போஜராஜன் செய்த தந்திரம் !

Status
Not open for further replies.
போஜராஜன் செய்த தந்திரம் !

bhoja-raja-and-his-minister.jpg


உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் அவனை ஆதரித்த மன்னன் போஜனும் இணைபிரியா நண்பர்கள். ஒரு நாள் சபைக்கு காளிதாசன் வரவில்லை. மன்னனுக்கு காளிதாசன், தன்னைப் பற்றி உண்மையாக என்ன நினைக்கிறான் என்று அறிய ஆவல். உடனே ஒரு தந்திரம் செய்தான். மந்திரியை அழைத்தான். காளிதாசன் இருக்கும் இடத்துக்குப் போய் நான் இறந்துவிட்டதாக அறிவியுங்கள். அவன் கட்டாயம் என்னைப் பற்றி ஏதாவது சொல்லுவான் அல்லது கவி பாடுவான். அதை வைத்தே காளிதாசனின் மனநிலையைக் கண்டு பிடித்துவிடலாம் என்றான்.

மந்திரியும் மன்னனும் காளியின் வீட்டுக்குப் போனார்கள். மன்னன் ஒரு சுவருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். மந்திரி அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாக முகத்தை வைத்துக் கொண்டு போஜ ராஜன் காலமாகி விட்டான் என்று சொன்னான். அவ்வளவுதான். அடிபட்ட இரண்டு கிரவுஞ்சப் பறவைகளில் ஒன்று விழுந்தவுடன் வேடன் வால்மீகிக்கு ராமாயணம் என்னும் கவிதை வெள்ளம் கரை புரண்டு வந்தது போல காளிதாசன் வாக்கிலும் கவிதை வெடித்தது. (தாரா என்பது அவர்கள் வாழ்ந்த நகரின் பெயர்).

அத்ய தாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதீ
பண்டிதா: கண்டிதா: சர்வே போஜராஜே திவம் கதே
என்று பாடினான்

இதன் பொருள்: தாரா நகரம் ஆதரவு இழந்து தவிக்கிறது, சரஸ்வதி தேவியும் ஆதரவு இழந்து தவிக்கிறாள். போஜ ராஜன் போய்விட்டதால் கவிஞர்களும் அறிஞர்களும் துக்கத்தில் மூழ்கிவிட்டார்கள்.

போஜராஜனுக்கு இதை கேட்டவுடன் மகிழ்ச்சி தாங்கவில்லை. சுவருக்குப் பின்னால் இருந்து ஓடிவந்து காளிதாசனைக் கட்டிக்கொண்டான். அடுத்த நிமிடமே பொங்கி எழுந்தது இன்னும் ஒரு கவிதை.

அத்ய தாரா சதா தாரா சதாலம்பா சரஸ்வதீ
பண்டிதா: கண்டிதா: சர்வே போஜராஜே புவம் கதே என்று பாடினான்.

இதன் பொருள்: தாரா நகரம் ஆதரவு பெற்று திகழ்கிறது, சரஸ்வதி தேவியும் இழந்த ஆதரவை மீண்டும் பெற்றாள். போஜ ராஜன் பூமிக்குத் திரும்பிவிட்டதால் கவிஞர்களும் அறிஞர்களும் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள்.

சம்ஸ்கிருதம் ஒரு அற்புதமான மொழி. உலகிலேயே கணித முறைப்படி அமைந்த ஒரே மொழி ! இன்றுள்ள மொழிகளை ஆராய்ந்த அறிஞர்கள் கம்ப்யூட்டரில் கொடுக்கக்கூடிய எல்லா தகுதிகளும் பெற்ற மொழி இதுதான் என்று கூறுவதற்கும் இதுவே காரணம். மேற்கண்ட இரண்டு கவிதைகளையும் சம்ஸ்கிருதம் அறியாதவர்கள் படித்தாலும் பொருள் விளங்கும். ஒரு சில எழுத்துக்களை மாற்றினாலேயே அர்த்தம் முழுவதையும் மாற்ற முடியும்.

சம்ஸ்கிருதம் பற்றி சுவாமிநாதன் எழுதிய மற்ற கட்டுரைகள்:

1.சம்ஸ்கிருதம் ஒரு சமுத்திரம்
2.பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு
3. Ancient Sanskrit Inscriptions in strange places
4. Old Sanskrit Inscriptions in Mosques and Coins
5. Sanskrit inscription and Magic Square on Tortoise

Please read all the above five articles in my blogs.

******************
 
Sir,

I heard a different version. Bhojaraja heard his own sarma sloka while alive.
But the moment Kalidasa composed the sarma sloka, the kind died. Because
Kalidasa's words come true ( he got the blessings of mother Kali )
 
The source for my Tamil Version is the excellent book "The Wonder That is Sanskrit" published by Sri Aurobindo Story ,Pondicherry. It was written by two Sanskrit scholars.

But you are right in saying that there is a different version. I myself have heard that both of them fought, kalidasa went in anger and to find his whereabout Boja did this trick. Since I have been doing research in Kalidasa for the past forty years I can tell you one big truth.

All we hear about Kalidasa is from hearsay stories, spread by mouth, recorded later in Subhasitha rathna Bhandakara books. They were not authentic. Kalidasa is still a mystery man that his date was put between 2nd century BC to fourth century AD (Gupta period).

There was another story about him dying in Sri Lanka. There might have been more than one Kalidasa like we had six Avvaiyars in 2000 years. Whatever may be the truth anything great is attributed to him like we Brahmins attributed more than 225 hymns to Adi Shankara. But in reality they were composed by various people, may be different Shankaracharyas.
 
Status
Not open for further replies.
Back
Top