பயணக் க(வி)தைகள்...

காட்டினுள்ளே செல்வது போலுள்ள அமைப்பு!

IMG_0683.JPG
 

ஒரு பெரிய கரிய கரடியைப் பதப்படுத்தி, அதை
ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ளனர்!


IMG_0679.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 11

காலிம்பாங்க்கை நோக்கிச் சென்ற சமயத்தில்
காரிருள் பரவியதால், டீஸ்தா தெரியவில்லை!

சொல்லொணா வேகத்தில் கார் செல்ல, பெரிய
பள்ளத்தில் இடப்புறச் சக்கரங்கள் இறங்கிவிட,

இதயத் துடிப்பு நின்றது போலப் பயம் பரவியது,
இந்த இருட்டில் எப்படி உதவி கிடைக்குமென்று!

எங்கிருந்தோ வந்தது போன்று இரண்டு இளசுகள்
அங்கு வந்து எமக்கு உதவினர் இறையருளாலே!

எங்கள் இருவரையும் இறங்கச் சொல்லியவர்கள்,
தங்கள் பலத்தால் காரை மிக லாவகமாகத் தூக்கி,

மீண்டும் பாதையில் ஏற்றியது வியக்க வைத்தது;
மீண்டும் பயணம் தொடர்ந்தாலும், பயம் வந்தது!

இப்படி வந்த பயத்தினால், பாதையினைத் தவிர
அப்படி இப்படிப் பார்க்கவே மனமும் வரவில்லை!

இருள் தரும் பயம் வெளிச்சத்தில் வருவதில்லை!
இறக்கமான பாதையில் இன்று பயணம் இனித்தது!

சிறிய பெரிய கூழாங் கற்கள் ஆற்றுப் படுகையில்;
அரிய வெண்ணிற மணலே வியாபித்து இருந்தது!

ஓரிடத்தில் லாரியில் மணலை நிரப்புகின்றார்கள்;
ஓஹோ! இங்கும் மணற் கொள்ளை நடக்கிறதோ?

மழை கொஞ்சம் பெய்திருந்ததால் நீரில் கலக்கம்;
மழை அதிகமானால் வெள்ளம் பெருகிவிடுமாம்!

சில இடங்களிலே கரடுமுரடான பாதை; இன்னும்
ல இடங்களில் புதிய பாதை மிக அருமையாக!

தொடரும் ...................

 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 12

பாக்டோக்ரா விமான நிலையம் எட்டும் சமயம்
பாதையில் வேகமாகச் செல்ல விடாது செய்தது

கொட்டும் பெரு மழை! விமான நிலையத்திலோ
கெடுத்தது உடையை, சேற்றை வாரியடித்த கார்!

மனத்தில் @#$%^ என்று அந்த ஓட்டுனனை வைது,
கணத்தில் தேடினேன் ஒப்பனை அறை! வழியில்

ஒரு புத்த பிக்ஷுவிடம்,'Way please, Sir!' எனக் கூற,
ஒரு வினோதப் பார்வையுடன் அவர் பதிலுரைக்க,

அறிந்தேன் அவர் பெண் துறவி என்ற சங்கதியை!
சிரித்து, மழுப்பி, அங்கிருந்து நழுவினேன் நான்!

உடைகளைச் சரி செய்த பின், செக் இன் செய்திட
உடைமைகளை அனுப்பி, சிற்றுண்டி உண்டு, எம்

விமானம் புறப்படும் அழைப்புக்குக் காத்திருந்து,
விமானம் சரியாகப் புறப்பட, டென்ஷன் குறைய,

நான்கு மணிக்குள் கௌஹாத்தி அடைந்ததும்,
அங்கு கிடைத்தது குளு குளு ஷட்டில் பேருந்து!

விடுதியின் வாயிலில் இறங்கி, உடைமைகளை
சடுதியில் அறையில் இட்டுப் பூட்டி, அப்போதே

துள்ளுந்து ஒன்றைப் பிடித்து, விரைந்தோம் என்
உள்ளம் கவர் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்திட!

ஆண் பெயரை உடைய ஒரே நதி 'பிரம்மபுத்ரா'!
தான் சிவந்து, மறைய விழைந்திடும் ஆதவன்!

சிவந்த சூரிய ஒளி நீண்டு நதியில் பிரதிபலிக்க,
உவந்து போனது உள்ளம் அவ்வழகினை ரசிக்க!

தொடரும் ...........................

 
ஆண் பெயரை உடைய ஒரே நதி 'பிரம்மபுத்ரா'!

Arial view of the mighty Brahmaputra from the aircraft......

IMG_0861.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 13

இயற்கையின் வண்ண ஜாலங்களை மனிதரால்
செயற்கையாகத் தோற்றுவிதல் மிகவும் அரிது!

எத்தனை சிவந்த விளக்குகளை அடுக்கினாலும்,
அத்தனை சிவந்த வானத்தைக் காட்ட இயலுமா?

தங்க நிறத் தட்டாக விளங்கிய சூரியன், சுற்றிலும்
மங்காத சிவப்பு வர்ணத்தை வானில் பரப்பினான்!

சில நொடிகளில் அடிப்பாகம் சிவக்கத் தொடங்கி,
சில நொடிகளில் முழுவதும் சிவக்கக் கண்டதும்,

புது மணப் பெண்ணிற்கு வெட்கம் பரவி, வதனம்
முழுதும் சிவப்பது என் நினைவில் நிழலாடியது!

உலகைக் காண வெட்கம் வந்தது போல் ஆதவன்
உடனே மறையத் துவங்கினான்; அந்த நேரத்தில்

நதியில் தெரிந்த பளீரென்ற பிரதிபலிப்பும், மங்கி
நதியில் மெல்ல இருள் பரவ ஆரம்பிக்க, அங்கே

தயார் நிலையிலிருந்த கொசுப் பட்டாளம் ஒன்று
தயாரானது எம் குருதியால் தம் தாகம் தீர்த்திட!

ஓட்டமாக ஓடிவந்து, துள்ளுந்தில் ஏறிக்கொண்டு,
ஓட்டுனரிடம் விடுதிக்குப் போகச் சொன்னோம்!

தென்னிந்தியச் சிற்றுண்டிகள் சூடாகக் கிடைக்க,
என் மனம் சந்தோஷித்தது, மோமோ இல்லாது!

மறு நாள் அதிகாலை நீராடிப் பட்டுடுத்தி, உடனே
புறப்பட்டோம் 'காமாக்யா தேவி' தரிசனத்திற்கு!

சக்தி வாய்ந்த அம்மன்; யோனி வடிவத்தில் ஒரு
சக்தி பீடமான திருக்கோவிலில் அருளுகின்றாள்!

தொடரும் ...............

 
சில நொடிகளில் முழுவதும் சிவக்க............

உலகைக் காண வெட்கம் வந்தது போல் ஆதவன்

உடனே மறையத் துவங்கினான்; அந்த நேரத்தில்

நதியில் தெரிந்த பளீரென்ற பிரதிபலிப்பும், மங்கி
நதியில் மெல்ல இருள் பரவ ஆரம்பிக்க......



IMG_0882.JPG


P.S: The correct date of this picture is May 24th, 2014. :)
 
I considered myself very lucky to have taken the snaps of the sun set from the banks of the mighty Brahmaputra!

If clouds had formed in the evening, I would have missed this wonderful chance. :photo:
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 14

ஒரே வரிசையில் நின்றன துள்ளுந்துகள்; அவை
ஒரே போல வாடகை நிர்ணயித்துள்ளன. தேவி

ஆலயம் சின்னக் குன்றில் அமைந்திருந்தாலும்,
ஆலயம் செல்ல அழகான ஒரு வளைந்த பாதை.

அடிக்கடி செல்வதால் துள்ளுந்து பறந்தது அன்று!
அடைந்தோம் ஆலயத்தைச் சில நிமிடங்களில்!

தர்ம தரிசனம் செய்வோர் அதிகாலை முதல் கூடி,
தங்கள் ஆர்வத்தைப் பிரகடனம் செய்ய, நாங்கள்

விசேஷ தரிசனக் க்யூவில் செல்ல டிக்கட் வாங்க
விரைந்தோம்; ஒருவர் கட்டணம் ரூபாய் ஐநூறு.

சுமார் ஐம்பது பேர்கள்தான் இருந்தனர் க்யூவில;
சுமார் அரை மணி நேரத்தில் தரிசனம் ஆயிற்று!

இருண்ட குகை போல அமைப்பு; குறுகிய பாதை;
இரு வரிசைகளாக மக்கள் உள்ளே சென்று, பின்

ஒரு வரிசையாக மாறி, படிகளில் இறங்கி, பின்
ஒரு சில நொடிகளில் வெளியேற அதே படிகள்!

நிறையப் பூக்கள் தேவியின் வடிவை மூடியிருக்க,
நீர் இடைவிடாது அங்கு பாய, அதைத் தெளித்து,

நம் நெற்றியில் குங்குமத்தை அப்புகிறார் பூசாரி;
தம் தக்ஷிணையைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்!

காய்ந்த பேரிச்சம் பழம், இனிப்பு வகைகள் என்று
கடைகளில் வைத்துள்ளதைப் பக்தர்கள் வாங்கி,

ஆலயத்துள் எடுத்துச் சென்று பிரசாதமாக அதை
ஆவலுடன் தம்முடனே கொண்டு செல்கின்றனர்.

தொடரும் .....................

 
Dear RR Madam,

I happened to read this now..Your poetry is so rich and mellifluous! I am a frequent traveler ..Your poetry embellished with riveting photos has actually taken me on the North East tour! I am now awaiting your next tranche!
 
Back
Top