Did you know that...?

Status
Not open for further replies.
Flowers and what they stand for!

# 69.
MYRTLE -Love, Hebrew Emblem of Marriage

images
images
 
quote_icon.png
Originally Posted by Visalakshi Ramani

Why did God who is a perfectionist in everything He creates, :angel:

created so many hopeless creatures in the form of human beings??? :confused:

Dear VR ji,

Angels are not perfect either cos for them to attain liberation they need to take human form too.
Only through a human form one can attain liberation.
 
விண்ணோரும், மண்ணோரும்!



விண்ணோர் விழைவர், இடையராத ஆனந்தம்;
மண்ணோர் அடைவர், அளவிலாத அனுபவம்.

விண்ணோர் உதவியை நாடுவர் இறையிடம்;
மண்ணோர் விடுதலை தேடுவர் இறையிடம்.

என்றென்றும் வாழவே விரும்புவர் விண்ணோர்;
என்றும் பிறவா வரம் வேண்டுவர் மண்ணோர்.

இறைவனைக் கண்டு கெஞ்சுவர் விண்ணோர்;
இறைவனிடம் அன்பில் விஞ்சுவர் மண்ணோர்.

சுக போகங்களே வாழ்வாகும் விண்ணுலகில்;
இக போதனைகளே வாழ்வாகும் மண்ணுலகில்.

விண்ணுலகில் அருந்தும் அமுதே உணவு;
மண்ணுலகில் உண்ணும் உணவே அமுது.

இமையாமல் விழித்து இருப்பர் விண்ணோர்;
இமைத்து இமைத்து விழிப்பர் மண்ணோர்.

தானம், தவம் ஏதும் இல்லை தேவர்களுக்கு;
தானம், தவம் உண்டு மண்ணுலகத்தினருக்கு.

இன்பப்படும் குழந்தையை விட அதிகமாகவே,
துன்பப்படும் குழந்தையைப் பேணுவர் பெற்றோர்.

அன்புக்கு உரியவராக மனிதரைக் கருதுவான்,
அன்புடன் அரவணைத்து வழிகாட்டும் ஈசன்.

ஆன்மீகம் மனிதனுக்குப் புதையலாய் தந்தான்.
ஆன்மீக சாதனைகள் தேவர்களுக்கு இல்லை.

போகத்திலே உழலும் தேவர்களை விடவும்,
யோகத்தையே உவக்கும் மனிதர்களே மேல்!

வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி
 
[h=1]தனித்திரு! பசித்திரு! விழித்திரு![/h]

உலக வாழ்வில் முன்னேற விரும்புவோர்களின்,
உன்னதத்துக்கு உள்ளன மூன்று மந்திரங்கள்;

ஆட்டு மந்தையில் ஒருவனாகாதே – “தனித்திரு!”
அறிவுப் பசியை என்றும் ஒழியாதே – “பசித்திரு!”

எது வந்த போதிலும் எதிர்கொள்ள வேண்டி,
எப்போதும் விழிப்புடனேயே இரு – “விழித்திரு!”

தனித் தன்மையுடனும், அறிவுப் பசியுடனும்,
விழிப்புடனும் இருந்தாலும், மிகவும் தேவை

கொஞ்சம் தனிமை, பசி, உறங்கா விழிப்பு!
விஞ்சும் நம் வாழ்வு, இவற்றால் சிறப்புற்று!

தனித்து இருக்கும்போது மட்டுமே ஒரு
மனிதனின் பல மன அலைகள் அடங்கும்;

உலகத்தில் ஓசைகளில் இருந்து விலகி,
உள்முகமாக அவன் பயணிக்க முடியும்.

உள்முகமாகச் செல்லும் போது தான் அவன்
உள்ளம் தெளியும், உண்மைகள் துலங்கும்.

உய்யும் வழிகள் புரியும்; தானும் உய்ந்து
உலகையும் முயன்று உய்விக்க முடியும்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமே!
அளவுடன் உண்டு ஆரோக்கியம் பேணினால்,

அழகுற அமையும் செய்யும் செயல்களும்,
அழகிய தவமும், உய்யும் முயற்சிகளும்.

இல்லம் துறந்து வனம் சென்று, தவம்
இல்லதினரால் புரிய முடியாது அன்றோ?

ஓசைகள் ஒடுங்கிய நேரத்தில் அவர்கள்,
ஓசை இல்லாமல் தவம் செய்ய வேண்டும்.

இந்த மூன்று தாரக மந்திரங்களையும்,
சொந்தம் செய்து கொண்டால் போதும்!

மனிதப் பிறவியின் மாயங்கள் விலகிப்
புனிதமான வாழ்வு நாம் வாழ்ந்திடலாம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Status
Not open for further replies.
Back
Top