• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வைகுண்ட ஏகாதசி 2023 எப்போது ? விரதம் இருக்கும் முறைகள் என்ன?

பொதுவாக விரதம் என்பது மனிதர்களை பக்குவப்படுவதற்காக தான். பக்குவப்பட்ட மனிதன் தவறுகள் செய்ய மாட்டான். இதனால் அவனின் பாவங்கள் குறைந்து, புண்ணியங்கள் அதிகரிக்கும்.*

ஏகாதசி விரதம் பாவங்களை போக்கி, பல மடங்கு புண்ணிய பலன்களை அள்ளி தரக் கூடியதாகும். இறுதியாக வைகுண்டத்தில் பெருமாளின் திருவடியில் இடம் அளிக்கக் கூடியது. அதனால் தான் இதை மோட்ச ஏகாதசி என்கிறோம்.*

வைகுண்ட ஏகாதசி 2023


மார்கழி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு உரிய மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி மிக உயர்வானதாகும். வருடத்திற்கு 24 முதல் 25 ஏகாதசிகள் வரும். இவை அனைத்திலும் விரதம் இருக்க முடியா விட்டாலும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி ஒரே ஒரு நாள் விரதம் இருந்தால், வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.*

2023 ஆம் ஆண்டில் ஜனவரி 02 மற்றும் டிசம்பர் 23 என இரண்டு வைகுண்ட ஏகாதசிகள் வருகின்றன.*

இதில் வருடத்தின் துவக்கத்தில் ஜனவரி 02 ம் தேதி வரும் வைகுண்ட ஏகாதசியன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என இங்கே பார்க்கலாம்.

விரதம் இருக்கும் முறை


விரதம் எப்போது துவக்க, எப்போது நிறைவு செய்வது ?


2023 ம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசியானது ஜனவரி 02 ம் தேதி வருகிறது. முதல் நாள் ஜனவரி 01 ம் தேதியன்று இரவு 11.19 மணிக்கு துவங்கி 02 ம் தேதி இரவு 11.28 வரை ஏகாதசி திதி உள்ளது.*

ஜனவரி 01 ம் தேதி தசமி திதியிலேயே விரதத்தை துவங்கி விட வேண்டும்.

அன்று பகல் பொழுதுடன் உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.

ஜனவரி 02 ம் தேதி அதிகாலை பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழும்.

வாசல் திறப்பை தரிசித்த பிறகு விரதத்தை தொடர வேண்டும். அன்று பகல்
முழுவதும் சர்வ ஏகாதசியாக உபவாசம் இருந்து, ஜனவரி 02 ம் தேதி இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும்.

இரவு முழுவதும் திருமாலின் நாமங்களை சொல்லி பொழுதை கழிக்க வேண்டும்.

ஜனவரி 03 ம் தேதியன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது பாரணை செய்ய வேண்டும்.

பாவம் போக்கும் வைகுண்ட ஏகாதசி விரதம்

பாரணையில் கட்டாயம் இருக்க வேண்டியது


சாம்பார், பொரியல், கூட்டு என எதெல்லாம் செய்ய முடிகிறதோ அதெல்லாம் செய்து இறைவனுக்கு நைய்வேத்தியம் செய்த பிறகு உணவு உண்ணலாம்.

உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டக்காய் நிச்சயம் இடம் பெற வேண்டும். இவை கிடைக்காதவர்கள், அதற்கு பதிலாக வேறு ஏதாவது ஒரு கீரை வகையை சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

எப்போது தூங்க வேண்டும் ?*

ஜனவரி 03 ம் தேதி காலை பாரணை செய்த பிறகு தொடர்ந்து வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பகல் முழுவதும் தூங்கக் கூடாது.

அன்றாட வேலைகளில் ஈடுபட வேண்டும். அன்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கேற்றி வழிபட்ட பிறகு விரதத்தை முழுவதுமாக நிறைவு செய்து விட்டு, தூங்கலாம்.


மாதவிடாய் காலத்தில் விரதம் இருக்கலாமா?

விரதம் யாரெல்லாம் இருக்கலாம் ?

இந்த விரதத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த விரதம் இருப்பதாக இருந்தால் உடல்நிலையை கருத்தில் கொண்டு இருக்கலாம் அல்லது விரதம் இருக்காமல் தவிர்ப்பது நல்லது.

மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வோர், உடல்நலக் குறைவு இருப்பவர்கள் ஆரோக்கியத்தை பொறுத்து விரதத்தை இருக்கலாம்.

மாத விடாய் காலம் என்றால் கோவிலுக்கு செல்லாமல், வீட்டில் உள்ள பூஜை அறைக்கு செல்லாமல் இந்த விரதத்தை இருக்கலாம்.

இறைவனின் நாமத்தை சொல்வதிலும் தவறில்லை.

பிறப்பு, இறப்பு தீட்டு இருப்பவர்கள் குடும்ப வழக்கப்படி முடிவு செய்து கொள்ளலாம்.

பொதுவாக 16 ஆம் நாள் காரியம் முடிந்து, 30 வது நாள் மோட்ச தீபம் போட்டு விட்டால் நெருங்கிய உறவாக இருந்தாலும், தூரத்து உறவாக இருந்தாலும் விரதம் போன்றவற்றை இருப்பதில் தடையில்லை.

குழந்தைகள் விரதம் இருக்க முடியும் என்றால் இருக்கலாம்.

பலன் தரும் மந்திரம்

என்ன மந்திரம் சொல்ல வேண்டும்

வைகுண்டு ஏகாதசியன்று விஷ்ணு சகஸ்ரநாமம் , விஷ்ணு நாமாவளி, விஷ்ணு 108 போற்றி, விஷ்ணு காயத்ரி போன்ற நாமங்களை பாராயணம் செய்யலாம்.*

'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' , 'ஓம் நமோ லட்சுமி நாராயணனே நம' போன்ற மந்திரங்களை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்யலாம்.*
 

Latest ads

Back
Top