• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

யாதும் ஊரே - குறுந்தொடர் - பாகம் 1 - அனாமிகா

Status
Not open for further replies.
அத்தியாயம் - 8
***************

"கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்......."

என்று கௌஷிக் சின்ன வயதில் அவர்கள் பள்ளிக்கூட பிரேயரில் தினமும் பாடியது இப்போது ஸ்ரீராம் காதுகளில் ஒலித்தது. அப்படிப்பட்ட கௌஷிக்குக்கு இப்படி ஒரு மனைவியா ? ஸ்ரீராம் அதிர்ந்தான் என்று தான் சொல்ல வேண்டும்; அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.

சுமி தன் நண்பர்களோடு வெளியேறும் வரை பொறுத்திருந்தவன், அதற்கு மேலும் தாங்க இயலாமல் வெடித்து விட்டான்.

"கௌஷிக், என்னடா இதெல்லாம்? நிஜமாவே அவங்க தான் உன் வொய்ஃபா? நம்பவே முடியலையேடா! என்னடா நடக்குது இங்கே?"

ஒரு பெருமூச்சுடன் கௌஷிக் ஆரம்பித்தான் :

" ஸ்ரீராம், என்னிக்கோ ஒரு நாள் உன்னைப் பார்க்கிறேன், இதுல எதுக்கு என் சோகமெல்லாம்னு தான் நான் சொல்லலை. நெஜமாவே சுமி தான் என் வொய்ஃப். கல்யாணம் பண்றதா நினைச்சு நான் எனக்கே ஒரு குழி வெட்டிக்கிட்டேன், ஸ்ரீராம்; இப்ப வெளியில வர முடியாம மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்."

"கேட்கவே ரொம்ப மனசு கஷ்டமா இருக்குடா. உங்கப்பா, அம்மாக்கு இதெல்லாம் தெரியுமா, கௌஷிக்?"

"எனக்கு கல்யாணமாயிடுச்சுன்னு தெரியும். ஆனா மாட்டுப்பொண் இப்படினு சொன்னா அவங்களால தாங்க முடியாது. ஏற்கனவே மனசு வேதனையோட முதியோர் இல்லத்துல இருக்கிறவங்க இன்னும் நொந்து போயிடுவாங்க ."

"என்னடா நீ இன்னும் மேலே மேலே குண்டைத் தூக்கிப் போடறே? அவங்க எப்ப முதியோர் இல்லத்துல சேர்ந்தாங்க?"

"எங்கப்பாவைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே ஸ்ரீராம். அவர் ஒரு man of principles. என்னையும், என் தங்கைகளையும் ரொம்பக் கட்டுப்பாடா, மிலிடரி டிசிப்ளினோட வளர்த்தார். தீவிரமான தேசபக்தி உடையவர். ஐ.ஐ.டி- யில எனக்கு அட்மிஷன் கிடைச்சதுமே அவர் என் கிட்ட சொன்னார்:

' நீ படிக்கிறதுக்கான செலவு நம்ம நாட்டு மக்களோடது; அதனால உன் அறிவு, திறமை, உழைப்பு எல்லாமே அவங்களுக்கு தான் சேரணும்'னார். அந்த வயசுல எனக்கு அதெல்லாம் பெரிசா தோணலை; சரின்னுட்டேன். அப்புறம், படிப்பு முடிஞ்சு எல்லாரையும் போல நானும் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி பண்ணேன். எங்கப்பா அதை விடாப்பிடியா எதிர்த்தார். சரி, பரவாயில்லைனு நான் இங்க வேலைக்கு வந்துட்டேன்.
ஆனா அவர் தன் பிடிவாதத்தை விடவேயில்லை. எப்ப நான் இந்தியா திரும்பி அங்க வேலை செய்யறேனோ, அந்த பணம் தான் வாங்கிப்பேன்னு உறுதியா இருக்கார். என் தங்கைகள்லாம் கல்யாணம் முடிஞ்சு அவங்கவங்க வீட்டுல இருக்காங்க. நல்லபடியா செட்டிலாயிட்டாங்க. அப்பா அவர் கிட்ட இருந்த பணத்தை ஒரு முதியோர் இல்லத்துல கட்டிட்டு, அம்மா கூட அங்கேயே தங்கிட்டாரு."

"கௌஷிக், எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. நம்ம ஸ்கூல் நாள்லேர்ந்தே உங்கப்பாவோட rules and regulations நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும். அவர் தனக்குன்னு ஒரு காரணம் வைச்சிருக்கார். நீ அதை ஃபாலோ பண்ணுவேன்னு சொன்ன அப்புறம் தான் உன்னை படிக்க வைச்சிருக்கார். நீ அதை ம்றுத்தப்புறம் அவர் எடுத்த முடிவுலயும் ஒரு நியாயம் இருக்குன்னு தான் எனக்குத் தோணுது. சரி, இவ்வுளவு வருஷம் தான் நீ இங்க இருந்துட்டியே, போதும்னு அவங்களோட போய் 'செட்டில்' ஆயிடலாமே?"

"இது எனக்குத் தோணாமே இருக்குமா, ஸ்ரீராம்? பணம், பணம், மேலும் பணம் அப்படின்னு அமெரிக்கா வந்த கௌஷிக்காக நான் இப்ப இல்லை. பணத்தைத் தாண்டிய சில மதிப்பீடுகளும் வாழ்க்கையில இருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இருந்த மயக்கம் தெளிஞ்சுடுச்சு.அதனால இந்தியா போய் செட்டிலாக நான் எப்பவோ ரெடியாய்ட்டேன். ஆனா, சுமி? நீ தான் அவளை பார்த்தியே? அவ இன்னும் மாறவேயில்லை. கண்டிப்பா அவ இதுக்கு சம்மதிக்கவே மாட்டா" என்ற கௌஷிக், நினைவலைகளில் மூழ்கினான்.

*************************

இந்தியாவில் இருந்து யு.எஸ் செல்லும் எண்ணற்ற இந்தியர்களைப் போல் தான் கௌஷிக்கும் கிளம்பினான். அந்த நாட்டின் பணமும், நவீன வசதிகளும், கட்டுப்பாடுகள் அற்ற தனிமனித சுதந்திரமும், எண்ணம் போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பும் - எல்லாம் ஒன்று சேர்ந்து அவனுக்கு அது சொர்க்கபூமியாகத் தோன்றியது. அதுவும் கௌஷிக்கிற்கு தன் அப்பாவின் அதீத கட்டுப்பாடுகள் தளர்ந்து,
விடுதலை கிடைத்ததாகவே நினைத்துக் கொண்டான்; சுதந்திரப் பறவையாக இன்ப வானில் பறந்தான்.

அவன் அமெரிக்கா வந்து ஓரிரு வருடங்கள் கழித்து, அவன் அம்மா கல்யாணப் பேச்சை ஆரம்பித்து கடிதம் எழுதினார். தமிழ்நாட்டில் பெண் பார்க்க உத்தேசம் இருப்பதாகவும், கௌஷிக் தன் வேலையை மாற்றிக் கொண்டு இந்தியா வந்து 'குடியும் குடித்தனமும்' ஆக வாழ வேண்டும் என்று கேட்டிருந்தார்.அப்போது அந்தக் கடிதத்தைப் பார்த்த கௌஷிக்கிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

"இத்தனை வசதிகளையும், இவ்வுளவு பெரிய சம்பளத்தையும் விட்டுட்டு யார் இந்தியா போவாங்க? இவங்க பார்க்கிற பொண்ணுக்கு இட்லி, தோசை தான் தெரியும்; இ-மெயில், இண்டர்நெட் தெரியுமா? 'கோபுரங்கள் சாய்வதில்லை' அருக்காணி போல இங்க வந்து திருதிருன்னு அது முழிச்சு என் மானத்தை வாங்கறதுக்கா?"

என்றெல்லாம் அந்தக் கடிதத்தை தன் நண்பர்களிடம் காட்டி கேலி பேசி சிரித்தான்.

அப்போது தான் அவர்கள் கம்பெனியில் சுமி வேலைக்கு சேர்ந்தாள். அவளுடைய பெற்றோர் ஆப்பிரிக்காவில் இருந்தனர். அவர்கள் குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து சென்றவர்கள். சுமி அவள் பெற்றோருக்கு ஒரே பெண்; அறிவு + அழகு + நாகரிகம் + வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் வேகம்- அனைத்தும் சேர்ந்து அவளை அமெரிக்கா அழைத்து வந்தது. அவளும் கௌஷிக் போலவே 'ஃப்ரீ பேர்ட்' - சுதந்திரப் பறவை போல இருக்கவே ஆசைப்பட்டாள். கல்யாணம், குழந்தை, குடும்பம் - இதெல்லாம் வாழ்க்கையில் வேண்டாத பொன் விலங்குகள் என்பதில் இருவர் மனங்களும் ஒத்துப் போயின ; பேச்சு வார்த்தை வளர்ந்து கருத்துப் பரிமாற்றமாய் மாறியது; நட்பாய் தோன்றிய அரும்பு விரைவில் காதலாய் மலர்ந்தது.

திருமணம் இன்றி சேர்ந்து வாழும் முறைக்கு சுமியின் பெற்றோருக்கும் விருப்பம் இல்லை. ஆனால், சுமியைப் பொறுத்த வரை தன் பெற்றோரின் அறிவுரையைக் கூட தன் தனிமனித சுதந்திரத்தில் குறுக்கீடு என்று நினைத்துக் கொண்டாள். அவர்களிடம் கடுமையாக பதில் பேசி விட, அவர்கள் நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டு விட்டனர்.

கௌஷிக் - சுமி இருவரும் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். ஆரம்பத்தில் எல்லாமே நன்றாக தான் இருந்தது.காலங்கள் செல்லச் செல்ல, கௌஷிக் மனத்தில் மெல்ல மெல்ல மாறுதல் ஏற்பட ஆரம்பித்தது. அவனையும் அறியாமல் அவன் மனதில் மழலை ஆசை முளை விடத் தொடங்கியது. ஆஃபிஸ், ஃப்ரென்ட்ஸ் உடன் பார்ட்டி, மறுபடி ஆஃபிஸ், ஊர்சுற்றுதல் - இது அவனுக்கு அலுக்க ஆரம்பித்து விட்டது. திகட்டத் திகட்ட அனுபவித்த காரணமோ என்னவோ, அவனுக்கு இதில் வெறுப்பு வர ஆரம்பித்தது.

மனித மனத்தின் விசித்திரங்களை யாரால் புரிந்து கொள்ள முடிகிறது ?

இப்போது கௌஷிக் மாறி விட்டான். ஓய்வு நேரங்களில் சின்மயா மிஷன் போன்ற வேதாந்த அமைப்புகளுக்கும் அருகில் ஏதேனும் கோவில் இருந்தால் அங்குமாக சென்றும் அவன் பொழுது கழிகிறது. அவன் வர மறுத்தாலும், சுமி பார்ட்டிகளுக்கு தவறாமல் செல்கிறாள்.

கௌஷிக்கின் குழந்தை ஏக்கம் பெரிதாகி ஒருநாள் சுமியிடமே பேசினான்:

"சுமி, நமக்குன்னு ஒரு குழந்தை பெத்துக்கலாமே, ப்ளீஸ்! ஐ லவ் டு ஹேவ் எ சைல்ட், சுமி!"

சுமி ஆரவாரமாய் சிரித்தாள்.

"வாட் கௌஷிக் ? ஹௌ யூ கேன் சேஞ்ச் லைக் திஸ்? கல்யாணம் , குழந்தை - இதெல்லாம் வேண்டாம்னு தான் நாம் இப்படி வாழ்க்கையை அனுபவிக்கிறோம். இதை விட்டுட்டு, என் அழகு, இளமை, டைம், - இதெல்லாம் வேஸ்ட் பண்ணிட்டு குழந்தை பெத்துக்க சொல்றே ! ஹக் - ஐ கான்ட் இமாஜின் ! ஜஸ்ட் என்ஜாய் லைஃப் மேன்!!"

என்று பதில் சொல்லி விட்டுப் போய் விட்டாள். கௌஷிக் இன்றி சுமி பார்ட்டிகளுக்குப் போவதும் அவள் பிற ஆண் நண்பர்களோடு பழகுவதும் அவனுக்கே இப்போது பிடிக்கவில்லை. ஆனால், அதை தைரியமாய் சுமியிடம் சொல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை, சொன்னால் எங்கே தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விடுவாளோ என்று மனசுக்குள் ஒரு பயம் வேறு அவ்வப்போது எழுந்தது. மொத்தத்தில் கௌஷிக்
வாழ்வில் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

******************


கௌஷிக் நிஜவுலகுக்கு வந்தவனாய் ஸ்ரீராமிடம் பேச ஆரம்பித்தான் :

" நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் - இதெல்லாம் அவசியம்; கல்யாணங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்னு நம்ம பெரியவங்க சொன்னப்போ, எனக்கு அதனோட அர்த்தம் விளங்கலை. ஆனா, இப்போ நல்லா புரியுது , ஒரு ஆணும் பெண்ணும் ஒரு குடும்பமா சேர்ந்து வாழ, அந்த பண்பாடும் கலாச்சாரமும் தான் அடிப்படையா இருக்கு; ஒருவனுக்கு ஒருத்திங்கிற தனிமனித ஒழுக்கம் தான் உண்மையான நாகரிகம்ங்கிறதை
நான் என் வாழ்க்கை மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்."

கௌஷிக் மேலும் தொடர்ந்தான் :

"இன்ஸ்டண்டா பார்த்தேன்; இன்ஸ்டண்டா காதலிச்சேன்; இன்ஸ்டண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப இன்ஸ்டண்டா கஷ்டமும் படறேன்; கூடவே, சுமி எந்த இன்ஸ்டன்ட் என்னை விட்டுட்டு போயிடுவாளோனு பயமும் பட்டுக்கிட்டு இருக்கேன். பிகாஸ், ஸ்டில் ஐ லவ் ஹர்!"

உணர்ச்சிகளின் குவியலில் சிக்கிய கௌஷிக் கண்கலங்கினான்; தலை குனிந்தான். குலுங்கும் முதுகு அவன் அழுவதை உணரத்தியது.

தொடரும்.......
 
Hi All,

Thanks for your readership and feedbacks which make this thread vibrant. Thanks to Nara Sir for sharing the info.

Dear Sangom sir, something similar but may be not quite the same happened to me once. I ran into a friend I had not seen in 10 years quite by accident. We had been friends through college (3 years) and work (4 years). Then we went our merry ways.

One day, on the other side the world, in Washington D.C. I saw him walking towards me with his head down deeply immersed in his own thoughts. After a long day of driving, we had checked into a motel and I went to the nearby 7-Eleven to buy something, and there he was coming in as I was leaving. I noticed him first and wanted to give him a start, so I walked straight into him as if I was going to bump into him head-on. You must have seen his face, first a flash of anger like, who is this brute bumping into me, then delight on seeing a friend out of the blue.

Well, after that he forced us to checkout from the motel and we spent 2 days in his apartment.

Our friendship started after the +2 (PUC in my case) stage, so it is not directly comparable to the characters here, though the utterly unlikely scenario of running into a long lost friend, and taking liberties, however unbelievable, happened to me once in my life :).

Cheers!

I also had a somewhat similar experience. A classmate of mine who studied upto class X with me identified me after a long gap of 15 years when I was travelling with my family.
Sounds unbelievable, but it is true! Also, reg. chapter 8 and the ones to follow, there may be certain incidents/ characters which some of you many find hard to believe. I just want to make it clear that I am not against NRI Indians or any specific culture. This is the way that specific character for ex. Kowshik or his father feels at that point of time in their life. As I wrote in the chapter,
"மனித மனத்தின் விசித்திரங்களை யாரால் புரிந்து கொள்ள முடிகிறது?"

I request you not to generalise the controversial issues and pls understand them from that characters' mindset. Some of you can agree with the story, pls agree and enjoy, some of you disagree, no problem, you can disagree and then enjoy!

So, Keep reading, share your comments and pls remember to send your complete feedback after the novel is over.

Kunjuppu Sir,

Keep commenting ! Enjoy! I don't want to drag the story more that its capacity. I feel it is now crisp and to the point. Thanks to All!

Anamika.
 
anamika,

something makes me suspect 'anamika' is either raji ram or visalakshi ramani. :)

first the iit thing. i too am an ex iit madras student of the early 70s. at that time, there was no hype on the iits. folks like me, who did PU in madras, found out from their friends about this thing called iit, and wrote, and some got in, some didn't (these went to guindy, actech, rec trichy what not).

also please note, that iit of those times was subsidized hevily by the nehru government, and continued by indira. (fee 25 rupees per month of that time hostel about 125 rupees a month). most of us who graduated the 5 year program had no job offers. this is a fact. unless you had a dad, uncle, or prospective fil who could set you up.

the usa option, initially started shakily among tambrams, early to mid 60s, but the feedback gave impetus to becoming an accepted practise in the 70s, 80s, and then developed into the goldrush H1B stuff of the 90s and beyond. today, i think, we are completing the full circle, ie there are folks going to usa, but not necessarily from the iits. many join the undergrad programs, and as many of relatives, return to india, for the comfort of their own environment and job prospects.

it is correct to say that india of today, offers an indian, the best career path. nowhere in this equation, the feelings of the parents are taken into account, or ever have been. those few who did, to my knowledge, have regrets of some kinds, but then life, as i see it, is one of regrets one way or the other.

r.k. narayan had an interesting article in the hindu, in the early1970s - re the situation of a returning indian student from the usa with a phd, tryng for a job, caught in the swamp of the scientist pool in delhi, and ultimately, returning to the usa, and to his white girl friend. i am unable to find that article on the web.

the same r.k. narayan, has written somewhat disparagingly about the life of the indian immigrants in the usa of the 70s, as he saw it.

Indians in America - An article by the late R.K.Narayan

the truth is somewhere inbetween, i think. all in all, most indians adjusted to the lifestyles that the usa offered, their spouses more so. especially among tambrams. in canada, there is widespread abuse of immigrant women, but these are almost exclusively sikh or muslims, from the villages of punjab, both sides of the border. the less the education, the more the insecurity of the male, and while he needs the female to work to bring home some money, he is unable to accommodate her longings for self expression. this is the sad part, and i think, in india, till recently it extended to middle class tambrams too. hence the overwhelming mandate of our girls to settle abroad.

re south african indians, i know many of them. they too were brutalized by apartheid, and add to it, isolation from the motherland. today, apartheid is gone, contacts with the motherland is aplenty. it is with great pride,to see tata or mahindra dealerships, their buses, lorries plying the entire south african landscape, along with indian made tractors, motorcycles and scooters. good stuff.

the tamils of south africa lost caste long ago, but not the caste surnames. pillais, chettys, moodlis, nairs, padayatchees are just nomenclatures, who freely intermarry with each other. after all marriage is the ultimate acceptance of equality. i know of a couple of tambrams married to south african hindus and appear comfortably so. their girls are modern, but not modern enough to be a blatant ape of the decadent of the west.

it is only in indian movies and novels, that we see, this western 'decadency'. the reality of their culture is more sobre. public kissing, which we consider the most abhorrent of carnal behaviour, when done with affection, is a beautiful sight to watch, whether it be of the teens or the seniors. a peck on the cheek as a greeting is as dignified and wholesome, as two hands joined together in a vanakkam. or a hearty handshake. beauty is in the eyes of the beholder.

the female dress code for work is as strict as anywhere else. pant suit or skirt suit can be elegant and dignified. one does not wear jeans, slippers (somehow displaying the toes is consider undignified in the west, and who grew up with chappals have not yet understood this) t-shirts are a no no. one sees bikinis only in the beaches in the summer. or topless, but these are private and discrete.

so, when anamika, presents a situation, where sumi, comes flashily dressed to work or parties with male friends every day, while the hubby is turning spiritual, may be plausible, it needs to be narrated more subtly. for nothing is so blatant.

re friends meeting after a long time: 10 years after high school, i was walking out of gare du nord in paris, and i see this brown face coming from the opposite. our eyes catch. we pass. i turn around and the face is also turning around. i retrace my steps and so does this guy.'willie?' i say. he too says my name. we have changed, not enough not to recognize each other.

he booked sick to his government job, and spend the morning with me, breakfast et al. sad to say, i lost contact once again, and all efforts to find him has failed so far.

thank you.
 
...
"மனித மனத்தின் விசித்திரங்களை யாரால் புரிந்து கொள்ள முடிகிறது?"
Dear Anamika, I think I can guess where this is going. Both Janu and what is his name, move in each others direction. But their story is predictable and boring.

To me, Sumi and her husband, whatever his name is, are the most interesting characters. Of course, IMHO, the husband is the villain, and Sumi is the one deserving of our understanding and love. What made her so unsure of her own innate self that she had to dress in ways that most American girls won't? There must be a story there. Why is this Kaushit (sorry for the typo) so ashamed of her if he still loves her? There must be a story there.

Anamika, I don't know about you or other readers, but to me, Sumi is the most heroic character so far.

Cheers!
 
நானும் அவள் இல்லை! :nono:

நான் அவளாக இருந்திருந்தால்

முப்பெரும் Forum வேந்தர்கள்

இப்புது
நூலில் நுழைந்திருப்பீர்களா? :bolt:

போட்டி போட்டுக் கொண்டு
பாராட்டித் தள்ளுவீர்களா ?
:cheer2:
 
Last edited:
எங்களுக்குள் ஒரு ஒற்றுமை!

எங்கள் மாவட்டம் கோவை !!

:grouphug:
 
சுதந்திரம்!

சுதந்திர தேவி உள்ள நாட்டில் உள்ளவர்கள்,

சுதந்திர எண்ணங்களையே விரும்பிடுவார்!

நான் எழுதிய வரிகள் நினைவு வருகின்றன:

"ஐயமொன்று எழுந்தது எனக்கு; சுதந்திரம் எனச் சொல்லி,

ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டை வெறுக்கின்றனரே!

ஓ!! இதுதான் அமெரிக்க வாழ்க்கையோ?"

:dance:.:dance:
 
அத்தியாயம் - 9
***************

"சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?"

அமெரிக்காவில் ஸ்ரீராம் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸ். அவன் காதுகளில் உன்னிகிருஷ்ணனின் வெண்ணெய்க் குரலில் பாரதியார் கண்ணம்மாவை விவரித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவன் மனசு அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு மனைவி ஜானகியிடம் தாவியது.

"பாவம், ஜானகி! தனியாக என்ன செய்கிறாளோ? எப்படித் தான் பொழுது போகிறதோ? ஆச்சு, இன்னும் ரெண்டே நாள் டிரெய்னிங் முடித்து விட்டு, லண்டனுக்குப் பறந்து விடலாம்"

என்று இதயம் கும்மாளமிட்டது.

திடீரென கௌஷிக் நினைவு வந்ததும் ஸ்ரீராமின் உற்சாகம் அப்படியே தணிந்து போனது. அன்று கௌஷிக் அழுது கொண்டே பிரிந்தது இன்னும் அவன் மனதில் ஆறவில்லை. லண்டனுக்கு கிளம்பும் முன் அவனிடம் பேசினால் தேவலாம் போல இருக்கவே, செல்ஃபோனில் கௌஷிக்கைத் தொடர்பு கொண்டான். மறுநாள் மாலை இருவரும் சந்திக்க முடிவு செய்தனர்.

****************************

அடுத்த நாள் மாலை.

ஸ்ரீராம் அங்கு சென்ற போது , கௌஷிக் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

"ஹாய் கௌஷிக், வந்து ரொம்ப நேரமாச்சா?"

"ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்; வா, வந்து உட்கார்" என்றான் கௌஷிக்.

இருவருக்கும் ஒரே நேரத்தில் முந்தைய நிகழ்ச்சிகள் மின்னலாய்த் தோன்றி மறைந்தன. ஸ்ரீராம் தான் முதலில் சுதாரித்துக் கொண்டான்.

"கௌஷிக்! நாளை மறுநாள் நான் லண்டன் திரும்பறேன்."

"ஆல் த பெஸ்ட்! நெக்ஸ்ட் டைம் என்ன உன் கல்யாணச் சாப்பாடா?"

"டேய்...டேய்...எனக்கு கல்யாணமகி ஆறு மாசம் ஆச்சுடா; என் வொய்ஃப் இதைக் கேட்டா, அவ்வுளவு தான், நான் அம்பேல்!"

"அடப்பாவி! அன்னிக்கு பூரா என் கதையைக் கேட்டுட்டு, உன் விஷயத்தை விட்டுட்டியா? எனிவே, மை ஹார்ட்டி கங்கிராட்ஸ்!" என்று ஸ்ரீராமின் கையைப் பிடித்து குலுக்கினான். பிறகு அதே மூச்சில்,

"என்ன, அரேன்ஜ்ட் மாரேஜ் தானே? இல்லே, ஏதாவது "கண்டதும் காதல், காணாமலே காதல்" ஏதாவதா?"

என்றான் குறும்பாக.

"யப்பா சாமி, அதெல்லாம் ஒண்ணுமில்ல. என் வொய்ஃப் அக்மார்க் மைலாப்பூர் மாமி, போதுமா! பொண்ணு பார்க்க போயிட்டு 'என்னைப் பிடிச்சிருக்கா'னு கேட்டா, அப்பா, அம்மாவைக் கேட்டுட்டு சொல்றேன்னு ஓடிட்டா. ரொம்ப கூச்ச சுபாவம், ரொம்ப தயக்கம், அவளைத் தனியா அங்க விட்டுட்டு வர்றதுக்குள்ள நான் ரொம்ப திண்டாடிப் போயிட்டேன். கடைசியில என் ஃபிரெண்ட் ஐடியால அவளை என் கொலீக்
வீட்டுல 'பேயிங் கெஸ்ட்'டா தங்க வைச்சுட்டு வந்துருக்கேன். ஹ்ம்.... அங்க எப்படி அவங்க கிட்ட பழகறாளோ என்னவோ, போனாத் தான் தெரியும்! "

ஸ்ரீராம் சொன்னதும் கௌஷிக் தொடர்ந்தான்:

"ஒரு வகையில நீ ரொம்ப கொடுத்து வைச்சிருக்கே, ஸ்ரீராம்!. 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' அப்படின்னு கண்ணதாசன் சொன்ன மாதிரி இறைவன் உனக்கு வரம் கொடுத்திருக்கார். வீட்டுக்கு விளக்கேத்த ஒரு மஹாலக்ஷ்மி வரணும்னு எங்கம்மா முன்னெல்லாம் அடிக்கடி சொல்வாங்க;

'அதென்னம்மா விளக்கு தான் ஏத்தணுமா, ஸ்விட்ச் போட்டா ஒத்துக்க மாட்டியா?'

அப்படின்னு கிண்டல் பண்ணிட்டிருப்பேன். இப்ப சமீபத்துல ஒரு பெரியவர் அதுக்கு ஒரு அருமையான விளக்கம் சொன்னப்போ, நான் மலைச்சுப் போயிட்டேன். விளக்குல எண்ணெயும், திரியும் எப்படி ஒண்ணோட ஒண்ணு கலந்து இணைஞ்சு வெளிச்சம் தருதோ, அதுபோல வாழ்க்கையில கணவனும், மனைவியும் விட்டுக் கொடுத்து, மனசு கலந்து, இணைஞ்சு வாழ்ந்தா அவங்க வாழ்க்கை ஒளிமயமா இருக்குமாம். விளக்குல எண்ணெயும் திரியும் போல இறுதிக் காலம் வரை பிரியாம சேர்ந்திருக்கணுமாம். இந்த விளக்கம் என்னை ரொம்ப யோசிக்க வைச்சிடிச்சு, ஸ்ரீராம்!"

கௌஷிக்கின் யோசனையைப் புரிந்து கொண்டவனாய் ஸ்ரீராம் கேட்டான்.

"நீயும் அப்படி தான் இருக்கப் போறியா, சௌஷிக்?"

"ம்ம்ம்.... நீ கேட்கிறது புரியுது ஸ்ரீராம். என்ன தான் சம்பாதிச்சாலும் எனக்கு இங்க மனநிறைவு கிடைக்கலை. அப்பாவுக்கு கொடுத்த வாக்கை மீறி நடக்கிறது என் மனசை ரொம்பவே உறுத்துது. இன்னும் மேக்ஸிமம் ரெண்டு வருஷம் பார்ப்பேன், அதுவும் சுமி மேலே எனக்கிருக்கிற அன்பாலயும், காதலாலயும் தான். இல்லேன்னா இந்தியா போய் அப்பா, அம்மா கூட செட்டிலாய்டுவேன்."

என்று சற்றே இடைவெளி விட்டவன் மீண்டும் தொடர்ந்தான்.

"உன்னைப் பார்த்ததும், எனக்கும் அழகா, அமைதியா குடும்பம் நடத்தணும்கிற ஆசை இன்னும் வளர்ந்திடுச்சு. கூடிய சீக்கிரம் சுமிக்கும் அந்த ஆசை வரணும், அவ மனசு மாறி நாங்களும் ஒரு அழகான குடும்பமா வாழணும்னு தான் என்னோட பிரார்த்தனை, ஸ்ரீராம்!"

"கண்டிப்பா உன் பிரார்த்தனை நிறைவேறும், கௌஷிக். நீ சுமியைக் கூட்டிட்டு லண்டன் வந்து எங்க வீட்டுல தங்குடா. ஜானகியைப் பார்த்து அவங்களுக்கும் சில மாற்றங்கள் வரும்னு தான் எனக்குத் தோணுது. கொஞ்சம் பெட்டர் ஆனபிறகு, இந்தியா கூட்டிட்டுப் போய் நம்மளோட கோயில்கள், கலாச்சாரம், குடும்ப வாழ்க்கை - இதெல்லாம் அவங்க கிட்ட விளக்கிச் சொல்லிப் பாரு, கட்டாயம் அவங்க மனசு மாறும்."

"ம்ம்ம்....பார்க்கலாம்; லெட் அஸ் ஹோப் ஃபார் த பெஸ்ட்! லண்டன் டூர் வரணும்னு சுமி ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கா, அதனால அவளும் ஆர்வமா வருவா. எனக்கென்னவோ தோணுது ஸ்ரீராம், இடமும், அவளோட நட்பு வட்டாரமும் மாறினா, அவ மனசும் கொஞ்சம் தெளிவாக வாய்ப்பிருக்கு. கட்டாயம் நாங்க லண்டன் வரோம். ஒரு சின்ன கண்டிஷன், அதுக்கு நீ ஒத்துக்கிட்டா, உங்க வீட்டுல தங்குவோம்; இல்லே ஹோட்டல் தான்."

கௌஷிக் பீடிகை போட்டு நிறுத்தினான்.

"சொல்லு, என்ன கண்டிஷன்?"

" வந்து...சொன்னா நீ சிரிக்கக் கூடாது. சுமிக்கும் நம்ம டைப் சமையல்ல ஆர்வம் இல்லையா, எனக்கு ப்ரெட், பர்கர், டின் ஃபுட்- அப்படின்னு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சுடா, ஸ்ரீராம். எப்பவாவது நம்ம ஊரு ஹோட்டல்ல போய் சாப்பிடுவேன். ஆனாலும், வீட்டுச் சாப்பாடு மாதிரி வருமா, சொல்லு? அதனால நான் உங்க வீட்டுல வந்து தங்கினா எனக்கு சுண்டைக்காய் வத்தக்குழம்பு, பருப்புத் தொகையல், சுட்ட அப்பளம், போளி, மாலாடு, சோமாசி, அதிரசம் - எல்லாம் செஞ்சு தரணும். நீ இதுக்கு சரின்னு சொல்லு, நான் ஆஃபிஸ் கூட லீவ் போட்டுட்டு அடுத்த ஃபிளைட்ல வந்துடுவேன்."

ஸ்ரீராம் சிரித்துக் கொண்டே சொன்னான்:

"கண்டிப்பா நீ கேட்டதெல்லாம் கிடைக்கும். ஜானகி சமையல் சூப்பரா இருக்கும். அதுவும் அவ பண்ற புளிக்காய்ச்ச்ல் என்னோட ஃபேவரைட் ஐட்டம்."

"பேஷ், பேஷ், இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்!"

கௌஷிக் விளம்பரப் பாணியில் சொல்ல, இருவரும் விடை பெற்றுக் கொண்டனர்.

தொடரும்.......
 
பேரைச் சொன்னாலும்
ஊரைச் சொல்லக்கூடாது! :nono:

பேரையே சொல்லாதவரின்
ஊரைச் சொல்லவேண்டாமே

என்று நான் எண்ணியதாலேயே
முன்பே ஊரைச் சொல்லவில்லை. :decision:
 
யாதும் ஊரே- குறுநாவல் (10) - அனாமிகா

Hi Friends,

Thanks for your interest and patience, this posting was delayed as I had been on a pilgrimage to Shirdi and nearby temples.

அத்தியாயம் - 10
****************

"கருணை தெய்வமே கற்பகமே -
காண வேண்டும் உந்தன் பொற்பதமே"

லண்டன்; எமிலி வீட்டு வாசலில் இறங்கிய ஸ்ரீராம் அங்கு தமிழ்ப் பாடல் கேட்டு அதிசயித்தான். சற்று கவனித்துக் கேட்டால், இன்னொரு ஆச்சர்யம் ! சிந்துபைரவியில் தேனாய்ப் பொழிந்த அந்தக் குரல் ஜானகியுடையது!!

எமிலி வீட்டில் பாடுமளவு ஜானகி பழகியிருந்தது ஸ்ரீராமுக்கு சந்தோஷமாக இருந்தது. எமிலி அன்பாக அவனை வரவேற்றார்.

ஜானகி அவனைப் பார்த்ததும், அவள் முகம் தாமரையாய் மலர்ந்தது. பாட்டை நிறுத்தி விட்டு எழுந்து ஓடி வந்தாள்.

"ஏன்னா, நீங்க நாளைக்கு தான் வரீங்கன்னு மெயில் வந்தது?"

"உனக்கு சர்ப்ப்ரைஸ் கொடுக்க தான் இன்னிக்கே வந்துட்டேன், ஜானு!"

எமிலி டீ தயாரிப்பதற்காக உள்ளே சென்றார்.

" சரி, நீங்க எப்படி இருக்கேள்? டிரெய்னிங் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? ஒழுங்கா சாப்பிட்டேளா?"

"ஆச்சு, ஆரம்பிச்சுட்டியா ஜானகி? என்ன இது? பள்ளிக்கூட பிள்ளையை கேட்கற மாதிரி இருக்கு? என்ன, கையில ஒரு பிரம்பு தான் இல்ல, என்னைப் பார்த்தா எஞ்சினீயர் மாதிரி இருக்கா, எல்.கே.ஜி பையன் மாதிரி இருக்கா?"

ஸ்ரீராம் செல்லமாய் அலுத்துக் கொண்டாலும், அவன் மனசுக்குள் உள்ளூர பெருமிதம் பொங்கி வழிந்தது. இதே முன்பென்றால் விட்டேத்தியாய் பதில் சொல்வான்; ஆனால், இப்போது, அதுவும் சுமியைப் பார்த்த பிறகு அவன் மனமும் மாறியிருந்தது. ஜானகி கேட்கும் அசட்டுக்
கேள்விகளுக்குக் காரணமாய் உள்ள அவள் அன்பும், கரிசனமும், அவன் மீது உள்ள நேசமும் ஸ்ரீராமுக்கு தெளிவாய் புரிந்தது. மனசுக்குள் கௌஷிக்கிற்கு 'தாங்க்ஸ்' சொல்லிக் கொண்டான்.

அதற்குள் எமிலி தேனீர் தயாரானதாய் அழைத்தார். ஜானகி மளமளவென்று டேபிள் 'செட்' செய்து அவர்கள் மூவருக்கும் பிஸ்கெட்டும், தேனீரும் எடுத்து வைத்தாள். அந்த நாட்டு வழக்கப்படி அச்சு பிசகாமல் அவள் செய்த நேர்த்தியில் ஸ்ரீராம் அசந்து விட்டான்.

"வாவ்! சிம்ப்ளி கிரேட்! ரெண்டு வாரத்துல என்ன சேஞ்ச்!! கண்டிப்பா நீங்க தனியா இந்த டிரெய்னிங் கொடுத்ததுக்கும் சேர்த்து ஃபீஸ் வாங்கிக்கணும்"

என்று எமிலியிடம் கூறினான்.

ஜானகி அவன் புகழ்ச்சியில் முகம் சிவந்தாள். எமிலி புன்சிரிப்போடு,

" ஷி ஹேஸ் ஆல்ரெடி பெய்ட் த ஃபீஸ்" என்றார்.

ஸ்ரீராம் புரியாமல் விழிக்க, அவரே மேலும் விளக்கினார்:

"ஜானகி செய்த இண்டியன் டிஷ்ஷஸ் அண்ட் அவளோட ஸ்வீட் சாங்ஸ் தான் அவள் கொடுத்த ஃபீஸ்" என்று எமிலி கூறிய போது, அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஜானகியின் கம்பெனியை மிகவும் என்ஜாய் செய்ததாகவும் அவர் கூறினார்.

"வீ வில் பீ ஹாப்பி டு ஹோஸ்ட் ஹர் அகெய்ன்" என்று அவர் கூற,

" ஐயோ, வாட் அபௌட் மீ?"

என்று ஸ்ரீராம் சிரித்தான்.

" ஓக்கே, நெள யூ கேன் கோ. பட், எனக்கு இந்தியன் ஃபுட் வேணும் போது நான் உங்க வீட்டுக்குத் தான் வருவேன், என்ன ஜானகி?"

என்று கேட்க,

"ஷ்யூர், யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் " என்று இருவரும் கைகுலுக்கிப் பிரிய , ஸ்ரீராம் சந்தோஷமாய் உணர்ந்தான்.

*************************

ஸ்ரீராமின் வீடு.

வீட்டை ஒழுங்குபடுத்தி, சமையல் செய்து சாப்பிட்டு இருவரும் அமர்ந்தனர்.

"ஜானு! அவங்க வீட்டுல என்ன சொக்குப்பொடி போட்டே, ஜானகீ, ஜானகீன்னு உருகறாங்க?"

ஜானகியிடம் ஒரு சிறு புன்னகை மட்டுமே பதில்.

"ஆமாம், வரும் போதே கேட்கணும்னு நினைச்சேன், இப்போ அவங்க கூட நல்லா இங்கிலீஷ்ல பேசறே, நான் கவனிச்சேன், வெரிகுட்!"

இதற்கும் அதே புன்னகை தான் பதில்!

"ஹேய் ஜானகி, இப்ப கம்ப்யூட்டர் யூஸ் பண்ண கத்துக்கிட்டியாம்; இந்தியாவுல நம்ம ரிலேடிவ்ஸ் கூட "வெப் சாட்டிங்" பண்ணினேனு கேள்விப்பட்டேன்; உன் தம்பி மெயில் அனுப்பி இருந்தான். எனக்கு சர்ப்ரைஸா இருந்தது! எப்படி திடீர்னு எல்லாம் மேஜிக் போல மாறிப்
போச்சு? ஒரு சி.டி பிளேயர் ஆபரேட் பண்ண கத்துக்க மாட்டேன் அப்படின்னு அடம் பிடிச்சே? ஞாபகமிருக்கா?"

இதற்கும் அதே புன்னகை தான் பதில்!

ஸ்ரீராம் பொறுமை இழந்தான்.

"ஜானு! அந்த மேஜிக் என்னன்னு எனக்குச் சொல்லலே, நான் மறுபடி யு.எஸ் கிளம்பிடுவேன்."

"அச்சச்சோ, அதெல்லாம் வேண்டாம், அப்புறம் உங்க பையனுக்கு யார் பதில் சொல்றது?"

ஒரு நிமிடம் முழித்த ஸ்ரீராம், விஷயம் புரிந்ததும் உற்சாகத்தில் துள்ளினான்.

"நான் உன்னை ஸர்ப்ரைஸ் பண்ணலாம்னு பார்த்தா, நீ என்னை ஸர்ப்ரைஸ் பண்ணிட்டே, ஜானு! இது தான் இனிமே நமக்கு பெரிய பிரைஸ்!" என்று ஜானகியை அன்புடன் அணைத்துக் கொண்டான்.

கொஞ்ச நேரம் கழித்து, மறுபடி ஜானகியே ஆரம்பித்தாள்.

"ஏன்னா, என்னோட மாற்றத்துக்கு காரணமா இருந்தது ஒரு 'மேஜிக் மேடம்'. அது யாருன்னு நீங்க பார்க்கணுமா?"

"கண்டிப்பா பார்க்கணும். எப்ப போகலாம்?"

"நாளைக்கு சாயந்தரம்?"

"ம், ஷ்யூர். வா, இப்ப தூங்கப் போலாம், நீ இனிமே உடம்பை பத்திரமாய் பார்த்துக்கணும்."

அறையில் விடிவிளக்கு வெளிச்சத்துக்காய் தவமிருக்க ஆரம்பித்தது.

(அடுத்த இதழில் முடியும்)
 
thank you anamika.

the story is good. but there is no need to write in english with tamil script. it hinders the smooth flow.

it is ok for even the english people to be talking in tamil. especially in a book.

i am looking forward to the ending. thanks again.
 
Dear Anamika,

Since all the members in this forum can understand English, the dialogs could as well be in English,

when you present the story here! Actually 'Thanglish' is difficult sometimes.

We have to type 'ஹாட்' for 'had', 'hat' and 'hot' !!

Story is good. :thumb: (may add one comment, later :angel:)

Best wishes,
Raji Ram
 
அத்தியாயம் - 11
****************

"ஸாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேஸம்
விஷ்வாதாரம் ககன ஸத்ருஸம் மேகவர்ணம் ஸுபாங்கம்"

லண்டன் பெருமாள் கோவில். இசைக்குயில் எம்.எஸ்.ஸின் தெய்வீகக் குரலில் விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலித்துக் கொண்டிருந்தது. அங்கே காத்துக் கொண்டிருந்த ஸ்ரீராம், அருகில் இருந்த ஜானகியை நிமிண்டினான்.

"எப்ப வருவாங்க உன் மேஜிக் மேடம்?"

"இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவாங்க; நீங்க பார்த்து அசந்து போகப் போறீங்க!"

ஜானகி சொன்னது போல் மேஜிக் மேடத்தைப் பார்த்த ஸ்ரீராம் அசந்து தான் போனான். அவன் கற்பனை செய்து வைத்திருந்தது ஓரளவு மாடர்னான உடையில் நடுத்தர வயது பெண் ஒருவரை; ஆனால், மடிசார் புடவை கட்டி மெள்ள அடியெடுத்து வந்த் பாட்டி ஒருவரை ஜானகி அறிமுகம் செய்ய, அவன் புரியாமல் விழித்தான்.

"நான் சொல்லலே?அது இவங்க தான்; பேரு ராஜம் பாட்டி"

"பாட்டிக்கு நமஸ்காரம் பண்ணுங்கோ"

ஜானகி சொல்ல, இருவரும் நமஸ்கரித்தனர்.

"சீக்கிரம் குட்டி கிருஷ்ணர் வரணும்! எழுந்திரும்மா ஜானகி!"

பாட்டி மனப்பூர்வமாய் ஆசி கூறினார்.

"ஜானகி, நீ சொன்ன அந்த மேடம் வரலியா?"

ஸ்ரீராம் கேட்டதும் ஜானகியும் பாட்டியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

"இந்தப் பாட்டியை தான் நான் 'மேஜிக் மேடம்'னு உங்க கிட்டே சொன்னேன்!"

ஸ்ரீராமினால் நம்ப முடியவில்லை.

"ம்ஹூம், நான் நம்ப மாட்டேன்; நீ பொய் சொல்றே, ஜானு!"

"ஸ்ரீராம், அவ உண்மையை தான் சொல்றா, வா, அப்படி உட்கார்ந்து பேசலாம்"

மூவரும் அமர்ந்து கொள்ள, குழப்பம் தீராத ஸ்ரீராம் மறுபடி ஆரம்பித்தான்.

"ஏன் ஜானகி, உனக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் - இதெல்லாம் இந்தப் பாட்டியா சொல்லிக் கொடுத்தா?"

"ஆமாம். பாட்டி அந்தக் காலத்து இங்கிலீஷ் பி.ஏ. கம்ப்யூட்டரும் அப்-டு-டேட்டா எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்காங்க. அதெல்லாம் விட, எனக்கு நானே போட்டுக்கிட்ட பூட்டைத் திறக்க சாவி கொடுத்தவங்க அவங்க தான்."

ஜானகி நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தாள்.

****************************************

ஜானகி பொழுது போகாமல் தவிப்பதைப் பார்த்த எமிலி தான் அந்த யோசனையைக் கூறினார். அவர்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் இருந்த பெருமாள் கோவிலுக்கு அவளை அழைத்துச் சென்றார். ஜானகியை உள்ளே அனுப்பி விட்டு, அவர் காரில் காத்திருந்தார்.

கோவிலுக்குள் சென்ற ஜானகிக்கு மனசு பொங்கியது. ஏற்கனவே வெளிநாட்டுக்கு வந்தது சரியா என்று ஒரு சந்தேகம், தயக்கம், இப்போது அதனுடன் ஸ்ரீராம் உடன் இல்லாததால் ஏற்பட்ட பயம் - எல்லாம் சேர்ந்து மனதைக் குழப்ப, கண்கள் கலங்க பெருமாள் சன்னதியில் நின்று வேண்டிக்கொண்டாள். அப்போது அவளைத் தாண்டிச் சென்ற ஒரு மடிசார் பாட்டியைப் பார்த்து சட்டென்று அவள் பாட்டி ஞாபகம் வரவே, 'பாட்டி' என்று
அழைத்தும் விட்டாள். ராஜம்மா அவளைத் திரும்பிப் பார்த்தார். அவளுடைய கலங்கிய முகமும், சிவந்த விழிகளும் அவள் நிலையை அவருக்கு உணர்த்தின.

ஜானகி பிரசாதம் வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ராஜம் பாட்டியும் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

"வந்து.....என்னோட பாட்டியும் உங்களை மாதிரியே இருப்பாங்க...அதான்...." என்று ஜானகி சமாளிக்க முயன்றாள்.

"அதனாலென்ன, பரவாயில்லை. விடு, இப்ப அவங்க எங்க இருக்காங்க?"

" மைலாப்பூர்"

" சரி, அப்ப லண்டன் பாட்டியா என்னை நினைச்சுக்கோ"

அப்படி ஆரம்பித்த அவர்கள் அறிமுகம் மெல்ல வளர்ந்தது. பாட்டி கோவிலுக்கு செல்லும் அதே நேரம் ஜானகியும் வரத் தொடங்கினாள். அவரோடு பேசுவது அவளுக்கு ஒரு வடிகாலாக இருந்தது. அப்படிப் பேசும் போது ஒருநாள் ஜானகி தன் தயக்கத்தையும் கூறினாள். அயல்நாட்டின் வழக்கங்களுக்கு மாறாக தன் நாட்டின் பழக்க வழக்கத்தை எப்படி கடைப்பிடிப்பது என்று தவிக்கும் தன் மனநிலையைக் கூற, ராஜம் பாட்டி
அதற்கு வழிகாட்டினார்.

"இப்பல்லாம் வெளிநாட்டுல வந்து இருக்கிறது சகஜமாய்டுத்து, ஜானகி. இப்பவெல்லாம் உலகத்தையே "குளோபல் வில்லேஜ்" அப்படின்னு தானே சொல்றோம். இண்டர்நெட்டுல மெயில் கொடுத்தா, மைலாப்பூர், மலேசியா - எங்கேயானாலும், நிமிஷக் கணக்குல போய் சேர்ந்துடும்."

ஜானகி விழியகல தன்னைப் பார்ப்பதை பாட்டி கவனித்தார்.

"இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு தானே பார்க்கிறே? கம்ப்யூட்டர்ல எல்லாம் என் பேரன் கிரி சொல்லிக் கொடுத்திருக்கான். சண்டே சண்டே கோயம்பத்தூர்ல என் பேத்தி சசி கூட 'சாட்டிங்' பண்ணி பேசுவேனாக்கும். சரி, என் கதை இருக்கட்டும், விஷயத்துக்கு வருவோம்.

உலகம் சுருங்க சுருங்க மனுஷாளுக்கு மனசு இன்னும் விரிவாகணும். இது ஒண்ணும் புதுசா நான் சொல்றது இல்ல, ஏற்கனவே நம்ம பெரியவாள் எல்லாம் சொன்னது தான் ஜானகி. "ஸர்வே ஜனா சுகினோ பவந்து" (எல்லாரும் சுகமாய் இருக்கட்டும்), "யாதும் ஊரே யாவரும் கேளிர்"னு கணியன் பூங்குன்றனார், 'விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை' அப்படின்னு பாரதிதாசன் - இன்னும் பல பேர் சொன்ன
தத்துவம் தான். முதல்ல அதை உள்வாங்கிக்கோ; அப்ப எல்லார் மீதும் ஒரு அன்பும், வாஞ்சையும் வரும். அடுத்தது, உனக்கு சரின்னு படற நம்ம பழக்கங்கள் எதையும் நீ மாத்திக்க வேண்டாம். காந்திஜி பெரிய பெரிய மாநாடுகளில் கூட இடுப்புத் துண்டோட தான் கலந்துக்கிட்டார். ஏன், நம்ம நாட்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புடவையில் உலக நாடுகளை சுற்றி வரலையா? நானும் என் பையனோட சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா - இப்படி பல தேசங்கள்ல இருந்திருக்கேன் - இதே மடிசாரோட!

நம்ம பாரத நாட்டுக் கலாச்சாரம், பணபாடு - இதெல்லாம் இங்குள்ளவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதே சமயம், அவங்களோட கலாச்சாரத்தையும் நாம அங்கீகரிக்கப் பழகணும்.நாம அவங்க வழியில போக வேணாம்; ஆனா அதை மதிச்சுப் பழகினா அவங்களுக்கு நம்ம பேர்ல ஒரு பிரியம் வரும்; நம்ம வழக்கங்களைத் தெரிஞ்சுக்க ஆர்வம் வரும்."

ராஜம் பாட்டியோடு தினம் பேசிப் பேசி, ஜானகியின் குழப்பங்கள் ஒவ்வொன்றாய்த் தீர்ந்தன. கலங்கியிருந்த அவள் மனமும் தெளிந்தது. அவளால் இப்போது லிசா, எமிலியிடம் இயல்பாய் பழக முடிந்தது. அவ்வப்போது பாட்டி வீட்டுக்கும் சென்று கம்ப்யூட்டரும், ஆங்கிலமும் கற்றுக் கொண்டாள்.

***************************************

ஜானகி சொல்லி முடிக்க, ஸ்ரீராமின் விழிகள் வியப்பால் விரிந்தன.

"பாட்டி, யூ ஆர் ரியல்லி கிரேட்! ஹாட்ஸ் ஆஃப் " என்று பாவனை செய்தான்.

"அடடே, நீ ஒருத்தன் அவளுக்கு மேல இருக்கே! ஏதோ நமக்குத் தெரிஞ்சதை நாலு பேருக்குச் சொல்றது தானே, இதிலே என்ன பெரிய உபகாரம்? சரி,இப்ப தான் ஞாபகம் வரது, ஜானகி உனக்கு பாட்டு தெரியுமோல்லியோ? என் பேரனோட ஃப்ரெண்ட் கிறிஸ்டீனா அப்படின்னு ஒரு பொண்ணு நம்ம சங்கீதம் கத்துக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்காளாம். உன்னோட அட்ரஸ் கொடுக்கச் சொல்லி இருக்கேன், என்ன
சரியா நடந்துப்பே இல்லியா?"

"பாட்டியோட ஹெல்ப் இருந்தா எது தான் கஷ்டம்?"

ஸ்ரீராம் சொல்ல ஜானகியும் ஆமோதித்தாள்.

"ஆமாம் பாட்டி, உங்களால இந்த லண்டன் சொஸைட்டில என்னோட இடம் என்னங்கிறதை நான் புரிஞ்சுண்டேன். நான் இங்க இருக்கப்போற ரெண்டு வருஷத்துல என்னால நம்ம நாட்டுக்கும், அதன் கலைகளுக்கும் நல்ல பேர் வர்ற மாதிரி கண்டிப்பா நடந்துக்குவேன்."

"கற்பூர புத்தி கண்ணா! சரியாய் பிடிச்சிண்டே!!"

பாட்டி இருவரையும் அன்புடன் அனுப்பி வைத்தார்.

********************************

அவர்கள் வீட்டுக்கு வந்த போது, கடிதம் காத்திருந்தது.

ஜானகிக்கு அவயம் பாட்டி தான் எழுதியிருந்தாள். ஜானகி அதைப் பிரித்துப் படித்து விட்டு 'சிரிசிரி' என்று அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

"என்ன ஜானு? என்னையும் சேர்த்துக்கறது?"

"நீங்களே பாருங்கோ, பாட்டி லண்டன் வரப் போறதா எழுதி இருக்கா."

"என்ன இது ஜானு அதிசயம்?"

"எனக்காக தம்பி ரவி இங்கிலீஷ் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் எல்லாத்துக்கும் பணம் கட்டியிருந்தான். திடீர்னு நம்ம கல்யாணம் நடந்து முடிஞ்சதுல நான் எந்த கிளாஸூக்கும் போகல. இப்ப, பாட்டி அந்த கிளாஸ் எல்லாம் முடிச்சு சர்டிபிகேட் வாங்கியாச்சாம்; எல்லாம் ரவி பண்ற வேலை தான்! சீக்கிரமே மசக்கைப் பட்சணம் பண்ணிண்டு லண்டன் வரணும்; நல்ல சேதியா ஈ-மெயில் அனுப்புன்னு பாட்டி எழுதியிருக்கா."

"நல்ல சேதி தான் ரெடியா இருக்கே, முதல்ல நம்ம ரெண்டு பேர் வீட்டுக்கும் மெயில் அனுப்பலாம், வா!"

இருவரும் மகிழ்ச்சியோடு கம்ப்யூட்டர் முன் அமர்ந்தார்கள். அவயம் பாட்டியும் விரைவில் வரப் போகும் லண்டன் பயணத்துக்கு தயாராகிறார்!!


************நிறைந்தது*****************

பின்குறிப்பு:

இந்தக் கதை உருவாகக் காரணமாக இருந்த விதை ராஜம் பாட்டி தான். அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் அல்ல - மலர்ந்த முகத்துடன், மடிசார் கட்டுடன் பல நாடுகளையும் சுற்றி வந்த அவருடைய பெயரை மட்டும் கதைக்காக நான் மாற்றியுள்ளேன்.

இதனை வெளியிட வாய்ப்பளித்த Tamilbrahmins -க்கும், படித்து ஆதரவளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

அன்புடன்,
அனாமிகா.
 
Dear Anamika,

கதையின் climax அபாரம்! என்னவரின் அன்னையும் தழையத் தழையக் கட்டிய

மடிசாருடன், இரு முறை U S சென்று வந்தவர்! பெயரும் கதையில் வரும் பெயரே!

இந்த Forum நண்பர்கள் மடிசாரைக் கேலி பேசி எழுதும்போதெல்லாம், அவர் அழகாகக்

கட்டுவதை நினைத்து, நான் விவாதம் செய்தது உண்டு! என்னைப் பொறுத்தவரை,

அழகாகக் கட்டும் மடிசார், தெய்வீகத் தன்மை வாய்ந்தது! மதுரை மீனாக்ஷி அம்மனின்

இந்தக் கட்டு, மனதைக் கொள்ளை கொள்ளும்!


மடிசாரைப் பற்றி ஒரு கருத்து நிலவுகிறது. அந்த உடையில் மணமகள் தெய்வாம்சத்துடன்

இருப்பதால், பலரின் 'கண்' பட்டுவிடுமாம்! முன் காலத்தில், சாதாரணமான பருத்திப்

புடைவையைக் கட்டி, கலியாணம் முடிந்தவுடன், அதை தானம் செய்து விடுவார்களாம்!

இந்தக் காலத்தில்தான், படாடோபம் கருதி, ஆயிரக்கணக்கில் செலவு செய்து, பட்டுப்

புடவை வாங்கி, அதை மீண்டும் சீமந்தக் கலியாணத்திற்கு மட்டும் கட்டுகிறார்கள்!

(அதுவும் இந்தியாவில் நடந்தால்தான்....)


நல்ல கதை அளித்ததற்கு நன்றி.


நட்புடன்,
ராஜி ராம் :ranger:
 
dear raji,

please point out who and when has made fun of madisar. i do not remember ever having done in this forum.

there are critiques here, of our prejudices, but never of madisar. as far as i know.

please let me know. thank you.
 
dear anamika,

raji(am) sounds close. i would think raji fits the character, but may not be the clothes :)

o.henry was the first of the english authors (an american though) who popularized the genre of short story. till then stories were only serials, published in the weekly edition of newspapers or magazines, much like our vikatan or kumudam.

his 'gift of magi' is sill after 90 years later a masterpiece.

dear anamika, thank you for part 1. i should confess, that i enjoyed it thoroughly. i hope my comments were not hurtful, because no matter what was intended, they could be viewed as such. after all, don't artists aim for perfection? sorry for any heartburns or heartbreaks.

when do you propose to start part 2?

may i confess, that i am eagerly awaiting the same.

God Bless.
 
dear raji,

please point out who and when has made fun of madisar. i do not remember ever having done in this forum.

there are critiques here, of our prejudices, but never of madisar. as far as i know.

please let me know. thank you.
I need to :fish2:.... shall let you know soon Sir! Any way, I did NOT mean YOU :biggrin1:
 
A long and tiring search indeed!!!!!!!!!

Anyway, GOT IT now! It is the thread 'America today' ( fortunately or unfortunately ) started by

you Kunjuppu Sir. It has gone to page # 10 in general discussions. Please read from page 3 - 7.

You will understand why I said so!

Regards............
 
I expected some masala. nothing ...

The way the story was building, i smelled something is going to happen - Nothing happened. No EM affairs or etc. etc. Tame end. Just to extol the madisar, this story ... Enakku puriyala,

Anyway, i am not criticising. I didn't get any kick out of this. I expected something. Nothing happened.

But some people have praised the story. Ttheek hai.
 
The way the story was building, i smelled something is going to happen - Nothing happened. No EM affairs or etc. etc. Tame end. Just to extol the madisar, this story ... Enakku puriyala,

Anyway, i am not criticising. I didn't get any kick out of this. I expected something. Nothing happened.

But some people have praised the story. Ttheek hai.
This feeling is because of today's cinema and small screen mega (maha) serials!!!:peep:

No one should be good , 'funda' ! :evil:

 
Last edited:
dear raji,

sorry for putting you through this really wild goose chase. really, you did not have to spend so much time to search out re mocking the madisar.

whoever does it, in my opinion, should not have done so. respecting all cultures, including our own, is but the sign of cultured one.

once again apologies.
 
Thanks for your comments. They were a good feedback to me. Part 2 -will surely take sometime. I also remember the story of Magi, an unforgettable one indeed! Some of kalki's short stories also have that twist towards the end which make them memorable and really interesting.

Regards
Anamika.

dear anamika,

raji(am) sounds close. i would think raji fits the character, but may not be the clothes :)

o.henry was the first of the english authors (an american though) who popularized the genre of short story. till then stories were only serials, published in the weekly edition of newspapers or magazines, much like our vikatan or kumudam.

his 'gift of magi' is sill after 90 years later a masterpiece.

dear anamika, thank you for part 1. i should confess, that i enjoyed it thoroughly. i hope my comments were not hurtful, because no matter what was intended, they could be viewed as such. after all, don't artists aim for perfection? sorry for any heartburns or heartbreaks.

when do you propose to start part 2?

may i confess, that i am eagerly awaiting the same.

God Bless.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top