• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நவராத்திரியின் 9 நாட்களும் 9 பிரசாதங்களை செய்து நெய்வேத்தியம் செய்யவேண்டும்

praveen

Life is a dream
Staff member
முதல் நாள்:-

காலை: பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும், இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.

மாலை: துர்க்கைக்கும் உகந்த தான சிவப்பு காராமணி சுண்டலை வினியோகிக்கலாம்.

இரண்டாம் நாள்:-

காலை: தயிர் சாதம் பிரசாதம், இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.

மாலை: பாசிப்பருப்பை சுண்டலாக நிவேதனம் செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.

மூன்றாம் நாள்:-

காலை: தேங்காய் சாதத்தை பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி செல்வம் பெருகும். எதிர்ப்புகள் விலகும்.

மாலை: அன்றைய தினம் கொண்டைக்கடலை சுண்டல் விநியோகிக்கலாம்.

நான்காம் நாள்:-

காலை: எலுமிச்சை சாதத்தை பிரசாதமாக அளிக்கலாம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.

மாலை: அரிசியுடன் வெல்லம், தேங்காய் சேர்த்து அரிசிப்புட்டு செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.

ஐந்தாம் நாள்:-

காலை: வெண்பொங்கலை பிரசாதமாகக் கொடுப்பது உகந்தது. இதன் மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.

மாலை: இது தவிர நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் கொடுப்பது நல்லது.

ஆறாம் நாள்:-

காலை: புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன் மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.

மாலை: கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு, போன்றவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.

ஏழாம் நாள்:-

காலை: சர்க்கரைப் பொங்கல், இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும், பொருளாதார முன்னேற்றம் ஏற்பாடும்.

மாலை: அரிசி கலந்த தேன் குழல், தட்டை முதலியவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.

எட்டாம் நாள்:-

காலை: பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, ஆகியவை சேர்ந்த பருப்பு பாயசத்தை, உடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.

மாலை: மாலையில் நவதானியம் சுண்டல் கொடுக்கலாம்.

ஒன்பதாம் நாள்:-

காலை: சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசலை நிவேதனம் செய்யலாம்.

மாலை: கருப்பு கொண்டைக்கடலை சுண்டலுடன் தாம்பூலத்துடன் கொடுக்கலாம்
 
hi

thanks...a small correction.....
instead of படைக்க வேண்டும்.....may be நெய்வேத்தியம் /ஆராதனம் செய்யவேண்டும்...looks like more appropriate

brahminical words .
 
hi

thanks...a small correction.....
instead of படைக்க வேண்டும்.....may be நெய்வேத்தியம் /ஆராதனம் செய்யவேண்டும்...looks like more appropriate

brahminical words .
This has been corrected.
 

Latest ads

Back
Top