ஸ்ரீரங்கம் பெரிய திருநாள்
திருவரங்கத்தில் எல்லாமே பெரிய என்கிற அடைமொழியுடன் கூடியது.
1) பெரிய கோவில்
2) பெரிய பெருமாள்
3) பெரிய பிராட்டியார்
4) பெரிய கருடன்
5) பெரியவசரம்
6) பெரிய திருமதில்
7) பெரிய கோபுரம்
இந்த வைகுண்ட ஏகாதசித் திருநாளையும் பெரிய திருநாள் என்று கொண்டாடுகிறார்கள். இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்கிற முத்தமிழ் விழா இது. ஆழ்வார்களின் அருளிச்செயலை இயலாக அரையர் ஸ்வாமிகள் சொல்ல, கையில் தாளத்துடன் இசையைச் சேர்க்க, பொருளை நாடகமாக நடித்து அபிநயம் செய்வார்கள்.
திருநெடுந்தாண்டகம் என்கிற திவ்யப்ரபந்தத்தோடு திருநாள் தொடங்கி, பிறகு பத்து நாள்கள் “பகல் பத்து” என்று இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை சேவிப்பார்கள். அதன் பிறகு பத்து நாள்கள் “இராப்பத்து” என்று ஓராயிரம் திருவாய்மொழி பாசுரங்களை சேவிப்பார்கள். கடைசியாக மறுநாள் ஓராயிரம் பாசுரமான இயற்பா கேட்கும் நாள் என்று ஆக மொத்தம் 22 நாள்கள் இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பெருவிழாவிற்குச் சென்று தீந்தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டு, கண்டு, அனுபவித்து இன்புறுவோம்.
~~~~~~~
நன்றி- கோபாலன் அவர்கள் .
திருவரங்கத்தில் எல்லாமே பெரிய என்கிற அடைமொழியுடன் கூடியது.
1) பெரிய கோவில்
2) பெரிய பெருமாள்
3) பெரிய பிராட்டியார்
4) பெரிய கருடன்
5) பெரியவசரம்
6) பெரிய திருமதில்
7) பெரிய கோபுரம்
இந்த வைகுண்ட ஏகாதசித் திருநாளையும் பெரிய திருநாள் என்று கொண்டாடுகிறார்கள். இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்கிற முத்தமிழ் விழா இது. ஆழ்வார்களின் அருளிச்செயலை இயலாக அரையர் ஸ்வாமிகள் சொல்ல, கையில் தாளத்துடன் இசையைச் சேர்க்க, பொருளை நாடகமாக நடித்து அபிநயம் செய்வார்கள்.
திருநெடுந்தாண்டகம் என்கிற திவ்யப்ரபந்தத்தோடு திருநாள் தொடங்கி, பிறகு பத்து நாள்கள் “பகல் பத்து” என்று இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை சேவிப்பார்கள். அதன் பிறகு பத்து நாள்கள் “இராப்பத்து” என்று ஓராயிரம் திருவாய்மொழி பாசுரங்களை சேவிப்பார்கள். கடைசியாக மறுநாள் ஓராயிரம் பாசுரமான இயற்பா கேட்கும் நாள் என்று ஆக மொத்தம் 22 நாள்கள் இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பெருவிழாவிற்குச் சென்று தீந்தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டு, கண்டு, அனுபவித்து இன்புறுவோம்.
~~~~~~~
நன்றி- கோபாலன் அவர்கள் .