இனிய தமிழ்க்கவிதைகள் - நான் மிக ரசித்தவை.
கவிதை என்பது உரைநடையிலிருந்து வித்தியாசமானது. உரைநடையில் பொருளை/கருத்தை தட்டையாகவும் நீளமாகவும் (in the linear mode)அப்படியே மனதில் தோன்றுவது போலவே கூறிவிடுவது தான் வழக்கம். கருத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த வார்த்தைகளால் வாக்கியங்களாகி கேட்பவரை அல்லது படிப்பவரைச் சென்று அடைந்துவிடுகின்றன. ஆனால் கவிதை அப்படியல்ல. அதில் எடுத்துக்கொண்ட கருத்து மெருகூட்டப்பட்டு, வடிவம் கொடுக்கப்பட்டு, உவமை முதலான பல உத்திகளையும் கையாண்டு ஒவ்வொரு சொல்லோடும் இணைந்தே இருக்கும் கொத்துக்கொத்தான எண்ணக் குவியல்களும் நினைத்தது நினைத்தவாறே சென்றடையவேண்டும் என்ற நோக்கத்துடன் கவனமாக தீட்டப்படும் ஒரு வண்ண ஓவியமாகும். கவிதையில் வார்த்தைகள் முன் பின்னாக வருவதுண்டு. அப்படி வராத இடத்தும் கூட முன்பின்னாக மாற்றி அமைத்துக்கொண்டு பொருள் அறியும் வழக்கம் உண்டு. உரைநடையில் "கொசுவை அடிக்க சம்மட்டியை உபயோகிப்பது" போல ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகக் கூற நிறைய வார்த்தைகளைச்
செலவிடவேண்டும். ஆனால் கவிதையில் அதை சுருக்கமாகவும்
சுலபமாகவும் கூறிவிடலாம். கவிதையை, கவிதை வடிவங்களில் ஒன்றான குறளின் மேன்மையை ,
"அணுவைத் துளைத்தேழ்கடலைப் புகுத்திக் குறுகத்தறித்த குறள்"
என்ற வரி அழகாக தெளிவுபடுத்துகிறது.
நான் தமிழ்க் கவிதைகளின் பரம ரசிகன். அடிககரும்பை அணு அணுவாய்
சுவைப்பது போல தமிழ்க்கவிதைகளை எண்ணி எண்ணி ரசித்து மகிழ்பவன்.
நான்மிக ரசித்த கவிதைகளை இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்
என எண்ணி எழுதத்தொடங்குகிறேன். முதலில் நான் விரும்பி ரசித்த
உவமைகளைப் பற்றி எழுதுவேன். வடிவத்தைப்பற்றி எழுதும் போது
கூடவே வடிவத்தின் உள்ளிருக்கும் பொருள் பற்றியும் பேசுவது இயற்கை
தானே.
கவிதை என்பது உரைநடையிலிருந்து வித்தியாசமானது. உரைநடையில் பொருளை/கருத்தை தட்டையாகவும் நீளமாகவும் (in the linear mode)அப்படியே மனதில் தோன்றுவது போலவே கூறிவிடுவது தான் வழக்கம். கருத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த வார்த்தைகளால் வாக்கியங்களாகி கேட்பவரை அல்லது படிப்பவரைச் சென்று அடைந்துவிடுகின்றன. ஆனால் கவிதை அப்படியல்ல. அதில் எடுத்துக்கொண்ட கருத்து மெருகூட்டப்பட்டு, வடிவம் கொடுக்கப்பட்டு, உவமை முதலான பல உத்திகளையும் கையாண்டு ஒவ்வொரு சொல்லோடும் இணைந்தே இருக்கும் கொத்துக்கொத்தான எண்ணக் குவியல்களும் நினைத்தது நினைத்தவாறே சென்றடையவேண்டும் என்ற நோக்கத்துடன் கவனமாக தீட்டப்படும் ஒரு வண்ண ஓவியமாகும். கவிதையில் வார்த்தைகள் முன் பின்னாக வருவதுண்டு. அப்படி வராத இடத்தும் கூட முன்பின்னாக மாற்றி அமைத்துக்கொண்டு பொருள் அறியும் வழக்கம் உண்டு. உரைநடையில் "கொசுவை அடிக்க சம்மட்டியை உபயோகிப்பது" போல ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகக் கூற நிறைய வார்த்தைகளைச்
செலவிடவேண்டும். ஆனால் கவிதையில் அதை சுருக்கமாகவும்
சுலபமாகவும் கூறிவிடலாம். கவிதையை, கவிதை வடிவங்களில் ஒன்றான குறளின் மேன்மையை ,
"அணுவைத் துளைத்தேழ்கடலைப் புகுத்திக் குறுகத்தறித்த குறள்"
என்ற வரி அழகாக தெளிவுபடுத்துகிறது.
நான் தமிழ்க் கவிதைகளின் பரம ரசிகன். அடிககரும்பை அணு அணுவாய்
சுவைப்பது போல தமிழ்க்கவிதைகளை எண்ணி எண்ணி ரசித்து மகிழ்பவன்.
நான்மிக ரசித்த கவிதைகளை இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்
என எண்ணி எழுதத்தொடங்குகிறேன். முதலில் நான் விரும்பி ரசித்த
உவமைகளைப் பற்றி எழுதுவேன். வடிவத்தைப்பற்றி எழுதும் போது
கூடவே வடிவத்தின் உள்ளிருக்கும் பொருள் பற்றியும் பேசுவது இயற்கை
தானே.