சதை " பயன் படுத்துகின்றனர் இதனால் என்ன பயன் ?

முனை முறியாத அரிசி தான் அட்சதை , நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் . அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம் .

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.

சற்றே யோசித்தால் இயற்கையில் , மணமக்களை வாழ்த்தும் பொழுது மணமக்கள் இரு மாண்பினர்; வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்; ஒருமித்து வாழத்தக்கவர்கள்; அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்.

ஆகவே உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும். மொத்தாமாக மாங்கல்ய தானம் செய்யும் பொழுது தூவி வாழ்த்துவது நன்மையான பலன்களை, அதிகம் வழங்குவது இல்லை என்பது சாஸ்திர உண்மை .

மேலும் தமது வாரிசுகள் புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும் குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும் , மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினை கலந்து,

உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்த புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.

In north india, it is a tradition still now followed wearing the mark of Akshata in the forehead.it is a good omen.


Source: Yahoo answers

Harithaji
 
பந்திக்கு முந்து,படைக்கு பிந்து


இந்த பழமொழிக்கு, சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும், கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது என்பதால்,பந்திக்கு முந்தவேண்டும், சண்டை சச்சரவுகள் ஏற்படும்பொழுது நாம் பிந்திச்சென்று விடவேண்டும் என்ற அர்த்தம் இருப்பது போல் தோன்றும்.
அது உண்மையல்ல..

சாப்பிடுவதற்க்கு நம் கை (வலது கை)முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்)இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும்.


இதுவே பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்று பழமொழியின் அர்த்தம்.


‘பந்திக்கு முந்து, படைக்கு பிந்து’ - IndusLadies
 
தமிழகத்தில் தேவதாசிகள்

14_1725074h.jpg



பெண்கள் சார்ந்தும், பெண்ணியம் சார்ந்தும் எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில மட்டுமே முழுமைபெற்றவையாக இருக்கின்றன. ஆனால் முனைவர் கே. சதாசிவன் எழுதி, கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ‘தமிழகத்தில் தேவதாசிகள்’ என்ற புத்தகம், தன் இலக்கைக் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த தேவதாசி நடைமுறையைப் பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.


கோயில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவரடியார்கள். பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் சமூகத்தினரால் மரியாதையாகப் பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் அந்த மரபின் வழி வந்தவர்களுக்குப் போதிய அங்கீகாரமும் கவனிப்பும் இல்லாமல், தேவதாசிகள் என்பவர்கள் மிகக்கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டனர்.


தமிழ்க் கலாச்சாரத்துக்குச் செழுமை சேர்த்த ஒரு சமூக மரபு தன் சொந்த மண்ணில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனதன் பின்னணியைக் கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். ‘எந்த ஒரு உன்னதமான நிறுவனமும் கூட, சமூக விரோதிகள் அதனுள் சுதந்திரமாக ஊடாட அனுமதிக்கப்படும் பட்சத்தில் உருச்சிதைந்து, மிக மோசமான ஒரு நிறுவனமாகச் சீரழிந்து போய்விடும்’ என்ற உண்மையை தேவதாசி முறையின் அழிவு உணர்த்துவதாகக் குறிப்பிடுகிறார் இவர். நூல் முழுவதும் வியாபித்திருக்கும் அரிய தகவல்களும் அவற்றுக்கான ஆதாரங்களும் ஆசிரியரின் ஆழமான களப்பணியையும் வாசிப்பையும் பறைசாற்றுகின்றன.


புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்:



ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது மிக ஆர்வம் நிறைந்த சுவையான கதை. தேவதாசியாக வேண்டுமென்றால், எந்த ஓர் இளம் பெண்ணும் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் (சிலவற்றின்) ஊடாகப் பயணித்து வர வேண்டும்;

அவையாவன:

1. சடங்குபூர்வமான திருமணம்

2. அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு


3. நிகழ்த்துகலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்


4. அரங்கேற்றம்


5. கடமைகள் மற்றும்


6. இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்


இவை ஒரு ‘சாதாரண’ இளம் பெண்ணை ‘என்றைக்கும் புனிதமான பெண்’ணாகப் பரிணாம மாற்றமடையச் செய்பவளாக அமைகின்றன. இந்த அடுத்தடுத்த படிநிலைகளையும், இவை உள்ளடங்கிய மற்ற பிற சடங்குகளையும் விவாதிப்பதில் கி.பி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரையிலான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


கடமைகள்



பாடல்கள் இசைப்பதும், நடனமாடுவதும்தான் கோயில்களில் அவர்களின் பொதுவான கடமைகளாக இருந்தன. இந்த ஓர் அம்சத்தில் மட்டுமே இராஜராஜேஸ்வரம் கோயிலின் தேவதாசிகளுடைய கடமைகள், இதர கோயில்களில் இணைந்திருந்த இவர்களுடைய சக தேவதாசிகளுடைய கடமைகளோடு ஒரே தன்மையுடையவையாக இருந்தன.


அரசின் உறுதுணை



தேவதாசி முறையை முன்னெடுத்துச் சென்றது அரசின் உறுதுணையாகும். காரணம், அரசுக்கு இது வருவாய் அளிக்கக்கூடிய ஒரு வழி; தேவதாசிகள், நுண்கலைகளின் பாதுகாவலகர்ளாக இருந்திருக்கின்றனர்; மேலும் அரசர்களுக்கும், புரோகிதர்களுக்கும் இன்பம் பெறுவதற்கான ஒரு வழிவகையாக இது இருந்துள்ளது.


சமூக சேவை



தேவதாசிகள், பொதுமக்களுக்கான சமூக சேவைகளை மேற்கொண்டனர் என்று சாசனங்கள் பதிவு செய்துள்ளன. விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டுதோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன. இரண்டு தேவதாசிகளான நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகியோர் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர். அன்னநாடு என்ற இடத்தில் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர்.

http://tamil.thehindu.com/society/women
 
முருகனுக்கு காவடி எடுப்பதன் காரணம் என்ன?

411dce32-5a1b-42ed-a9e7-fdf938d46564_S_secvpf.gif



தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் என்ன?

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார். இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான்.

ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ''தனக்கே சொந்தம்'' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான். இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார்.

அப்போது இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக முருகன் வாக்களித்தார். இந் நிகழ்வு முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் கூறுகின்றார்கள்.

எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும், துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

http://cinema.maalaimalar.com/2014/01/17102924/What-is-the-reason-for-taking.html
 
திதிகள் தெரியும் அவற்றிற்குரிய தெய்வம் தெரியுமா?

TN_130610141329000000.jpg


ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது. அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள்.

நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

யார் இந்த தேவிகள்? அன்னையின் கால வடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திர கலை வளர்கிறது அல்லவா? அந்த ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள்.

காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக, பதினாறாவது நித்யையாக அம்பிகையே வீற்றிருக்கிறாள்.


மாதர் மஹேச தயிதே லலிதே ஹயாஸ்ய
கும்போத்பவாதி முனி ஸன்னுத திவ்ய கீர்த்தே
காமேச்வரி ப்ரப்ருதிஸ் திதி தேவதாபி
ஸம்ஸேவிதாங்க்ரீயுகலே


பரமசிவனுடன் பிரியாதிருக்கும் ச்ருங்கார வடிவினன். ஹயக்ரீவர், அகத்தியர் முதலியவர்களால் துதிக்கப்பட்டவள்; காமேச்வரி முதலான பதினைந்து நித்யா தேவிகளால் சேவிக்கப்படுபவள்; இவளுக்கு நமஸ்காரம் என்கிறது சவுந்தர்யலஹரி. ஒருமுறை பண்டாசுர யுத்தத்தில் தமனன், சந்த்ரகுப்தன் முதலான அசுர சேனாதிபதிகள் இரவு நேரத்தில் அம்பிகையைச் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டார்கள். அன்னை இதனால் சற்று கோபம் கொண்டு புருவத்தை நெறித்தாள். அன்னையின் கோபம் கண்ட நித்யா தேவிகள் பதினைந்து பேரும் ஆவேசமுற்றார்கள்.

அவர்களில் ஜ்வாலா மாலினி தேவியும் வஹ்நி வாஸினி தேவியும் ஜகவலிக்கும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் அன்னையின் உத்தரவு பெற்று, எங்கும் பேரொளியைப் பரப்பினார்கள். இருளில் வந்த அரக்கர்கள் நன்றாகவே தெரியலானார்கள். சக்தி சேனை திருப்பித் தாக்கத் துவங்கிவிட்டது!

பதினைந்து நித்யைகளும், விஷங்கனுக்குத் துணைவந்த பதினைந்து அக்ரோணி சேனைகளையும் அவற்றின் தலைவர்களையும் கணப்போதில் கபளீகரம் செய்து எமலோகம் சேர்ப்பித்தார்கள். காமேசி தமனையும், பகமாலினி தீர்க்கஜிஹ்வனையும், நித்யக்லின்னா ஹும்பேகனையும், பேருண்டா ஹுடுல்லகனையும், வஹ்நிவாஸினி கல்கஸனையும், மகாவ்ஜ்ரேச்வரி கல்கிவாஹனனையும், சிவதூதி புல்கஸனையும், த்வரிதா புண்ட்ரகேதுவையும், குலஸுத்ந்தரி சண்டபாகுவையும், நித்யா குக்குரனையும், நீலபதாகா ஜம்புகாட்சனையும், விஜயா ஜம்பனையும், ஸர்வமங்களா திக்ஷ்ணச்ருங்கனையும், ஜ்வாலாமாலினி த்ரிகண்டகளையும், சித்ரா சந்த்ரகுப்தனையும் கொன்றழித்தார்கள்.


அவர்களின் செயல் வீரத்தைக் கண்டு அன்னை அவர்களைப் பாராட்டினாள். உங்கள் பதினைந்து பேரையும் வணங்குபவர்கள், வாழ்வில் அவர்கள் என்னவெல்லாம் கோருகிறார்களோ அவை அனைத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும்.

உங்களை வணங்குபவர்களுக்கே என் அருள்கிட்டும் என்றும் அம்பிகை அருளினாள்.

ஒரு மாதம் கிருஷ்ண பட்சம் (பவுர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பட்சம்(அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பட்சமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது.

மகா நித்யாவின் கலைகளில் தோன்றி பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்துக்கும் ஒருநாள் ஆக, மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

இவர்கள் மிகுந்த வல்லமை கொண்டவர்கள். தேவியின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் கருணை கொண்டவர்கள். கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால், மிகச்சிறந்த நலன்களைப் பெறமுடியும்.


15 திதிகளும் அவற்றிற்குரிய தெய்வம்:

சுக்லபட்ச ப்ரதமை திதிக்கும் கிருஷ்ணபட்ச அமாவாசை திதிக்கும் அதிதேவதை காமேச்வரி

சுக்லபட்ச த்விதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதிக்கும் அதிதேவதை பசுமாலினி

சுக்லபட்ச த்ருதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ரயோதசி திதிக்கும் அதிதேவதை நித்யக்லின்னா

சுக்லபட்ச சதுர்த்தி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்வாதசி திதிக்கும் அதிதேவதை பேருண்டா

சுக்லபட்ச பஞ்சமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதிக்கும் அதிதேவதை வஹ்நி வாஸினி

சுக்லபட்ச சஷ்டி திதிக்கும் கிருஷ்ணபட்ச தசமி திதிக்கும் அதிதேவதை மகா வஜ்ரேச்வரி

சுக்லபட்ச சப்தமி திதிக்கும் கிருஷ்ணபட்ச நவமி திதிக்கும் அதிதேவதை சிவதூதி

சுக்லபட்ச அஷ்டமி திதிக்கும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதிக்கும் அதிதேவதை த்வரிதா

சுக்லபட்ச நவமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சப்தமி திதிக்கும் அதிதேவதை குலஸுந்தரி

சுக்லபட்ச தசமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சஷ்டி திதிக்கும் அதிதேவதை நித்யா

சுக்லபட்ச ஏகாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச பஞ்சமி திதிக்கும் அதிதேவதை நீலபதாகா

சுக்லபட்ச த்வாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதிக்கும் அதிதேவதை விஜயா

சுக்லபட்ச த்ரயோதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ருதியை திதிக்கும் அதிதேவதை ஸர்வமங்களா

சுக்லபட்ச சதுர்த்தசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்விதியை திதிக்கும் அதிதேவதை ஜ்வாலாமாலினி

சுக்லபட்ச பவுர்ணமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ப்ரதமை திதிக்கும் அதிதேவதை சித்ரா


Temple News | News | Dinamalar Temple | ??????? ???????? ????????????? ??????? ?????????
 
அவனன்றி ஒரு அணுவும் அசையாது

1531766_576296452448727_1197691595_n.jpg



பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது , அவர்களை பார்க்க கிருஷ்ண பகவான் அங்கு வந்தார் ; அவரை முகம் மலர வரவேற்றனர் பாண்டவர்கள் ....புன்சிரிப்புடன் தலையசைத்த கிருஷ்ணா பகவான் , பின் அங்கே நின்றிருந்த பாஞ்சாலியை நோக்கி ,
'' அம்மா பாஞ்சாலி !களைப்பாக இருக்கிறது !......குளிக்க வெந்நீர் வைத்துக் கொடு ''!
என்றார் ;..

மறுகணம் ..பீமன் விறகுகளை சேகரித்து கொடுக்க ....பாஞ்சாலி பெரிய அடுப்பில் தண்ணீர் வைத்தாள் !..
சிறிது நேரம் ஆனது ...நீர் கொதித்திருக்கும் என்று எண்ணியவாறு அடுப்பருகே சென்ற பாஞ்சாலி , நீர் சூடாகாதது கண்டு துணுக்குற்றாள் !...

ஒன்றும் புரியாமல் அனைவரும் சிந்தனையுடன் குழம்பி போய் நின்றிருந்த அக்கணம்....
கிருஷ்ண பகவானின் குரல் அனைவரையும் தட்டி எழுப்பியது !

'' பாஞ்சாலி !....பானையை சாய்த்து தண்ணீரை கீழே ஊற்று !''

மறுகணம் பாஞ்சாலி பானையை சாய்க்க .....
என்ன ஒரு ஆச்சரியம் !.....பானை நீரிலிருந்து ஒரு தவளை குதித்தோடியது !! .....

இப்போது அனைவரின் முகங்களிலும் வியப்பின் சாயல் !

'' என்ன இது ?....இவ்வளவு விறகுகளை எரித்தும் தண்ணீர் சூடாக வில்லையே ?.....மேலும் , இந்த தவளை எப்படி உயிரோடிருந்தது ?..''.

அனைவரும் கேட்க ....பகவான் அமைதியாக பதிலளித்தார் :

'' தண்ணீர் பானையில் தவளை இருந்ததை பாஞ்சாலி கவனிக்க வில்லை !...அடுப்பில் விறகுகளை வைத்து தீப்பற்றியதும் , தவளை அபயக்குரல் கொடுத்தது !...அது தெரிந்ததும் , தண்ணீரை சூடேறாமல் செய்து விட்டேன் !...சர்வ ஜீவராசிகளுக்கும் பாதுகாவலன் நான் !.ஆக , ...தவளையை காப்பாற்ற வேண்டிய கடமையும் எனதல்லவோ ?''

அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்கிற உண்மை பாண்டவர்களுக்கு புரிந்தது



Source:Thangam Krishnamurthy
 
தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.

அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது.

அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.இதுவே இந்துதர்மத்தின் தனிச்சிறப்பு.


Source: Hari Krishnamurthy
 
MA KALI and Her Tongue

10816180.cms


The outstretched tongue of Kali distinguishes her from all other gods and goddesses of the Hindu pantheon. There are many goddesses who, like Kali, are naked and associated with blood and death, including Chandi, Chamunda, Bhairavi and Bhagavati, but none stick out their tongue like Kali.

pixel.gif


Sometimes Kali does not have the characteristic outstretched tongue. She has fangs protruding from the corners of the mouth. This is especially popular in south Indian imagery.


A Kali without the tongue is called Bhadra-Kali or the decent-Kali who does not reject feminine grace totally. She resides in household shrines and serves as the guardian of the family.


There is something about Kali's tongue that disturbs the viewer. It is feared; it is seen as shameful, a-bhadra or not-civilised.Why is she doing it? Is it a symbol of power or a symbol of shame?


In Devi Mahatmya, Kali unfurls her tongue in her role as the ultimate deliverer called upon to salvage a situation that seems hopelessly out of control. She is summoned by Durga herself to destroy the demon Rakta-bija, whose name means 'blood-seed'. The demon Rakta-bija had the magical ability to produce a double of himself instantly every time a drop of his blood fell to the ground.


Having wounded Rakta-bija with a variety of weapons, Durga and her assistants, a fierce band of warriors known as the Matrikas, find they have worsened the situation: as Rakta-bija bleeds more profusely from his wounds, the battlefield gets filled with Rakta-bija duplicates.


Desperate, Durga summons Kali, who spreads her tongue across the battlefield, and swallows in one gulp, the swarm of blood-born demons and sucks the blood from the original Rakta-bija until he falls lifeless. Kali's tongue here is a weapon, to be feared, a reminder that nature ultimately consumes all life.


In popular story-telling, the reason for Kali sticking out her tongue is rather domestic. After killing the demon Daruka, Kali drank his blood. The blood drove her mad with bloodlust. She went around the world killing at random. The gods begged Shiva to stop her. So he took the form of a handsome man and lay in Kali's path. As soon as Kali stepped on him, she bit her tongue out of embarrassment. She was ashamed to learn that her bloodlust had prevented her from seeing and recognising her own husband. Needless to say, this is considered a patriarchal interpretation that became popular in the 19th century.


In Kali temples, the tongue is smeared with the blood of sacrificed animals - a reminder that Mother Nature is - 'red in tooth and claw', giving life as well as taking life. We may domesticate her, transform her into the demure Gauri, clothed and coy, but she will always stick out her tongue and slurp on our blood.


Perhaps with the outstretched tongue, Kali teases and mocks her devotees - she sees through their social facade and knows the dark desires they try so hard to deny or suppress. She provokes them to delve into their unconsciousness and confront all those memories they shy away from.



Kali and her tongue - Times Of India
 
Why do we use Copper vessels in Pujas ?

In the soil, five great spirits come together viz. earth, water, sky, fire & wind. Their ingredients come together and give special properties to this metals. Thus every part-(principle) of nature has its own significance & grasping capacity. They differ from metal to metal.

They determine the intensity of that particular metal. Copper & Brass are well known for their grasping capacity. They grasp the divine spirit upto 30%, when compared to other metals.

At the same time, these metals grasp the spiritual, pious spirit upto 30%. That is why, copper is considered to be holy & auspicious all the time. It is believed that God blesses his followers when copper is used for pooja. Copper can destroy bad spirits like Raj & Tam (i.e. darkness & bad behavior).

If water is kept in a copper vessel it is believed that it becomes 70% pure because good feeling & principals are absorbed in it. That is why, it can attract divine spirit faster when compared to other metals. This property makes the use of copper & brass very fruitful for all ‘bhaktas’(devotees).




Copper & Brass attracts and grasps divine power unto 30%.



If the small idols & other vessels used for daily pooja are clean and shining then they make us happy & contented. One can derive peace of mind out of it.



Copper can destroy the ‘Raj & Tam (i.e. bad spirits of darkness & being very angry by nature)
upto 70%. Therefore, anything or water kept in Copper vessel will be pure with the spirit of
calmness in it.



Divine power is attracted in copper instantly.



The spiritual vibrations are attracted towards these shining idols & vessels.



The one who is offering prayer also gets the benefits. He becomes carlon, happy & contented.



This vibrations purify your ‘Vastu’.


Pitambari Products Pvt. Ltd., Thane, Maharashtra, India - Products
 
In Perumal Temples, Theerthams are offered only from Copper Vessels.
The reason being, it enhances immune system and it enables to fight
infections, if any, and it also facilitates to have early healing.
 
Kolam:

71264_f260.jpg


Kolam is a drawing generally drawn at the entrance of a house or any other building. This is a very old practice in South India. Dried rice flour or other types of wkite powders are used for drawing kolams. Although there are numerous traditional kolams patterns and lot more can be created depending on the creativity of the person who draws it, it is not drawn like a picture. Patterns are created based on certain systems. Drawing Kolam is practiced by women.

Generally women get up early in the morning and clean the area just outside the entranes of their houses, sprinkle the area with water and draw the kolam by dropping the loose dried flour in a controlled way through their forefinger and the thumb.

Mostly the kolam patterns are created based on dots arranged in different types of grid patterns. However, many non-dot based kolam patterns also are available.


[h=2]Purpose of Kolam Drawing[/h]Purpose of kolams are not merely decorative. Kolam drawing has several social, spiritual andsymbolic meanings attached to it. Those who practice this believe that drawing kolam purify the entrance space and this in turn will invite the goddess of wealth Sri Laxmi to enter the house. This they beleive would give the inmates all wealth and prosperity.





Kolam - The Traditional Floor Drawing of South India
?????? ????????
 
Pandavas other Wives

The first brother to get married was not Arjuna or the eldest, Yudhishtira, but the mighty Bhima. After the Kauravas attempted to kill the Pandavas by setting alight their palace (made of lac) on fire, the Pandavas hid in the forest, disguised as the sons of a Brahmin widow.

During this time, Bhima killed many Rakshasas such as Baka and Hidimba. Hidimba’s sister, impressed by his strength, chose him as husband and they had a son called Ghatotkacha.

Bhim’s wife Hidimba was a witch. When she saw Bhim, she fell in love with him and shared her feeling with Kunti, who then allowed Hidimba to marry Bhim. Bhim agreed to marry but on one condition. As per his condition he would stay with Hidimba till the time she gives birth to their son. And that he would return to his family as soon as a boy is born.

Soon Bhim and Hidimba were married and their son was born, who was extremely brave. In a very little time only, he grew more powerful than the demons. He had no hair on his head. Seeing his bald head, Hidimba and Bhim kept his name as Ghatotkach

Even before this, according to folktales in Rajasthan, and Orissa, Bhima had married a Naga woman. When the Kauravas tried to poison him and drown him in a river, he was saved by Ahuka, a Naga, and taken to the realm of the serpents, where he was given a wife. From that union was born a child called Bilalsen, who played a role in the war later on. In variants of this legend, Bilalsen, also known as Barbareek, was the son of Ghatotkacha, and hence was grandson of Bhima, not son.

The brothers agreed that Draupadi would stay with one brother for a year before moving to the next one, a shrewd move to prevent jealousy and to identity paternity of Draupadi’s children. In the four years between, each brother spent time with another wife.

Yudhishtira married Devika, the daughter of Govasana of the Saivya tribe, and begat upon her a son called Yaudheya. Bhima married Valandhara, the daughter of the king of Kashi, and begat upon her a son named Sarvaga. Nakula married Karenumati, the princess of Chedi, and begat upon her a son named Niramitra. Sahadeva obtained Vijaya, the daughter of Dyutimat, the king of Madra, and begat upon her a son named Suhotra.


All these wives lived with their sons in the house of their fathers.

When Draupadi agreed to be the common wife, her condition was that she would share her household with no other woman. In other words, disregarding popular practice of the times, the Pandavas could not bring their other wives to Indra-prastha. Arjuna, however, succeeded in bringing one wife in. She was Krishna’s sister, Subhadra. And with a little advise from Krishna, she was able to trick her way into the household.

Though Draupadi’s favourite, Arjuna had the most number of wives amongst all brothers. The story goes that Arjuna once entered Draupadi’s chamber while she was with Yudhishtira. To atone for this trespassing, he went on a ‘pilgrimage’. During this time he married many women.

In the classical Sanskrit retelling, Arjuna married the Naga Ulupi, the princess Chitrangada of Manipur and finally Krishna’s sister Subhadra during this pilgrimage. But in Tamil retellings of the Mahabharata, he married totally seven women. One of them was a warrior woman called Ali who refused to marry him but Arjuna was so besotted that he sought Krishna’s help.

Krishna turned him into a snake and he slipped into Ali’s bed at night and frightened her to become his wife. Some say he forced her to be his wife as he managed to spend the night in bed with her in the form of a snake. This clandestinely erotic folktale alludes to Pisacha-vivah, or the marriage by way of ghosts, that is condemned in the Puranas.




Mahabharat Secrets: Pandavas had wives for each one of them apart from Draupadi! - daily.bhaskar.com
 
தடைகளை அகற்றும் தை மாத விரதம்

தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து இறைவனை வேண்டிக்கொண்டால் வாழ்வில் துயரங்கள் அனைத்து நீங்கி விடும் என்பது ஐதீகம்.

தை மாதம் வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும்.

மேலும் தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதிகளில் தவறாமல் விரதமிருந்து நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்தநாளும் இன்பமாக வாழலாம். இந்த விரதத்தை தவறாமல் தொடர்ந்து இருந்து வந்தால் வீட்டில் தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெற வாய்ப்பு உருவாகும்.

பொதுவாக குல தெய்வ வழிபாடுகளையும், வெள்ளிக்கிழமை மேற்கொள்வது மிகவும் நல்லது. குடும்ப முன்னேற்றத்திற்கு குல தெய்வ வழிபாடு அவசியம் தேவை.

http://www.maalaimalar.com/2014/01/13104418/problem-clear-thai-masam-virat.html
 
நன்மை தரும் எளிய விரதம்

a17c4ad4-ff41-4cce-b8b7-02f6172b527c_S_secvpf.gif


மகாலட்சுமி இல்லாத இடம் "இல்லம்" என்று அழைக்கப்படமாட்டாது. அந்த தேவியை மகா சக்தியை மிக எளிதாக வழிபடலாம். கன்று ஈன்ற பசுவின் சாணத்தை கொண்டுவந்து அதில் அகல் போல் செய்து உடைந்து விடாமல், நிழலில் காய வைக்கவும்.

வழிபாடு தொடங்கும் முன், பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, மகாலட்சுமி படத்திற்கு பூமாலை சூட்டி குத்து விளக்கேற்றவும். பின் சாண அகலில் நெய் விட்டு, பஞ்சுத்திரி, வாழை தண்டு திரி, தாமரை திரி போன்ற எதாவது ஒன்றை பயன்படுத்தி வௌ்ளிக் கிழமை அன்று விளக்கேற்றி தேவியை வழிபட வேண்டும்.

தெரிந்த மகாலட்சுமி மந்திரம் கூறினாலே போதும். பாயசம், எலுமிச்சை சாதம் அல்லது ஏதாவது பழம் ,வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்யவும். இவ்வாறு 5,7, 9 வாரங்கள் என முடிந்த அளவு விளக்கேற்ற அன்னையின் அருள் நிச்சயம் கிட்டும்.

ஒவ்வொரு வாரமும் புது அகல் செய்து தீபம் ஏற்ற வேண்டும். பழைய அகல் தீபத்தை தண்ணீரில் கரைத்து துளசி மாடம், அல்லது ஏதாவது செடியில் கால்படாத இடத்தில் சேர்க்கவும்.

Source:http://www.maalaimalar.com/2013/12/20135536/Simple-viratham-is-beneficial.html
 
தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது


ST_155908000000.jpg


உத்ராயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளா விழாவில் தை அமாவாசை நீராடல் முக்கிய இடம்பெறுகிறது. வடக்கே புனித நீர் நிலைகள் பல இருந்தாலு<ம், தென்னகத்தில் தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரி நதிக்கரையில் முன்னோர்களுக்கான பூஜையை மேற்கொண்டால் குடும்பத்தில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

காவேரிக் கரையிலுள்ள திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்வது ஸ்ரீரங்கம் இங்கு பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் அருட்பார்வை, தென்பகுதியில் அமைந்துள்ள அம்மா மண்டபம் படித்துறையை நோக்கி உள்ளதால் இந்தப் படித்துறை மிகவும் சிறப்புப் பெறுகிறது. முன்னோர்களுக்கான பூஜையை அரசமரத்தடியில் அமர்ந்து மேற்கொள்வதை சாஸ்திரங்கள் பலவாறு புகழ்கின்றன. அரசமரத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதால், அரசமரம் மிகவும் போற்றப்படுகிறது.

இந்த அம்மா மண்டபப் படித்துறை வளாகத்தில் நான்கு அரச மரங்கள் பரந்து காட்சி தருகின்றன. இங்கு பிதுர் பூஜைக்கென்று தகுந்த இடம் உள்ளது. பிதுர் பூஜையின் ஒரு பகுதியாக, பசுவை அந்தணர் ஒருவருக்கு தானம் தருவது புனிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு பூஜை செய்து, கோ ஜலத்தைப் பெறுவது புனிதத்திலும் புனிதமென்று வேத நூல்கள் கூறுகின்றன. மேலும், இந்த வளாகத்தில் காவேரித் தாயார் கோவில் கொண்டுள்ளாள். இக்கோவிலுக்குப் பின்புறமுள்ள வன்னி மரத்தடியில் பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு பிதுர் வழிபாடு செய்வது அளப்பரிய புண்ணியத்தைத் தரும் அதனால், பிதுர்கள் (முன்னோர்கள்) மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள் என்று கருட புராணம் கூறுகிறது.


பிதுர் தர்ப்பணத்தின்போது அரசமரத்தடியில் எள்ளும் நீரும் அளிப்பதால், பசியுடன் இருக்கும் முன்னோர்களுக்கு அது ஒரு வருடத்திற்கான உணவாகிறது. ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு வரும் வடநாட்டினர், ராமேஸ்வரம் அக்னி கடற்கரையில் மேற்கொள்ளும் பிதுர் பூஜையைவிட, இங்கு பிண்டம் வைத்து பிதுர் பூஜை செய்வதையே விரும்புகிறார்கள். காரணம் ராமேஸ்வரம் கடற்கரையில் அரசமரம் இல்லை. இங்கு அரச மரங்கள் சூழ்ந்திருப்பதுடன், கஜராஜனான யானை தினமும் இங்கு வந்து பக்தர்கள் ஆசீர்வதிப்பதால், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்னும் நம்பிக்கைதான்.

மறைந்த பெற்றோருக்கு ஒவ்வொரு அமாவாசையன்றும் பிதுர் தர்ப்பணம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. இயலாத நிலையில் உத்ராயண புண்ணிய காலமான தை மாதம், தட்சிணாயன காலமான ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசைகளில் தர்ப்பணம் அளித்தல் வேண்டும் என்பர்.

புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்குரிய வழிபாடு செய்யும்போது கறுப்பு எள் என்ற தானியம் அவசியம் இடம்பெற வேண்டும். பிண்டம் வைத்துப் பூஜிக்கப்படவேண்டும் என்பது விதியாகும். கறுப்பு எள் பூதப்பிசாசு மற்றும் தீயசக்திகளை விரட்டும். பிண்டம் வைப்பதால் மறைந்த முன்னோர்கள் அதில் உறைவதாக ஐதீகம்.

பிதுர் பூஜை மேற்கொள்ளும்போது சிலர் கோ பூஜையையும் மேற்கொள்வர். அப்போது, பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு தர்ப்பணம் மற்றும் பூஜை செய்வர். இப்படிச் செய்வதால் ஆயிரம் மடங்கு பலன் கிட்டும். பித்ருக்கள், பித்ருலோகத்திலோ நரகத்திலோ இருந்தாலும் சொர்க்கம் செல்வர் என்பது ஐதீகம்.

ஆற்றங்கரையில் பிதுர் பூஜை மேற்கொள்ளும்போது, ஆற்றில் நீர் இல்லாவிட்டால் அங்குள்ள அரசமரத்தின் வேர்ப்பகுதியில் பிண்டங்கள் வைத்து, எள்ளும் தண்ணீரும் கலந்த நீரினை ஊற்றினால் அது பிதுர்களுக்கு உடனே சென்றுவிடுவதாக சாஸ்திரம் கூறுகிறது. அரசமரம் இல்லாதபோது, ஆற்று மணலில் சிறிது பள்ளம் பறித்த பிண்டங்களை அதில் புதைத்தாலும் அது மேலுலகம் செல்வதாகக் கூறப்படுகிறது. பிதுர் பூஜை செய்தாலு<ம் அன்னதானம் செய்வதும், பசுவுக்கு அகத்தில் கீரையை உணவாகக் கொடுப்பதும் போற்றப்படுகிறது. மேலும், அன்று தெய்வ வழிபாடுகளும் போற்றப்படுகின்றன.

அதற்காக அம்மா மண்டப வளாகத்தில் பல சந்நிதிகள் உள்ளன. மேலு<ம் தான தர்மங்கள் செய்வதற்கும், வஸ்திர தானம் செய்வதற்கும், பசுதானம், அன்னதானம் செய்வதற்கும் சகல வசதிகளும் உள்ளதால், தை அமாவாசை போன்ற நாட்களில் இந்த அம்மா மண்டபப் படித்துறை திருவிழாக் கூட்டம். போல் நிறைந்து காணப்படும். இத்தலம் ஸ்ரீரங்கநாதர் கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன.


????? ??????, ????? ????????? ??? ?????????!
 
விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்



விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

துளசி


துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.


சந்தன மரம்


சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.


அத்திமரம்


அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.


மாமரம்


மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.


அரசமரம்


அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.


ஆலமரம்

ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.


மருதாணிமரம்

மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.


ருத்ராஷ மரம்

ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.


ஷர்ப்பகந்தி

இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.


நெல்லி மரம்

நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.


வில்வமரம்


வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.


வேப்பமரம்


வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.


கருவேல மரம்


கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும்.



காட்டுமரம்


காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.


அசோக மரம்


அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.


புளிய மரம்


புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளிய மரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.


மாதுளம் மரம்


மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்



Source:kannan sivam
 
Last edited:
பிரம்மபத்திரம் ''!
அதாவது புகையிலை !



1558593_577990298946009_1289714272_n.jpg




முப்பெருந்தேவியர்களான லக்ஷ்மி , பார்வதி , சரஸ்வதி மூவரும் நந்தவனத்தில் உலாவிக்கொண்டிருந்த போது , லக்ஷ்மி தேவியின் கண்களில் பட்டது அந்த துளசி செடி !

அடுத்தகணம் , அதிலிருந்து ஒரு துளசி தளத்தை பறித்து தன் தலையில் சூடிக்கொண்டாள் லக்ஷ்மி தேவி !
சற்று தூரம் சென்றதும் , பார்வதி தேவியின் கண்களில் ஒரு வில்வ மரம் தென்படவே ....பார்வதி தேவி, ஒரு வில்வ தளத்தை பறித்து தன் தலையிலே சூடிக்கொண்டாள் ;

இவ்விருவரின் செய்கைகளை பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதி தேவிக்கு , தானும் ஏதாவது ஒரு இலையை பறித்து தலையில் சூடிக்கொள்ளும் ஆசை ஏற்பட்டது !

ஆனால் , எந்த செடியும் ...மரமும் அவளின் கண்களில் படாது போகவே .......தன் ஆதங்கத்தை பிரம்மதேவனிடம் வெளியிட்டு ...தனக்கென ஒரு இலையை உருவாக்கி தருமாறு அவள் வேண்ட .... சரஸ்வதி தேவியின் அபிலாட்ஷையை பூர்த்தி செய்யும் வண்ணம் பிரம்மதேவன் ஒரு யாகத்தை நடத்தினார் !........அதிலிருந்து ஒரு இலை உருவாக...அதை சரஸ்வதி தேவியிடம் கொடுத்தார் பிரம்மதேவன் !

ஆனால் அந்த இலையின் அமைப்போ ...நிறமோ ....மணமோ சரஸ்வதி தேவிக்கு பிடிக்காததால் , அதை அவரிடமே திருப்பி கொடுத்து விட்டாள் ! .....

..யாகத்தின் மூலம் வெளிவந்த அந்த இலையை என்ன செய்வது என்று யோசித்த பிரம்மதேவன் .....முடிவில் அதை பூலோகவாசிகள் அனுபவிக்கட்டும் என்று கருதினார் !

' தனக்கு உதவாத அந்த இலையை பூலோகவாசிகள் மட்டும் உபயோகிக்கலாமா ' என்று எண்ணிய சரஸ்வதி தேவி ,
' பூலோகத்தில் யார் இந்த இலையை உபயோகித்தாலும் , அவர்களுக்கு கெடுதலே உண்டாகும் ' !
என்று சாபம் கொடுத்தாள் !

பின், பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்க ,

' இந்த இலையை தொடர்ந்து உபயோகித்தால் கெடுதல் ஏற்படும் !'

என்று சாபத்தின் கடுமையை சற்று தணித்தாள் !

அந்த இல்லை தான் '' பிரம்மபத்திரம் ''!
அதாவது புகையிலை !



Source:Thangam Krishnamurthy
 
எது தரமான ஜரிகை?


பட்டுநூல் மற்றும் செம்பு கம்பி ஆகிய இழைகள் மீது வெள்ளிக் கம்பி சுற்றப்பட்டு அதன் மீது தங்க முலாம் பூசப்படுகிறது. இதை ஜரிகை என்கிறோம். இதில் கடந்த நவம்பர் 2011-க்கு பிறகு, 100 கிராம் ஜரிகையில் 40 கிராம் வெள்ளி, 0.5 கிராம் தங்கம், 24 கிராம் பட்டு நூல், 35.5 கிராம் செம்பு இருக்க வேம்டும் என்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வரையறுத்திருக்கிறது.

2011 -ம் ஆண்டுக்கு முன்பு வெள்ளி 57 கிராமும், தங்கம் 0.5 கிராமும் இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளியின் அளவை 70 கிராமாக அரசு நிர்ணயித்திருக்கிறது.

--


-- ' தி இந்து ' நாளிதழ்.திங்கள், நவம்பர் 25, 2013.
க. சந்தானம்
 
வேப்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம்.


வேப்பிலையை வேறு எந்த மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம். பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும்.

உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.

வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும். அந்த பொடியை தணலில் போட்டு வீடு முழுவதும் புகையை பரவ விட்டால் விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைபூச்சி தொல்லைகள் ஓழிந்துவிடும். தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும். வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும்.

வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும். வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது. வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.

வேப்பங்கொழுந்தை பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில் பூசினால் சீக்கிரம் காயம் ஆறும். வேப்பங்கொழுந்து இலையை அரைத்து ஒரு கோலி அளவு எருமை தயிரில் மூன்று நாட்கள் உள்ளுக்குள் உட்கொண்டு வந்தால்தொண்டைக்கறமல் குணமாகும். வேப்பம் பூ, மிளகு, இவை இரண்டையும் சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறு நீங்கும். வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுகி வந்தால் முகம் பளபளப்பு அடையும். மழைக்காலங்களில் ஈக்கள் தொல்லை அதிகமாகும்.

ஈக்கள் தொல்லையை விரட்ட வேப்பிலையை கசக்கி டைனிங்டேபிளில் வைத்து விட்டால் ஈக்கள் வராது.மாத விலக்கின் போது வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் 3 கொத்து வேப்பிலையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து கொதிக்கும் முன்னர் மஞ்சள் சேர்த்து குடித்தால் வயிற்று வலி குணமாகும். தலையில் நீர் கோர்த்து தலைவலியால் அவதி படுபவர்கள் இந்த வேப்பிலை மஞ்சளை நன்கு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும். -


See more at: Do you know about the benefits of Neem?|???????????? ??????? ????? ????????? - Dinakaran Health Corner
 
Tulsi

1559737_583390005071967_101404290_n.jpg




Tulsi plant is regarded the holiest of all plants. Tulasi is very powerful and rich in antioxidants.

The Tulsi leaf has great medicinal value and is used to cure various ailments. Juiced tulsi leaf is used in Ayurvedic remedies for common colds, respiratory disorders, mouth infections, insect bites, headaches, stomach disorders and even is said to reduce blood cholesterol levels. It is helpful in fighting cancer.

If basil leaves are regularly consumed it can cure cancer too. It has detoxifying properties and is used in fasts including the Satynarayana Katha where a thousand Tulsi leaves are added to the water for pooja, and which is consumed later by everybody. Tulasi is auspicious in all respects. Simply by seeing, simply by touching, simply by remembering, simply by praying to, simply by bowing before, simply by hearing about, or simply by sowing this tree, there is always auspiciousness.

Anyone who comes in touch with the Tulasi tree lives eternally in the spiritual world. Every part of the Tulsi plant is revered and considered sacred. Even the soil around the plant is holy. The Tulsi plant is regarded as a threshold point between heaven and earth.

The creator-god Brahma resides in its branches, all Hindu pilgrimage centres reside in its roots, the Ganges flows through its roots, all deities in its stem and its leaves and the Vedas in the upper part of its branches. A person who waters and cares for the Tulsi daily is believed to gain moksha (salvation) and the divine grace of Vishnu, even if he does not worship it.

Tulsi also symbolizes Goddess Lakshmi. Those who wish to be righteous and have a happy family life, worship the tulsi. By the circumambulation of Srimati Tulasi Devi all the sins that one may have committed are destroyed.


Source:Saraswathi Thegarajam
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top