இந்தவிபரங்கள் அனைத்தும் விகடன் பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது, அதை தொடுத்து கீழே கொடுத்துள்ளேன். நன்றி.
"இந்துக்களாகப் பிறந்த எவரும் வாழ்வில் ஒருமுறையேனும் காசி யாத்திரை செல்ல விரும்புவார்கள். `கடமையை முடித்தால் காசிப்பயணம்' என்ற சொலவடையே இதனால்தான் வந்தது.
அவர் இவ்விதம் கூறியதற்கு வெகு காலத்துக்கு முன்பே அதாவது 1933-ம் வருடமே அவர் காசி யாத்திரை மேற்கொண்டார். அப்போது சுவாமிகளின் வயது 39. எந்த வாகனத்தையும் பயன்படுத்தாமல், நடைப்பயணமாகவே இந்த யாத்திரையை மேற்கொண்டார். யாத்திரைக்கான அவசியம் அவருக்கு இல்லையென்றாலும்கூட, நாம் எல்லோரும் அவசியம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விசுவநாதரை வழிபட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே, மகா பெரியவா இந்த யாத்திரையை மேற்கொண்டார்.
காசியாத்திரை என்பது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அற்புதமான யாத்திரை. வடக்கில் இருப்பவர்களுக்கு ராமேஸ்வரம் யாத்திரை என்றால், தெற்கில் இருப்பவர்களுக்குக் காசி யாத்திரை. காசி யாத்திரை மேற்கொள்வதற்கு சில நடைமுறைகள் இருக்கின்றன. எனவே, காசி யாத்திரை மேற்கொள்பவர்கள் கவனிக்கவேண்டிய அம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.
காசியாத்திரை செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், காசிக்கு மட்டும் செல்வதால் யாத்திரை நிறைவு பெற்றுவிடாது. காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் கடலில் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கைப்பிடி மணல் எடுக்க வேண்டும்.
முதல் கைப்பிடி மண்ணை, `சேது மாதவ லிங்கம்' என்ற பெயரிலும், இரண்டாவது கைப்பிடி மண்ணை, `பிந்து மாதவ லிங்கம்' என்ற பெயரிலும், மூன்றாவது கைப்பிடி மண்ணை, `வேணு மாதவ லிங்கம்' என்ற பெயரிலும் மூன்று லிங்கங்களைச் செய்து, அந்த லிங்கங்களைத் தலைவாழை இலையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ததும், பிந்து மாதவ லிங்கம், வேணு மாதவ லிங்கம் ஆகியவற்றைக் கடலில் விட்டுவிட வேண்டும்
சேது மாதவ லிங்கத்தைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். கொடுத்து முடித்துவிட்டு, ராமநாத சுவாமி ஆலயத்தில் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். கோடி தீர்த்தத்திலிருந்து ஒரு கேனில் தீர்த்தத்தை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ராமநாதசுவாமியை மனமுருக வேண்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து அங்கிருந்து காசியாத்திரையை மேற்கொள்ளலாம். உடனடியாக, காசிக்குச் செல்ல முடியாவிட்டால், சேது லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் பூஜையறையில் வைத்து, தினமும் பூஜை செய்ய வேண்டும். காசிக்குப் புறப்படும்போது சேது லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
காசி யாத்திரையின்போது முதலில் அலகாபாத் எனப்படும் பிரயாகைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருக்கும் திரிவேணி சங்கமத்தில், நாம் கொண்டு வந்திருந்த சேது மாதவ லிங்கத்தைக் கரைக்க வேண்டும்
இதன் பிறகு நாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி நாம் கொண்டு வந்திருக்கும் கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதரை அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் அங்கிருக்கும் அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இறுதியில் கால பைரவரை வழிபட்டு, கயாவுக்குச் செல்ல வேண்டும்.
கயாவில் நம் மூதாதையர்களுக்குச் சிராத்தங்களை முறையாகச் செய்ய வேண்டும். அதன்பிறகு, மீண்டும் காசிக்கு வந்து கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்க வேண்டும். பிறகு மீண்டும் பிரயாகை வந்து ஒரு கேனில் கங்கை தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரவேண்டும். பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டுவிட்டு வரும்போதுதான் நம் காசியாத்திரை நிறைவடையும்.
இதன் மூலம் பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்.
"இந்துக்களாகப் பிறந்த எவரும் வாழ்வில் ஒருமுறையேனும் காசி யாத்திரை செல்ல விரும்புவார்கள். `கடமையை முடித்தால் காசிப்பயணம்' என்ற சொலவடையே இதனால்தான் வந்தது.
அவர் இவ்விதம் கூறியதற்கு வெகு காலத்துக்கு முன்பே அதாவது 1933-ம் வருடமே அவர் காசி யாத்திரை மேற்கொண்டார். அப்போது சுவாமிகளின் வயது 39. எந்த வாகனத்தையும் பயன்படுத்தாமல், நடைப்பயணமாகவே இந்த யாத்திரையை மேற்கொண்டார். யாத்திரைக்கான அவசியம் அவருக்கு இல்லையென்றாலும்கூட, நாம் எல்லோரும் அவசியம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விசுவநாதரை வழிபட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே, மகா பெரியவா இந்த யாத்திரையை மேற்கொண்டார்.
காசியாத்திரை என்பது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அற்புதமான யாத்திரை. வடக்கில் இருப்பவர்களுக்கு ராமேஸ்வரம் யாத்திரை என்றால், தெற்கில் இருப்பவர்களுக்குக் காசி யாத்திரை. காசி யாத்திரை மேற்கொள்வதற்கு சில நடைமுறைகள் இருக்கின்றன. எனவே, காசி யாத்திரை மேற்கொள்பவர்கள் கவனிக்கவேண்டிய அம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.
காசியாத்திரை செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், காசிக்கு மட்டும் செல்வதால் யாத்திரை நிறைவு பெற்றுவிடாது. காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் கடலில் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கைப்பிடி மணல் எடுக்க வேண்டும்.
முதல் கைப்பிடி மண்ணை, `சேது மாதவ லிங்கம்' என்ற பெயரிலும், இரண்டாவது கைப்பிடி மண்ணை, `பிந்து மாதவ லிங்கம்' என்ற பெயரிலும், மூன்றாவது கைப்பிடி மண்ணை, `வேணு மாதவ லிங்கம்' என்ற பெயரிலும் மூன்று லிங்கங்களைச் செய்து, அந்த லிங்கங்களைத் தலைவாழை இலையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ததும், பிந்து மாதவ லிங்கம், வேணு மாதவ லிங்கம் ஆகியவற்றைக் கடலில் விட்டுவிட வேண்டும்
சேது மாதவ லிங்கத்தைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். கொடுத்து முடித்துவிட்டு, ராமநாத சுவாமி ஆலயத்தில் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். கோடி தீர்த்தத்திலிருந்து ஒரு கேனில் தீர்த்தத்தை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ராமநாதசுவாமியை மனமுருக வேண்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து அங்கிருந்து காசியாத்திரையை மேற்கொள்ளலாம். உடனடியாக, காசிக்குச் செல்ல முடியாவிட்டால், சேது லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் பூஜையறையில் வைத்து, தினமும் பூஜை செய்ய வேண்டும். காசிக்குப் புறப்படும்போது சேது லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
காசி யாத்திரையின்போது முதலில் அலகாபாத் எனப்படும் பிரயாகைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருக்கும் திரிவேணி சங்கமத்தில், நாம் கொண்டு வந்திருந்த சேது மாதவ லிங்கத்தைக் கரைக்க வேண்டும்
இதன் பிறகு நாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி நாம் கொண்டு வந்திருக்கும் கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதரை அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் அங்கிருக்கும் அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இறுதியில் கால பைரவரை வழிபட்டு, கயாவுக்குச் செல்ல வேண்டும்.
கயாவில் நம் மூதாதையர்களுக்குச் சிராத்தங்களை முறையாகச் செய்ய வேண்டும். அதன்பிறகு, மீண்டும் காசிக்கு வந்து கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்க வேண்டும். பிறகு மீண்டும் பிரயாகை வந்து ஒரு கேனில் கங்கை தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரவேண்டும். பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டுவிட்டு வரும்போதுதான் நம் காசியாத்திரை நிறைவடையும்.
இதன் மூலம் பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்.