விஷ்ணுக்குரிய விரதங்கள் வழிபாடுகள்

praveen

Life is a dream
Staff member
விஷ்ணுக்குரிய விரதங்கள் வழிபாடுகள்

மஹாவிஷ்ணு தீயோரை தண்டித்து நல்லவர்களை #காக்கும் கடவுள் மட்டுமன்று. எல்லாவற்றிலும் எல்லாமாக #நிறைந்திருப்பவர். அவரை வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி #பெருகும்.


ஒரு பௌர்ணமி அன்று, மஹாவிஷ்ணுக்கு முதல் பூஜையை தொடங்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் #இந்த பூஜையை #தொடர வேண்டும். #இந்த பூஜை செய்வதால் மகிழ்ச்சி மட்டுமன்று, #செல்வம் சேரும், #புகழ் கிட்டும்,
#பொருளாதாரசிக்கல்தீரும்.


மஹாவிஷ்ணு பூஜைக்கு #தேவையான #பொருள்கள் :


நிறை நாழி நெல், துளசி தளம், வாசனை திரவியங்கள், இனிப்பு பலகாரங்கள், நெற்பொரி, செங்கதலிப்பழம், பால், தேன், இளநீர், துருவிய தேங்காய், வெல்லம் ஆகியன சேர்த்து பிசைந்த அவல், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் .


பௌர்ணமியன்று, வீட்டிலுள்ள ஓர் அறையை சுத்தம் செய்து, கிழக்கு முகமாக ஒரு பீடம் அமைக்க வேண்டும். அந்த பீடத்தில் துளசி தளம் நிரப்பி அதன் மீது நிறை நாழி நெல் வைக்க வேண்டும்.


துளசி தளத்தால் கட்டிய சரங்களால் நிறை நாழியை அலங்காரம் செய்ய வேண்டும். பின் அதற்கு மஞ்சள், குங்குமம் திலகமிடவும். அதனருகே, நெய் ஊற்றி ஏற்றிய விளக்கை வைக்கவும். தனியாக ஒரு தட்டில் அருகம்புல் பரப்பி, அதன் மீது மஞ்சள் தூள் அல்லது சாணத்தால் #செய்த விநாயகரை வைத்து, மஞ்சள் #குங்கும திலகமிடவும்.


வீட்டில் இருபவருள் எவர் மூத்தவரோ #அவரை பூஜை செய்ய #சொல்லவும். முதலில் விநாயகரை பூஜித்து கற்பூர தூபம் காட்டி எல்லோரும் வணங்கவும் . அதற்கடுத்து நிறை நாழியிலுள்ள மஹாவிஷ்ணுவிற்கு கற்பூர தூபம் காட்டி, ஸ்ரீ மஹாவிஷ்ணு #தோத்திரம், மஹாவிஷ்ணு #நாமாவளி கூறி,
#துளசி அர்ச்சனை செய்யவேண்டும். அதற்கு பிறகு #கற்பூர தூப தீபம் காட்டி எல்லாரும் #வணங்க வேண்டும்.


இறைவனுக்கு படைத்த பிரசாதங்களை, #பிறருக்கு கொடுத்து விட்டு #பின்னரே #வீட்டிலுள்ள அனைவரும் #எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி
#ஒவ்வொரு மாதமும் #பௌர்ணமி அன்று இந்த மஹா விஷ்ணு பூஜை செய்தால் #மன_மகிழ்ச்சியும், குடும்பத்தினர் அனைவர்க்கும் #எல்லா நன்மைகளும் கிட்டும்.
 
Back
Top