சுக்ல பட்சத்தில் வரும் இந்த ஏகாதசி திதியை பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசியாக கொண்டாடுவர். பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்
மஹீஜித் என்ற அரசன் மாஹிஷ்மதி என்ற தேசத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லை. ஆகையால் எல்லாம் இருந்தும் மன நிம்மதி இழந்து தவித்தான். பின் ஒரு நாள் பல ஜோசியர்களை, வேதவித்துகளை அழைத்து தன் மனக்குறையை முறையிட்டான். மன்னர் கேட்டுபின் தவறாக ஏதாவது சொல்லக்கூடாது என்ற
காரணத்தினால் அவர்கள் தாங்கள்
தவம் செய்யும் முனிவர்களைக் கேட்டுச் சொல்வதாகச் சொல்லி காடு குகை என்று போனார்கள் . அங்கு அவர்கள் லோமச முனிவரைக்கண்டு வணங்கினார்கள். பின் விவரம்
சொல்லிக் காரணத்தையும் கேட்டார்கள். லோமசர் முனிவர் சிறிது தியானத்தில்
இருந்து பின் சொன்னார் "உங்கள் அரசனை புத்ரதா ஏகாதசி விரதம் இருக்கச்சொல்லுங்கள் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் . இவருக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாத காரணம் போன ஜன்மத்தில் ஒரு
வியாபாரியாக இருந்தான், வியாபார விஷயமாக வெகு தூரம் நடந்துச்செல்ல தாகம் எடுத்தது. அங்கு ஒரு குளம் கண்டான் . அங்கு ஒரு பசு அதில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த மன்னன் நாம் குடிக்கும் தண்ணீர் கலங்கிப்போய் விடுமே என்று அதை விரட்டினான். தாகத்தால் அந்தப்பசு நீர் குடிக்கமுடியாமல் ஓடியது. அந்த பாபத்தினால் தான் குழந்தை இல்லை"என்றார்.
வந்தவர்களும் அரண்மனை திரும்பி அரசனிடம் விவரம் சொல்ல
அரசன், புத்ரதாஏகாதசி விரதம் மேற் கொண்டான்.
ஆண்குழந்தையும் பிறந்தது எந்தவிதமானத்தடையும் நீக்கி குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது இந்த ஏகாதசி.
கலியுகத்தில் புத்ரதா ஏகாதசியின் மஹிமையை அந்நாளன்று கேட்பவர்களும், படிப்பவர்களும் நிச்சயமாக தமது பாவங்கள் நீங்கப் பெற்று, புத்ர சந்தான பிராப்திக்கான அருளாசியைப் பெறுவதோடு, புத்ரர்கள் பெற்றோர்கள் சொல் படி கேட்டு, சற்புத்ரர்களாக திகழ்வார்கள். இப்பிறவியின் முடிவில் சொர்க்கத்தை அடையும் பாக்கியமும் பெறுவர் என்று
ப்ரம்ஹ வைவர்த்த புராணம், சிராவண மாத சுக்ல பட்ச ஏகாதசி அதாவது பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலத்தில் குறிப்பிட்டுள்ளது.
மஹீஜித் என்ற அரசன் மாஹிஷ்மதி என்ற தேசத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லை. ஆகையால் எல்லாம் இருந்தும் மன நிம்மதி இழந்து தவித்தான். பின் ஒரு நாள் பல ஜோசியர்களை, வேதவித்துகளை அழைத்து தன் மனக்குறையை முறையிட்டான். மன்னர் கேட்டுபின் தவறாக ஏதாவது சொல்லக்கூடாது என்ற
காரணத்தினால் அவர்கள் தாங்கள்
தவம் செய்யும் முனிவர்களைக் கேட்டுச் சொல்வதாகச் சொல்லி காடு குகை என்று போனார்கள் . அங்கு அவர்கள் லோமச முனிவரைக்கண்டு வணங்கினார்கள். பின் விவரம்
சொல்லிக் காரணத்தையும் கேட்டார்கள். லோமசர் முனிவர் சிறிது தியானத்தில்
இருந்து பின் சொன்னார் "உங்கள் அரசனை புத்ரதா ஏகாதசி விரதம் இருக்கச்சொல்லுங்கள் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் . இவருக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாத காரணம் போன ஜன்மத்தில் ஒரு
வியாபாரியாக இருந்தான், வியாபார விஷயமாக வெகு தூரம் நடந்துச்செல்ல தாகம் எடுத்தது. அங்கு ஒரு குளம் கண்டான் . அங்கு ஒரு பசு அதில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த மன்னன் நாம் குடிக்கும் தண்ணீர் கலங்கிப்போய் விடுமே என்று அதை விரட்டினான். தாகத்தால் அந்தப்பசு நீர் குடிக்கமுடியாமல் ஓடியது. அந்த பாபத்தினால் தான் குழந்தை இல்லை"என்றார்.
வந்தவர்களும் அரண்மனை திரும்பி அரசனிடம் விவரம் சொல்ல
அரசன், புத்ரதாஏகாதசி விரதம் மேற் கொண்டான்.
ஆண்குழந்தையும் பிறந்தது எந்தவிதமானத்தடையும் நீக்கி குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது இந்த ஏகாதசி.
கலியுகத்தில் புத்ரதா ஏகாதசியின் மஹிமையை அந்நாளன்று கேட்பவர்களும், படிப்பவர்களும் நிச்சயமாக தமது பாவங்கள் நீங்கப் பெற்று, புத்ர சந்தான பிராப்திக்கான அருளாசியைப் பெறுவதோடு, புத்ரர்கள் பெற்றோர்கள் சொல் படி கேட்டு, சற்புத்ரர்களாக திகழ்வார்கள். இப்பிறவியின் முடிவில் சொர்க்கத்தை அடையும் பாக்கியமும் பெறுவர் என்று
ப்ரம்ஹ வைவர்த்த புராணம், சிராவண மாத சுக்ல பட்ச ஏகாதசி அதாவது பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலத்தில் குறிப்பிட்டுள்ளது.