• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

மலரும் நினைவுகள்...

Status
Not open for further replies.

kk4646

Active member
மலரும் நினைவுகள்...

13903196_494135327460359_1685456703592328742_n.jpg


உரலும் உலக்கயும்.......




[video=youtube;-eagm5_Jmbw]https://www.youtube.com/watch?v=-eagm5_Jmbw[/video]
 
அந்தக்காலம் நன்றாகத்தான் இருந்தது.

ஒரு தடவை ரேடியோவில் கேட்டாலே சினிமாப்பாட்டு மனப்பாடம் ஆச்சு.

பேருந்துக்குள் கொண்டுவந்து தினத்தந்தி மாலைமுரசு விற்பார்கள். தினத்தந்தியில் வருடக்கணக்காக கன்னித்தீவு விடாமல் படித்தோம்.

மிதிவண்டி வைத்திருந்தோம். பஞ்சர் ஒட்டத்தெரிந்திருந்தது.

பள்ளிக்கு செருப்பு போடாமல் போனோம். முள் குத்தினால் சேப்டி பின் ஆல் எடுத்துவிடுவோம்.

எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.

ரஜினி, கமல், KB படம் ரிலீஸ் என்றால் ஒரு மாசம் அலசுவோம்.

பேருந்தில் எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும்.

கல்யாண வீடுகளில் பாய் போட்டு சாப்பாடு.

கபில் தேவின் விளையாட்டு ஐந்து நாட்கள் டெஸ்ட் மாட்சில் fantastic.

குமுதம் விகடன் கல்கி வந்தவுடன் தொடர்கதை முதலில் படிக்க அக்கா தங்கைகளுடன் அடிபிடி சண்டை.

ரேடியோவில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலி பரப்பு கேட்டது சுகமான அனுபவம்.

காலை வேளையில் வீடுகளின் முன் பெண்கள் கோலாமிடுவதில் போடும் போட்டி ரசிக்க சுகமாயிருந்தது.

மாட்டுவண்டி பிடித்து பக்கத்து ஊரில் டென்ட் கொட்டகையில் சினிமாவுக்கு போக 2 நாள் முன்பே திட்டமிடுவோம்.

தீபாவளி பண்டிகை கொண்டாட ஒருமாதத்துக்கு முன்பே எதிர்பார்ப்பொடு தயாராவோம்.

புது ஸ்கூல் யுனிபார்ம் தான் சிலருக்கு தீபாவளி ட்ரெஸ்.

வானொலி நாடகங்களை இரவு வேளைகளில் ரசித்து கேட்போம்.

எல்லாரும் படித்தது அரசுப் பள்ளீகளில் இலவசமாகத்தான்.

நெடுஞ்சாலைகளில் எப்போதாவது பேருந்து வரும்.

மழை நின்று நிதானமாக பெய்யும்

தமிழாசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.

வேலை கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்தவன் எந்தக்குடும்பத்திலும் பாரமாக கருதப்படவில்லை.

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.

க்ரிக்கெட் பற்றி வாக்குவாதம் செய்து அடி பிடியாக முடிந்ததுண்டு.

சந்தைக்குப்போக பத்து ருபாய் போதும்

அம்மா பக்கத்தில் படுத்து நிம்மதியாக உறங்கினோம்.

கொளுத்தும் வெயிலில் செருப்பு இல்லாமல் நடந்தோம்.

முடிவெட்ட 2 ருபாய் தான். சவரத்துக்கு 50 பைசா

பருவப்பெண்கள் பாவாடை தாவணி உடுத்தி தேவதைகளாக வலம் வந்தனர்.

சுவாசிக்க நல்ல காற்று இருந்தது. குடிதண்ணீருக்கு காசு கொடுத்து வாங்கவில்லை.

தெருவில் சிறுமிகள் பாண்டி ஆடுவர். நாங்கள் நுங்கு வண்டி ஒட்டுவோம்.

டாக்டர் வீட்டுக்கே வருவார். ரோஸ் கலரில் மிக்சர் தருவார். இரண்டு நாட்களில் உடம்பு குணமாகிவிடும்.

காதலிப்பதில் ஒரு த்ரில் இருந்தது.

சினிமாப்பாட்டு புத்தகம் கிடைக்கும்

எழுத்தாளர் சுஜாதா கதைகள் சிக்குனு இருக்கும். சாண்டில்யன் கதைகள் எங்களை கரிகாலனாக்கியதுண்டு.

மயில் இறகுகள் புத்தகத்துக்குள் குட்டி போட்டன-நிஜமாகவே.

ஐந்து ரூபாயை தொலைத்து விட்டு அப்பாவிடம் அடிவாங்கியதுண்டு.

மூன்றாம் வகுப்பு முதல் தான் ஆங்கிலம்

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் ட்ரவுசர்.

பி.யூ.சியில் வேட்டி.

பக்கத்து வீட்டு மீனுக்குட்டி குடுத்த அந்த ஒரே ஒரு முத்தம் ஏழு ஜன்மத்துக்கும் மறக்காது.

மொத்தத்தில் மரியாதையும் சந்தோஷமும் நிறையவே இருந்தது

தொலைந்துபோனவை நம் நாட்கள் மட்டுமல்ல. நம் சுகங்களும் மகிழ்ச்சியும் கூடத்தான்.
 
Last edited:
பல நினைவுகள் எனக்கும் மலர்ந்தன!

நானும், என் உடன் பிறப்புகளும் படித்ததும் அரசுப் பள்ளியில், இலவசமாகத்தான்! ஊசி போடப்

பஞ்சாயத்து மருத்துவர் வந்தால், ஓட்டம் பிடிப்போம், அப்பாவிடம். ( மருத்துவரான் அவர்தான்

எங்களுக்கு ஊசி போடலாம்! ) ஒரு தடவை நெல் கொட்டும் பெரிய தொட்டியில் ஒளிந்துகொண்டு,

அந்த ஊசி மாமாவிடமிருத்து தப்பித்தது இன்னும் பசுமையாய் நினைவில்!

பக்கத்து வீட்டு முதலியார் மாமாவின் வைக்கோல் போரில் தாத்தாவுக்குத் தெரியாமல் சறுக்கு

விளையாட்டு விளையாடி, இரவில் வயலின் வாசித்ததும் உண்டு - வேறு என்ன? சொறிதான்!

நவராத்திரிக்கு பல விதமாய்ச் சுண்டல் கொடுப்பார்கள் மாமிகள்; எங்கள் பாட்டை ரசித்த பின்பு!

'மாமவது ஸ்ரீ சரஸ்வதி', 'ஸரஸிஜ நாப ஸோதரி', 'பாவயாமி' இவை அப்போதைய ஹிட்டுகள்.

பின் 'வடவரையை மத்தாக்கி' இதில் சேர்ந்துவிட்டது!

பாட்டி திவசத்தை ஆவலுடன் எதிர்பார்ப்போம்; எள்ளுருண்டை அப்போதுதானே கை நிறையக்

கிடைக்கும்! எங்கள் மூன்று சித்தப்பாக்களும் குடும்ப சகிதம் வருவார்கள்; பின் என்ன? லூட்டிதான்.

பாவம் அம்மா! எப்படித்தான் எங்கள் பட்டாளத்துக்கு ருசியாகச் சமைத்துப் போட்டார்களோ?!

ஹனுமத் ஜயந்திக்கு பத்து ரூபாய் கட்டினால், எல்லோருக்கும் மதியச் சாப்பாடு கோவிலில்; அந்த

ராமராவ் மாமா, குழம்பு, ரசத்தைத் தவிர அனைத்துப் பண்டங்களையும் கையாலேயே பறிமாறுவார்!

மாலையில் நாங்கள் சகோதரிகள் பாட, அண்ணன் மிருதங்கம் வாசிப்பான்! பிரதி சனிக் கிழமையும்

இது போலப் பாடுவதுண்டு; எங்கள் குரு, தாத்தாதான் 'லிஸ்ட்' எழுதித் தருவார்.

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். இன்னும் என்னென்னவோ நினைவுகள் அலை மோதுகின்றன!

ஆமாம்; அது ஒரு இனிமையான பொற்காலமே - இது நிஜம்!
 
அந்தக்காலம் நன்றாகத்தான் இருந்தது.

ஒரு தடவை ரேடியோவில் கேட்டாலே சினிமாப்பாட்டு மனப்பாடம் ஆச்சு.

பேருந்துக்குள் கொண்டுவந்து தினத்தந்தி மாலைமுரசு விற்பார்கள். தினத்தந்தியில் வருடக்கணக்காக கன்னித்தீவு விடாமல் படித்தோம்.

மிதிவண்டி வைத்திருந்தோம். பஞ்சர் ஒட்டத்தெரிந்திருந்தது.

பள்ளிக்கு செருப்பு போடாமல் போனோம். முள் குத்தினால் சேப்டி பின் ஆல் எடுத்துவிடுவோம்.

எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.

ரஜினி, கமல், KB படம் ரிலீஸ் என்றால் ஒரு மாசம் அலசுவோம்.

பேருந்தில் எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும்.

கல்யாண வீடுகளில் பாய் போட்டு சாப்பாடு.

கபில் தேவின் விளையாட்டு ஐந்து நாட்கள் டெஸ்ட் மாட்சில் fantastic.

குமுதம் விகடன் கல்கி வந்தவுடன் தொடர்கதை முதலில் படிக்க அக்கா தங்கைகளுடன் அடிபிடி சண்டை.

ரேடியோவில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலி பரப்பு கேட்டது சுகமான அனுபவம்.

காலை வேளையில் வீடுகளின் முன் பெண்கள் கோலாமிடுவதில் போடும் போட்டி ரசிக்க சுகமாயிருந்தது.

மாட்டுவண்டி பிடித்து பக்கத்து ஊரில் டென்ட் கொட்டகையில் சினிமாவுக்கு போக 2 நாள் முன்பே திட்டமிடுவோம்.

தீபாவளி பண்டிகை கொண்டாட ஒருமாதத்துக்கு முன்பே எதிர்பார்ப்பொடு தயாராவோம்.

புது ஸ்கூல் யுனிபார்ம் தான் சிலருக்கு தீபாவளி ட்ரெஸ்.

வானொலி நாடகங்களை இரவு வேளைகளில் ரசித்து கேட்போம்.

எல்லாரும் படித்தது அரசுப் பள்ளீகளில் இலவசமாகத்தான்.

நெடுஞ்சாலைகளில் எப்போதாவது பேருந்து வரும்.

மழை நின்று நிதானமாக பெய்யும்

தமிழாசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.

வேலை கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்தவன் எந்தக்குடும்பத்திலும் பாரமாக கருதப்படவில்லை.

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.

க்ரிக்கெட் பற்றி வாக்குவாதம் செய்து அடி பிடியாக முடிந்ததுண்டு.

சந்தைக்குப்போக பத்து ருபாய் போதும்

அம்மா பக்கத்தில் படுத்து நிம்மதியாக உறங்கினோம்.

கொளுத்தும் வெயிலில் செருப்பு இல்லாமல் நடந்தோம்.

முடிவெட்ட 2 ருபாய் தான். சவரத்துக்கு 50 பைசா

பருவப்பெண்கள் பாவாடை தாவணி உடுத்தி தேவதைகளாக வலம் வந்தனர்.

சுவாசிக்க நல்ல காற்று இருந்தது. குடிதண்ணீருக்கு காசு கொடுத்து வாங்கவில்லை.

தெருவில் சிறுமிகள் பாண்டி ஆடுவர். நாங்கள் நுங்கு வண்டி ஒட்டுவோம்.

டாக்டர் வீட்டுக்கே வருவார். ரோஸ் கலரில் மிக்சர் தருவார். இரண்டு நாட்களில் உடம்பு குணமாகிவிடும்.

காதலிப்பதில் ஒரு த்ரில் இருந்தது.

சினிமாப்பாட்டு புத்தகம் கிடைக்கும்

எழுத்தாளர் சுஜாதா கதைகள் சிக்குனு இருக்கும். சாண்டில்யன் கதைகள் எங்களை கரிகாலனாக்கியதுண்டு.

மயில் இறகுகள் புத்தகத்துக்குள் குட்டி போட்டன-நிஜமாகவே.

ஐந்து ரூபாயை தொலைத்து விட்டு அப்பாவிடம் அடிவாங்கியதுண்டு.

மூன்றாம் வகுப்பு முதல் தான் ஆங்கிலம்

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் ட்ரவுசர்.

பி.யூ.சியில் வேட்டி.

பக்கத்து வீட்டு மீனுக்குட்டி குடுத்த அந்த ஒரே ஒரு முத்தம் ஏழு ஜன்மத்துக்கும் மறக்காது.

மொத்தத்தில் மரியாதையும் சந்தோஷமும் நிறையவே இருந்தது

தொலைந்துபோனவை நம் நாட்கள் மட்டுமல்ல. நம் சுகங்களும் மகிழ்ச்சியும் கூடத்தான்.


hi

mudhal mutham/MUDHA THIRUTTU DHAM ENTRUM MARAKKA MUDIYATHU.....FIRST KISS OF THE LADY AND LAST PUFF OF

CIGARETTE ALWAYS SWEET....

 
Very nice and happy to see all the things. Those were really very fantastic days.A dream to be cherished.Since these are all never going to happen again.
 
hi

especially in brahmin villages/agraharams.....GALS WITH ON NAVARATHRI DAYS.....REALLY DEVATHAIS.....many boys feel the same....

in those days.....its called......தாவணி கனவுகள்....we have 3 brahmin gals in our high school class...we keep/feel/share

as JODIs.....we are ONLY THREE BRAHMIN BOYS TOO.....NOW THOSE GALS MIGHT BE '' PATTIS''' TOO.....WHO KNOWS?
 
Last edited:
I remember the kids, dressed as Krishna / Radha, visiting each house to invite the mAmis for their kolu.

Also, the Kannadigas used to send a small painted mud pot with a cute lid, containing a home made small toy

in sugar (they had special moulds to make these) and two tiny pieces of sugar cane, as Sankranthi gift to friends. :)
 
Status
Not open for further replies.
Back
Top