தூது சென்ற தூயவன்
திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று திருப்பாடகம். ‘பாடு’ என்றால் ‘மிகப் பெரிய’; ‘அகம்’ என்றால் ‘கோயில்.’ எனவே இது திருப்பாடகம், பெரிய கோயில் என்றானது. கிருஷ்ணன் பாண்டவர் தூதனாக துரியோதனன் சபைக்குச் சென்றபோது துரியோதனனின் சதியால் தன் ஆசனத்துடன் பாதாளத்தில் விழ, அப்போது கண்ணன் எடுத்த விஸ்வரூப திருக்கோலமே இக்கோயில் மூலவர் உருவம். இந்த விஸ்வரூப கோலத்தை ஜனமேஜெய மகாராஜாவுக்கு கிருஷ்ணன் காட்டியருளி நிலைகொண்டது இக்கோயிலில்தான்.
கருவறை விமானம் பத்ரவிமானம் என்றும் வேதகோடி விமானம் என்றும் போற்றப்படுகிறது. இன்னார் தூதன் என நின்றான் என்றும், குடை மன்னரிடை நடந்த தூதர் என்றும் திருமங்கையாழ்வார் இக்கண்ணனைப் போற்றிப் பாடியுள்ளார். கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் பிரமாண்டமான வடிவத்தில் என்றும் மாறா புன்னகை திருமுகத்தில் தவழ, கிழக்கு நோக்கி பெருமாள் சேவை சாதிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே இத்தனை உயர (25அடி) பெருமாள் அருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க
நன்றி: தினகரன்
திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று திருப்பாடகம். ‘பாடு’ என்றால் ‘மிகப் பெரிய’; ‘அகம்’ என்றால் ‘கோயில்.’ எனவே இது திருப்பாடகம், பெரிய கோயில் என்றானது. கிருஷ்ணன் பாண்டவர் தூதனாக துரியோதனன் சபைக்குச் சென்றபோது துரியோதனனின் சதியால் தன் ஆசனத்துடன் பாதாளத்தில் விழ, அப்போது கண்ணன் எடுத்த விஸ்வரூப திருக்கோலமே இக்கோயில் மூலவர் உருவம். இந்த விஸ்வரூப கோலத்தை ஜனமேஜெய மகாராஜாவுக்கு கிருஷ்ணன் காட்டியருளி நிலைகொண்டது இக்கோயிலில்தான்.
கருவறை விமானம் பத்ரவிமானம் என்றும் வேதகோடி விமானம் என்றும் போற்றப்படுகிறது. இன்னார் தூதன் என நின்றான் என்றும், குடை மன்னரிடை நடந்த தூதர் என்றும் திருமங்கையாழ்வார் இக்கண்ணனைப் போற்றிப் பாடியுள்ளார். கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் பிரமாண்டமான வடிவத்தில் என்றும் மாறா புன்னகை திருமுகத்தில் தவழ, கிழக்கு நோக்கி பெருமாள் சேவை சாதிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே இத்தனை உயர (25அடி) பெருமாள் அருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க
நன்றி: தினகரன்
Last edited: