• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

About the effectiveness of gayathiri mantra by rishis

Status
Not open for further replies.
அனைவருக்கும் எனது வணக்கங்கள்
இதோ எனது அடுத்த பதிவு
காயத்திரி மந்திரத்தை பற்றி பல மகரிஷிகள் கூறியதை இப்போது பார்போம்
தமிழில் ஒரு பழமொழி உண்டு
"தாயை மிஞ்சிய தெய்வமும் இல்லை, காயத்திரியை மிஞ்சிய மந்திரமும் இல்லை"
மகரிஷிகள் பல சூத்திரங்களை எழுதி இருக்கிறார்கள், அதில் காயத்திரி மந்திரத்தை பற்றி பல தகவல்களி கூறி இருக்கிறார்கள்

yajnavalkya: ஒருவன் காயத்திரியை விண்ணில் நக்ஷத்திரம் தெரியும் வரை மலையிலும், காலை நக்ஷத்திரம் தெரியும் பொது சூரியன் உதயம் ஆகும் பொழுது சூரிய ஒளியும் நக்ஷிதிரமும் தெரியும் பொது ஜபிக்க வேண்டும்.

bodhayanar:கிழக்கு முகமாக அமர்ந்து கையில் தீர்த்தத்தை ஏந்தி கொந்து பவித்ரம் தரித்து ஒருவன் காயத்திரியை 1000 முறை ஜபித்து விட்டால் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.

Asvalayana: க்ரிஹச்தன் மற்றும் பிரமச்சாரி காயத்திரியை 108 முறை ஜபிக்க வேண்டுமாம், அப்படி முடியாவிட்டால் குறைந்த பட்சம் 28 முறை ஜபிக்க வேண்டுமாம்.
எல்லா smriti கூறுவது என்ன வென்றால் ஒருவன் 100 முறை காயத்திரியை ஜபித்து விட்டால் அவன் அன்று எல்லா பாவங்களில் இருந்து விடு படுவான்.
அதே போல் ஒருவன் 10000 முறை காயத்திரியை ஜபித்தால் அவன் எல்லா பாவங்களில் இருந்து விடு படுகிறான்.
ஒருவன் காயத்திரியை ஹோமம் செய்தால் அவன் எல்லா பாவங்கள் விலகி விடும் அவனது எண்ணங்கள் ஈடுஈரும்.

Atri: ஒருவன் சூரியனி நோக்கி 8000 முறை காயத்திரி மந்திரத்தை முறையாக ஜபித்து விட்டான் என்றல் அவன் சூரியனுக்கு இடான புத்தி தேஜஸ் பெறுவான் என்று கூறுகிறார்
இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்: ஒருவன் எல்லா பாவங்களில் இருந்து விடு படுவன் என்றல் அவன் இது வரை பொய் சொல்லி வந்தான் என்று வெய்த்து கொள்வோம் அதனால் விளைந்த எல்லா வினைகளும் போய் விடும் என்று என்ன வேண்டாம். இவ்வாறாக ஒருவன் ஜபித்தால் அவனுக்கு மன ஒருமைப்பாடு மற்றும் எண்ணங்களின் சலனங்கள் எல்லாம் தெளிந்து அவனுக்கு பிராமவித்தை விரைவில் கை வசம் பெரும் என்று அர்த்தம். எப்படி வால்மீகி ராம மந்திரம் ஜபித்து ஜபித்து வேடனில் இருந்து ஒரு மகா காவியம் எழுத கூடிய மகரிஷி ஆனாரோ அவ்வாறாக நாமும் காயத்திரியை ஜபித்து அந்த பிராமதொடு ஐக்கியம் ஆக முயற்சி செய்வோம்.
ஓம் நம சிவாய
நன்றி

C.R.Bala

(Source: காயத்திரியின் சக்தி என்ற கிரந்தத்தில் இருந்து)
 
Status
Not open for further replies.
Back
Top