Brahmanyan
Active member
பல நேரங்களில் பல மனிதர்கள் — பாரதி மணி (Bharati Mani)
திரு பாரதி மணி அவர்களின் கட்டுரை களின் தொகுதி பல நேரங்களில் பல மனிதர்கள்இன்று படித்து முடித்தேன் . மிகவும் சுவாரஸ்யமான தொகுப்பு. இதோ அவர் எழுதிய ஒரு கட்டுரை
"நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம் — பாரதி மணி"
நான் பிறந்தது நாஞ்சில் நாட்டின் நாகர்கோவிலையடுத்த பார்வதிபுரம் கிராமமாக இருந்தாலும், என் பிள்ளைப் பிராயம் திருவனந்தபுரத்தில் கழிந்தது. பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை சொன்னதைப்போல, நானும் ‘கொடுமலையாளக் குடியிருப்புடையேன்‘. அப்பாவுக்கு திருவிதாங்கூர் அரண்மனையில் [கொட்டாரம்] ’காரியஸ்தர்‘ வேலை. என் தாத்தாவுக்கும் இதே வேலை தானாம். ராஜாங்க உத்தியோகம்! தாத்தா காலத்தில் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா ஆண்டபோது, தினமும் வீட்டுக்கு மதிய இரவு உணவு ’பகர்ச்சை‘ என்ற பேரில் கொட்டாரத்திலிருந்து வருமாம்! ஸ்ரீ சித்திரைத்திருநாள் பால ராமவர்மா திருவிதாங்கூரின் கடைசி மஹாராஜாவாகவும், பிறகு திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துக்கு ’ராஜப்பிரமுக்‘ [ஆளுநர்] ஆகவும் பதவி வகித்தார். அவருக்கு திவானாக ஸர். C.P. ராமஸ்வாமி அய்யர் இருந்தார்......
மேலும் படிக்க Balhanuman's Blog இணைய தளத்தில் கட்டுரையை கொடுத்திருக்கிறார்கள்
:12 | March | 2011 | Balhanuman's Blog
திரு பாரதி மணி அவர்களின் கட்டுரை களின் தொகுதி பல நேரங்களில் பல மனிதர்கள்இன்று படித்து முடித்தேன் . மிகவும் சுவாரஸ்யமான தொகுப்பு. இதோ அவர் எழுதிய ஒரு கட்டுரை
"நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம் — பாரதி மணி"
நான் பிறந்தது நாஞ்சில் நாட்டின் நாகர்கோவிலையடுத்த பார்வதிபுரம் கிராமமாக இருந்தாலும், என் பிள்ளைப் பிராயம் திருவனந்தபுரத்தில் கழிந்தது. பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை சொன்னதைப்போல, நானும் ‘கொடுமலையாளக் குடியிருப்புடையேன்‘. அப்பாவுக்கு திருவிதாங்கூர் அரண்மனையில் [கொட்டாரம்] ’காரியஸ்தர்‘ வேலை. என் தாத்தாவுக்கும் இதே வேலை தானாம். ராஜாங்க உத்தியோகம்! தாத்தா காலத்தில் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா ஆண்டபோது, தினமும் வீட்டுக்கு மதிய இரவு உணவு ’பகர்ச்சை‘ என்ற பேரில் கொட்டாரத்திலிருந்து வருமாம்! ஸ்ரீ சித்திரைத்திருநாள் பால ராமவர்மா திருவிதாங்கூரின் கடைசி மஹாராஜாவாகவும், பிறகு திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துக்கு ’ராஜப்பிரமுக்‘ [ஆளுநர்] ஆகவும் பதவி வகித்தார். அவருக்கு திவானாக ஸர். C.P. ராமஸ்வாமி அய்யர் இருந்தார்......
மேலும் படிக்க Balhanuman's Blog இணைய தளத்தில் கட்டுரையை கொடுத்திருக்கிறார்கள்
:12 | March | 2011 | Balhanuman's Blog
Last edited: