• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இனிய தமிழ்க்கவிதைகள் - நான் மிக ரசித்தவை.

Status
Not open for further replies.
எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1

405
வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. 2

இந்த வரிகளில் ஒரு உண்மையை நாம் பார்க்கவேண்டும். இவையனைத்திலும் அசைகள் அமைந்திருக்கும் பாங்கு. நேரிசை யாகட்டும் நிரையசையாகட்டும் ஒற்றுடன் சேர்ந்து வந்திருப்பது மிகக்குறைவே. இப்படி அமைத்து சந்தத்தின் அழுத்தத்தைக்கட்டுப்படுத்தியிருப்பது ஒரு நல்ல உத்தியாகும். கம்ப ராமாயாணத்திலும் இந்த உத்தி பல இடங்களிலும் கையாளப்பட்டிருக்கிறது.
 
சந்தத்தை பற்றிக்கூறும்போது ஸ்ரீராமனைப்பற்றிக்கூறும் ஸ்வாமி தேசிகனின் இந்தக்கவிதை அமைந்துள்ள நேர்த்தியைப் பாருங்கள்.

உத்தமவமர்த்தலமமைத்ததொரெழிற்றனுவினுய்த்த கணையால்
அத்திரவரக்கன் முடிபத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திரலோன்
........................................................................................
.........................................................................................

உத்தம அமர்த்தலம் அமைத்த ஓர் எழில் தனுவின் உய்த்த கணையால்
அத்திர அரக்கன் முடி பத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திரலோன் என பிரித்துப் படிக்கவேண்டும்.
 
இந்தக்கவிதை பெரியாழ்வார் பாடியது. கண்ணனுக்குத் தாலாட்டு பாடுவதாக இந்தக்கவிதை அமைக்கப்பட்டிருக்கிறது. கண்ணன் கண்வளரும் தொட்டில் பிரமனால் அமைத்துத்தரப்பட்டிருக்கிறது. உலகில் அனைத்தையும் படைத்த பிரமன் ஒரு தொட்டிலை உருவாக்கினால் அது எங்கும் கிடைக்காத, மிக நேர்த்தியான ஒன்றாகத்தானே இருக்கமுடியும்? அந்தத்தொட்டில் மாணிக்கக்கற்களால் கட்டப்பட்டது. இடையிடையே வைரக்கற்களும் பதிக்கப்பட்டுள்ளது. ஆணிப்பொன்னால் செய்யப்பட்ட வண்ணமயமான சிறு தொட்டில் அது. ஆணிப்பொன் என்பது பொற்கொல்லன் பொன்னின் தரத்தைச் சொதிக்க உபயோகிக்கும் சுத்தத்தங்கம் ஆகும். ஆணிப்பொன்னையும் மற்ற ஆபரணத்தையும் அருகருகே உரைகல்லில் உரைத்து இரண்டிற்கும் இடையே காணும் நிறம் பளபளப்பு இவற்றிலுள்ள வித்தியாசத்தை வைத்து பொன்னின் தரத்தை நிர்ணயிப்பது வழக்கம். கண்ணன் எனும் குழந்தை மிக உயர்ந்த ஒரு வஸ்துவாயிற்றே. எனவே அதற்கு மிக உயர்ந்த பொன்னால் செய்யப்பட்ட தொட்டில் பிரமனால் அனுப்பப்பட்டது போலும். இவ்வளவு உயர்ந்த அந்தத் தொட்டிலில் கண்வளரப்போகும் அந்தக்கண்ணனை “மாணிக்குறளன்” என்று வர்ணிக்கிறார் ஆழ்வார். குறளன் என்
றால் சிறுவன் என்று பொருள். மாணிக்குறளன் என்றால் அழகிய குட்டிப்பயல் என்று பொருள். பிரமனே செய்து விடுத்த விலை மதிப்பற்ற தொட்டிலெங்கே அதில் உறங்கப்போகும் குட்டிப்பையனான நீ எங்கே. என்ன எளிமை, என்ன எளிமை(வடமொழியில் சௌலப்யம்) என்று ஆழ்வார் வியந்துபோவதாக அர்த்தம். மாணிக்குறளன், வையமளந்தான் என்ற சொற்களால் குட்டி பிரம்மச்சாரியாக வந்து அண்டம் முழுவதையும் இரண்டடிகளால் அளந்துவிட்ட வாமனன் என்று பொருள் கொள்ள.வேண்டும்.

ஆழ்வாரின் அனுபவம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி சிந்திக்கவும் வைக்கிறது. கவிதை இதோ:

மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறு தொட்டில்
பேணியுனக்கு பிரமன் விடு தந்தான்
மாணிக்குறளனே தாலேலோ ! வையமளந்தானே தாலேலோ !!
 
Last edited:
உத்தமவமர்த்தலமமைத்ததொரெழிற்றனுவினுய்த்த கணையால்
அத்திரவரக்கன் முடிபத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திரலோன்
...
இதுபோன்ற அசாதாரண சந்த முயற்சிகள் சமஸ்கிருதத்தில் ஏராளம். தமிழுக்கு அவை சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பது என் துணிபு. ஒரு உதாரணம்:

யாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயா |
யாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயா ||
--வேதாந்த தேசிகர், ’பாதுகாசஹஸ்ரம்’, ஸ்லோகம் 936

இந்த வரிகளை இப்படிப் பிரித்துப் பொருள்கொள்ள வேண்டும்:

यायाया, आय्, यायाया, आय्, आयाय्,अयाय, अयाय्, अयाय्,अयाय्, अयाय्, ।
अयाय्, अयाया, यायाय्, आयाया, आयाय्, या, या , या, या, या, या, या, या ॥

யாயாயா, ஆய், யாயாயா, ஆய், ஆயாய்,அயாய, அயாய், அயாய்,அயாய், அயாய், |
அயாய், அயாயா, யாயாய், ஆயாயா, ஆயாய், யா, யா , யா, யா, யா, யா, யா, யா ||

பொருள்:
பகவானின் பாதங்களை அலங்கரிக்கும் அவன் பாதக்குறடுகள், ஞானம் தருவன, அவனை அடையும் ஆசையத் தருவன, தடைகளை நீக்குவன, அவனை அடைய உதவுவன, தவிர எங்கும் செல்லக் கூடியன---மஹாவிஷ்ணுவின் இந்தப் பாதக்குறடுகள்.

*****

சமஸ்கிருதத்தில் உள்ள சில கவிதை உத்திகளைத் தமிழில் கொண்டுவர பெரும்பாலும் முடியாது. உதாரணமாக, ஶ்ரீ வேங்கடேச கவியின் ’ஶ்ரீ ராகவ யாதவீயம்’ முப்பது ஸ்லோகங்களிலும் ’அனுலோம-ப்ரதிலோம’ என்ற உத்தி பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த உத்தியில் ஒரு ஸ்லோகத்தின் பதங்களை முதலில் இருந்து இடம்-வலமாகப் படித்தால் (இது அனுலோம) ஒரு பொருளும், கடைசியில் இருந்து வலம்-இடமாகப் படித்தால் (இது பிரதிலோம) மற்றொரு பொருளும் தென்படும். ’ஶ்ரீ ராகவ யாதவீயம்’ படைப்பில் ஒவ்வொரு ஸ்லோகமும் அனுலோமத்தில் ஶ்ரீ ராமனையும் பிரதிலோமதில் ஶ்ரீக்ருஷ்ணனையும் வழிபடுகிறது. முதல் ஸ்லோகம் இப்படிப் போகிறது. முதலில் அனுலோமத்தில் ஶ்ரீராமன்:

वन्दॆ अहम् दॆवम् तम् श्रीतम् रन्तारम् कालम् भासा य:।
राम: रामाधी: आप्याग: लीलाम् आर आयॊध्यॆ वासॆ॥

வந்தே அஹம் தேவம் தம் ஶ்ரீதம் ரன்தாரம் காலம் பாஸா ய:|
ராம: ராமாதீ: ஆப்யாக: லீலாம் ஆர ஆயோத்யே வாஸே||

"வணங்குகிறேன் நான் அந்த தேவனை, மலைய, ஸஹ்ய பர்வதங்களுக்குப் பயணம் போனவரை, தன் மனத்தில் சீதாவைப் பற்றியே எண்ணியவரை, பின்னர் அயோத்யா திரும்பி அவளுடன் வெகுகாலம் லீலா வினோதங்கள் புரிந்தவரை."

இப்போது பிரதிலோமத்தில் ஶ்ரீக்ருஷ்ணன்:

सेवाध्येयो रामालाली गोप्याराधी मारामोरा:।
यस्साभालङ्कारम् तारम् तम् श्रीतम् वन्दॆऽहम् दॆवम्॥

ஸேவாத்யேயோ ராமாலாலீ கோப்யாராதீ மாராமோரா:|
யஸ்ஸாபாலங்காரம் தாரம் தம் ஶ்ரீதம் வந்தே அஹம் தேவம்||

"ஶ்ரீக்ருஷ்ணனை நான் வணங்குகிறேன், அவர் தவத்தாலும் தியாகத்தாலும் அறியப்படுபவர், ருக்மிணியுடனும் மற்ற தேவியருடனும் லீலைகள் புரிபவர், கோபியர்களல் வணங்கப் படுபவர், ஶ்ரீலக்ஷ்மீ உறையும் மார்புத் தலத்தினை உடையவன், ஒளிவீசும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்."

*****

திரு பசுபதி அவர்கள் தன் ’பசுபதிவுகள்’ வலைத்தளத்தில் அனுமோம-பிரதிலோம உத்திக்கு ’மாலைமாற்று’ என்று பெயரிட்டு அதனைக் கொஞ்சம் முயன்றுள்ளார்: அவர் குறித்துள்ள மாலைமாற்றுகள்:
திருமால் மாருதி, போ வேகமாகவே போ, வா வேகமாகவே வா.
பசுபதிவுகள்

[யப்பிலக்கணம் பற்றி விரிவாக அறிய இந்த வலைத்தளத்தை நாடலாம்.]

*****
 
Last edited:
என்னுடைய அஞ்சல் 30-இல் இரண்டு திருத்தங்கள் செய்ய விழைகிறேன்:

1. ’ஶ்ரீ ராகவ யாதவீயம்’ நூலின் ஆசிரியர் பெயர் ’ஶ்ரீ வேங்கடாத்வரி கவி’ (’ஶ்ரீ வேங்கடேச கவி’ எனத் தவறாகக் குறித்துள்ளேன்). இதை எனக்கு ஒரு pm மூலம் சுட்டிக்காட்டிய திரு MSK மூர்த்தி அவர்களுக்கு நன்றி.

2. ’சமஸ்கிருதத்தில் உள்ள சில கவிதை உத்திகளைத் தமிழில் கொண்டுவர பெரும்பாலும் முடியாது.’ என்று நான் எண்ணியிருந்ததை எழுதியிருந்தேன். இப்போது அந்தப் ’பெரும்பாலும் முடியாது’ என்பதை ’அரிது’ என்று திருத்திக்கொள்கிறேன். காரணம், பின்வரும் சம்பந்தரின் மாலைமாற்று (palindrome) உதாரணம் (பசுபதி அவர்களின் வலதளத்திலிருந்து):

யாமா மாநீ யாமாமா யாழீ காமா காணாகா
காணா காமா காழீயா மாமா யாநீ மாமாயா

இது ஒரு குறள் வெண்செந்துறை என்று அவர் விளக்குகிறார், ஆயினும் பொருள் தரவில்லை. பொருள் அறிந்தவர்கள்/கண்டுபிடிப்பவர்கள் இங்குப் பதியலாம்.

*****

அவர் கொடுத்துள்ள உதாரணங்களில் பாரதியின் ’இரட்டைக் குறள் வெண்செந்துறை’ is simply amazing!. புதுக்கவிதையாளர்கள் மனம்போல் எழுதுவதை விட, குறள் வெண்செந்துறையை முயலலாம். "பொருளுக்கேற்ப எளிதில் பாடுவதற்கு ஏற்ற பாவகை இது" என்று திரு பசுபதி எழுகிறார்.

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்.

*****
 
Last edited:
இறைவனின் பெருமையிலும் அவனுடைய கல்யாணகுணங்களிலும் ஈடுபட்டு மயங்கிய இந்தப்புலவர் தன்னை நாயகியின் தாயாகப் பாவித்துக்கொண்டு பாடிய இந்தப்பாடலைப்படியுங்கள். பகவானைச் சென்றடையவேண்டும் என்ற ஜீவாத்மாவின் தாகத்தை/ஏக்கத்தை/ஆசையை இதைவிட அழகாகக் கூறிடமுடியுமா? யாருக்கும் மிக சுலபமாக புரியும் தமிழில் கவிதை நயத்துடன் எழுதப்பட்ட இந்தக்கவிதைகள் எனக்குப்பிடித்தவை:.

1. மண்ணையிருந்து துழாவி
வாமனன் மண் இது வென்னும்
விண்ணைத்தொழுது அவன் மேவு
வைகுந்தமென்று கை காட்டும்
கண்ணையுண்ணீர்மல்க நின்று
கடல்வண்ணன் என்னுமன்னே
என் பெண்ணைப் பெருமயல் செய்தார்க்கு
என் செய்கேன் பெய்வளையீரே

2, ஒன்றிய திங்களைக்காட்டி
ஒளிமணிவண்ணனேயென்னும்
நின்றகுன்றத்தினை நோக்கி
நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய்யும் மழை காணில்
நாரணன் வந்தானென்றாலும்
என்றினமையல்கள் செய்தார்
என்னுடைக் கோமளத்தையே.


  1. கோமளவாங்கன்றைப் புல்கிக்
கோவிந்தன் மேய்த்தனவென்னும்
போமிள நாகத்தின் பின் போய்
அவன் கிடக்கையீது என்னும்
ஆமளவு ஒன்றுமறியேன்
அருவினையாட்டியேன் பெற்ற
கோமளவல்லியை மாயோன்
மால் செய்து செய்கின்ற கூத்தே.



4, திருவுடை மன்னரைக்காணில்
திருமாலைக்கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில்
உலகளந்தானென்று துள்ளும்
கருவுடைத்தேவில்களெல்லாம்
கடல்வண்ணன் கோயிலேயென்னும்
வெருவிலும் வீழ்விலுமோவாக்
கண்ணன் கழல்கள் விரும்புமே.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி 4-4.
 
இன்று பங்களூரிலிருந்து வந்த நண்பருடைய குடும்பத்துடன் காஞ்சீபுரம் சென்றிருந்தேன் திவ்யதேசங்களை சேவித்து வர. ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பட்டினத்தாரின் இரண்டு கவிதைகளை படித்தேன். என்னை கவர்ந்தன அவை. இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

1.கல்லாப்பிழையும்,கருதாப்பிழையும், கசிந்துருகி
நில்லாப்பிழையும், நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையும், துதியாப்பிழையும் தொழாப்பிழையும்,
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பரனே.

2.சொல்லால் வருங்குற்றம், சிந்தனையால் வருந்தோடம்,செய்த
பொல்லாத தீவினைப்பார்வையிற்பாவங்கள், புண்ணிய நூல்
அல்லாத கேள்வியைக்கேட்டிடும் தீங்குகள் ஆயவும் மற்று
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பரனே.

இந்த இரண்டு கவிதைகளுக்கும் எந்த விளக்கமும் தேவை இல்லை.
 
பட்டினத்தார் எல்லப்பிழையும் பொறுத்தருள்வாய் ஏகம்பரனே என்று கேட்டார்.
ஆனால் இந்தக்கவிஞரைப்பாருங்கள். பகவானைச்சரண் அடைந்தவுடனேயே பிழைகள் செய்திருந்த நிலை கழிந்து விட்டதாகக்கூறி வானவர் தம் வாழ்ச்சி தந்தருளுமாறு வேண்டுகின்றார். ஸ்வாமி தேசிகனின் கவிதை இதோ:

நின்னருளாங்கதியன்றி மற்றொன்றில்லேன்
நெடுங்காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்,
உன் அருளுக்கினிதான நிலை உகந்தேன்
உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்,
மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத்தீர்த்து
வானவர் தம் வாழ்ச்சி தர வரித்தேன் உன்னை,
இன்னருளால் இனி எனக்கோர் பரம் ஏற்றாமல்
என் திருமால் அடைக்கலம் கொள் என்னை நீயே.

சரணாகதிக்கான ஐந்து அங்கங்களும் இக்கவிதையில் அடங்கி இருப்பதாகப் பெரியோர் கூறுவர்.
 
பாரதியை அறியாதவர் உண்டோ. எனக்கும் அவனது கவிதைகள் மிகப்பிடிக்கும். அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சில இதோ:

1.காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும்:-அங்கு
தூணில் அழகியதாய்-நன் மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித்தர வேண்டும்;-அங்கு
கேணியருகினிலே-தென்னைமரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பன்னிரண்டு-தென்னை மரம்
பக்கத்திலே வேணும்-நல்ல
முத்து சுடர் போலே-நிலா ஒளி
முன்பு வரவேணும்; அங்கு,
கத்துங்குயிலோசை சற்றே வந்து
காதிற்படவேணும்;
என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல் வர வேணும்.

பாட்டுக்கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப்பெண் வேணும்:-எங்கள்
கூட்டுக்களியினிலே-கவிதைகள்
கொண்டுதரவேணும்:-அந்தக்
காட்டுவெளியினிலே-அம்மா! நின்றன்
காவலுற வேணும்;-என்றன்
பாட்டுத்திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திடவேணும்.

2.காக்கைச்சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா-நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்குமொலியிலெல்லாம் நந்தலாலா-நின்றன்
கீதமிசைக்குதடா நந்தலாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா.


3.காற்று வெளியிடைக்கண்ணம்மா,-நின்றன்
காதலை எண்ணிக்களிக்கின்றேன்;-அமு
தூற்றினை யொத்த இதழ்களும்-நில
வூறித்ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்
-இந்த
வையத்தில் யானுள்ளமட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித்தேற்றியே-இங்கோர்
விண்ணவனாகப்புரியுமே!-இந்தக் (காற்று..)

நீயெனதின்னுயிர் கண்ணம்மா!-எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்-துயர்
போயின, போயின துன்பங்கள்-நினைப்
பொன்னெனக்கொண்ட பொழுதிலே-என்றன்
வாயினிலேயமுதூறுதே-கண்ணம்
மா வென்ற பேர் சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினிலே வளர் சோதியே!-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே!-இந்தக் (காற்று..)


Lines highlighted are the ones which I enjoyed most.
 
Last edited:
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் எனக்கு மிகப்பிடித்த ஒரு தமிழ் நூல். அந்த நூலில் இருக்கும் கவிதைகள் எல்லாமே மிக அழகாக அமைந்தவை. இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம்,வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களாக அமைந்திருக்கிறது. மதுரைக்காண்டத்தில் ஒரு பகுதி ஆய்ச்சியர் குரவை என்பது. “நான் நின் சீரடிச்சிலம்புகளில் ஒன்று கொண்டு விற்று வருவேன். நீ மயங்காதிரு” எனக்கண்ணகியிடம் கூறிச்சென்ற கோவலன் திரும்பிவராதிருக்க, அவர்கள் தங்கியிருந்த ஆய்ச்சேரியில் பலவித தீயநிமித்தங்களை கண்ணகியும் மாதரி என்னும் ஆயர் முதுமகளும் கண்டனர். இந்நிமித்தங்களைக்கண்ட மாதரி நமக்கு வருவதோர் துன்பம் ஒன்றுண்டு எனக்கூறித் தீங்கினை விலக்க முன்பு கண்ணனும் பலராமனும் ஆயர்பாடியில் நப்பின்னையோடாடிய குரவைக்கூத்தினை ஆடுவோம் என்று கூறி இந்த கூத்தினை ஆடியதாக காண்கிறோம்.

இந்தக்கவிதைகளெல்லாம் திருமதி m.s. சுப்புலக்ஷ்மி அவர்களால் பாடப்பட்டு மிகப்பிரபலமானவை. நாம் இப்போது இவற்றின் கவிதை நயத்தை சற்றே காண்போம்.

முதலில் முன்னிலைப் பரவலாக(இறைவனை முன்னிலையாகவைத்து வாழ்த்துதல்) பாடப்பட்டுள்ள மூன்று பாடல்களை மட்டும் பார்ப்போம். பின்னர் தனியாக படர்க்கை பரவலில்(இறைவனை படர்க்கையிடத்து வைத்து வாழ்த்துதல்) பாடப்பட்ட மூன்று பாடல்களை பார்க்கலாம்.

கவிதைகள் இதோ:
1. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே.

(வடவரை-மந்தரம் எனும் மலை., மத்து-தயிர் கடையும் கருவி,
வாசுகி-ஒரு அரவு, நாண்-கடை கயிறு, கட்டுண்கை-கட்டுப்படுதல், மருட்கை-வியப்பு, ஐத்தே-விளி.)

பாடலின் பொருள்: பண்டொருநாள் மந்தரமலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பினை கடைகயிறாக்கி திருப்பாற்கடலைக்கடைந்த நீலநிறக்கடவுள் எந்தையே, நான்முகனை ஈன்ற தாமரை மலரையுடைய திருநாபியை உடைய எம்பெருமானே, அவ்வாறு கடல்வயிறு கலக்கக்காரணமாயிருந்த உனது கைகளே யசோதை எனும் இடைக்குல மடந்தையின் தயிர் கடையும் கயிற்றால் கட்டுண்டது என்ன மாயமோ. வியந்து நிற்கிறோம். ஆழ்வார்கள் எல்லாரும் வியந்த சௌலப்யம் எனும் கல்யாணகுணம் இங்கு பாடப்பட்டுள்ள அழகு மனதை கொள்ளை கொள்கிறது.

முன்னிலைப்பரவலில் இன்னும் இரண்டு பாடல்கள் பற்றி இனி எழுதுவேன்.
 
சிலப்பதிகாரம்:

முன்னிலைப்பரவலாக வரும் இரண்டாவது பாடல் இதோ:

2.அறுபொருள் இவனென்றே அமரர்கணந்தொழுதேத்த
உறுபசியொன்றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெயுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே;

(அறுபொருள்-முடிந்தபொருள், உறுபசி-உண்பதற்கு இன்றியமையாத பசி)

பொருள்: வளவிய துழாய் மாலையை அணிந்த திருமாலே! நின்னை முடிந்த பொருள் நீ ஒருவனே என்று அமரர்கூட்டமெல்லாம் தொழுது ஏத்தவும் பசி ஒன்றும் இன்றியே இவ்வுலகம் முழுதும் உண்டாய் அல்லையோ. அங்ஙனம் உலகடைய உண்ட அம்மாபெருந் திருவாய் தானோ எளிய ஆய்ச்சியர் மனையின் கண் களவு செய்து அவர் தம் உறியின்கண் வைத்திருந்த வெண்ணையையும் உண்ட வாய். இது என்ன மாயமோ அறிகிலோம்.

இந்தப்பாடலிலும் மையக்கருத்து பகவானின் சௌலப்யமே. ஈது எனக்கு பிடித்த ஒரு பாடல்.



இனி மூன்றாவது பாடலைப்பார்ப்போம்.

3.திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே.

(செங்கமல இரண்டடி-இரண்டு செங்கமல அடிகள் என்று கொள்ளவேண்டும், இருள்-நீயே முழுமுதல் என்று அறியாத மயக்கம், பஞ்சவர்-பாண்டவர், மடங்கலாய் மாறட்டாய்-நரசிங்கமாகி தூணினின்றும் புறப்பட்டு இரணியனை அழித்தவனே)

இறவாமையுடைய தேவர்களெல்லாரும் ஒன்றுகூடிக்கைகுவித்து வணங்குகின்ற திருமாலே! நின் செங்கமல இரண்டடிகளால் மயக்கம் தீரும்படி மூவுலகும் அளந்தாயன்றோ. அவ்வாறு அளந்த அந்த மாபெரும் அடிகள் தாமே பாண்டவர்க்கு தூது போக பலமுறைகள் நடந்து சென்றவை. தூணில் இருந்து புறப்பட்டு இரணியனைக்கொன்றழித்த இறைவனே இது என்ன மாயமோ என்று வியக்கிறோம்.

ஆழ்வார் சௌலப்யம் என்னும் இதே பொருளைப்பற்றி இதே கருத்துடன் “மாணிக்குறளனே தாலேலோ, வையமளந்தனே தாலேலோ” என்று பாடினார். இது எனக்குப்பிடித்த கவிதைகளில் ஒன்று.
 
Sri. Raju, Greetings.

I refer to the Silappadhikaram 2nd song, please. I thought அறுபொருள் meant அநாதி or முடிவற்ற பொருள். Very nice poems. Remember reading them somewhere in the past. Thank you for posting.

Cheers!
 
சிலப்பதிகாரம்:

இனி படர்க்கைப்பரவலில் அமைந்த மூன்று பாடல்களைப்பார்போம்:

இந்தப்பாடல்கள் மூன்றுமே முன்னிலைப்பரவலில் இறைவனைப்போற்றியதன் தொடர்ச்சியாக படர்க்கைப்பரவலில் அவன் புகழ்பாடுவன. அவன் புகழ்பாடாமல் இருப்பதும், அவன் புகழைக்கேளாமலிருப்பதும், அவனைத்தரிசியாமலிருப்பதும் இப்பிறப்பை வீணாக்கியதாகும் எனக்கூறும் இந்தப்பாடல்களில் அமைந்துள்ள எதுகையும் மோனையும், “கண்ணிமைத்துக்காண்பார் தம் கண்ணென்ன கண்ணே” என்னும் வரியில் உள்ள பொருள் நயமும் செய்யுள் இன்பமும் எண்ணும் தோறும் இனிப்பவை. எனக்கு மிகப்பிடித்தவை இப்பாடல்கள். பாடல்கள் இதோ:

1.மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்முடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே;

(சோவரணும்-‘சோ’ எனும் மதிலரணும், சேவடி சேப்ப-திருவடி சிவக்க,சேவகன்-தன் அன்பர்க்குத்தொண்டு செய்த இராமன்)

2.பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியுங் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே;

3.மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாவென்னா நாவென்ன நாவே.

(மடந்தாழு நெஞ்சம்-அறியாமை தங்கியிருந்த நெஞ்சம், கஞ்சன்-கம்சன்,ஆரணமுழங்க-வேதங்கள் காண்டற்கு முயன்று மாட்டாமையால் முழங்கி நிற்க)
 
Last edited:
இன்று நான் எழுதப்போவது தமிழ்க்கவிதை பற்றி அல்ல. இது ஒரு மலயாளக்கவிதை. கவிஞர் திரு ONV குருப்பு அவர்களால் எழுதப்பட்டது. “சில்லு” என்ற ஒரு சினிமாவில் பாடலாக வந்துள்ளது. இது மலரும் நினைவுகள் பற்றிய கவிதை. தேவையான இடங்களில் நான் தமிழில் அர்த்தம்
கொடுத்துள்ளேன்.கவிதை இதோ:

ஒரு வட்டம் கூடி என் ஓர்மகள் மேயுன்ன
திருமுற்றத்து எத்துவான் மோஹம்.
திருமுற்றத்து ஒரு கோணில் நில்க்குன்ன ஆ நெல்லி
மரம் ஒண்ணுலுத்துவான் மோஹம்.
அடருன்ன காய்மணிகள் பொழியும்போழ் சென்னெடுத்து
அதிலொண்ணு தின்னுவான் மோஹம்.
சுகமெழும் கைப்பும் புளிப்பும் மதுரவும்
நுகருவான் இப்போழும் மோஹம்.
தொடியிலே கிணர்வெள்ளம் கோரிக்குடிச்சு
எந்து மதுரம் என்னு ஓதுவான் மோஹம்........... (1)

ஒருவட்டம் கூடி ஆ புழையுட தீரத்து
வெருதே இரிக்குவான் மோஹம்.
வெருதே இருந்தொரு குயிலிண்டே பாட்டு கேட்டு
எதிர்ப்பாட்டு பாடுவான் மோஹம்.
அதுகேள்க்கே உச்சத்தில் கூகும்
குயிலிண்டே ஸ்ருதி பின்தொடருவான் மோஹம்.
ஒடுவில் பிணங்கி பறந்து போகும் பக்ஷியோடு
அருதே! என்னோதுவான் மோஹம். (2)

வெருதே ஈ மோஹங்கள் என்னறியும்போழும்
வெருதே மோஹிக்குவான் மோஹம். (3)






பாடல் (1)

ஒரு வட்டம் கூடி-ஒரு முறை கூட
ஓர்மகள் – நினைவுகள்
மேயுன்ன-மேய்கின்ற
திருமுற்றம்-படித்த பள்ளியின் நுழை வாயில்
எத்துவான்-சென்றடைதல்
கோணில்-மூலையில்,ஓரத்தில்
நில்க்குன்ன ஆ-நிற்கும் அந்த
ஒண்ணூ உலுத்துவான்-கொஞ்சம் உலுப்பிட
பொழியும்போழ்-பொழியும்போது
சென்னெடுத்து-சென்று எடுத்து
மதுரவும்-இனிப்பும்
இப்போழும்-இப்பொழுதும் கூட
கிணர்வெள்ளம்-கிணற்று நீர்
எந்து மதுரம்-என்ன இனிப்பு, என்ன இனிப்பு என்று

பாடல் (2)

புழையுட தீரத்து-ஆற்றின் கரையில்
வெருதே இரிக்குவான்-சும்மா உட்கார்ந்திருக்க
கூகும்-கூவிடும்
ஒடுவில்-முடிவில்
பிணங்கி-என்னுடன் பிணங்கி
அருதேயென்னோதுவான்-போகாதே என்று கெஞ்சிட

பாடல்(3)

ஈ மோஹங்கள்-இந்த ஆசைகள்
என்னறியும்போழும்-என்று உணரும் போதும்

இதைப்படிக்கும் போது நான் என்னுடைய கிராமத்துப்பள்ளியின் முன்பிருந்த மைதானத்துக்கே சென்று விடுகிறேன். நீங்களும் அப்படியே சென்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடைசி இரண்டு வரிகளில்(punch lines) தொக்கி நிற்கும் சோகமும் ஏக்கமும் நீண்ட நேரம் நம் மனதில் தொடருகிறது. இந்தக்கவிதைக்கு இதற்குமேல் விளக்கம் தேவை இல்லை. படித்து சிந்தித்து அனுபவியுங்கள். பின் உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
இன்று நான் எழுதப்போவது தமிழ்க்கவிதை பற்றி அல்ல. இது ஒரு மலயாளக்கவிதை. கவிஞர் திரு ONV குருப்பு அவர்களால் எழுதப்பட்டது. “சில்லு” என்ற ஒரு சினிமாவில் பாடலாக வந்துள்ளது. இது மலரும் நினைவுகள் பற்றிய கவிதை. தேவையான இடங்களில் நான் தமிழில் அர்த்தம்
கொடுத்துள்ளேன்.கவிதை இதோ:

ஒரு வட்டம் கூடி என் ஓர்மகள் மேயுன்ன
திருமுற்றத்து எத்துவான் மோஹம்.
திருமுற்றத்து ஒரு கோணில் நில்க்குன்ன ஆ நெல்லி
மரம் ஒண்ணுலுத்துவான் மோஹம்.
அடருன்ன காய்மணிகள் பொழியும்போழ் சென்னெடுத்து
அதிலொண்ணு தின்னுவான் மோஹம்.
சுகமெழும் கைப்பும் புளிப்பும் மதுரவும்
நுகருவான் இப்போழும் மோஹம்.
தொடியிலே கிணர்வெள்ளம் கோரிக்குடிச்சு
எந்து மதுரம் என்னு ஓதுவான் மோஹம்........... (1)

ஒருவட்டம் கூடி ஆ புழையுட தீரத்து
வெருதே இரிக்குவான் மோஹம்.
வெருதே இருந்தொரு குயிலிண்டே பாட்டு கேட்டு
எதிர்ப்பாட்டு பாடுவான் மோஹம்.
அதுகேள்க்கே உச்சத்தில் கூகும்
குயிலிண்டே ஸ்ருதி பின்தொடருவான் மோஹம்.
ஒடுவில் பிணங்கி பறந்து போகும் பக்ஷியோடு
அருதே! என்னோதுவான் மோஹம். (2)

வெருதே ஈ மோஹங்கள் என்னறியும்போழும்
வெருதே மோஹிக்குவான் மோஹம். (3)






பாடல் (1)

ஒரு வட்டம் கூடி-ஒரு முறை கூட
ஓர்மகள் – நினைவுகள்
மேயுன்ன-மேய்கின்ற
திருமுற்றம்-படித்த பள்ளியின் நுழை வாயில்
எத்துவான்-சென்றடைதல்
கோணில்-மூலையில்,ஓரத்தில்
நில்க்குன்ன ஆ-நிற்கும் அந்த
ஒண்ணூ உலுத்துவான்-கொஞ்சம் உலுப்பிட
பொழியும்போழ்-பொழியும்போது
சென்னெடுத்து-சென்று எடுத்து
மதுரவும்-இனிப்பும்
இப்போழும்-இப்பொழுதும் கூட
கிணர்வெள்ளம்-கிணற்று நீர்
எந்து மதுரம்-என்ன இனிப்பு, என்ன இனிப்பு என்று

பாடல் (2)

புழையுட தீரத்து-ஆற்றின் கரையில்
வெருதே இரிக்குவான்-சும்மா உட்கார்ந்திருக்க
கூகும்-கூவிடும்
ஒடுவில்-முடிவில்
பிணங்கி-என்னுடன் பிணங்கி
அருதேயென்னோதுவான்-போகாதே என்று கெஞ்சிட

பாடல்(3)

ஈ மோஹங்கள்-இந்த ஆசைகள்
என்னறியும்போழும்-என்று உணரும் போதும்

இதைப்படிக்கும் போது நான் என்னுடைய கிராமத்துப்பள்ளியின் முன்பிருந்த மைதானத்துக்கே சென்று விடுகிறேன். நீங்களும் அப்படியே சென்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடைசி இரண்டு வரிகளில்(punch lines) தொக்கி நிற்கும் சோகமும் ஏக்கமும் நீண்ட நேரம் நம் மனதில் தொடருகிறது. இந்தக்கவிதைக்கு இதற்குமேல் விளக்கம் தேவை இல்லை. படித்து சிந்தித்து அனுபவியுங்கள். பின் உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.

Dear Shri Raju,

The way this song was picturized and it is viewed here by many people, is that it is a reminiscence of the poet's ancestral house near the river Bharatappuzha in Palghat/Trichur districts.

Secondly, Malayalam pronunciation does not make the words sound with the letter ண. Examples:

ஒண்ணுலுத்துவான் - ஒன்னுலுத்துவான்

பொழியும்போழ் - பொழியும்போள்

அதிலொண்ணு - அதிலொன்னு

புழையுட - புழையுடெ

வெருதே - வெறுதே
வெருதே இருந்தொரு குயிலிண்டே - வெறுதே இருன்னொரு குயிலின்றெ

எதிர்ப்பாட்டு - எதிர்பாட்டு

கூகும் - கூவும்

குயிலிண்டே - குயிலின்றெ

பிணங்கி - பிணங்ஙி
பறந்து - பறந்து

வெருதே - வெறுதே

மோஹங்கள் - மோஹங்ஙள்
 
Dear Shri Raju,

The way this song was picturized and it is viewed here by many people, is that it is a reminiscence of the poet's ancestral house near the river Bharatappuzha in Palghat/Trichur districts.

Secondly, Malayalam pronunciation does not make the words sound with the letter ண. Examples:

ஒண்ணுலுத்துவான் - ஒன்னுலுத்துவான்

பொழியும்போழ் - பொழியும்போள்

அதிலொண்ணு - அதிலொன்னு

புழையுட - புழையுடெ

வெருதே - வெறுதே
வெருதே இருந்தொரு குயிலிண்டே - வெறுதே இருன்னொரு குயிலின்றெ

எதிர்ப்பாட்டு - எதிர்பாட்டு

கூகும் - கூவும்

குயிலிண்டே - குயிலின்றெ

பிணங்கி - பிணங்ஙி
பறந்து - பறந்து

வெருதே - வெறுதே

மோஹங்கள் - மோஹங்ஙள்

Dear Sangom Sir,

I mentioned about the school because ONV himself in a Malayalam TV programme in which he was interacting with school children said that the திருமுற்றம் he is talking about in this song is in the school in which he studied. I have taken certain liberties in transliteration-like using ண in place of ந and ங்கி in place ofங்ங்கி and in use of vallina ற in place of idaiyina ர etc., - only to bring the beautiful piece of a kavithai nearer to the average Tamil who has absolutely no knowledge of Malayalam. I did not want him to get the fatigue resulting from trying to interpret the strange sounding words in an alien tongue. Moreover I thought each word he is able to recognize as one that he readily knows is small rewards that he earns in his pleasant journey of enjoying the kavithai.My stress was more on the beauty of the meaning and the lingering tragedy indicated in the last 2 punch lines. I wanted my tamil friends here to enjoy it. An average Tamil will find it comfortable to interpret the familiar word மோஹங்கள் than with the word மோஹங்ஙள் etc. Dear Sir, I know Malayalam as good as Tamil. So whatever I have put down in my post earlier was deliberate with a purpose. Any way thank you for having read my post.
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top