• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

TARPANAM - definition of அஷ்டகா , மன்வாதி , வைத்ருதி & வ்யதீபாதம் ?

sapsrikaanth

Active member
Hello all,
Please can you educate me on the definition of அஷ்டகா , மன்வாதி , வைத்ருதி & வ்யதீபாதம் ?
I knew only about அமாவாசை , மாத பிறப்பு , யுகாதி & மஹாளயம் .

List constituting to SHANNAVATHI ( From the attachment / from TAMILBRAMNIS site )
அமாவாசை 12;
மாத பிறப்பு 12;
அஷ்டகா 12;
யுகாதி 4;
மன்வாதி 14;
மஹாளயம் 16;
வைத்ருதி 13;
வ்யதீபாதம் 13.
மொத்தம் 96.

Thank you & kindest regards, Srikaanth
 

Attachments

  • Capture_2.PNG
    Capture_2.PNG
    76.4 KB · Views: 241
sir, please go through my postings like this in rituals ceremonies and puja. all pages given by me


All are given by musiri anna old no. 55 new no.89 north south aghraharam, musiri-621211 trichy district. tamil nadu. mobile no. 9488976124; 9487976124; phone no. 04326 261055.. e mail i.d. aysomayajee78@g mail.com. www. shreekaramtrust.in -- wattsapp:09488976124.

nannilam krishna ganapadigal son of nannilam raja gopala ganapadikal . his monthly magazine vaithika sree . new no. 488, old no. 175; ttk road, alwarpet, chennai, 6000018;tamil nadu. telephone no. 91-44-24361210.
 
அஷ்டகா, அன்வஷ்டகா, திஸ்ரேஷ்டகா
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்ப்பணங்களின் வரிசைகளை பார்த்துக்கொண்டு என்ற வகையிலே மேலும் தொடர்கிறார்.




அதிலே நாம் அடுத்ததாக பார்க்கக் கூடியதான மிக முக்கியமான புண்ணியகாலம் #அஷ்டகா_ஸ்ராத்தம். #திஸ்ரோஷ்டகா_என்று_பஞ்சாங்கத்தில் #போட்டிருப்பார்கள்.


*முதலில் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தை எப்பொழுது செய்ய வேண்டும், என்று பார்த்த பிறகு இதை நாம் எதற்காக செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*




*இதற்கான ஒரு சரித்திரத்தையே தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. மார்ககஷிச மாசம் புஷ்ய மாசம் மாக மாசம் பால் குண மாசம் இந்த அஷ்டகா சிராத்தம் கூட சாந்திரமான படிதான் தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*


*மார்கழி மாதம் மாசி பங்குனி தை இந்த நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச த்தில் வரக்கூடிய, சப்தமி அட்டமி நவமி, இந்த மூன்று நாட்களில் நாம் இந்த புண்ணிய காலத்தை அனுஷ்டிக்க வேண்டும்.*


*இதனுடைய முக்கியத்துவத்தை பார்த்துதான் மகரிஷிகள் நமக்கு சப்த பாக யஞ்கியங்களில் இந்த அஷ்டகாவை தனியாக வைத்திருக்கிறார்கள்.*




*இந்த ஷண்ணவதி 96 தர்ப்பணங்களை நாம் பண்ணுகிறோம் குறைந்தபட்சம் ஒரு வருடத்தில். இதில் எந்த ஒரு புண்ணிய காலமும் பாக அல்லது ஹவிர் யஞ்கியங்களில் வரவில்லை.*


நாற்பது சம்ஸ்காரங்களிலும் வரவில்லை. #ஆனால்_இந்த_அஷ்டகா #ஸ்ராத்தம்_40_சம்ஸ்காரங்களில் #சொல்லப்பட்டிருக்கிறது.




*சப்த பாக யஞ்கியங்களில் ஒன்று தான் இந்த அஷ்டகா ஸ்ராத்தம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதினால் தான் நாற்பது ஸம்ஸ்காரங்களில் இதை வைத்து கொடுத்திருக்கிறார்கள்*




இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இதை விடவே கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி சீ மந்தத்தையும் குழந்தைக்கு ஜாத கர்மாவையும் விடக் கூடாதோ, நாம கர்மாவையும் செய்யாமல் இருக்கக் கூடாதோ,
அதேபோல்தான் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தையும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.


இதற்கு திஸ்ரோஷ்டகா என்று மூன்று புண்ணிய காலங்கள் வரும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி.


அதேபோல் தை/மாசி/பங்குனி மாதத்திலும் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி இப்படி 3 நாட்களாக நான்கு மாதங்களும் வரும்.




இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சௌனகர் என்கின்ற மகரிஷி சொல்கின்ற பொழுது, ஹேமந்த ருது சிசிர ருது மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களும், இந்த ருதுக்களில் வரும். இதை செய்யவேண்டுமென்று மகரிஷி நமக்கு காண்பித்திருக்கிறார்


ஸ்ராத்தம் பார்வனமாக செய்ய வேண்டும். பொதுவாக நாம் தர்ப்பணம் செய்யும் போது பிதுர் பிதாமஹ பிரபிதாமஹ மாத்ரு பிதாமஹி
பிரபிதாமஹிகள் மாதாமஹ மாது பிதாமஹ மாது பிரபிதாமஹ, மாதாமஹி மாது பிதாமஹி மாது பிரபிதாமஹி இதுதான் வர்க்கத்துவயம் என்று சொல்கிறோம்.




இந்த வர்க்கத்துவயம் எப்படி ஆராதிக்கிறோம் என்றால், ஒவ்வொரு ஸ்ராத்தங்களிலும் ஒவ்வொரு விதமாக அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.




தர்ப்பணம் ஆக நாம் செய்யும் பொழுது அதில் எந்த மாற்றமும் தெரியாது ஒரே மாதிரியாக செய்து விடுவோம். ஆனால் இதை சிராத்தம் ஆக செய்யும்பொழுது, அதில் நிறைய விசேஷங்கள் வருகிறது.




இந்த அஷ்டகா சிராத்தத்தில் எப்படி என்றால், தாயார் வர்க்கத்திற்கு தனியாக வரணம் செய்ய வேண்டும்.
பொதுவாக இந்த ஷண்ணவதி அனைத்து ஸ்ராத்தங்களிலும் தாயாரும் தகப்பனாரும் சேர்ந்துதான் ஒரு வர்க்கம்.
அதேபோல் மாதாமஹர் மாதா மஹி ஒரு வர்க்கம்.




ஆனால் ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது வருடாவருடம் நாம் தாயாரை உத்தேசித்து செய்யக்கூடிய சிராத்தத்தில்,
நாந்தி சிராத்தத்திலும் கயையில் செய்யக்கூடிய ஸ்ராத்தத்திலும், #தாயார்_வர்க்கத்திற்கு #தனியாக_வரணம்_உண்டு.




அதேபோல்தான் இந்த #அஷ்டகா #சிரார்த்தத்திலும்_தாயார்_வர்க்கத்திற்கு தனியாக ஒரு வரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஏனென்றால் அங்குதான் விசேஷங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.


*அந்த சரித்திரத்தை பார்க்கும்போது அந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே நாம் தகப்பனாரையும் தாயாரையும் ஒரு வர்க்கமாக செய்தாலும்,
எப்படி நாந்தி சிராத்தத்தில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் செய்கின்றோமோ, அதே போல் தான் இந்த அஷ்டகா சிராத்தத்திலும் தாயாருக்கு தனியாக செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*




*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் 4 மாதத்தில் மூன்று மூன்றாக 12 தர்ப்பணங்கள் வருகின்றன இந்த அஷ்டகா புண்ணியகாலம்.*





*இதை அன்ன சிராத்தம் ஆக காண்பித்திருக்கிறார்கள்*
*மேலும் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்றும் காண்பித்து இருக்கிறார்கள்.
குறைந்தபட்சம் தர்ப்பணமாகவாது செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.*




*இதை ஏன் அன்ன ரூபமாக செய்யக்கூடாது என்றால் செய்யலாம் ஆனால் நிறைய நியமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மூன்று நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டிவரும்.
நியமங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது முடிந்தால் செய்யலாம். தர்ப்பணமாக செய்வதற்கு தர்ம சாஸ்திரத்தில் விசேஷங்கள் காண்பித்திருக்கிறார்கள்*




*இந்த அஷ்டகா தர்ப்பணத்தை செய்யாவிடில் தோஷங்களும் காண்பிக்கிறார்கள். இதை யார் தெரிந்து கொள்ள வில்லையோ அல்லது தெரிந்து கொண்டும் செய்யவில்லையோ, அவர்கள் தரித்திரம் ஆக போய்விடுகிறார்கள்.
அதாவது பணம் இல்லாமல் இருப்பவர்கள் தரித்திரர்கள் ஆகவும், அதேசமயம் பணம் இருந்தும் அனுபவிக்க முடியாதவர்களும்
தரித்திரர்கள் என்ற ஒரு நிலையானது நமக்கு ஏற்படுகின்றது என்று ஒரு முக்கியத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு.*






*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*


முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் பெற்றோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான ஷண்ணவதி தர்ப்பணம் விவரங்களை மேலும் தொடர்கிறார்.


அதில் நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டு வரக்கூடிய தான அஷ்டகா புண்ணியகாலம். மிகவும் முக்கியமானது ஒன்று




நாற்பது சம்ஸ்காரங்களில் இதுவும் ஒன்றாக நமது மகரிஷிகள் காண்பிக்கின்றனர். சப்த பாக யஞ்கியங்களில் ஒன்று.
பாக யக்ஞங்கள் ஏழு:- அஷ்டகா; ஸ்தாலி பாகம்; பார்வணம்; ஆக்ரஹாயணி;ஶ்ராவணீ; சைத்ரீ;ஆஶ்வயூஜீ.
ஹௌபாசனம் செய்கின்றவர்கள், அனைவரும் செய்ய வேண்டியது இந்த அஷ்டகா புண்ணியகாலம்.




இது நித்தியமாக சொல்லப்பட்டு இருக்கிறது அதாவது கட்டாயம் செய்ய வேண்டும். (பிரத்தியவாயம்) அதாவது செய்யாமல் விட்டால் வரக்கூடிய தான பாவத்திற்கு இந்தப் பெயர்.


ஆனால் இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு செய்யாமல் விட்டால் தோஷங்களும் சொல்லப்பட்டிருக்கிறது.
#நரகம்தான்_கிடைக்கும்_இந்த_அஷ்டகா #புண்ணிய_காலத்தை_செய்யாவிடில் #என்று_தர்ம_சாஸ்திரம்_காண்பிக்கிறது.




இப்படி நிறைய எச்சரிக்கைகள் செய்து அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று காண்பிக்கின்றது.
ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் என்றால் புராணங்கள் இதனுடைய பெருமைகளை நிறைய காண்பிக்கின்றது.




*முக்கியமாக பிரம்ம வைவர்த்த/வாயு புராணங்களும் இதனுடைய பெருமையை காண்பிக்கின்றது.
#ஸ்திரீகளுக்கு_மிகவும்_முக்கியமான #சிராத்தம்_இந்த_அஷ்டகா_ஸ்ராத்தம்.


பொதுவாக தர்ப்பணங்களில் தகப்பனார் வர்க்கம் செய்யும் பொழுதே தாயார் வர்க்கமும் சேர்ந்து வந்துவிடும்.
அதாவது எல்லா இடங்களிலும் பதியோடு சேர்ந்து வந்துவிடும். தகப்பனாருடன் தாயாருக்கும் அதில் பாகம் வந்துவிடும்.




முக்கியமாக சில இடங்களில் தாயாருக்கு தனி வரணம் உண்டு. விருத்தி அதாவது நாந்தி சிராத்தம். இதில் தாயார் வர்க்கத்திற்கு தனியாக பூஜை உண்டு.
வருடாவருடம் தாயாருக்கு செய்யக்கூடிய தான ஸ்ராத்தம். கயாவில் செய்யக்கூடியது ஆன ஸ்ராத்தம். (மாத்துரு ஷோடசி), மற்றும் இந்த அஷ்டகா ஸ்ராத்தம்.




இவைகளில் எல்லாம் தாயார் வர்க்கத்திற்கு தனியாக பூஜை சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அந்த அளவுக்கு முக்கியத்துவம் என்று இந்தப் புராணங்கள் சொல்லும் பொழுது, அதாவது நாம்
வழக்கமாக தர்ப்பணம் செய்யும் பொழுது, ஸ்திரீகள் யார் யாரெல்லாம் உத்தேசித்து நாம் செய்கின்றோமோ, அவர்கள் அத்தனை பேரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.




#மேலும்_ஸ்திரீகளுக்கு_பொதுவாகவே #நிறைய_எதிர்பார்ப்புகள்_இருக்கும்_அது #நிறைவேறவில்லை_என்றால்_அதற்காக #ஒன்றும்_வருத்தப்பட்டு_கொள்ள #மாட்டார்கள்_ஆனால்_அவர்களால்


#எதிர்பார்த்ததை_நாம்_நிறைவேற்ற #முடியவில்லை_என்பது_ஒரு #தாபம்தான்.




*அந்த மாதிரியான தாபங்களை இந்த அஷ்டகா சிராத்தம் மூலம் நிறைவேற்றப்படுகிறது என்பதை ஒரு சின்ன சரித்திரம் மூலம் பிரம்ம வைவர்த்த/வாயு புராணமும் காண்பிக்கிறது.*


#அதாவது_பித்ருக்கள்_மூன்று_விதமான பிரிவுகளாக இருக்கின்றனர். #சோமப் #பிதுர்மான்_பிதரோ_பரிகிஷதஹா, #அக்கினி_ஸ்வாதாஹா என்று மூன்று பிரிவுகள்.
இங்கு பிரிவு என்பது இவர்களுக்கு உள்ளேயே பிரிவு என்று நினைக்கக்கூடாது. ஸ்தானம் என்று பெயர். இதை தனித்தனியாகப் பிரித்துக் காண்பித்து இருக்கின்றனர்.




#அதிலே_இந்த_அக்னி_ஸ்வதாஹா #என்கின்ற_பிதுருக்கள்_யாகம் #செய்தவர்கள்_அக்னிஹோத்திரம் #செய்து_இந்த_பூமியிலே_யாகம_செய்த #ஸ்தானத்தை_அடைந்தவர்கள்.


ஒரு சமயம், இந்த அக்னி ஸ்வதாஹா என்கின்ற பிதுருக்கள் இடத்திலே ஒரு கன்னிகா இருந்தாள். ஒரு குழந்தை பெண். அவளுக்கு பெயர் அச்சோதா என்று பெயர்.
ஒருசமயம் அவள் வெளியிலே சஞ்சாரம் செய்து கொண்டு வரும்பொழுது, அமாவசு என்ற ஒரு பிதுர் வர்க்கத்தை சேர்ந்த ஒரு யுவா அவனைப் பார்த்து இவள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.




*கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனிடத்திலே கேட்கிறாள், அமாவசு என்கின்ற அவன், அவளைப் பற்றிய எந்த விவரமும் கேட்காமல் அவள் கேட்ட
உடனேயே திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் இருவரும் தொப்பென்று இந்த பூலோகத்தில் வந்து விழுந்து விட்டனர்*


ஏனென்றால் அவர்கள் இருவரும் ஞாதிகள் (பந்துக்கள்) பங்காளிகள்.




#ஒரே_கோத்திரத்தில்_ஒருவருக்கொருவர்_திருமணம்_செய்து_கொள்ளக்கூடாது. இவர்களுக்குத் தெரியாமல் அப்படி கேட்டதினால்,
அவர்களுடைய அந்த பிதுர் பாவமானது போய்விட்டது, உடனேயே இங்கே பூமியில் வந்து விழுந்து விட்டார்கள்.




*எப்படி விழுந்தாள் என்றால் அந்த கன்னிகா அச்சோதா என்கின்ற ஒரு நதியாக ஆவிர்பவித்தாள். இந்த அமாவசு என்கின்ற அவர் ஒரு கல்லாக போய்விட்டார் அந்த நதிக்கரையில்.
இப்படி இந்த இரண்டு பேரும் பூமியிலே வந்து விழுந்து துக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நாம் இருவரும் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்து போய்விட்டது.*




*மிகவும் துக்கப்பட்டு அழுதாள். இதைப் பற்றி தெரிந்த உடன் அக்கினி ஸ்வாதாஹா என்கின்ற பித்ருக்கள், எல்லோரையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்தார்கள். இரண்டு பேரையும் பார்த்து வருத்தப்பட்டார்கள் பிதுருக்கள்.*




*அவர்களுக்கு இந்த துக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழியை சொன்னார்கள். என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணங்கள் வரிசையை பார்த்துக்கொண்டு என்ற வகையில் அஷ்டகா சிராத்தம் பெருமைகளை மேலும் தொடர்கிறார்.*


*இந்த அஷ்டகா ஸ்ராத்தம் பெருமைகளை முக்கியமாக ஸ்திரீகளை உத்தேசித்து செய்யக்கூடிய தர்ப்பணம்.*




*இதற்கான ஒரு சரித்திரத்தை பிரம்ம வர்த்த புராணமும் வாயு புராணமும் காண்பிக்கின்றன. அந்த சரித்திரத்தில் அச்சோதா என்கின்ற கன்னிகை, ஒரே கோத்திரத்தில் உள்ள ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள
ஆசைப்பட்ட தோஷத்தினால், இந்த பூமியிலே நதியாக ஆவிர் பவித்து ஓடினாள். அந்த நதிக் கரையினிலே அமாவசு என்கின்ற பிதுர் வர்க்கத்தை சேர்ந்த ஒரு யுவா கல்லாக விழுந்தான்.*




*அவர்கள் இருவரும் துக்கப்பட்டனர். அந்த நதி எப்படி ஓடுகின்றது என்றால் பூமியில் இறங்காமல் ஓடுகிறது. பூமியிலே தண்ணீர் இறங்க வேண்டும் அப்போதுதான் அது
சாரவத்தாக இருக்கும். ஆனால் இந்த நதி கருங்கல்லிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது அந்தக் கருங்கல் யார் என்றால் இந்த அமாவசு என்கின்ற யுவா.*




*ஆகையினாலே அந்த நதியானது யாருக்கும் பயன்படாமல் பூமியில் ஓடிக்கொண்டிருந்தது. தன்னை நினைத்துக் கொண்டு மிகவும் வெட்கப்பட்டாள் அந்த கன்னிகை.
இப்படி ஒரு தப்பை நாம் செய்துவிட்டோமே நம்முடைய ஞாதி களிலேயே ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைத்தது எவ்வளவு பெரிய தவறு.*




*ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு ஞாதிகள் என்று பெயர். இப்படி ஒரு தப்பை நான் செய்து விட்டேனே என்று வருத்தப்பட்டு அழுதாள்.
அவள் தன்னுடைய தகப்பனார் வர்க்கத்தில் உள்ள பிதுருக்களை நினைத்து பிரார்த்தனை செய்தாள்/அழுதாள்.*




*நான் ஒரு வயதின் கோளாறு காரணமாக இந்த தப்பை செய்துவிட்டேன், என்னை நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அழுதாள்.


ஒரு துஷ்டன் இடத்திலே போய் ஒரு ஸ்திரீ மாட்டிக்கொண்டால் எவ்வளவு கஷ்டப்பட்டு (சுதந்திரமாக நம் வீட்டிற்கு போய் வாழ வேண்டும் என்று) அழுவாளோ
அதேபோல் பித்ருக்களை நினைத்து தபஸ் பூராவும் வீணாக போய் விட்டதே என்று அழுதாள்.*




*அப்படி இருக்கும் பொழுது, அங்கே வந்து சேர்ந்தனர் பித்ருக்கள் அனைவரும். அவள் மிகவும் வருத்தப்பட்டு இப்படி நீ செய்யலாமா நாங்களெல்லாம் இருக்கும் போது
எங்களிடம் நீ கேட்க வேண்டாமா, என்று அவளிடம் சமாதானமாக தன்மையாக சொல்லி, வாஞ்சையோடு கூட ஒரு யோசனை சொன்னார்கள்.*


நீ மனதினால், ஒரே கோத்திரத்தில் உள்ளவனை கல்யாணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்று நினைத்ததால், அந்த பாவத்தை நீ அனுபவித்து தான் தீர வேண்டும்.
அதுவரையிலும் இந்த பூமியிலிருந்து நீ வர முடியாது.




இந்த பூமியில் இருந்து தான் அந்த பாவத்தை நீ அனுபவித்து ஆகவேண்டும்.

அதற்குப்பிறகு எங்களால் உனக்கு நல்லது செய்ய முடியும் என்று சொல்லி,
அவர்கள் சொல்லும் பொழுது நீ இந்த பாவத்தை சீக்கிரமாக அனுபவித்து முடித்து, இந்த இருபத்தி எட்டாவது மன் வந்திரமான வைவஸ்த மனு ஆரம்பிப்பதற்கு முன்னால்,
ஒரு நல்ல குலத்திலே நீ ஆவிர்பவிப்பாய். ஒரு உத்தமமான புத்திரனை நீ அடைவாய்.

நல்ல இடத்திலே உனக்கு திருமணமாகி, நல்ல புத்திரனே நீ அடைவாய் அவனை எல்லோரும்
பாராட்டும் விதமாக, ஸ்திரீகளுக்கு ஜென்மம் எடுத்ததற்கான பயன் எப்பொழுது, ஒரு புத்திரனை அவள் பெற்றெடுத்த உடன் ஜென்மம் பயனுள்ளதாக அமைகிறது.




#புத்திரன்_என்று_ஒருவன்_பிறக்க #வேண்டும்_ஸ்திரீகளுக்கு_அதன்பிறகு #அவர்களுக்கு_உத்தமமான_லோகம் #கிடைக்கும்_காத்துக்கொண்டிருக்கிறது.


இதைத்தான் நாம் இராமாயணத்தில் பார்த்தோமேயானால் இராமன் பிறந்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள் என்று சொல்கின்ற இடத்திலே,
தசரதர் மற்றும் அந்த ஊர் மக்கள் மிகவும் பேரானந்த பட்டார்கள் என்று சொல்வதற்கு முன்னால்,
கௌசல்யை மிகவும் சந்தோஷப்பட்டாள் பிரகாசமாக இருந்தாள் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடுகிறார் முதலில்.*
 
ஏனென்றால் புத்திரன் என்று ஒருவன் பிறந்த விட்டவுடன் நம்முடைய ஜென்மம் பயனுள்ளதாக ஆகிவிட்டது என்று, இனி நாம் ஜெபமும் தபசு பூஜைகள் ஹோமங்கள் செய்து அடுத்த ஜென்மம் நன்றாக கிடைக்க வேண்டுமே,
இந்தப் பிறவியில் எல்லா சுகங்களையும் அடைய வேண்டுமே என்று, அதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டியது இல்லை, புத்திரன் என்ற பிறந்து ஆகிவிட்டது,
இனி நமக்கு சத்கதி தான் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, கௌசல்யா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் என்று வால்மீகி தனியாகவே இராமாயணத்தில் காண்பிக்கின்றார்.*




*காரணம் ஸ்திரீகளுக்கு புத்திரன் என்ற பிறந்தவுடன் பிறவிப்பயன் ஆனது கிடைத்து விடுகின்றது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பித்ருக்களும் இந்த கன்னிகைக்கு அதையே சொல்கின்றனர்.*




#உனக்கு_நல்ல_இடத்தில்_திருமணம் #ஆகி_ஒரு_நல்ல_புத்திரன்_உனக்கு #கிடைப்பான்_அவன்_பிறந்த #மாத்திரத்திலேயே_உனக்கு_நல்லr_கதி #கிடைத்து_ஒரு_ஸ்தானத்தை_அடைவாய் #என்று_பிதுருக்கள்_அனுகிரகம் #செய்கின்றனர்.




*அந்த உத்தமமான புத்திரனும் அனைவராலும் பாராட்டப் பெறுவார், அவன் லோகத்திற்கு பெரிய உபகாரங்களை செய்யக் கூடியவனாக இருப்பான், அனைவரும் தினமும் நினைத்துப் பார்க்கக்கூடிய புத்திரனாக அவன் இருப்பான்.*




*அப்படி ஒரு புத்திரனை நீ அடைந்த மாத்திரத்திலேயே இந்த பாவமானது சுத்தமாக நீங்கிப் போய்விடும்.
திரும்பவும் இது போல் கெட்ட எண்ணங்கள் உன்னுடைய மனதிலே உருவாகாது, இப்படியாக பிதுருக்கள் அந்த கன்னி கைக்கு அனுகிரகம் செய்கின்றனர்.*




*உன்னையும் உன்னை மாதிரி பாலிய வயதில் நினைத்துப் பார்க்கக் கூடாததை நினைத்து பார்த்ததினால் வந்த பாவமும்,
பாவத்தினால் ஏற்பட்ட தோஷங்களினுடைய ஸ்திரீகளும் கல்யாணம் செய்துகொண்டு எந்த சுகத்தையும் அடைய முடியாமல் காலம் ஆகிவிட்ட ஸ்திரீகளுக்கும்,
கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாணம் செய்யாமலேயே காலமான ஸ்திரீகளும்,
கர்ப்பத்தில் இருக்கின்ற போதே காலமான ஸ்திரீகளுக்கும் இவர்கள் அத்தனை பேருக்கும் உத்தேசித்து அஷ்டகா என்கின்ற ஒரு சிராத்தத்தை அனைவரும் செய்வார்கள்,


அதன்மூலம் இதுபோல் உள்ள ஸ்திரீகள் அனைவருக்கும் பாகங்கள் கிடைக்கும் அத்தனை ஸ்திரீகளின் உடைய சாபங்களும் பாவங்களும் நிவர்த்தியாகும்,
அந்த அஷ்டகா சிராத்தத்தை செய்கின்றவர்களுக்கு தீர்க்கமான ஆயுள், ஆரோக்கியத்தை பூரணமாக அடைவார்கள்
என்று பிதுர்க்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா சிராத்தம் எப்போது நடக்கும் என்றால் உத்தராயணம் பிறந்து இதை அனைவரும்
செய்வார்கள் அதன்மூலம் ஸ்திரீகள் அனைவருக்கும் பூரணமான திருப்தி கிடைக்கும் என்று சொல்லி அனுகிரகம் செய்தார்கள்.


*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்மங்களின் வரிசைகளை மேலும் விளக்குகிறார்.*


*அதில் அஷ்டகா புண்ணிய காலத்தின் பெருமைகளை ஒரு சரித்திரத்திலிருந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.*




*அப்படி பித்ருக்களின் உடைய அனுக்கிரகத்தினால் நதியாக ஓடக்கூடிய அச்சோதா என்கின்ற கன்னிகை,
அந்தப் பாவத்தை அனுபவித்து முடித்த பிறகு, அந்த கன்னிகை தான் சத்திய வதியாக ஆவிர்பவிக்கிறாள் பூலோகத்தில் ஒரு மீனவக் குடும்பத்தில்.
அந்த சத்தியவதிக்கு ஒரு புத்திரன் பிறக்கிறான் அவர்கள்தான் #வியாசர் என்று நாம் சொல்கிறோம்.


*வியாசாச்சார்யாள் விஷ்ணுவினுடைய அவதாரமாகவே பிறந்திருக்கிறார். காரணம் அந்த பிதுருக்களின் சினேகத்தின் மூலம்
அவர்களின் பரிபூரண அனுகிரகத்துடன் பிறந்ததன் மூலம் மகாவிஷ்ணுவே வியாசர் ஆக வந்து பிறந்தார் இந்த பூலோகத்தில்.*




ஆகையினாலே தான் #வ்யாஸாய #விஷ்ணு_ரூபாய_வ்யாஸ_ரூபாய #விஷ்ணவே_என்று_சொல்கிறோம்.
விஷ்ணுவும் வியாசரும் வேறு அல்ல இருவரும் ஒன்றே தான் அவர் தான் பகவான் நாராயணன் ஆக ஆவிர்பவித்தார் என்று பார்க்கிறோம்.




*பித்ருக்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்ய வேண்டிய முறைகளையும் அவர்களே காண்பிக்கின்றனர்.
இப்படி சொல்லிக் கொண்டு வரும்பொழுது, ஸ்ராத்தங்கள் மூன்று விதமாக இருக்கின்றன. நித்தியமாக/நைமித்தியமாக/காம்மியமாக செய்யக்கூடியது.*




*நித்தியமாக செய்யக்கூடியது நாம் பார்த்து கொண்டு வரக்கூடியது ஆன ஷண்ணவதி தர்ப்பணங்கள், இவைகள் நித்தியம் என்று பெயர்.*


*நைமித்திகம் என்றால் ஒரு கிரகண புண்ணிய காலத்தில், செய்யக்கூடிய தான தர்ப்பணம். சிராத்தத்தை முடித்த பிறகு ஸ்ராத்தாங்கமாக
செய்யக்கூடிய தர்ப்பணம். ஒரு தீட்டு வந்துவிட்டால் அது போகக்கூடியதற்கான தர்ப்பணம். இவைகளெல்லாம் இதில் வரும்.*




*காமியம் என்று ஒன்று இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்யக்கூடியதான சிராத்தாங்க தர்ப்பணம்.
காம்ய ஸ்ரார்த்தம் என்று சொல்லி யிருக்கி றார்கள்*


*ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்ய வேண்டுமானால் அதற்கான சிராத்தத்தை செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பித்துள்ளது.*


*அந்த ஸ்ராத்தத்தை முடித்த பிறகு செய்யக்கூடிய தான தர்ப்பணம் மற்றும் ஒரு சில புண்ணிய காலங்களில் செய்யக்கூடிய தர்ப்பணம். இவைகளுக்கு காமியம் என்று பெயர்.*


*இப்படி மூன்றாகப் பிரித்து அதில் இந்த அட்டகா புண்ணிய காலத்தில் செய்யக்கூடிய தர்ப்பணம் நித்தியம் என்று சொல்லி,
இந்த நான்கு மாதத்தில் செய்யக்கூடியதான இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலம் நான்கு விதமாக ஸ்திரீகளுக்கு பலனை/திருப்தியை கொடுக்கிறது.




*முதலில் செய்யக்கூடியது ஐன்திரி மார்கழி மாதம் வரக்கூடியதான புண்ணியகாலத்தின் பெயர். அதாவது தர்ம சாஸ்திரம் இதை நமக்கு இரண்டு விதமாக காண்பிக்கின்றது.*


*மூன்று நாட்கள் செய்யக்கூடியது ஆன சப்தமி அஷ்டமி நவமி. இதிலே சப்தமி அன்று முதலில் செய்யக்கூடியதற்கு, ஐன்திரி, அஷ்டமி அன்று செய்யக்கூடியதற்கு பிராஜாபத்தியம் என்று பெயர். மூன்றாவதாக செய்யக்கூடிய அதற்கு வைஸ்யதேவிகி என்று பெயர்.*




*இப்படி இதைப் பிரித்து இருக்கிறார்கள் இந்த நான்கு மாதத்திலேயே, செய்யக்கூடிய தான தர்ப்பணங்களை நான்காகப் பிரித்து இருக்கிறார்கள்.*


அதில் முதலில் செய்யக்கூடியதான தர்ப்பணத்தின் மூலம் நம்முடைய வம்சத்திலே யாகங்கள் செய்து இருந்து வந்த குடும்பத்திலுள்ள ஸ்திரீகள் இறந்தது அவர்களுக்கு ரொம்ப திருப்தியை கொடுக்கின்றது.






இரண்டாவதாக செய்யக்கூடியது பிராஜாபத்தியம் விவாகம் செய்துகொண்டு நிறைய சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, வசதிகள் இருந்தும் ஆனால் அனுபவிக்க முடியாமல்,
புத்திரன் மூலமாக சம்ஸ்காரம் செய்யப்படாமல், எதிர்பார்த்த பலனை பெற முடியாமல் உள்ள ஸ்திரீகளுக்கு திருப்தியை கொடுக்கின்றது.


*மூன்றாவது கர்ப்பத்திலேயே இந்த வம்சத்தில் வந்த பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிறக்க முடியாமல், கருக்கலைப்பு ஏற்பட்டதன் மூலம் பிறந்த ஸ்திரீகள்,
பிறந்து கன்னிகா பருவத்தில், இறந்த ஸ்த்ரீகள், கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாண வயது வரை வந்து கல்யாணம் செய்து கொள்ளாமல் இறந்த ஸ்திரீகள், இவர்களுக்கு போய் சேருகின்றது.*




*நான்காவதாக செய்யக்கூடியதான இந்த அஷ்டகா சிராத்தத்தில், குறைபட்ட ஸ்திரீகள், சுமங்கலிகளாக இருந்து,
குறைபட்டு போன ஸ்திரீகள், நம்மால் பாகம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு இறந்த ஸ்திரீகள், அதாவது தாய் மாமா இருக்கின்றார்
ஆனால் அவருக்கு குழந்தைகள் இல்லை, அப்போது அவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்,
அதே போல் நம்மை சுற்றியுள்ள பந்துகள், நாம் செய்ய வைக்க வேண்டும் அல்லது செய்யணும், என்று ஆசைப்பட்டு இருந்து செய்ய முடியாமல் போனால்,
அல்லது அவர்கள் எதிர்பார்த்தும் நடக்க முடியாமல் போன ஸ்திரீகள், இவர்களுக்கு திருப்தியை கொடுக்கின்றது,
இந்த அளவுக்கு இந்த புராணம் முக்கியத்துவத்தை காண்பித்து, நித்தியமாக சொல்லி, கட்டாயம் அஷ்டகா புண்ணிய காலத்தில் நாம் செய்ய வேண்டும்.*




இதில் கட்டாயம் இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தில், #நம்மிடம் #எவ்வளவு_செல்வங்கள்_இருக்கிறதோ
அவ்வளவையும் செலவு பண்ணி இதை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.




*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை செய்யவில்லை என்றால் இதே போல் நமக்கும் தூக்கங்கள் ஏற்படும் அதற்கு நாம் வாய்ப்பு கொடுக்க கூடாது.*


*இதை நாம் செய்வதினால் நமக்கும் நம்மை சுற்றி உள்ள சந்ததியினருக்கும் நமக்கு அடுத்த தலைமுறைகளும் சௌக்கியமே கிடைக்கும் . அதனாலே இதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.*




*எப்படி ஒரு பசுமாடு, மடி நிறைய பாலை வைத்துக்கொண்டு நீ கறந்து எடுத்துக்கோ என்று நம்மிடத்தில், காத்துக்கொண்டு இருக்குமோ,
அதுபோல பித்ருக்கள், இந்த அஷ்டகா புண்ணிய கால தர்ப்பணங்களை எதிர்பார்த்து, நீங்கள் எல்லோரும் செய்து உங்களுடைய துக்கங்களை நீங்கள் போக்கிக் கொள்ள வேண்டும்,
நான் போக்குவதற்கு தயாராக இருக்கிறேன், அப்படி பித்ருக்கள் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.*




*பசுமாட்டை கறக்காமல் விட்டால் நஷ்டம் நமக்குத்தான். அதுபோல நம்முடைய பிதுருக்கள் இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆகையால் நாம் அதை எதிர்பார்த்து அவர்களுக்கு செய்ய வேண்டியதான இந்த புண்ணிய காலத்தை செய்து, அவர்களுடைய அனுக்கிரகத்தை நாம்
பூரணமாக அடைய வேண்டும் என்று,இந்த சரித்திரம் நமக்கு காண்பிக்கின்றது அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.*


*இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தில் அஷ்டகா சிராத்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு இந்த நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்று விட்டு போகும்.*




*அப்படி விட்டு போனால் நாற்பது சம்ஸ்காரங்கள் இதுவும் ஒன்று, நமக்கு தோஷங்கள் ஏற்படும். நாம் மிகவும் எதிர்பார்த்து இருந்த ஸ்திரீகளியினுடைய உடைய சாபங்களுக்கு ஆளாக வேண்டி வரும்.*


*மேலும் நமக்கு ஸ்கந்த புராணம் சொல்லும் பொழுது யார் ஒருவன் இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்யவில்லையோ அவன் கயை சென்று எட்டு விதமான ஸ்ராத்தங்களை அவன் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.*




*இப்பொழுது கயா போனால் கூட அங்கு செய்து வைப்பார்கள். அஷ்டகயா சிரார்த்தம் என்று செய்து வைக்கிறார்கள்.
இந்த எட்டு சிராத்தங்களை செய்தால்தான் அஷ்டகா செய்யாததினால் வந்த தோஷங்கள் போக்கும் இன்று காசிகண்டம் நமக்கு காண்பிக்கிறது.*




*இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.

அன்வஷ்டகையை மாசி சிராத்தம் மாதிரி செய்ய வேண்டும்.





சிராத்தங்கள்:--மாசி சிராத்தம்:--மாசி சிராத்தம் நித்ய கர்மாகளில் இதுவும் ஒன்று. க்ருஷ்ண பக்ஷத்தில் ஏதேனும் ஒரு திதியில் தொடங்கி , ஒவ்வொரு மாதமும் அதே திதியில் செய்ய வேண்டும். இது, பிதா , பிதாமஹர்., ப்ரபிதாமஹர் என்ற மூவரை உத்தேசித்து செய்ய படுகிறது.


ஆனால் பித்ருக்கள் பூஜிக்கபடும் இடத்தில் மாதா மஹாதிகளும் பூஜிக்க பட வேன்டும் என விதித்திருப்பதால் , புராணம், ஸ்மிருதியின் படி தாயின் தந்தை, பாட்டனார், அவர் தகப்பனார் ஆகியோரையும் சேர்த்து இரு


வம்சத்திற்கும் , ஹோமம், ப்ராஹ்மண போஜனம், பிண்ட ப்ரதானம் ஆகியவற்றுடன் செய்ய படுகிறது. இன்று செய்யபடும் சிராத்தங்கள் அனைத்திற்கும் இதுவே முன் மாதிரியாகும். இந்த காலத்தில் இது முடியாது.


இதை ஒற்றி வருவதே தர்ச சிராத்தமாகும். இதன் விக்ருதிகளே (96) ஷண்ணவதி சிராத்தங்கள். .ஒரு வருடத்தில் செய்ய வேன்டுவன .இவற்றில் ஒவ்வொன்றிர்க்கும் சிற்சில மாறுதல் உண்டு.


தாய் தந்தையருக்கு செய்யப்படும் ப்ரத்யாப்தீக சிராத்தம்,, கிரஹண, மற்றும் புண்ய கால தர்பணங்கள். முதலியன மாசி சிராத்தத்தை அடிபடையாக கொண்டு செய்ய படுபவை. ஆனால் இவை ஸப்த பாக யக்ஞங்களில் சேராதவை.


இவை ஜீவத்பித்ருகனுக்கு (( தந்தை உயிருடன் இருக்கும்போது)) கிடையாது. ஆனால் மாசி சிராத்தம் தந்தை உயிருடன் இருக்கும் போதும் ஹோமம் வரை செய்ய வேண்டும்.என்பது ரிஷியின் அப்பிப்ராயம். தந்தைக்கு யார் தேவதைகளோ அவர்களே இவனுக்குமாவார். .


ஒளபாசன அக்னியில் பிண்டபித்ரு யக்ஞம் செய்ய வேண்டும்.. அஷ்டகா சிராத்தத்தை ஒரு போதும் விடக்கூடாது. தை அமாவாசையை அடுத்து வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஏகாஷ்டகை எனப்படும்.
அந்த தேவதையை குறித்து ஹோமமும் பித்ரு, பிதாமஹர், ப்ரபிதாமஹர். மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, விஸ்வேதேவர் இருவர் ஆக எட்டு ப்ராஹ்மனர்களை வரித்து செய்வதால் அஷ்டகா என்று பெயர்.


அஷ்டகா தேவதை பித்ருக்களுக்கு நாம் அளிக்கும் ஹவிஸை அமோகமாக அளவற்றதாக ஆக்கி காமதேனு பால் சுரப்பது போல் சுரப்பதாக கூற பட்டுள்ளது. ஸம்வத்ஸர தேவதையின் பத்நியாகவும் ஏகாஷ்டகை கூறப்பட்டுள்ளது.


மனிதர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி அறிவை தரும் உஷஹ் கால தேவதையும் ஏகாஷ்டகையே. இவளே யாகங்களை செய்விப்பவள் என்றெல்லாம் மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.


உரல் அம்மி முதலியவையும் இந்த அஷ்டகா சிராத்தம் செய்வதில் உத்ஸாகத்துடன் ஈடுபடுவதாக வேதம் கூறுகிறது. இந்த காலத்தில் உரல் அம்மி கிடையாது.இதை செய்பவனுக்கு , ஸந்ததி, சாரீர பல விருத்தி, மற்றும் வைதீக கர்மாக்களில் சிரத்தை செய்யக்கூடிய பாக்யம் ஏற்படுகிறது. என்று கூறுகிறது.


இதை கலி யுகத்தில் ஸ்ம்ருதியில் கூறப்பட்டபடி செய்ய முடியாது.


எனவே ரிஷிகள் தத்யஞ்சலி (தயிர்) ஹோமம் எனும் அனுகல்பத்தை விதிதுள்ளனர்.
இம்முறைகளில் அவதான முறைப்படி கையில் தயிரை எடுத்துக்கொண்டு ஒளபாஸனாக்னியில் ஏகாஷ்டகையை குறித்து ஹோமம் செய்வதாகும்.


( பிறகு சிராத்த முறைப்படி ப்ராஹ்மண போஜனம்) மறுநாள் அன்வஷ்டகை.
அன்வஷ்டகையை தர்ச சிராத்தம் போன்றே வர்கத்வய பித்ருக்களை உத்தேசித்து செய்யபடுவது ஆகும். விஸ்வேதேவர், பித்ரு , மாத்ரு, மாதாமஹர், விஷ்ணு என ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து சிராத்தம் செய்வது..


05-03-2021; 06-03-2021;07-03-2021 இந்த நாட்களில் அஷ்டகா சிராத்தமோ, தர்பணமோ ஓய்வு பெற்றவர்கள் செய்யலாமே.



நமது தர்ம சாஸ்த்திரம் புத்தகத்திலும் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. புரட்டாசி மாதத்திலும், மாசி மாதத்திலும் பித்ருக்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். என்று அறிவிக்கிறது. தை மாதத்திற்கு 6ம் மாதம் ஆடி மாதம்; சித்ரைக்கு 6ம் மாதம் ஐப்பசி ( துலா மாதம்.) புரட்டாசிக்கு 6ம் மாதம் மாசி மாதம் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
 
ஏனென்றால் புத்திரன் என்று ஒருவன் பிறந்த விட்டவுடன் நம்முடைய ஜென்மம் பயனுள்ளதாக ஆகிவிட்டது என்று, இனி நாம் ஜெபமும் தபசு பூஜைகள் ஹோமங்கள் செய்து அடுத்த ஜென்மம் நன்றாக கிடைக்க வேண்டுமே,
இந்தப் பிறவியில் எல்லா சுகங்களையும் அடைய வேண்டுமே என்று, அதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டியது இல்லை, புத்திரன் என்ற பிறந்து ஆகிவிட்டது,
இனி நமக்கு சத்கதி தான் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, கௌசல்யா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் என்று வால்மீகி தனியாகவே இராமாயணத்தில் காண்பிக்கின்றார்.*




*காரணம் ஸ்திரீகளுக்கு புத்திரன் என்ற பிறந்தவுடன் பிறவிப்பயன் ஆனது கிடைத்து விடுகின்றது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பித்ருக்களும் இந்த கன்னிகைக்கு அதையே சொல்கின்றனர்.*




#உனக்கு_நல்ல_இடத்தில்_திருமணம் #ஆகி_ஒரு_நல்ல_புத்திரன்_உனக்கு #கிடைப்பான்_அவன்_பிறந்த #மாத்திரத்திலேயே_உனக்கு_நல்லr_கதி #கிடைத்து_ஒரு_ஸ்தானத்தை_அடைவாய் #என்று_பிதுருக்கள்_அனுகிரகம் #செய்கின்றனர்.




*அந்த உத்தமமான புத்திரனும் அனைவராலும் பாராட்டப் பெறுவார், அவன் லோகத்திற்கு பெரிய உபகாரங்களை செய்யக் கூடியவனாக இருப்பான், அனைவரும் தினமும் நினைத்துப் பார்க்கக்கூடிய புத்திரனாக அவன் இருப்பான்.*




*அப்படி ஒரு புத்திரனை நீ அடைந்த மாத்திரத்திலேயே இந்த பாவமானது சுத்தமாக நீங்கிப் போய்விடும்.
திரும்பவும் இது போல் கெட்ட எண்ணங்கள் உன்னுடைய மனதிலே உருவாகாது, இப்படியாக பிதுருக்கள் அந்த கன்னி கைக்கு அனுகிரகம் செய்கின்றனர்.*




*உன்னையும் உன்னை மாதிரி பாலிய வயதில் நினைத்துப் பார்க்கக் கூடாததை நினைத்து பார்த்ததினால் வந்த பாவமும்,
பாவத்தினால் ஏற்பட்ட தோஷங்களினுடைய ஸ்திரீகளும் கல்யாணம் செய்துகொண்டு எந்த சுகத்தையும் அடைய முடியாமல் காலம் ஆகிவிட்ட ஸ்திரீகளுக்கும்,
கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாணம் செய்யாமலேயே காலமான ஸ்திரீகளும்,
கர்ப்பத்தில் இருக்கின்ற போதே காலமான ஸ்திரீகளுக்கும் இவர்கள் அத்தனை பேருக்கும் உத்தேசித்து அஷ்டகா என்கின்ற ஒரு சிராத்தத்தை அனைவரும் செய்வார்கள்,


அதன்மூலம் இதுபோல் உள்ள ஸ்திரீகள் அனைவருக்கும் பாகங்கள் கிடைக்கும் அத்தனை ஸ்திரீகளின் உடைய சாபங்களும் பாவங்களும் நிவர்த்தியாகும்,
அந்த அஷ்டகா சிராத்தத்தை செய்கின்றவர்களுக்கு தீர்க்கமான ஆயுள், ஆரோக்கியத்தை பூரணமாக அடைவார்கள்
என்று பிதுர்க்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா சிராத்தம் எப்போது நடக்கும் என்றால் உத்தராயணம் பிறந்து இதை அனைவரும்
செய்வார்கள் அதன்மூலம் ஸ்திரீகள் அனைவருக்கும் பூரணமான திருப்தி கிடைக்கும் என்று சொல்லி அனுகிரகம் செய்தார்கள்.


*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்மங்களின் வரிசைகளை மேலும் விளக்குகிறார்.*


*அதில் அஷ்டகா புண்ணிய காலத்தின் பெருமைகளை ஒரு சரித்திரத்திலிருந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.*




*அப்படி பித்ருக்களின் உடைய அனுக்கிரகத்தினால் நதியாக ஓடக்கூடிய அச்சோதா என்கின்ற கன்னிகை,
அந்தப் பாவத்தை அனுபவித்து முடித்த பிறகு, அந்த கன்னிகை தான் சத்திய வதியாக ஆவிர்பவிக்கிறாள் பூலோகத்தில் ஒரு மீனவக் குடும்பத்தில்.
அந்த சத்தியவதிக்கு ஒரு புத்திரன் பிறக்கிறான் அவர்கள்தான் #வியாசர் என்று நாம் சொல்கிறோம்.


*வியாசாச்சார்யாள் விஷ்ணுவினுடைய அவதாரமாகவே பிறந்திருக்கிறார். காரணம் அந்த பிதுருக்களின் சினேகத்தின் மூலம்
அவர்களின் பரிபூரண அனுகிரகத்துடன் பிறந்ததன் மூலம் மகாவிஷ்ணுவே வியாசர் ஆக வந்து பிறந்தார் இந்த பூலோகத்தில்.*




ஆகையினாலே தான் #வ்யாஸாய #விஷ்ணு_ரூபாய_வ்யாஸ_ரூபாய #விஷ்ணவே_என்று_சொல்கிறோம்.
விஷ்ணுவும் வியாசரும் வேறு அல்ல இருவரும் ஒன்றே தான் அவர் தான் பகவான் நாராயணன் ஆக ஆவிர்பவித்தார் என்று பார்க்கிறோம்.




*பித்ருக்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்ய வேண்டிய முறைகளையும் அவர்களே காண்பிக்கின்றனர்.
இப்படி சொல்லிக் கொண்டு வரும்பொழுது, ஸ்ராத்தங்கள் மூன்று விதமாக இருக்கின்றன. நித்தியமாக/நைமித்தியமாக/காம்மியமாக செய்யக்கூடியது.*




*நித்தியமாக செய்யக்கூடியது நாம் பார்த்து கொண்டு வரக்கூடியது ஆன ஷண்ணவதி தர்ப்பணங்கள், இவைகள் நித்தியம் என்று பெயர்.*


*நைமித்திகம் என்றால் ஒரு கிரகண புண்ணிய காலத்தில், செய்யக்கூடிய தான தர்ப்பணம். சிராத்தத்தை முடித்த பிறகு ஸ்ராத்தாங்கமாக
செய்யக்கூடிய தர்ப்பணம். ஒரு தீட்டு வந்துவிட்டால் அது போகக்கூடியதற்கான தர்ப்பணம். இவைகளெல்லாம் இதில் வரும்.*




*காமியம் என்று ஒன்று இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்யக்கூடியதான சிராத்தாங்க தர்ப்பணம்.
காம்ய ஸ்ரார்த்தம் என்று சொல்லி யிருக்கி றார்கள்*


*ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்ய வேண்டுமானால் அதற்கான சிராத்தத்தை செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பித்துள்ளது.*


*அந்த ஸ்ராத்தத்தை முடித்த பிறகு செய்யக்கூடிய தான தர்ப்பணம் மற்றும் ஒரு சில புண்ணிய காலங்களில் செய்யக்கூடிய தர்ப்பணம். இவைகளுக்கு காமியம் என்று பெயர்.*


*இப்படி மூன்றாகப் பிரித்து அதில் இந்த அட்டகா புண்ணிய காலத்தில் செய்யக்கூடிய தர்ப்பணம் நித்தியம் என்று சொல்லி,
இந்த நான்கு மாதத்தில் செய்யக்கூடியதான இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலம் நான்கு விதமாக ஸ்திரீகளுக்கு பலனை/திருப்தியை கொடுக்கிறது.




*முதலில் செய்யக்கூடியது ஐன்திரி மார்கழி மாதம் வரக்கூடியதான புண்ணியகாலத்தின் பெயர். அதாவது தர்ம சாஸ்திரம் இதை நமக்கு இரண்டு விதமாக காண்பிக்கின்றது.*


*மூன்று நாட்கள் செய்யக்கூடியது ஆன சப்தமி அஷ்டமி நவமி. இதிலே சப்தமி அன்று முதலில் செய்யக்கூடியதற்கு, ஐன்திரி, அஷ்டமி அன்று செய்யக்கூடியதற்கு பிராஜாபத்தியம் என்று பெயர். மூன்றாவதாக செய்யக்கூடிய அதற்கு வைஸ்யதேவிகி என்று பெயர்.*




*இப்படி இதைப் பிரித்து இருக்கிறார்கள் இந்த நான்கு மாதத்திலேயே, செய்யக்கூடிய தான தர்ப்பணங்களை நான்காகப் பிரித்து இருக்கிறார்கள்.*


அதில் முதலில் செய்யக்கூடியதான தர்ப்பணத்தின் மூலம் நம்முடைய வம்சத்திலே யாகங்கள் செய்து இருந்து வந்த குடும்பத்திலுள்ள ஸ்திரீகள் இறந்தது அவர்களுக்கு ரொம்ப திருப்தியை கொடுக்கின்றது.






இரண்டாவதாக செய்யக்கூடியது பிராஜாபத்தியம் விவாகம் செய்துகொண்டு நிறைய சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, வசதிகள் இருந்தும் ஆனால் அனுபவிக்க முடியாமல்,
புத்திரன் மூலமாக சம்ஸ்காரம் செய்யப்படாமல், எதிர்பார்த்த பலனை பெற முடியாமல் உள்ள ஸ்திரீகளுக்கு திருப்தியை கொடுக்கின்றது.


*மூன்றாவது கர்ப்பத்திலேயே இந்த வம்சத்தில் வந்த பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிறக்க முடியாமல், கருக்கலைப்பு ஏற்பட்டதன் மூலம் பிறந்த ஸ்திரீகள்,
பிறந்து கன்னிகா பருவத்தில், இறந்த ஸ்த்ரீகள், கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாண வயது வரை வந்து கல்யாணம் செய்து கொள்ளாமல் இறந்த ஸ்திரீகள், இவர்களுக்கு போய் சேருகின்றது.*




*நான்காவதாக செய்யக்கூடியதான இந்த அஷ்டகா சிராத்தத்தில், குறைபட்ட ஸ்திரீகள், சுமங்கலிகளாக இருந்து,
குறைபட்டு போன ஸ்திரீகள், நம்மால் பாகம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு இறந்த ஸ்திரீகள், அதாவது தாய் மாமா இருக்கின்றார்
ஆனால் அவருக்கு குழந்தைகள் இல்லை, அப்போது அவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்,
அதே போல் நம்மை சுற்றியுள்ள பந்துகள், நாம் செய்ய வைக்க வேண்டும் அல்லது செய்யணும், என்று ஆசைப்பட்டு இருந்து செய்ய முடியாமல் போனால்,
அல்லது அவர்கள் எதிர்பார்த்தும் நடக்க முடியாமல் போன ஸ்திரீகள், இவர்களுக்கு திருப்தியை கொடுக்கின்றது,
இந்த அளவுக்கு இந்த புராணம் முக்கியத்துவத்தை காண்பித்து, நித்தியமாக சொல்லி, கட்டாயம் அஷ்டகா புண்ணிய காலத்தில் நாம் செய்ய வேண்டும்.*




இதில் கட்டாயம் இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தில், #நம்மிடம் #எவ்வளவு_செல்வங்கள்_இருக்கிறதோ
அவ்வளவையும் செலவு பண்ணி இதை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.




*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை செய்யவில்லை என்றால் இதே போல் நமக்கும் தூக்கங்கள் ஏற்படும் அதற்கு நாம் வாய்ப்பு கொடுக்க கூடாது.*


*இதை நாம் செய்வதினால் நமக்கும் நம்மை சுற்றி உள்ள சந்ததியினருக்கும் நமக்கு அடுத்த தலைமுறைகளும் சௌக்கியமே கிடைக்கும் . அதனாலே இதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.*




*எப்படி ஒரு பசுமாடு, மடி நிறைய பாலை வைத்துக்கொண்டு நீ கறந்து எடுத்துக்கோ என்று நம்மிடத்தில், காத்துக்கொண்டு இருக்குமோ,
அதுபோல பித்ருக்கள், இந்த அஷ்டகா புண்ணிய கால தர்ப்பணங்களை எதிர்பார்த்து, நீங்கள் எல்லோரும் செய்து உங்களுடைய துக்கங்களை நீங்கள் போக்கிக் கொள்ள வேண்டும்,
நான் போக்குவதற்கு தயாராக இருக்கிறேன், அப்படி பித்ருக்கள் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.*




*பசுமாட்டை கறக்காமல் விட்டால் நஷ்டம் நமக்குத்தான். அதுபோல நம்முடைய பிதுருக்கள் இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆகையால் நாம் அதை எதிர்பார்த்து அவர்களுக்கு செய்ய வேண்டியதான இந்த புண்ணிய காலத்தை செய்து, அவர்களுடைய அனுக்கிரகத்தை நாம்
பூரணமாக அடைய வேண்டும் என்று,இந்த சரித்திரம் நமக்கு காண்பிக்கின்றது அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.*


*இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தில் அஷ்டகா சிராத்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு இந்த நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்று விட்டு போகும்.*




*அப்படி விட்டு போனால் நாற்பது சம்ஸ்காரங்கள் இதுவும் ஒன்று, நமக்கு தோஷங்கள் ஏற்படும். நாம் மிகவும் எதிர்பார்த்து இருந்த ஸ்திரீகளியினுடைய உடைய சாபங்களுக்கு ஆளாக வேண்டி வரும்.*


*மேலும் நமக்கு ஸ்கந்த புராணம் சொல்லும் பொழுது யார் ஒருவன் இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்யவில்லையோ அவன் கயை சென்று எட்டு விதமான ஸ்ராத்தங்களை அவன் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.*




*இப்பொழுது கயா போனால் கூட அங்கு செய்து வைப்பார்கள். அஷ்டகயா சிரார்த்தம் என்று செய்து வைக்கிறார்கள்.
இந்த எட்டு சிராத்தங்களை செய்தால்தான் அஷ்டகா செய்யாததினால் வந்த தோஷங்கள் போக்கும் இன்று காசிகண்டம் நமக்கு காண்பிக்கிறது.*




*இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.

அன்வஷ்டகையை மாசி சிராத்தம் மாதிரி செய்ய வேண்டும்.





சிராத்தங்கள்:--மாசி சிராத்தம்:--மாசி சிராத்தம் நித்ய கர்மாகளில் இதுவும் ஒன்று. க்ருஷ்ண பக்ஷத்தில் ஏதேனும் ஒரு திதியில் தொடங்கி , ஒவ்வொரு மாதமும் அதே திதியில் செய்ய வேண்டும். இது, பிதா , பிதாமஹர்., ப்ரபிதாமஹர் என்ற மூவரை உத்தேசித்து செய்ய படுகிறது.


ஆனால் பித்ருக்கள் பூஜிக்கபடும் இடத்தில் மாதா மஹாதிகளும் பூஜிக்க பட வேன்டும் என விதித்திருப்பதால் , புராணம், ஸ்மிருதியின் படி தாயின் தந்தை, பாட்டனார், அவர் தகப்பனார் ஆகியோரையும் சேர்த்து இரு


வம்சத்திற்கும் , ஹோமம், ப்ராஹ்மண போஜனம், பிண்ட ப்ரதானம் ஆகியவற்றுடன் செய்ய படுகிறது. இன்று செய்யபடும் சிராத்தங்கள் அனைத்திற்கும் இதுவே முன் மாதிரியாகும். இந்த காலத்தில் இது முடியாது.


இதை ஒற்றி வருவதே தர்ச சிராத்தமாகும். இதன் விக்ருதிகளே (96) ஷண்ணவதி சிராத்தங்கள். .ஒரு வருடத்தில் செய்ய வேன்டுவன .இவற்றில் ஒவ்வொன்றிர்க்கும் சிற்சில மாறுதல் உண்டு.


தாய் தந்தையருக்கு செய்யப்படும் ப்ரத்யாப்தீக சிராத்தம்,, கிரஹண, மற்றும் புண்ய கால தர்பணங்கள். முதலியன மாசி சிராத்தத்தை அடிபடையாக கொண்டு செய்ய படுபவை. ஆனால் இவை ஸப்த பாக யக்ஞங்களில் சேராதவை.


இவை ஜீவத்பித்ருகனுக்கு (( தந்தை உயிருடன் இருக்கும்போது)) கிடையாது. ஆனால் மாசி சிராத்தம் தந்தை உயிருடன் இருக்கும் போதும் ஹோமம் வரை செய்ய வேண்டும்.என்பது ரிஷியின் அப்பிப்ராயம். தந்தைக்கு யார் தேவதைகளோ அவர்களே இவனுக்குமாவார். .


ஒளபாசன அக்னியில் பிண்டபித்ரு யக்ஞம் செய்ய வேண்டும்.. அஷ்டகா சிராத்தத்தை ஒரு போதும் விடக்கூடாது. தை அமாவாசையை அடுத்து வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஏகாஷ்டகை எனப்படும்.
அந்த தேவதையை குறித்து ஹோமமும் பித்ரு, பிதாமஹர், ப்ரபிதாமஹர். மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, விஸ்வேதேவர் இருவர் ஆக எட்டு ப்ராஹ்மனர்களை வரித்து செய்வதால் அஷ்டகா என்று பெயர்.


அஷ்டகா தேவதை பித்ருக்களுக்கு நாம் அளிக்கும் ஹவிஸை அமோகமாக அளவற்றதாக ஆக்கி காமதேனு பால் சுரப்பது போல் சுரப்பதாக கூற பட்டுள்ளது. ஸம்வத்ஸர தேவதையின் பத்நியாகவும் ஏகாஷ்டகை கூறப்பட்டுள்ளது.


மனிதர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி அறிவை தரும் உஷஹ் கால தேவதையும் ஏகாஷ்டகையே. இவளே யாகங்களை செய்விப்பவள் என்றெல்லாம் மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.


உரல் அம்மி முதலியவையும் இந்த அஷ்டகா சிராத்தம் செய்வதில் உத்ஸாகத்துடன் ஈடுபடுவதாக வேதம் கூறுகிறது. இந்த காலத்தில் உரல் அம்மி கிடையாது.இதை செய்பவனுக்கு , ஸந்ததி, சாரீர பல விருத்தி, மற்றும் வைதீக கர்மாக்களில் சிரத்தை செய்யக்கூடிய பாக்யம் ஏற்படுகிறது. என்று கூறுகிறது.


இதை கலி யுகத்தில் ஸ்ம்ருதியில் கூறப்பட்டபடி செய்ய முடியாது.


எனவே ரிஷிகள் தத்யஞ்சலி (தயிர்) ஹோமம் எனும் அனுகல்பத்தை விதிதுள்ளனர்.
இம்முறைகளில் அவதான முறைப்படி கையில் தயிரை எடுத்துக்கொண்டு ஒளபாஸனாக்னியில் ஏகாஷ்டகையை குறித்து ஹோமம் செய்வதாகும்.


( பிறகு சிராத்த முறைப்படி ப்ராஹ்மண போஜனம்) மறுநாள் அன்வஷ்டகை.
அன்வஷ்டகையை தர்ச சிராத்தம் போன்றே வர்கத்வய பித்ருக்களை உத்தேசித்து செய்யபடுவது ஆகும். விஸ்வேதேவர், பித்ரு , மாத்ரு, மாதாமஹர், விஷ்ணு என ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து சிராத்தம் செய்வது..


05-03-2021; 06-03-2021;07-03-2021 இந்த நாட்களில் அஷ்டகா சிராத்தமோ, தர்பணமோ ஓய்வு பெற்றவர்கள் செய்யலாமே.



நமது தர்ம சாஸ்த்திரம் புத்தகத்திலும் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. புரட்டாசி மாதத்திலும், மாசி மாதத்திலும் பித்ருக்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். என்று அறிவிக்கிறது. தை மாதத்திற்கு 6ம் மாதம் ஆடி மாதம்; சித்ரைக்கு 6ம் மாதம் ஐப்பசி ( துலா மாதம்.) புரட்டாசிக்கு 6ம் மாதம் மாசி மாதம் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.


அதாவது அவசியம் செய்ய வேண்டும் என்று பொருள்.*


*தர்ம சாஸ்திரத்தில் எதெல்லாம் நித்தியம் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவைகளை நாம் கட்டாயம் செய்யவேண்டும் செய்யாமல் இருத்தல் கூடாது.*


*அப்படி நாம் செய்யாமல் இருந்துவிட்டால் அன்று அப்போ ஜனம் அதாவது அன்று போஜனம் செய்யாமல் இருக்கவேண்டும் சாப்பிடாமல். ஏனென்றால் அந்த அளவுக்கு இந்த ஷண்ணவதி தர்ப்பணம் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. சம்பிரதாயம் பழக்கத்தில் செய்வதில்லை என்று நாம்தான் சொல்லுகிறோமே ஒழிய, தர்ம சாஸ்திரத்தில் அப்படி சொல்லவில்லை நம்முடைய ரெஃபரன்ஸ் தர்மசாஸ்திரம் தான்.*


*தர்ம சாஸ்திரத்தில் ஒரு விஷயம் நித்தியம் என்று சொல்லப்பட்டு இருந்தால் அதை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. உலகத்தில் இல்லை அல்லது வேறு காரணங்களை சொல்லி நாம் தப்பிப்பதற்கான வழியே தவிர அதில் சொல்லியுள்ளபடி நாம் அப்படியே செய்யவேண்டும்.*


*அப்படி நாம் விட்டுவிட்டோமே ஆனால் அதற்கான பாவங்கள் நம்மை வந்து சேரும். பராசர மகரிஷி சொல்லும்பொழுது, புண்ணியம் பாவம் இவை இரண்டும் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் சுகத்தையும் துக்கத்தையும். இப்பொழுது நாம் லௌகீகமாக ஒரு கடன் வாங்கி இருக்கிறோம் அதை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் வேறு ஏதாவது அதற்கு மாற்று வழியில் நாம் அடைப்பதற்கு முயற்சிக்கலாம் கொடுக்கலாம்.*


*ஆனால் இந்த புண்ணிய பாபங்கள் இருக்கிறதே கோடி ஜென்மங்கள் எடுத்தாலும், அதை அனுபவித்தே ஆக வேண்டும் அதில் இருந்து தப்ப முடியாது. வேறு எந்த வழியிலும் இந்த பாவங்களை நாம் போக்க முடியாது. இந்த பூமியின் உள்ளே என்னென்ன தானியங்கள் விதைகள் கிடைக்கிறது என்று நமக்குத் தெரியாது. அது எப்படி வெளியில் வரும் என்றால் மழை ஒரேயடியாக பொழிந்து அவைகள் பரிபக்குவம் ஆகி வெளியே வரும். யார் அங்கே விதைகளை போட்டார்கள் என்று நமக்குத் தெரியாது. என்றோ அங்கு விழுந்த விதைகள் காத்துக்கொண்டிருக்கும் மழை பொழிவதற்காக.*


*அதே போல் தான் நாம் செய்யக்கூடியது தான பாபங்கள் அந்த ஆத்மாவின் மனசில் ஒட்டிக் கொண்டே வரும். நமக்கு ஒரு சிறிய சிரமம் வரும்பொழுது அத்தனை பாவங்களும் சேர்ந்து ஆரம்பித்துவிடும். ஆகைனால் ஏதோ மாற்று வழிகள் இருக்கின்றது என்று நினைத்து அதை எல்லாம் நாம் சரிசெய்ய முடியாது.*


*தர்ம சாஸ்திரத்தில் எதையெல்லாம் கட்டாயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது அவைகளை நாம் செய்துதான் ஆகவேண்டும் பழக்கத்தில் இல்லை சம்பிரதாயத்தில் இல்லை நம் வீடுகளில் அதை இப்போது வேண்டாம் என்று சொல்கிறார்கள், அது எல்லாம் பிரமாணமாக ஆகாது. அடிப்படையாக தர்மசாஸ்திரம் தான் நமக்கு பிரமாணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*


*மேலும் நாம் விட்டதினால் வரக்கூடிய பாபங்களை கஷ்டங்களை நாம் தான் அனுபவிக்க வேண்டுமே தவிர நம்மை சுற்றியுள்ளவர்களும் நமக்கு ஆலோசனை சொன்னவர்களும் அனுபவிக்க மாட்டார்கள்.*


*அதாவது பாவம் என்றால் இங்கே செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டது ஒரு பாவமாக அனுஷ்டானங்களை விட்டது. அந்தப் பாவங்கள் எப்போது வேலை செய்யும் என்றால் யுகம் வாரியாக அது மாறுபடுகிறது.*





*கிருதயுகத்தில் ஏ உடனேயே அது வேலை செய்ய ஆரம்பித்து விடும். திரேதா யுகத்திலே பத்து நாட்களில் அது வேலை செய்யும். துவாபர யுகத்திலே ஒரு மாதம் கழித்து அது நம்முடைய அனுபவத்திற்கு வரும். ஆனால் கலியிலே ஒரு வருட காலம் எடுத்துக்கொள்ளும் ஏனென்றால் அதற்கான பரிகாரம் ஏதாவது அந்த வருடத்தில் செய்கிறானா என்று கலிபுருஷன் நமக்கு அவகாசம் கொடுக்கிறார். ஆகையினாலே தர்ம சாஸ்திரத்தில் இந்த பித்ரு காரியங்களை கட்டாயம் நாம் செய்ய வேண்டும் என்பதை இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களிலே காண்பித்திருக்கிறார்கள்.*


*அமாவாஸ்யா மன்வாதி யுகாதி சங்கரமனம் வைதிருதி வ்யதீபாதம்
மஹாளயம் திஸ்ரோஷ்டகா என்று இவைகள் தான் 96 தர்ப்பணங்கள். இவைகளை முன்னரே நாம் பார்த்தோம் இவைகளை அவசியம் நாம் செய்ய வேண்டும். ஒரு 15 நிமிட காரியம்தான் நம்முடைய முன்னோர்கள் இதையெல்லாம் செய்து தான் சௌகரியமாக இருந்தார்கள். அவர்கள் எந்தப் பெரிய மருத்துவமனைக்கு சென்றார்கள் அல்லது எந்த சுகத்தை அனுபவிக்க எதைத் தேடி சென்றார்கள்? கிராமத்திலேயே தான் அவர்கள் வசித்தார்கள். மிகப்பெரிய வசதிகள் இல்லாவிட்டாலும் கூட தர்ப்பணங்களை விடாமல் செய்து வந்தார்கள்.*


*ஒரு குடும்பத்தில் நான்கு காரியங்களில் முக்கியமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த பிதுரு காரியங்களை விடக்கூடாது என்று முயற்சி செய்து செய்து கொண்டிருந்தார்கள்.*


*சிராத்தங்களை முதல் நாளில் இருந்து ஆரம்பித்து செய்வது, தர்ப்பணங்களை விடாமல் செய்வது. மேலும் கிராமங்களை விட்டு வெளியில் போகக்கூடாது என்று முக்கியமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். வெளியூர்களில் வேறு வசதிகள் இருக்கிறது என்று போக மாட்டார்கள் இங்கு என்ன சௌரியம் இருக்கோ அதை வைத்துக்கொண்டு கிராமத்திலேயே வாழ்ந்தார்கள். இயற்கையான சூழலில் கிராமத்தில் அமைத்துக் கொண்டார்கள்.

மேலும் கிராம காரியங்களை எதுவும் விட்டுக்கொடுக்காமல் செய்துகொண்டிருந்தார்கள். ராதா கல்யாணம் சீதா கல்யாணங்கள் கிராமங்களில் நடக்கும். திருமணங்கள் நடக்கும் போது அனைவரும் சென்று ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு விட்டுக்கொடுக்காமல் செய்து கொண்டிருந்தனர்.
 
த்துக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கு காரியங்களை வைத்துக்கொண்டு சௌக்கியமாக இருந்தார்கள் நம் முன்னோர்கள்.*


*இந்த நாட்களில் இந்த நான்குமே நாம் விட்டுவிட்டோம். பித்ரு காரியங்களை நாம் குறைத்து விட்டதால் இந்த நாட்களில் இவ்வளவு சிரமங்களை நாம் அனுபவிக்க நேரிடுகிறது. ஆகையினாலே இவைகளை விடக்கூடாது இதற்கான பிராயச்சித்தங்கள் என்ன சொல்லியிருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.*

2/12/2020**முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் நாம் ஏதாவது ஒன்றை செய்ய முடியாது போனால் அதற்கான பரிகாரமாக மந்திர ஜெபங்கள் செய்வதைப் பற்றி மேலும் தொடர்



*அமாவாசை அன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் விட்டுப் போனால் அதற்காக ஜெபிக்க வேண்டிய மந்திரங்களை பார்த்தோம்.*
*அடுத்ததாக யுகாதி புண்ணிய காலத்தை பார்ப்போம். வருடத்தில் நான்கு முறை வரக்கூடிய இந்த புண்ணிய காலத்தில் நாம் செய்யாமல் விட்டு விட்டால், ரிக் வேதத்தில் ஒரு மந்திரம் இருக்கிறது நயசத்தியாவா என்று, அதை நூறு தடவை நாம் ஜெபிக்க வேண்டும் அப்படி செய்தால் இந்த யுகாதி விட்டு போனதாக ஆகாது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*


*அடுத்ததாக மன்வாதி புண்ய காலம். இதை நாம் செய்யத் தவறி விட்டோமே ஆனால், தும்புவஹா என்று ஒரு மந்திரம் ரிக் வேதத்தில் இருக்கிறது. சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு அந்த இடத்திலேயே நின்று கொண்டு நூறு தடவை இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த மன்வாதி புண்ய காலம் செய்ததாக ஆகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. இதே மந்திரம் தான் திஸ்ரோஷ்டகாவை விட்டுவிட்டாலும் செய்ய வேண்டும். மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களில் வரும் சப்தமி அஷ்டமி நவமியில் செய்ய வேண்டியது.*


*இது மிகவும் முக்கியம் திஸ்ரோஷ்டஹாவை பற்றி சொல்லும் பொழுது, தாயார் தகப்பனார்களுக்கு கர்மா செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வருடத்தில் வேறு எந்த சிராத்தமும் நாம் செய்யக்கூடாது. இந்த ஷண்ணவதியும் நாம் தர்ப்பணம் ஆகத்தான் செய்ய வேண்டும் ஷகிரன் மாஹாளயம் கூட அந்த வருடம் கிடையாது.

ஆனால் இந்த திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் மட்டும் அவசியம் செய்ய வேண்டும் விட்டே போகாது. அவசியம் செய்ய வேண்டும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தும்புவஹா மந்திரம் தான் திஸ்ரோஷ்டகாவை விட்டுவிட்டாலும் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு அந்த ஜலத்திலே நின்றுகொண்டு 100 தடவை ஜபிக்க வேண்டும்.*


*அதேபோல மாஹாளயம் விட்டு போய்விட்டால், ஷகிரன் மாஹாளய சிராத்தம் விட்டு போய்விட்டால் அதற்கான துரோஅஸ்வஸ்யா என்று ஒரு ரிங் மந்திரம் இருக்கிறது ரிக் வேதத்தில். அந்த மந்திரத்தை தினமும் பத்து தடவை இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து ஜெபித்து கொண்டு வரவேண்டும். அப்படி செய்தோமே ஆனால் அந்த வருடம் நாம் செய்ய வேண்டிய ஷகிரன் மாஹாளயம்*
*சிராத்தம் செய்யாததினால் வரக்கூடிய பாவம் போகிறது, பித்ரு சாபம் வராமல் இருக்கும்.*


*மஹாளய பக்ஷத்தில் இரண்டு விதமாக நாம் செய்கிறோம். ஒன்று பக்ஷ மஹாளயம் 16 நாட்களுக்கு தர்ப்பணமாக செய்வது, மற்றொன்று ஷகிரன் மஹாளயம். இந்த ஷகிரன் மஹாளயம் விட்டுப் போனால் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*
*இந்த மாதிரியான ரிங் மந்திரங்கள் ரிக் வேதத்தில் இருப்பதினால் நாம் ரிக் வேதம் தெரிந்தவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நமக்கு செய்ய முடியவில்லை என்றால் சமுத்திர ஸ்நானம் தான் செய்ய வேண்டும். அதே புண்ணியகாலம் திரும்பவும் வருவதற்குள் நாம் மகா சங்கல்பம் என்று ஒன்று செய்து கொண்டு சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும்.*


*அப்படி நாம் இந்த மகா சங்கல்பத்தை செய்யாவிடில் அடுத்த அதே புண்ணியகாலம் செய்வதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. அப்படி செய்யாவிடில் அது ஒரு குறைபாடாகவே இருக்கும். அதாவது நமக்கு ஒரு கால் இல்லை என்றால் எப்படி இருக்கும் அதே போல். அதாவது ஊனமாக இருக்கும்.*


*அதனால் நாம் மகா சங்கல்பம் செய்து கொண்டு அதற்கான பரிகாரங்களை செய்து விட்டு நாம் மேற்கொண்டு கர்மாக்களைச் செய்ய வேண்டும்.*


*மூன்று புண்ணிய காலங்களுக்கு இந்த ரிங் மந்திரங்கள் பரிகாரமாக சொல்லப்படவில்லை. அதாவது சங்கரமணம் (மாதப்பிறப்பு) வைதிருதி வ்தீபாதம். பராசர ஸ்மிருதி லே இதற்குப் பரிகாரமாக சஹஸ்ர காயத்ரி சொல்லப்பட்டிருக்கிறது. 1008 காயத்ரி மந்திரத்தை கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும் இந்த மூன்று புண்ணிய காலங்களும் விட்டு போனால். அதனால் இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் மிக மிக முக்கியம் கட்டாயம் செய்ய வேண்டும்.*


*இவ்வளவு நாட்களாக செய்யவில்லையே என்றால் அதனால் தப்பில்லை, 1, 2 தர்ப்பணம் ஆக பழக்கத்திற்கு கொண்டுவந்துவிடலாம் 15 நிமிட நேரம் தான் அந்த தர்ப்பணம். இவைகளை எல்லாம் விடாமல் நாம் செய்து வந்தோமே ஆனால் பித்ரு சாபங்கள் வராது. தில ஹோமம் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் வராது. க்ஷேத்திரங்களுக்கு எல்லாம் போய் நாம் செய்யவேண்டிய கர்மாக்கள் நிர்பந்தங்கள் எல்லாம் வராது. இப்படி சுலபமாக தான் நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.*


*மகரிஷிகளும் சுலபமாகத் தான் இந்த பரிகாரங்களை நமக்கு சொல்லி இருக்கிறார்கள். இந்த ஷண்ணவதி அனைத்தையும் சிராத்தம் ஆகத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தால், எவ்வளவு சிரமம் நமக்கு. அப்படி இல்லாமல் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்று வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள் மிகப் பெரிய உபகாரம்.*


*இந்த ஷண்ணவதியை அவசியம் தர்ப்பணமாக செய்ய வேண்டும். சிராத்தமாக இருக்கின்றன பிரயோகம் தெரிந்து கொள்ள வேண்டும். அது எல்லாம் நாம் தெரிந்து கொண்டு எழுதி வைத்துக்கொண்டு குறித்துக்கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்து 1, 2, செய்துவிட்டு பிறகு விட்டுவிடுவது என்பது கூடாது. இப்படி மெதுவாக நாம் தர்ப்பணம் ஆக செய்ய 1, 2 ஆரம்பித்து பிறகு இந்த 96 ஆராயும் நாம் செய்வதற்கு பிதுருக்கள் நமக்கு ஆசிர்வதிப்பார்கள். மிகவும் முக்கியமானதாக மனதில் நினைத்து செய்ய வேண்டும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
முசிறி அண்ணா நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம்முடைய முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான ஷண்ணவதி தர்ப்பணம் முறையை விரிவாகப் பார்த்தோம். மேலும் சில புண்ணிய கால தர்ப்பணங்கள் விட்டுப் போயிருந்தால் அதற்கு என்ன பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இருக்கிறோம்.*


*இந்தப் பரிகாரங்கள் செய்ய வேண்டியதற்கான பலன் என்ன என்று பார்க்கும்போது, நாம் செய்யவேண்டிய கர்மாக்களில் நித்தியம் என்று சில சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது கட்டாயம் செய்தே தீர வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் விடக்கூடாது.*


*சந்தியாவந்தனம்/ஹௌபாசனம்/பிரம்மச்சாரிகளுக்கு சமிதாதானம்/தாயார் தகப்பனார்களுக்கு செய்யவேண்டிய சிராத்தம் இவைகள் நித்திய கர்மா என்று சொல்லப்பட்டிருக்கிறது எக் காரணத்தைக் கொண்டும் விடக்கூடாது.*





*இவைகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிர்பந்தம் காரணமாக விட்டு போனால், அதற்கு என்ன பரிகாரம் என்று பார்க்கின்ற பொழுது, மூன்று விதமாக மகரிஷிகள் பிரித்து நமக்கு காண்பிக்கின்றனர்.*


*அதாவது சில நித்திய கர்மாக்களை விட்டு விட்டோம் என்றால் அது விட்டதுதான். அதை திரும்பவும் நம்மால் திருப்ப முடியாது. சில நித்திய கர்மாக்களை விட்டு போனால் அவை அனைத்தையும் சேர்த்து செய்வதற்கு சில வழிகளை காண்பித்துள்ளனர். சில நித்திய கர்மாக்களை விட்டு போனால் எவ்வளவு காலம் விட்டுப்போனது அவ்வளவு காலங்களையும் திரும்ப செய்ய வேண்டும்.*


*இப்படி மூன்று விதமாக இருக்கிறது இதில் முதலில் சந்தியாவந்தனம் எடுத்துக் கொண்டோமேயானால், சந்தியாவந்தனம் ஒரு வருடம் 3 வருடம் ஐந்து வருடம் 10 வருடம் விட்டு போனால் அவை அனைத்திற்கும் சேர்த்து ஒரு சந்தியாவந்தனம் ஆகவோ, அல்லது அதற்கு மாற்று வழியாக ஒரு கர்மாவையோ, நமக்கு மகரிஷிகள் காண்பிக்கவில்லை.

அப்போது என்ன செய்ய வேண்டும், எவ்வளவு சந்தியாவந்தனம் விட்டுப் போயிருக்கு என்று நமக்கு தெரிந்தால் ஒரு வேளைக்கு 10 சந்தியாவந்தனம் ஆக செய்துகொண்டு அதை முழுமையடையச் செய்ய வேண்டும். பத்துவருட காலம் சந்தியாவந்தனம் விட்டு போய்விட்டது என்றால் பத்து பத்து காயத்ரி ஆக செய்து அதை முடிக்க வேண்டும்.*


*அதேபோலதான் சிராத்தங்களும். நம் தாயார் தகப்பனாருக்கு செய்யவேண்டிய சிராத்தம் விட்டு போனால் எத்தனை காலம் ஆனாலும் அதைச் செய்தே தீர வேண்டும். அதற்கான மாற்று வழி கிடையாது. ஒரு பத்து வருடம் ஸ்ராத்தம் செய்யப்படவில்லை அல்லது முறையான வகையில் அது செய்யப்படவில்லை என்றால், முதலில் சமுத்திர ஸ்நானம் செய்து, அத்தனை சிராத்தங்களையும் செய்து கொண்டே வர வேண்டும். தினம் ஒன்றாக செய்ய வேண்டும் அதை எல்லாம் சேர்த்து செய்வது என்பது கிடையாது.*


*இன்னும் சில நித்திய கர்மாக்களுக்கு, விட்டுப் போனால் அதற்கு மாற்று வழி ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மேலும் அந்த பரிகாரங்களுக்கு எல்லாம் என்ன பலன் என்று பார்க்கும்பொழுது, சில பரிகாரங்கள் விட்டுப்போனதை பூர்த்தி செய்கின்றன. விட்டுப் போனது போனது தான் என்றில்லாமல், விட்டு போனதினால் வரக்கூடிய பாவத்தையும் போக்கி, நாம் செய்ததாக ஆக்குகிறது சில பரிகாரங்கள்.*


*இன்னும் சில பரிகாரங்கள் விட்டுப் போனால் விட்டுப் போனது தான். ஆனால் அடுத்ததை செய்வதற்கான அதிகாரத்தை சில பரிகாரங்கள் கொடுக்கிறது. இன்னும் சில கர்மாக்கள் விட்டு போனால் விட்டு போனதுதான் ஆனால் அன்றைக்கு செய்வதான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது.*


*இப்படி மூன்று விதமாக பரிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது ஹௌபாசனம், கல்யாணம் ஆன தினத்திலிருந்து ஆரம்பமாகிறது. தொடர்ந்தார் போல் ஒரு பத்து வருடம் விட்டுப் போய்விட்டது என்றால், அது விட்டது விட்டதுதான். அதற்கான பாவத்தை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆனால் நாம் ஒரு தாம்பாளத்தில் அரிசியை வைத்து ஹோம திரவிய தானம் என்று நாம் செய்கிறோம். ஸ்வர்ண தானிய ஆஜ்ய கிர்சரம் என்று நாம் செய்கிறோம்.*


*நான்கு வேளைக்கு மேல் ஒருவன் ஹௌபாசனம் செய்யாமல் இருந்தால், நான்கு விதமான தானங்களை அவன் செய்ய வேண்டும். தானியம் ஸ்வர்ணம் நெய் மற்றும் கிரிச்சரம் இந்த நான்கையும் அவன் செய்தால்தான், அவன் அடுத்த வேளை ஹௌபாசனம் செய்ய முடியும். இப்படி பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறது.*


*இதற்கு என்ன பலன் என்றால், விட்டுப்போன பாவம் விட்டுப் போனது தான் ஆனால் அன்றைக்கு செய்ய வேண்டிய கர்மாவிற்கு அதிகாரத்தை கொடுக்கிறது. இதைத்தான் நாம் நம்முடைய சிராத்த தினத்தன்று அக்னி சந்தானம் ஹௌபாசனம் செய்கிறோம். அந்த தானத்தை செய்தால் அன்றைக்கு செய்ய வேண்டிய சிராத்தத்தை செய்ய அதிகாரம் நமக்கு கிடைக்கிறது.*


*ரொம்ப காலம் விட்டு போய் விட்டது என்றால் சிராத்தம் முடிந்த உடனேயே அந்த அக்னியை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். தொடர்ந்து செய்து கொண்டு வரக்கூடாது. இப்படி அன்றைய தினத்தில் செய்ய வேண்டியதற்கான அதிகாரத்தை கொடுக்கிறது சில பரிகாரங்கள்.*


*இன்னும் சில பரிகாரங்கள் மேற்கொண்டு செய்வதற்கான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது. இப்படி மூன்று விதமான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது அதிலே இந்த சண்ணவதி தர்ப்பணம் செய்யாது விட்டு போனால் அதற்கான பரிகாரங்கள், மற்றும் அதற்கு என்ன பலன் என்றால், சில மந்திர ஜபங்கள் விட்டதை செய்வதாக ஆக்குகிறது. சிலவை விட்டது விட்டதுதான்.*


*சிலவைகள் அடுத்த புண்ணிய கால தர்ப்பணம் செய்வதற்கான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது. முதலில் தர்ச ஸ்ராத்தம் விட்டு போனால், அம்மாவாசையன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் விட்டு போனால் அதற்கான பரிகாரத்தை நாம் பார்த்தோம். நியூக்ஷூசாசம் என்று ஒரு மந்திரத்தை நூறு முறை ஜெபிக்க வேண்டும் என்று பார்த்தோம்.*


*அதற்கு என்ன பலன் என்றால், அந்த மந்திரத்தை ஜெபித்து பிறகு விட்டது செய்ததாகவே ஆகிறது என்று சொல்லப்பட்டது. என்ன காரணத்தினால் இந்த பரிகாரம் விட்டுப்போனது என்றால் அதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது.*


*ஒரு தீட்டு காலத்தில் 10 நாள் அல்லது மூன்று நாள் வருகிற பொழுது அந்த சமயத்திலே அமாவாசை வந்துவிட்டால், அப்படி விட்டுப் போனால் அதற்கு தோஷம் கிடையாது. அந்த தீட்டை நாம் காப்பதினால் இந்த அமாவாசை சிராத்தம் நாம் செய்ததாக ஆகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. அதனால் விட்டுப்போன கணக்கிலேயே வராது.*


*அதேபோல, நாம் தாயார் தகப்பனார் களுக்கு செய்கின்ற சிராத்தம் அந்த நாளில் அமாவாசை சிராத்தம் வந்தால், அதுவும் விட்டு போனதாக ஆகாது. செய்ததாகவே கருதப்படும். ஒரு பிரயாணத்தில் நாம் இருக்கிறோம் அல்லது பஞ்சாங்கம் பார்க்காமல் விட்டு விட்டோம் என்றால் அந்த நேரத்தில் தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.*


*இப்படி ஒவ்வொரு புண்ணிய காலத்திற்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன அது என்ன என்பதை மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 

Latest ads

Back
Top