• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ ரங்கநாத அஷ்டகம்

praveen

Life is a dream
Staff member
ஆனந்தரூபே நிஜபோதரூபே
ப்ரஹ்மஸ்வரூபே ஸ்ருதிமூர்த்திரூபே |
ஸஸாங்கரூபே ரமணீயரூபே
ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோ மே || 1 ||

அனந்த ஞானத்தின் சத்திய வடிவம்−
ஆனந்தம் தந்திடும் அத்புத வடிவம்;
ஆழியைக் கரம் கொண்ட அருமறை வடிவம்−
அடியேனென் உளம் கொண்ட, அரங்கனின்
வடிவம்!

காவேரிதீரே கருணாவிலோலே
மந்தாரமூலே த்ருதசாரகேலே |
தைத்யாந்தகாலேऽகிலலோகலீலே
ஸ்ரீரங்கலீலே ரவதாம் மநோ மே || 2 ||

காவிரி தீரத்தே, கருணையைப் பொழியும்−
கண்ணனின் லீலையில் விரியுமே விழியும்!
பாவியாம் அரக்கரின் ஆவியை முடித்து,
பாலித்த அரங்கனை, மனமிது விழையும்!

லக்ஷ்மீநிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்பவாஸே |
க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸே
ஸ்ரீரங்க வாஸே ரவதாம் மநோ மே. || 3 ||

அகிலத்தின் ரக்ஷகன், அலர்மகள் ரமணன்!
அருணனில் ஒளிர்பவன், அகத்திலும் ஒளிர்பவன்!
சகல குணத்தொடு கருணையில் அணைப்பவன்,
சீலத்தால் அரங்கன், சிறை பிடித்தனனே!

ப்ரஹ்மாதிவந்த்யே ஜகதேகவந்த்யே முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே |
வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே
ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மநோ மே || 4 ||

அரனும் வணங்க, அகிலமும் வணங்க,
அரியொடு அமரரும் சேர்ந்தே வணங்க,
அருந்தவ முனிவர்கள் அவன் தாள் வணங்க,
அடியனும் அரங்கனின் அடி நயந்தேனே!

ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே வைகுண்ட்டராஜே ஸுரராஜராஜே |
த்ரைலோக்யராஜேऽகிலலோகராஜே ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே || 5 ||

அரனுக்கு ஈசன், அந்த கருடனுக்கீசன்;
அமரரிறை ஈசன், அத்திவத்துக்கும் ஈசன்!
அண்டசராசரமும், அம்மூன்றுலகும்,
ஆளும் அவ்வரங்கனில், அகம் இழந்தேனே!

அமோகமுத்ரே பரிபூர்ணநித்ரே
ஸ்ரீயோகநித்ரே ஸஸமுத்ரநித்ரே |
ச்ரிதைகபத்ரே ஜகதேகநித்ரே
ஸ்ரீரங்கபத்ரே ரமதாம் மநோ மே || 6 ||

அரிதுயில் காணிணும், அபயமே அளிப்பான்;
அலையுடை பாற்கடல், யோகு போல் அயர்வான்!
அடைக்கலம் வேண்டிட அருள் கொடுக்கும் அவன்,
அண்டத்தின் ஆதாரம், அவ்வரங்கனில் தொலைந்தேனே!

ஸசித்ரஸாயீ புஜகேந்த்ரஸாயீ
நந்தாங்கஸாயீ கமலாங்கஸாயீ |
க்ஷீராப்திஸாயீ வடபத்ரஸாயீ
ஸ்ரீரங்கஸாயீ ரமதாம் மநோ மே || 7 ||

அரவணைத் துயில்வான்; ஆலிலைத் துயில்வான்;
அத்தன், அலர்மகள், அவர்மடி விழைவான்;
அதிசய வடிவினில், பாற்கடல் படுப்பான்;−
அரங்க இறை அவன், அடியனை ஆண்டனே!

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புநர்நசாங்கம் யதி சாங்கமேதி |
பாணௌ ரதாங்கம் சரணேம் புஜாங்கம்
யாநே விஹங்கம் ஸயனே புஜங்கம் || 8 ||

ஆகா, அரங்கம் இதற்கீடுண்டோ?
போகும் உயிரிங்கு, புவி திரும்புதலில்லை!
வாகாய் பிறவியும் வருமென்றாலும்
தோதாய் தேகம், தேவனுரு ஏற்குமே!

ரங்கநாதாஷ்டகம் புண்யம்
ப்ராதருத்தாய ய: படேத் |
ஸர்வாந் காமா நவாப்நோதி ரங்கஸாயுஜ்யமாப்நுயாத் || 9 ||

அரங்கனின் தோத்திரமிதை,
அனுதினமும் படிப்பவர்தாம்−
இச்சைகள் நிறைவேறி,
எம்பிரானை, திண்ணம் அடைவரே!!
 

Latest ads

Back
Top