ஸ்ரீ க்ருஷ்ண பகவான் பகவத் கீதையில் சொல்கிறார் ஹே அர்ஜுனா எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று தீர்மா னிக்கும் விஷயத்தில் உனது மனித புத்திக்கு இடமில்லை.
தொலை நோக்கு பார்வையுடன் இந்த்ரியங்களுக்கு புலப்படாதவைகளையும், தவ வலிமையால் அறிந்து கொண்ட மஹ ரிஷிகள், தெரிவிக்கும் சாஸ்திரத்தையே பிரமாணமாக கொண்டு செயல் பட வேண்டும்.
தஸ்மாத் சாஸ்திரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதெள எங்கிறார். பரலோகம், பித்ருக்கள், தர்மம், புண்ணியம், தெய்வம் போன்ற விஷயங்களில் சாஸ்திரம்
சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல் பட வேண்டும்.இவ்விஷயத்தில் நமது குதர்க்கமான புத்திக்கு இடம் கொடுக்க கூடாது.
பல பிள்ளைகள் வீட்டிலும் தனிதனியே தெய்வ வழிபாடு, அன்னதானம், பூஜைகள், போன்ற நல்ல காரியங்கள் செய்வதால் அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஏறாளமான புண்ணியங்கள் அந்த வீட்டிற்கு வந்து சேரும்.
ஒருவர் ஒரு முறை செய்வதால் அந்த குடும்பத்திற்கு குறைவான புண்ணியமே வந்து சேரும்.
விபாகே தர்ம வ்ருத்தி எங்கிறார் ஆபஸ்தம்ப மகரிஷி. பிள்ளைகள் அனைவரும் தனிதனி யே தங்கள் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும்,
தனி தனியே தெய்வ வழிபாடு, பித்ருக்கள் வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அந்த குடும்பத்திற்கு ஏறாளமான புண்ணியம் வந்து சேரும்.
மஹாளய தர்ப்பணம் செய்யும்போது ஒவ்வொருவரும் தனிதனியே செய்வதால் அவரவர் மாமனார், மாமியார், மைத்துனனுக்கு தர்ப்பணம் செய்ய முடிகிறது
மூத்தவர் மாத்திரம் செய்யும் போது மூத்தவரின் மாமனார், மாமியார், மைத்துனனு
க்கு மாத்திரம் தான் மூத்தவர் செய்வது போகிறது. மற்ற பிள்ளைகளின் மாமனார், மாமியாருக்கு , மைத்துனனுக்கு மற்ற பிள்ளைகள் செய்யாதது குற்றம். இதனால் யம தர்ம ராஜாவிடம் தண்டனைக்கு ஆளாகிறார்.