- Thread Starter
- #8,401
ஒன்பதாம் தந்திரம்
21. தோத்திரம்
#2989. நானாவிதஞ் செய்து நந்தியை நாடுமின்!
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.
பலவகைப் பட்ட தொண்டுகள் செய்து சிவபிரானை நீங்கள் நாடுவீர்! உடலில் உள்ள ஆறு ஆதாரத் சக்கரங்களில் நடுநாடி வழியே மேலே சென்று, வானோர் உலகம் உம்மை வழிபடுமாறு செய்து, மீண்டு வந்த பின்பு, தூய சிவானந்தத் தேனைத் தெவிட்டும் அளவுக்கு உண்ணலாம்.
21. தோத்திரம்
#2989. நானாவிதஞ் செய்து நந்தியை நாடுமின்!
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.
பலவகைப் பட்ட தொண்டுகள் செய்து சிவபிரானை நீங்கள் நாடுவீர்! உடலில் உள்ள ஆறு ஆதாரத் சக்கரங்களில் நடுநாடி வழியே மேலே சென்று, வானோர் உலகம் உம்மை வழிபடுமாறு செய்து, மீண்டு வந்த பின்பு, தூய சிவானந்தத் தேனைத் தெவிட்டும் அளவுக்கு உண்ணலாம்.