என்னுடைய தமிழ்க் கவிதைகள்
1. எம்மதமும் நம் மதம்
மதங்களின் பெயரால்
ஏனிங்கே போராட்டம்?
வீணான ஆர்ப்பாட்டம்?
காளியிடம் சென்று
தொழுகை நடத்தினால்
கருமாரிக்கொன்றும் கோபம் வராது.
நபிகளிடம் சென்று
நாமமிட்டுக்கொண்டால்
நமாசில் எந்தப் பிழையும் வராது
குருத்வாராவிற்க்குச் சென்று
குரான் ஓதினால்
கிரந்தசாகிப் ஒன்றும் கிழிந்து விடாது.
கீதையும் பைபிளும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
நம்பிக்கையின் சின்னங்கள்..
மனிதனுக்காக மனம்; மனதிற்காக மதம்
எனவே மனிதனுக்காக மதமன்றி
மதங்களுக்காக மனிதனல்ல.
ஆதாம், ஏவாள்
எந்த மதம்?
அனைவரும் இங்கே அந்த மதம்.
எம்மதமும் நம் மதம்
என்ற தத்துவத்துக்கு
என்றென்றும் சம்மதம்.
Lokah samasthaa sukhino bhavantu.
1. எம்மதமும் நம் மதம்
மதங்களின் பெயரால்
ஏனிங்கே போராட்டம்?
வீணான ஆர்ப்பாட்டம்?
காளியிடம் சென்று
தொழுகை நடத்தினால்
கருமாரிக்கொன்றும் கோபம் வராது.
நபிகளிடம் சென்று
நாமமிட்டுக்கொண்டால்
நமாசில் எந்தப் பிழையும் வராது
குருத்வாராவிற்க்குச் சென்று
குரான் ஓதினால்
கிரந்தசாகிப் ஒன்றும் கிழிந்து விடாது.
கீதையும் பைபிளும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
நம்பிக்கையின் சின்னங்கள்..
மனிதனுக்காக மனம்; மனதிற்காக மதம்
எனவே மனிதனுக்காக மதமன்றி
மதங்களுக்காக மனிதனல்ல.
ஆதாம், ஏவாள்
எந்த மதம்?
அனைவரும் இங்கே அந்த மதம்.
எம்மதமும் நம் மதம்
என்ற தத்துவத்துக்கு
என்றென்றும் சம்மதம்.
Lokah samasthaa sukhino bhavantu.