• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

garbha aadhanam.

kgopalan

Active member
17/02/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி மேலும் தொடர்கிறார்.*

*கர்ப்ப காலத்தை எப்போது செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் அதனால் நன்மைகள் என்ன என்பதை எல்லாம் மகாபாரதத்தில் ஒரு சரித்திரம் மூலம் தெரிந்து கொண்டோம். அதில் வரக்கூடிய மந்திரங்களை சொல்லி முடித்த பிறகு வேதமானது, தம்பதிகளுக்குள் ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுவதற்கு ஒரு சூக்தம் சொல்லியிருக்கிறது.*

*பாக்கிய சூக்தம் என்று பெயர். ப‌ஹம் என்றால் ஆறு வஸ்துக்களை குறிக்கும். பஹஹா என்றால் ஐஸ்வர்யம் பலவிதம் உலோகங்கள் தங்கம் வெள்ளி போன்றவை. வீடு வாசல் நிலம் பணம் வாகனம் பத்தினி குழந்தைகள் இவற்றிற்கும் ஐஸ்வர்யம் என்று பெயர். இவ்வளவையும் குறிப்பதுதான் ப‌ஹஹா என்ற சப்தம்.*

*மன உறுதி அதையும் குறிக்கிறது. நம்மைப் பற்றியதான நல்ல கருத்துக்கள்/அபிப்ராயம் அனைவரிடத்திலும் இருக்கவேண்டும். செலவழிக்கும் படியாக உள்ள பணத்தை நம் கையில் வைத்திருப்பதற்கு ஸ்ரீஹீ என்று பெயர். ஞான வைராக்கியம் அதாவது நல்ல எண்ணங்கள் அதாவது எந்த விஷயத்திலும் போதும் என்கின்ற எண்ணம். இத்தனை வஸ்து களுக்கும் பஹஹா என்று பெயர்.*

*இவ்வளவு வஸ்துக்களும் ஸ்திரமாக என்னுடன் எப்போதும் இருக்க வேண்டும். இவைகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் அது எனக்கு நிறைய கிடைக்க வேண்டும். ஆகையினாலே தான் இந்த பாக்கிய சூக்தத்தை காலை வேளையில் சொல்வது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம்*

*_காலை வேளையில் இந்த பாக்கிய சூக்தத்தை சொல்லிவிட்டு பாக்கி வேலைகளை நாம் தொடங்கினோம் ஆனால் அந்த நாள் நன்றாகவே அமையும் என்று வேதம் காண்பிக்கின்றது._*

*அதேசமயம் இந்த பாக்கிய சூக்தம் எதை காண்பிக்கின்றது என்றால், இரண்டு இடங்களில் இது சொல்லப்படுகிறது. தைத்ரிய பிராமணத்தில் பாக்கிய சூக்தம் சொல்லப்பட்டிருக்கிறது. ஏக்காதிரிக்கா காண்டம் என்னும் மந்திர பிரஸ்னத்திலேயும் இந்த பாக்கிய சூக்தம் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு இடத்திலும் சொன்னாலும் கூட வேறு வேறு காரணங்களுக்காக சொல்லப்பட்டிருக்கிறது*

*_அதாவது தைத்திரீய பிராமணத்தில் இதை ஒரு சூக்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மந்திரம் எங்கு வருகிறது என்றால் சூக்த பிரஸ்னம் என்று வருகிறது. அதிலே இந்த பாக்கிய சூக்தம் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு தம்பதிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு சந்ததிகள் ஏற்படக்கூடிய சக்தியே இல்லை, அப்படி என்றால் அந்த தம்பதிகளுக்கு, சந்ததிகளை அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய தகுதியை, இந்த சூக்தத்தை தைத்ரீய பிராமணம் காண்பிக்கின்றது._*

*மந்திர பிரஸ்னத்தில் எதற்காக இது சொல்லப்படுகிறது என்றால், தம்பதிகளுக்குள் ஒரு இதய சம்ஸர்க்கம் இல்லாமலிருந்தால் அதாவது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டும் இருவரும் சேர்ந்து பிரியமாக குடும்பம் நடத்த வேண்டும். இவைகள் குறைவாக இருந்தால் இந்த பாக்கிய சூக்தம் என்று சொல்லக்கூடிய சூக்தத்தை ஔபாசனத்தில் ‌‌ஹோமமாக செய்ய வேண்டும். ஸ்தாலிபாகமாக செய்ய வேண்டும் என்று ஆபஸ்தம்பர் சொல்லியிருக்கிறார்.*

*அந்த ஸ்தாலிபாகம் செய்ய வேண்டிய இடத்தில், அந்த ஆகுதி மந்திரங்களாக ஏழு மந்திரங்களை காண்பித்துள்ளனர். இந்த ஏழு மந்திரங்களையும் கொண்டு ஸ்தாலிபாகம் செய்தால், அன்னோன்யம் ஆக இல்லாத தம்பதிகள் கூட, சினேகம் ஜாஸ்தியாக ஆகும்.*

*அப்படி இலேசாக கணவன்-மனைவி இடையே அவர்களுக்கு ஒத்துப் போகவில்லை என்று தெரிந்தவுடன், முதலில் என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு வக்கீலை போய் பார்க்க வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால் அப்படி இல்லை. முதலில் தெய்வத்தின் இடத்திலேயே பிரார்த்தனை செய்ய வேண்டும். நமக்கு முதல் தெய்வம் எது என்றால் அக்னி தான் ஒவ்வொருவருக்கும் முதல் தெய்வம். அத்தனை தேவதைகளுக்கும் முகமாகவும் முதலாவதாகவும் எது என்றால் அக்னி தான்.*

*நமக்கு ஏதாவது ஒரு கலக்கம் ஏற்படுகிறது அல்லது நம்முடைய குடும்பத்தில் ஒரு மன கவலை/சஞ்சலம் ஏற்படுகிறது, உடனே நாம் அக்னியை பிரார்த்தனை செய்ய வேண்டும்.*

*எந்த அக்னியை நாம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு அக்னி சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மச்சாரியாக இருந்தால் சமிதாதான அக்னி. கல்யாணமான கிரகஸ்தன் ஆக இருந்தால், ஔபாசனா அக்கினி. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அக்னி சொல்லப்பட்டிருக்கிறது. மனது மிகவும் கலக்கமாக இருக்கிறது என்றால், அன்று நாம் ஔபாசனம் செய்ய வேண்டும் மற்றும் அன்றைய தேதியில் ஔபாசனா சன்னதியில் பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்போது எப்படிப்பட்ட மனக் கவலையும் கலக்கமும் சரியாக போய்விடும்.*


*_எந்த ஒரு மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டி வராது. எந்த ஒரு வக்கீலையும் பார்க்க வேண்டி வராது. தாயார் தகப்பனார்கள் உடனேயே பார்த்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் கட்டாயம் பலன் கொடுக்கும் இந்த அற்புதமான மந்திரங்கள். இந்த மந்திரங்களை காலை வேளையில் அனைவருக்கும் காதில் விழும்படியாக இந்த பாக்கிய சூக்தத்தை சொல்லவேண்டும். பிராதகா

என்று ஆரம்பம் ஆவதால் காலையில் சொல்லவேண்டும் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம்._*
*அப்படி சொன்னால் அன்றைய தினம் பூராவும் நமக்கு நல்ல தினமாக அமையும். நல்ல சுப வார்த்தைகளே காதில் விழும். அன்றைக்கு தொடங்கக் கூடிய காரியங்கள் எல்லாம் நிர்விக்கனமாக நிறைவேறும். மனதில் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூடும் என்பதை வேதம் நமக்கு காண்பித்து, இந்த பாக்கிய சூக்தத்தை சொல்கிறது வேதம்.*

*இந்த சூக்தத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள் நம்மை விட அதிகமாக பிரார்த்தனை செய்கிறது. இந்த மந்திரங்களுக்கு எல்லாம் ஒரு அர்த்தம் தான் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்த மந்திரங்களை சொல்லும் போது எதற்காக சொல்கிறோம் என்ற ஒரு அர்த்தத்தை மனதிற்கு நாம் வாங்கிக் கொள்வதற்காக சொல்கிறோமே தவிர, அதற்கு நிறைய அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. அந்த அக்ஷரங்கள் தான் மந்திரங்கள்.*

*நாம் அந்த வார்த்தைக்கு மந்திரம் என்று நினைக்கக்கூடாது. ஒவ்வொரு அட்சரங்களுமே மந்திரங்கள். பஹஹா இங்க என்ற ஒரு பதம் இருக்கிறது. இந்த பதம் நம்முடைய மனதிலே ஒரு ஆழமான உறுதியை ஏற்படுத்துகிறது. அதை நாளை தான் இந்த சூத்திரத்தில் நிறைய இடங்களில் பஹஹா பஹஹா என்று சொல்லப்படுகிறது.*

*மிகவும் அற்புதமான மந்திரம் நிறைய சக்திகள் உண்டு அந்த மந்திரத்திற்க்கு. அப்படி இரண்டு இடத்திலும் இரண்டு விதமான அர்த்தங்கள் ஆக வேதம் நமக்கு காண்பித்துள்ளது. இந்த பாக்கிய சூக்தம் என்ன விதமான அர்த்தங்களை நமக்கு சொல்கிறது என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 

Latest ads

Back
Top