quotes and sayings

Status
Not open for further replies.
விதுர நீதி!

12234892_1649100485349412_9112913315827063474_n.jpg
 
வெள்ளிக்கி ழமை

நீங்கள் வெள்ளிக்கிழமை பிறந்தவர்களா?
இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், பிறக்கும்போதே ‘சமர்த்துப் பிள்ளை’ என்று பெயரெடுப்பார்கள். பேச்சாலேயே மற்றவர் களை தன் வயப்படுத்துவார். தமது பேச்சை கேட்காதவர்களை புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பூர்த்தி செய்வார் கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும் பாசத்திலும் மூழ்கித் திளைப்பர்.
நல்லன அருளும் தேதிகள்: 4, 8, 13, 17, 26, 31 ஆகிய தேதிகள் நலம் பயக்கும்.
ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 44, 53, 62, 66, 71 வயதுகளில் குடும்பம் பல நன்மைகளைச் சந்திக்கும்.
வளம் தரும் கிழமை: திங்கள்.
பரிகார வழிபாடு: வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி மல்லிகைப் பூக்களால் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.

Source: Vikatan
 
நானும் மழையும்
அம்மாவும் நானும்

மழை வரும்போல
குடை எடுத்துட்டு போடா
இது அம்மாவின் குரல்

ஒவ்வொரு முறையும்
வீட்டை விட்டு வெளியேறும் போதும்
அம்மவாவின் குரல்
உள்ளிருந்து ஒலிக்கும்…
மழையில் நனையத்தான்
வெளியே செல்கிறேன் என்பதனை
அம்மா அறிவால் இருந்தும்
அவள் குரல்தான்
அன்பு…
நனைந்து பின்
வீடு சேரும்போது
நான்தான் அப்பவே
சொன்னேனே
இந்த வார்த்தைகளோடு
புடவை தலைப்பில்
தலை துவட்டிவிடும்போது
இன்னும் அதிகமாகிறது
வாழ்வதற்கான ஆசைகள்…
- மழை பயணம் வலைப் பூவிலிருந்து..

Chutti vikatan
அம்மா அறிவால்!!!!! Or ..............அம்மா அறிவாள்

Originale ippadithano?
 
சுயிங்கம் மென்றால்?
சுயிங்கம் மெல்வது செரிமானத்துக்கும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக சாப்பிட்டதற்குப் பிறகு சுயிங்கம் மெல்வது மிகவும் நல்லது. இப்படிச் செய்யும்போது அதிக அளவில் எச்சில் சுரக்கப்பட்டு இரைப்பைக்குள் அனுப்பப்படுகிறது. இது வயிற்றில் உள்ள அமிலங்களைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், புளித்த ஏப்பம் பிரச்னை உள்ளவர்கள், இதனை மெல்லும்போது உருவாகும் உமிழ் நீர், அமில - காரத்தன்மையைச் சீர்செய்கிறது.
உணவு உண்ட பின் இதனை மெல்லுவதன் மூலம், பல் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். இதனால், உணவுக்குப் பின் பல் தேய்ப்பது, மவுத் வாஷ் உபயோகிப்பது போன்றவற்றுக்கு அவசியமே இருக்காது. இது பல் மற்றும் தாடைகளுக்கு நல்லதொரு பயிற்சியாகவும் அமைகிறது.
'சர்க்கரைகொண்டு தயாரிக்கப்படும் சுயிங்கம்களை தொடர்ந்து மெல்லுவதன் மூலம், பற்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம், அதில் உள்ள சர்க்கரை, பல் இடுக்குகளில் படிந்துள்ள பாக்டீரியாக்களுக்கு உணவாகிவிடுவதால், அவை வேகமாக வளர்ந்து பற்களைச் சிதைக்கும். இதனால் சிறுவர்கள், சிறுவயதிலேயே பல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாகலாம்.
மற்றொரு பிரச்னை, சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிடுவது. சுயிங்கம்மை விழுங்கினாலும் பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது. காரணம், இது உடலுக்குள் எங்கும் ஒட்டாமல் நமது குடலை அடைந்துவிட்டால், மிக எளிதாக மலத்தில் வெளியேறிவிடும். மாறாக இது உணவுக்குழாயில் ஒட்டிக்கொள்ளும்போதுதான், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிட்டால், உடனடியாக அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். இது, சூவிங்கம் குடலை அடைந்து வெளியேறி விடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இல்லையெனில் அறுவைசிகிச்சை மூலமே வெளியேற்ற இயலும்.

சுயிங்கம் பிரியர்கள் சுகர் ஃப்ரீ சுயிங்கம் மெல்லுவதால், முகத்துக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.'

Source: Dr.Vikatan

To the best of my knowledge, most of the people don not swallow the sewing gum.
After sewing,they simply paste it on walls, pillars,tables, benches, cinema theatre seats,spit on on public places etc.
 
Status
Not open for further replies.
Back
Top